search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தம்
    X

    குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

    • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
    • உள்ளூர் நீர் ஆதாரத்தினை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருவாரூர் ஊரக குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை-கன்னியா குமரி தொழிற்தட சாைல விரிவாக்கத்தினால் கும்பகோணம்-மன்னார்கு டி சாலையில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான நீர் உந்து குழாயினை மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்து குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும்.

    எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்து க்கொ ள்ளவும், உள்ளூர் நீர் ஆதா ரத்தினை பய ன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ள ப்ப டுகி றார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    Next Story
    ×