search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
    X

    தஞ்சையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    • பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
    • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிரேஸ்சத்திரம் சாலையில் பாதாள சாக்கடை பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த குழாயின் மேல் பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் அமைந்துள்ளதால் பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக குடிநீர் குழாய்களை அகற்றி விட்டு பாதாள சாக்கடை பிரதான குழாய் உடைப்பு சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே மாநகராட்சி வார்டு எண் 1 முதல் 51 வரை அனைத்து வார்டுகளுக்கும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.

    எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொ ள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×