search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல் கும்பல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ராஜிபாளையம் பகுதியில் அழுக்கான கிழிந்த ஆடைகளை அணிந்த 2 வாலிபர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்கள் பெரிய சாக்கு மூட்டைகளை தோளில் சுமந்தபடி சென்றனர்.

    இதனைக் கண்ட அந்த பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வாலிபர்களை மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    மேலும் பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் 2 வாலிபர்களும் அங்கிருந்து மூட்டைகளுடன் ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை அவிழ்த்து பார்த்த போது அதில் 2 குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வாலிபர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    அவர்களை நெல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தைகளை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அழுக்கான கிழிந்த ஆடைகளுடன் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர்கள் போல் சென்று அவர்கள் குழந்தைகளை கடத்தி சென்றது தெரியவந்தது.

    குறிப்பாக தெருவில் விளையாடும் குழந்தைகளை மயக்க மருந்து தெளித்தும் கைக்குட்டையில் மயக்க பவுடர் வைத்து அதன் மூலமும் மயங்க செய்து சாக்கு மூட்டையில் கட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது.

    பிடிபட்ட வாலிபர்களில் ஒருவர் இதுவரை 2 குழந்தைகளையும் மற்றொருவர் 10 குழந்தைகளையும் கடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

    கடத்தப்பட்ட குழந்தைகளை நெல்லூர் காவாலி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் வைத்து கடத்தல் கும்பல் தலைவனிடம் குழந்தைகளை ஒப்படைத்துள்ளனர். அதற்கு ரூ.5 ஆயிரம் முதல் பணம் வாங்கியுள்ளனர்.

    பணத்திற்கு பதிலாக மது பாட்டில்களையும் வாங்கியுள்ளனர்.

    இதுவரை கடத்தப்பட்ட குழந்தைகள் என்ன ஆனார்கள்? அவர்கள் எங்கு உள்ளார்கள்? குழந்தைகளை வாங்கியவர்கள் யார்? என போலீசார் பிடிபட்ட 2 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த குழந்தைகளை பிச்சை எடுக்கவும், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் உடல் உறுப்புகளை திருடி விற்பதாகவும் தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    தற்போது மீட்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருட்டு புகாரில் தலைமறைவானவர் என தகவல்
    • குளச்சல் வாலிபரை காரில் தூக்கிச் சென்ற விவகாரம்

    கன்னியாகுமரி :

    குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு பகுதி பரபரப்பாக காணப்பட்ட இரவு 7 மணியளவில் காரிலிருந்து இறங்கிய கும்பல் ஒரு வாலிபரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றது. கடத்தப்பட்ட வாலிபர் போட்ட சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், நடப்பது என்ன என்று யோசிப்பதற்குள் அந்தக் கார் அங்கிருந்து மாயமாய் மறைந்து விட்டது. இந்த சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் தேவ ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். கடத்த லுக்கு பயன்படுத்திய கார் கேரள மாநில பதிவு எண்ணை கொண்டது என போலீசாரிடம் தெரிவித்த னர்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் சோதனைச்சா வடிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதன்பயனாக புதுக்கடை பகுதியில் அந்த கார் சிக்கியது. கடத்தப்பட்ட வாலிபரையும் அவரை கடத்திய கும்பலையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று கருங்கல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை விசாரணை நடத்தினார்.

    இதில் கடத்தப்பட்ட வாலிபர், குளச்சல் துறை முகத் தெருவை சேர்ந்தவர் என்பதும், அவர், கேரளா வில் விசைப்படகிலிருந்து ₹.40 ஆயிரம், ஜி.பி.எஸ். மற்றும் ஓயர்லஸ் கருவிகளை திருடிவிட்டு குளச்சல் தப்பி வந்தவர் என்றும் தெரிய வந்தது. இது குறித்து கேரள விசைப்படகினர் பள்ளித் தோட்டம் ேபாலீஸ் நிலை யத்தில் புகார் செய்தனர்.ஆனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

    இதனால் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வாலிபரை பிடித்து பள்ளித்தோட்டம் போலீசில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் குளச்சல் வந்து வாலிபரை காரில் கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

    இந்த சம்பவம் குறித்து பள்ளித்தோட்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. அவர்கள் கருங்கல் போலீஸ் நிலையம் வந்தனர். அப்போது திருட்டு வழக்கு உண்மை தான் என கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கடத்தல் கும்பலையும் கடத்தப்பட்ட வாலிபரையும் கருங்கல் போலீசார், கேரள போலீ சாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் விசாரணைக்காக கேரளா அழைத்துச் செல்லப்பட்டனர்.

    • பத்து வயது சிறுவன், சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
    • சிறுவன் கடத்தப்பட்ட தாக கூறப்பட்ட பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீசார் இன்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 40). கார்பெண்டர். இவரது மகனான பத்து வயது சிறுவன், சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    டியூஷன்

    நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன், மாலையில் டியூசன் படிக்கச் சென்றான். மாலை 6 மணி அளவில் டியூசன் முடிந்து சிறுவன் வெளியே வந்தபோது, காரில் வந்த 2 வாலிபர்கள் சிறுவனிடம் பேச்சு கொடுத்தனர். மேலும் அவர்கள், சிறுவனை வீட்டில் கொண்டுபோய் விடுவதாக கூறயுள்ளனர். இதையடுத்து சிறுவன் காரில் ஏறி உள்ளான். பின்னர் சிறிது நேரத்தில் கார் 4 ரோடு பகுதிக்கு சென்றது. அங்குள்ள ஒரு கடை முன் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து வாலிபர்களும் இறங்கினர்.

    கடத்தல்

    அந்த நேரத்தில் சிறுவன் காரில் இருந்து இறங்கி தப்பினார். தனது வீட்டிற்கு வந்து, பெற்றோரிடம் தன்னை காரில் 2 பேர் கடத்தி சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துள்ளேன் என கூறினான். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவா, உடனடியாக இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சி.சி.டி.வி கேமிரா

    சிறுவன் கடத்தப்பட்ட தாக கூறப்பட்ட பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீசார் இன்று ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் கடத்திச் சென்ற கும்பல் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். விசாரணை முடிவில் தான், மாணவனை எதற்காக அந்த கும்பல் காரில் கடத்திச் சென்றது? முன் விரோதத்தில் அந்த கும்பல் கடத்தி சென்றதா? அல்லது பணம் பறிக்கும் நோக்கத்தில் அவரை கடத்த முயற்சி செய்தார்களா? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

    ×