search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    • குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.
    • சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் குறிப்பாக வடக்கு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாலை, மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் மற்றும் கோவை காலநிலை ஆராய்ச்சி மைய அறிக்கைப்படி, இந்த வாரம் திருப்பூரில், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சம் 31 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 100 சதவீதம், மாலை நேரம், 92 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால் போதியளவு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். விவசாய நிலங்களில் நீர்பாசனம் மற்றும் மருந்து தெளிக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். மழைக்காலமாக இருப்பதால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த வெப்ப நிலையில் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் போதிய கதகதப்பு ஏற்படுத்துவதுடன் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
    • அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, மூல பெல்லூர், டேம் கொட்டாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    அதே போல் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான அரசநத்தம், கலசப்பாடி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், பென்னாகரம் ஊராட்சியில் கோட்டூர் மலை, அலகட்டுமலை, ஏரிமலை, உள்ளிட்ட மலை கிராமங்களும், ஏரியூர் ஒன்றியத்தில் மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, உள்ளன. மூல பெல்லூர் டேம் கொட்டாய், உள்ளிட்ட மலை கிராமங்களும் இன்று வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

    அதில் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்சல்நத்தம் பஞ்சாயத்தில் மூல பெல்லூர் டேம் கொட்டாய் பகுதியில் சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் கால்நடைகள் வளர்ப்பது, விறகு வெட்டுவது, மலை தேன் சேகரிப்பது, சுண்டைக்காய், கிழங்கு வகைகள், கீரை வகைகள் சாகுபடி செய்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் எளிய கிராம மக்களுக்கும் கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தை சுற்றி மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லை என்றாலும் கயிறு கட்டில் மற்றும் புடவையில் தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

    இதனால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    பெண்கள் பிரசவ காலங்களில் பெரும்பாலானவர் அரசு சுகாதார நிலையங்களை நாடிச் செல்லாமல் பழைய முறையில் மருத்துவச்சி பெண்களைக் கொண்டு பிரசவம் பார்த்து வருகின்றனர்.

     

    அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.

    அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.

    மேலும் சரியான சாலை வசதி இல்லாததால் கரடு முரடான ஒருவழி பாதையில் செல்வதால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

    பாதியிலேயே பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுவதாகவும், இதனால் இப்பகுதி மாணவர்கள் பள்ளியை தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவல நிலையும் ஏற்படுகிறது. இதனால் பெண் பிள்ளைகள் பூப்பெய்தவுடன் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில்;-

    படிப்பறிவு இல்லாததால் தங்களுடைய தேவைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மலை குகைக்குள் இருப்பது போன்றே இருந்து வருகின்றோம். மேலும் எங்கள் குறைகளை தீர்க்க எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் வீடுகளில் அருகே மின்சார கம்பங்கள் இருந்தும் மின் இணைப்பு கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் நெருப்பு மூட்டி தீ வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறோம்.

    மத்திய மாநில அரசுகள் மலைவாழ் மக்களுக்கு என்று அடிப்படை தேவைகளுக்காக பல கோடி கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அது எங்கள் அடிப்படை தேவைக்குகூட வந்து சேர்வதில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வரும் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் வேட்பாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.

    ஆனால் தேர்தல் முடிந்தால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நாங்கள் கோரிக்கையுடன் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இது குறித்து ஏரியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி கூறும்போது: ஏரியூர் ஒன்றிய பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனைவருமே புறக்கணிக்கப்படுகிறார்கள் மலைவாழ் மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, இதையே எங்களால் செய்து கொடுக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நிதி பற்றாக்குறை என கூறி வருகிறது என்றார்.

    சுதந்திரம் பெற்று காலங்கள் கடந்தாலும் மலை கிராம மக்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மலைக்கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இன்று காலை முதல் இந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்‌.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து ராட்சத குழாய் மூலம் கடலூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரவழைக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் சேமித்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ப்பட்டு வருகின்றது. கடலூர் செம்மண்டலம் தீபன்நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தினந்தோறும் கடலூர் செம்மண்டலம், மஞ்சக்குப்பம் ஒரு பகுதி, வில்வ நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பில் சாலைக்கு அடியில் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த குடிநீரானது சாலையில் தற்போது குளம் போல் தேங்கி வீணாகி வருகின்றன.

    மேலும் இன்று காலை முதல் இந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இது மட்டும் இன்றி ஒரு சில இடங்களில் சென்ற குடிநீர் முழுவதும் கலங்கலாகவும் வந்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் சீர் செய்யும் நடவடிக்கையாக முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை என்பதால் அவர்களிடம் அனுமதி கேட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனுமதி அளித்த பின்பு பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் செல்லும் குழாய் சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் மக்களுக்கு மிக அத்தியாவசியமான தேவையான குடிநீரை எந்தவித பாதிப்புகளும் இன்றி உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மினி லாரியில் திருவதிகை மண்டப தெரு பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் வழங்கி கொண்டு இருந்தனர்.
    • ரவுடி என்றும், உங்களிடம் உள்ள பணத்தை கொடு என்று கேட்டு மிரட்டியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை ரெயில்வே காலனியை சேர்ந்தவர் மணி (வயது 33). இவர் மினி லாரியில் குடிநீர் வழங்கி வருகிறார். இவரும் அதே ஊரை சேர்ந்த பாண்டியனும் நேற்று மாலை மினி லாரியில் திருவதிகை மண்டப தெரு பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் வழங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த திருவதிகையை சேர்ந்த சந்தோஷ் (25), தான் மிகப் பெரிய ரவுடி என்றும், உங்களிடம் உள்ள பணத்தை கொடு என்று கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது பணத்தை கொடுக்க மறுத்த மணியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். அவரிடமிருந்து லாவகமாக தப்பிய மணி, இது குறித்து பண்ருட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சந்தோஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் வழங்கப்பட உள்ளது.
    • தற்போது வரை 52 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 214 ஊரகக் குடியிருப்புகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்து 453 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.248.67 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

    இந்த நிலையில் தஞ்சை ரெட்டிபாளையம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் நடந்து வருவதை இன்று துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நீர்த்தேக்க தொட்டியில் ஏறி நின்று பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டார் . அவரிடம் நடந்து வரும் பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜீவசங்கர் ஆகியோர் விளக்கி கூறினர்.

    அப்போது துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. இந்த பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    பின்னர் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பூதலூர் ஒன்றியம் திருச்சென்னம்பூண்டி ஊராட்சி அருகில் கொள்ளிடம் ஆற்றில் புதிய நீர் சேகரிப்பு கிணறு ஒன்றும் மற்றும் தோகூர் ஊராட்சி அருகில் காவிரி ஆற்றில் புதிய நீர் உறிஞ்ச கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டு அதிலிருந்து மின் மோட்டார் மூலம் 16.78 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு அகரப்பேட்டை ,கடம்பக்குடி, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்பட உள்ள முறையை 2.05, 2.70 மற்றும் 4.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிர்மான நிலையங்கள், நந்தவனப்பட்டி கிராமத்தில் பயன்பாட்டில் உள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிர்மான நிலையம் மூலம் 190.715 கி.மீ. நிலத்திற்கு நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு 72 தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட உள்ளது.

    தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து 255.91 கி.மீ. நீளம் குழாய்கள் பதித்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 305 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்பட உள்ள 23 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இந்தத் திட்டமானது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

    தற்போது வரை 52 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளன.

    இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி (தெற்கு), முரசொலி (வடக்கு), உலகநாதன் (மேற்கு ), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ராகவேந்திரா நகர்கிளை செயலாளர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அரியலூர் அருகே கீழப்பழுர் காந்திநகரில் ரூ.4.85 லட்சத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது
    • செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுரில் செட்டிநாடு சிமெண்ட்ஆலை நிறுவனம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக சுற்றி அமைந்துள்ள கிராம பகுதிகளுக்கு கல்வி வசதி, மருத்துவ சேவைகள், குடிநீர் வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகின்றது. கீழப்பழுர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் பொதுமக்களின் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தால் அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ. 4.85 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு, மின்மோட்டார் வசதியுடன் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஆலையின் தலைவர் முத்தையா, ஊராட்சிமன்ற தலைவர் தனலெட்சுமி மருதமுத்து, ஆலையின் பொது மேலாளர் ராஜவேல், முத்து கருப்பன், மனிதவளம் மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா சிதம்பரம், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.

    • பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
    • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிரேஸ்சத்திரம் சாலையில் பாதாள சாக்கடை பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த குழாயின் மேல் பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் அமைந்துள்ளதால் பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக குடிநீர் குழாய்களை அகற்றி விட்டு பாதாள சாக்கடை பிரதான குழாய் உடைப்பு சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே மாநகராட்சி வார்டு எண் 1 முதல் 51 வரை அனைத்து வார்டுகளுக்கும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.

    எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொ ள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
    • உள்ளூர் நீர் ஆதாரத்தினை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருவாரூர் ஊரக குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை-கன்னியா குமரி தொழிற்தட சாைல விரிவாக்கத்தினால் கும்பகோணம்-மன்னார்கு டி சாலையில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான நீர் உந்து குழாயினை மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்து குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும்.

    எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்து க்கொ ள்ளவும், உள்ளூர் நீர் ஆதா ரத்தினை பய ன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ள ப்ப டுகி றார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    • புத்தன் அணையிலிருந்து பைப்லைன் மூலமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வந்து பாய்வதை பார்வையிட்டார்
    • வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்பொழுது புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் ரூ.296 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திட்டத்திற்கான வரைபடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினார்கள். பின்னர் புத்தன் அணையிலிருந்து பைப்லைன் மூலமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வந்து பாய்வதை பார்வையிட்டார். பின்னர் அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் இடத்தையும் பார்வையிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சர் மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • குருக்கள்பட்டியில் 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது.
    • கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல தனியாக 16 கே.வி. மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் ஒன்றியம் குருக்கள்பட்டி கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்த தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க குருக்கள்பட்டியில் 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் ஊராட்சி நிர்வாகம் மூலம் அமைக் கப்பட்டது.

    மேலும் இந்த பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கிணறுகளில் இருந்து ஊருக்குள் தண்ணீர் கொண்டு செல்ல தனியாக 16 கே.வி. மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி நிறைவடைந்த நிலையில் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், துணை தலைவர் வேலுச்சாமி, சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கிணற்றில் இருந்து ஊருக்குள் தண்ணீர் கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.

    இதில் கிளை செயலாளர் சுகுமாரன், பாலசுப்பி ரமணியன், மின் வாரிய உதவிசெயற்பொறியாளர் ரவி ராமதாஸ், உதவி பொறியாளர் முருகேசன், தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் தங்கப்பாண்டியன், பாலசுப்பிரமணியன், சாலை ஆய்வாளர் துரைராஜ், மக்கள் நல பணியாளர் சண்முகவேல், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன், தி.மு.க. நிர்வாகி பூசைப்பாண்டியன், ஸ்டாலின், சின்னப்பாண்டியன், பெரியசாமி மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு முத்தூா் - காங்கயம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • ரூ. 62.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி தற்போது 36 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    காங்கயம்,அக்.22-

    ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு முத்தூா் - காங்கயம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொடுமுடியில் தலைமை நீரேற்று நிலையம், அருகில் இச்சிப்பாளையம் சுத்திகரிப்பு நிலையம், அடுத்து திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் மேட்டுக்கடை, வாலிபனங்காடு, பச்சாபாளையம் நீருந்து நிலையங்கள், காங்கயம் அய்யாசாமி நகா் காலனி நீா் விஸ்தரிப்பு நிலையம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

    1998 ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, 2013 ல் விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டம் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் மற்றும் 1,790 ஊரக குடியிருப்புப் பகுதிகளுக்கு தினசரி 40.45 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பட வேண்டும். 25 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள இத்திட்ட கான்கிரீட் குழாய்களில் தொடா்ந்து நீா்க்கசிவு ஏற்படுவதால் நிா்ணயிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லை.

    இதையடுத்து ரூ. 62.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி தற்போது 36 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் இப்பணிகளின் அனைத்து நிலைகளையும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டாா்.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் செல்லமுத்து, மேற்பாா்வைப் பொறியாளா் மதியழகன், நிா்வாகப் பொறியாளா் கண்ணன், உதவி செயற்பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவிப் பொறியாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஆண்டிகவுண்டனூர் பகுதி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    உடுமலை:

    உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . கிராமத்தின் அருகே ஜக்கம் பாளையம் குட்டிய கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சேர்த்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இப்பகுதியில் திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தினமும் 60 ஆயிரம் லிட்டர் வரை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் 30 ஆயிரம் லிட்டர் ஆக குறைந்தது. இந்த நிலையில் கடந்த 27 நாட்களாக இப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.ஊராட்சி தலைவர் மோகன வள்ளி ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் ஒன்றிய அதிகாரிகளிடம் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதை அடுத்து ஆண்டிகவுண்டனூர் பகுதி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    ×