என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிருஷ்ண ஜெயந்தி"
- நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.
- ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.
கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள்
கிருஷ்ண பரமாத்மா மொத்தம் 8 வகையாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் சந்தான கோபால கிருஷ்ணர் கோலமாகும்.
தவழும் கோலத்தில் இருப்பவர் பாலகிருஷ்ணன்.
நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.
ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.
ருக்மணி, சத்யபாமாவுடன் இருப்பவர் முரளீதரன்.
அஷ்டபுஜங்களை உடையவர் மதனகோபால்.
கோவர்த்தனகிரியை தூக்கிப் பிடிக்கும் கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவர்த்தனதாரி ஆவார்.
அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கும் கோலத்தில் இருப்பவர் பார்த்தசாரதி.
கிருஷ்ணரை இப்படி எந்த கோலத்திலும் வழிபடலாம்.
ஆனால் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரின் காலடி சுவட்டை கோலமாக வரைந்து வழிபட்டால், வீடே கோகுலமாக மாறி விட்டதுபோன்ற பக்தி உணர்வு நம் மனதில் ஆழமாக பதிந்து விடும்.
- இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
- அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரை வழிபடும் முறை
சரி கிருஷ்ண பரமாத்மாவை மிக எளிமையாக வழிபடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் விரதம் இருக்க வேண்டும்.
பகலில் விரதம் இருக்க வேண்டும்.
இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
மறுநாள் மீண்டும் கிருஷ்ணரை பூஜித்து வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணருக்கு பூக்களை அர்ப்பணிக்கும்போது மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.
அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணரை மூன்று முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மிகவும் மகிமை வாய்ந்தது.
அதன் ஆற்றல் அளவிட முடியாதது.
எனவே சுதர்சன சக்கரத்தையும் மறக்காமல் வழிபட வேண்டும்.
- ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.
- இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
துர்க்கையாக மாறிய பெண் குழந்தை
எட்டாவது குழந்தையை அழிக்க வேண்டும் என சிறைச்சாலைக்கு சென்ற கம்சனிடம், தேவகி, "கம்சனே, இந்த குழந்தை பெண் குழந்தை , தெய்வீக எச்சரிக்கை சொன்ன ஆண் குழந்தை அல்ல. இந்தக் குழந்தை உங்களுக்கு எப்படித் தீங்கு செய்யும்?" இதனை விட்டுவிடுங்கள் என கலங்கி முறையிட்டாள்.
ஆனால் கம்சன் அவளை அலட்சியப்படுத்தி, குழந்தையை அவள் மடியில் இருந்து பிடுங்கி, குழந்தையை சிறைச் சுவரில் வீசினான்.
குழந்தை கீழே விழவில்லை; அதற்கு பதிலாக அவள் பறந்து சென்று எட்டு கரங்களுடன், ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.
அவள், "பொல்லாத கம்சனே! என்னைக் கொல்வதால் உனக்கு எந்தப் பலனும் கிடைக்காது. உன்னை அழிப்பவன் வேறொரு இடத்தில் வளர்கிறான்" என்று கூறி தேவி மறைந்தாள்.
இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
மன்னன் நந்தனின் மகன் பிறந்ததை அனைவரும் கொண்டாடினர்.
நந்தன் அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார்.
அன்று முழுக்க கோகுலம் ஒரு பண்டிகை தோற்றத்தில் இருந்தது.
தெருக்கள் துடைக்கப்பட்டு, அனைத்து வீடுகளும் கொடிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டன.
பசுக்களுக்கு மஞ்சள் பூசி, மயில் தோகை மற்றும் மாலைகள் அணிவித்தனர்.
கோகுல மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் நடனமாடி, குழந்தை கிருஷ்ணனைப் பார்க்கவும், பரிசுகளை வழங்கவும் நந்தாவின் வீட்டிற்கு திரண்டனர்.
பகவான் கிருஷ்ணர் பிறந்த கதை, கடவுள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் மற்றும் அன்பானவர் என்பதைக் காட்டுகிறது.
கம்சனின் துன்மார்க்க ஆட்சியின் போது நடந்ததைப் போல, இந்த உலகில் தீமை தாங்க முடியாததாக மாறும் போதெல்லாம், கடவுள் கிருஷ்ணரைப் போல ஒரு அவதார வடிவில் நம்மைக் காப்பாற்ற வருகிறார்.
- பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது.
- நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.
கிருஷ்ணருக்கு வழிவிட்ட யமுனை
குழந்தை பிறந்தவுடன், மகாவிஷ்ணு தனது தெய்வீக வடிவில் தோன்றினார், சிறைச்சாலை ஒரு திகைப்பூட்டும் ஒளியால் நிரப்பப்பட்டது.
தேவகி மற்றும் வசுதேவ் இருவரும் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர்.
கிருஷ்ணர் சிறையில் பிறந்த அதே நேரத்தில், ராணி யசோதா கோகுலத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது,
"கோகுலத்திற்கு சென்று யசோதாவின் குழந்தைக்கு பதில் இந்த குழந்தையை வைத்துவிட்டு யசோதா நந்தகோபரின் குழந்தையை எடுத்து கொண்டு, இந்தக் குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியும் முன் நீ திரும்பி வந்துவிடு" என்றார்.
வாசுதேவர் உடனடியாக அறிவுரையைப் பின்பற்றினார்.
கைக்குழந்தையுடன் அவர்களை நோக்கிச் செல்லும்போது சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன.
தெய்வீக தலையீட்டால் காவலர்கள் ஏற்கனவே தூங்கிவிட்டனர்.
கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மிகவும் கொந்தளிப்பான யமுனை நதியை வாசுதேவர் நெருங்கினார்.
வாசுதேவர் ஆற்றங்கரையை அடைந்தவுடன், நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.
வாசுதேவர் பத்திரமாக ஆற்றின் எதிர் கரையை அடைந்தார், கோகுல மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டார்.
மன்னன் நந்தா மற்றும் ராணி யசோதாவின் அரண்மனைக்குள் நுழைந்து யசோதாவின் பெண் குழந்தை இடத்தில் ஆண் குழந்தையை வைத்தார்.
பின்னர் அங்குள்ள பெண் குழந்தையுடன் சிறைக்கு திரும்பினார்.
வாசுதேவர் பெண் குழந்தையை தேவகியின் அருகில் வைத்தவுடன், சிறைக் கதவுகள் தானாக மூடப்பட்டன.
காவலாளிகள் இப்போது விழித்திருந்து, பெண் குழந்தையின் அழுகையால் திடுக்கிட்டனர்.
காவலர்கள் கம்சனிடம் ஓடி சென்று எட்டாவது குழந்தை பிறந்ததை அறிவித்தனர்.
உடனே, கம்சன் குழந்தையை தூக்கிலிட சிறைச்சாலைக்கு விரைந்தான்.
- கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.
- அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.
கிருஷ்ணர் பிறந்த கதை
நீண்ட காலத்திற்கு முன்பு, பண்டைய இந்தியாவில், உக்ரசேனன் என்ற அரசன் இருந்தான்.
அவருக்கு இளவரசர் கம்சன் மற்றும் இளவரசி தேவகி என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
இளவரசர் கம்சன் இயல்பிலேயே கெட்டவர்.
கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.
விரைவில், அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.
திருமணத்திற்குப் பிறகு, கம்சன் வானத்திலிருந்து ஒரு தெய்வீக அசரீரியைக் கேட்டான்,
"அரசே! உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்லும் அளவுக்கு வளர்வான்" என்று, இதைக் கேட்டு பயந்த கம்சன் தனது சொந்த சகோதரி தேவகி மற்றும் அவரது கணவர், மன்னர் வாசுதேவ் ஆகியோரை உடனடியாக சிறையில் அடைத்து, தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தான்.
வருடங்கள் கடந்தன. ஒவ்வொரு முறையும் தேவகி சிறையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, கம்சன் வந்து குழந்தையைத் தன் கைகளால் கொன்றான்.
எட்டாவது முறையாக தேவகி கருவுற்றபோது, வசுதேவரின் நண்பன் மன்னன் நந்தனின் மனைவி யசோதாவும் கர்ப்பமாக இருந்தாள்.
எட்டாவது குழந்தை, பகவான் கிருஷ்ணர், சிறையில் நள்ளிரவில் ராணி தேவகிக்கு பிறந்தார்.
- மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
- ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணா... கிருஷ்ணா என்றால் இன்பம் வரும்
மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத் தினத்தை ஆண்டு தோறும் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினம் செப்டம்பர் 6 மற்றும் 7ந் தேதிகளில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று நள்ளிரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று, அவரது சக்தி ஆயிரம் மடங்கு அதிகரிப்பதாக ஐதீகம்.
எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இரவு, "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்று 108 தடவை அல்லது 1008 தடவை சொல்லி வழிபட்டால் கிருஷ்ண பகவானின் அருள் பரிபூரணமாய் நமக்கு கிடைக்கும்.
மேலும் கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் "பஜகோவிந்தம்" பாட வேண்டும்.
ஆதிசங்கரர் தான் சென்ற இடங்களில் எல்லாம் பஜகோவிந்தம் பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார்.
- கிருஷ்ணர் தனது கால்களை குறுக்காக வைத்துக் கொண்டு புல்லாங்குழல் வாசித்தப்படி நிற்கிறார்.
- ஆதிகாலத்தில் இங்குள்ள எறும்பு மாலையில் பசுக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பால் சொரிந்தன.
சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் மிகப்பழமையான கிருஷ்ணர் கோவில் உள்ளது. முதலாம் கரிகால் சோழன் கட்டியதால் இந்த தலத்து கடவுள் கரிகிருஷ்ணர் என்று அழைக்கப்படுகிறது.
ஆதிகாலத்தில் இங்குள்ள எறும்பு மாலையில் பசுக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பால் சொரிந்தன. அதை கண்டு அந்த கிராம மக்கள் ஆச்சரியப்பட்டனர். அப்போது ஒலித்த அசரீரியில், ''பசும்பாலால் இந்த குன்றை கழுவுங்கள் கிருஷ்ணர் தோன்றுவார்'' என்று கேட்டது.
கிராம மக்களும் அப்படியே செய்ய கிருஷ்ணர் தென்பட்டார். அப்போது ஒரு பக்தர் மிகுந்த ஆர்வத்துடன், அங்கு மண்ணைத் தோண்டினார். அப்போது கிருஷ்ணர் இதற்கு மேல் தோண்டாதே என்று உத்தரவிட்டார். இதனால் இத்தலத்தில் கிருஷ்ணர், சாதாரண மனிதர்கள் போல தரையில் கால் ஊன்றி நிற்கிறார்.
பசுக்கள் பால் சுரந்து காட்டி கொடுத்து கிருஷ்ணரை வெளிப்படுத்தியதால் இத்தலம் ஆயர்பாடி என்றும் அழைக்கப்படுகிறது.
புராதன சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் பால், பழம் வைத்து வழிபட்டால் கேட்டவரத்தை கிருஷ்ணர் தருவார். இங்கு ராமர், கிருஷ்ணர் இருவரும் தனி தனி சன்னதிகளில், தனி தனி கொடி கம்பங்களுடன் உள்ளனர். கிருஷ்ணை பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது.
பவளக்கார தெருவில் பாசமிகு கிருஷ்ணர்
சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள், நன்மங்கலம் நீலவண்ண பெருமாள் போன்று பல இடங்களில் கிருஷ்ணருக்கு கோவில்கள் உள்ளன. அவைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. முத்தியால் பேட்டையில் உள்ள ஸ்ரீவேணு கோபால கிருஷ்ணசாமி கோவில்.
பவளக்காரத் தெருவில் உள்ள இத்தலத்தில் கிருஷ்ணர் தனது கால்களை குறுக்காக வைத்துக் கொண்டு புல்லாங்குழல் வாசித்தப்படி நிற்கிறார். அவரது இருபுறமும் பாமாவும் ருக்மணியும் உள்ளனர். இத்தகைய தோற்றத்தில் கிருஷ்ணர் இந்த தலத்தில் விசேஷமாக அருள் பாலிக்கிறார்.
சிறிய கோவிலாக இருந்தாலும், நுழைவாயிலை நெருங்கியதுமே அதன் பழமை சிறப்பை பக்தர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
ஸ்ரீகிருஷ்ணா என்ற நாமத்துடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ராமர், ஆஞ்ச நேயர், சீனிவாச பெருமாளுக்கு தனி தனி சன்னதி உள்ளது. சென்னையில் உள்ள கிருஷ்ணா பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இங்கு சென்று வழிபட்டால் உண்மையான மனநிறைவு ஏற்படும்.
- நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன.
- தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு விநாயகர் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் நவநீதகிருஷ்ணன் சுவாமி கோவில் உள்ளது. `நவநீதம்' என்றால் "வெண்ணெய்" எனப்பொருள். கிருஷ்ணருக்கு பிடித்தது வெண்ணை. இதனால் அவர் நவநீத கிருஷ்ணர் என பெயர் பெற்றார்.
இந்த கோவில் கர்ப்பகிரஹத்தில் "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் ஏந்தியவாறு புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
கற்பூர ஆரத்தியின்போது அவரது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். கர்ப்ப கிரஹத்தின் முன்பு உள்ள மண்டபத்தில் "ஸ்ரீ தேவி, பூமாதேவி நாச்சியார்கள்" சமேதராக "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" அருள்பாலித்து வருகிறார்.
கர்ப்பகிரஹத்தின் மேலே செப்புக்கலசத்துடன் கூடிய விமானம் உள்ளது. இவ்விமானத்தில் "கிழக்கு முகமாக ஸ்ரீநவநித கிருஷ்ணனும், தெற்கு முகமாக ஸ்ரீ தட்சிணா மூர்த்தியும், மேற்கு முகமாக ஸ்ரீ யோக நரசிம்மரும்,வடக்கு முகமாக ஸ்ரீ பிரம்மாவும்" எழுந்தருளியுள்ளனர்.
இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சி அளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லன்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன.
கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் ஏந்தியிருக்கிறது. இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் தன்வந்திரி ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம் , தசாவதாரத்திற்குள் சேருவதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி (தனிக்கோயிலில்) காணப்படுகிறார்.
இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.
இங்கு இத்திருக்கோயிலின் தன்வந்திரி பகவான் தனி சன்னதியில் உள்ளார். பிரணவ சொரூபியான விநாயகப்பெருமான் தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு ஆலயத்தில் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.வைணவத்தை வாழவைத்த ராமானுஜர் தனி சன்னதியில் உள்ளார். உற்சவமூர்த்திக்கு எதிரில் "பெரிய திருவடி"என்றழைக்கப்படும் "ஸ்ரீ கருடாழ்வார்" பெருமாளை நோக்கி கைகூப்பி வணங்கிய நிலையில் எழுந்தருளி உள்ளார்.
உற்சவர் எழுந்தருளி உள்ள மண்டபத்தின் வடக்குத் தூணில் "சிறிய திருவடி" என்று போற்றப்படும் "ஸ்ரீ ஆஞ்சநேயர்" அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாக கொடியேற்றமும் உத்திரம் அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மொத்தம் பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும்.
தை பொங்கல் மறுநாள் பாரிவேட்டையும்,தசராவில் பத்து நாட்களுக்கு கொலு வைபவும் ,வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு விழாவும் ,கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் அன்று சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். தமிழ் மாதம் கடைசி சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து அருகில் உள்ள சிற்றாற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரமளித்திடுவார் என்பது ஐதீகம்.
இந்த கோவிலில் தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது.
- ஸ்ரீநவநீதகிருஷ்ணரை வழிபட்டால் சந்தான அபிவிருத்தி கிடைக்கும்.
- உறியடி திருவிழா 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது.
சைவ தலங்களுக்கு புகழ் பெற்ற மதுரையில் வைணவத்தலங்களும் குறைவின்றி உள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாகதான் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையில் உள்ள பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது கிருஷ்ணஜெயந்தி. இந்த விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடும் ஆலயங்களில் ஒன்று, ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், பெயரில் பெருமாள் என இருந்தாலும் மதுரை பகுதி மக்களின் உச்சரிப்பில் தெற்கு கிருஷ்ணன் கோவில் என்றே கூறப்படுகிறது.
இதற்கு காரணம் இந்த கோவிலின் ஆதிமூர்த்தி ஸ்ரீநவநீதகிருஷ்ணன் என்பதால் தான். சவுராஷ்டிர சபைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் அமைந்துள்ள வீதியின் பெயரும் கிருஷ்ணன் தெற்கு தெருதான்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தூவாரகை கிருஷ்ணனை மனதில் கொண்டு இங்கு நவநீதகிருஷ்ணன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து சவுராஷ்டிரா சமூக மக்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். அப்போது முதலே இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளடைவில் கோவிலை வழிபட்டோர் கனவில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரர் பெருமாள் பிரசன்னமாகி தன்னையே பிரதிஷ்டை செய்ய சொன்னதால் ஆலயம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேஸ்வரப் பெருமாள் ஆலயமாக உருமாறியதாக வரலாறு கூறுகிறது.
கோவிலின் திருநாமம் மாறினாலும், ஆதிமூர்த்தியாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானை வழிபடுவதை பக்தர்கள் கைவிடவில்லை. இதனால் இங்கு கொண்டாடப்படும் உறியடித் திருவிழா 100 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு வாய்ந்த விழாவாக அமைந்துள்ளது.
உறியடி திருவிழாவுடன் நடைபெறும் கிருஷ்ணஜெயந்தி விழா இக்கோவிலின் ஆன்மீக பக்தர்களால் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது நவநீதகிருஷ்ணன் உற்சவம் தங்கத் தொட்டிலிலும், பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், தங்கப் பல்லக்கிலும் வீதி உலா செல்வது சிறப்பு வாய்ந்ததாகும்.
பல்வேறு சிறப்பு வாய்ந்த ஸ்ரீநவநீதகிருஷ்ணரை வழிபட்டால் சந்தான அபிவிருத்தி, புத்ர பாக்கியம் கிடைப்பது உறுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் இன்றளவும் சுவாமிக்கு பூஜை, நெய்வேத்தியம்., வெண்ணெய் சாத்தி அர்ச்சனை வழிபாடு போன்றவற்றை பக்தர்கள் செய்து வருகின்றனர்.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பு 13 அடியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர். மதுரையில் வேறு எங்கும் இதுபோன்று சுதையில் (கற்சிலை) ஆஞ்சநேயர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மதுரையில் புகழ்பெற்ற கூடழலகர் பெருமாள் கோவில், மதன கோபாலசுவாமி கோவில், வடக்குமாசி வீதி நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் போன்றவற்றிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார்.
- மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் சித்தர் பிரதிஷ்டை செய்தார்.
மதுரை மாநகரில் பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புராணத்தை உள்ளடக்கி இருக்கின்றன. அதேநேரத்தில் சில சமூகத்தினர் தங்களது இஷ்ட தெய்வத்தை பிரதிஷ்டை செய்தும், வணங்கியும் வந்தனர்.
அந்த தெய்வங்களுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டு வழி வழியாக வழிபட்டும் வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு பெற்ற கோவில்தான் வடக்குமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் ஆகும்.
இக்கோவில் குறித்து கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது:-
தேரோடும் வீதியான வடக்கு மாசி வீதியிலே இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு யாதவ பெருமக்களால் நிர்மாணிக்கப்பட்ட தாகும். மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் என்னும் சித்தர் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு சமாதியாகி விட்டார். அவரது சமாதியான தினத்தை இன்றளவும் யாதவப் பெருமக்கள் குருபூஜையாக ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணத்தன்று நடத்துகிறார்கள்.
முன்னொரு காலத்தில் இந்த பகுதி நந்தவனமாக இருந்தது. அந்த நந்தவனத்திலேயே ஒரு கம்பத்தடியில் ஸ்ரீ ஆஞ்சநேயர், கோவில் கொண்டிருந்தார். இதன் அருகே தான் மூலஸ்தான விக்ரகம் இருந்தது. அப்போது அதற்கு கம்பந்தடி கிருஷ்ணன் என்ற நாமம் இருந்தது.
பூம்புகாரில் இருந்து மதுரை வந்த கோவலனையும், கண்ணகியையும் இங்குள்ள வடக்கு மாசி வீதி இடைச்சேரி பெண்ணான மாதரி தான் ஆதரித்ததாகவும், சிலப்பதிகாரத்தில் இருந்து தெரியவருகிறது. மேலும் இடைசேரி பெண்களால் ஸ்ரீநவநீதகிருஷ்ணனை முன்னிருத்தி பாடப்பெற்ற தாகவும் கூறப்படுகிறது.
இந்த நவநீதகிருஷ்ணன் கோவிலின் உபகோவிலான ராமாயண சாவடி கோவிலும் இவ்வீதியில்தான் உள்ளது. பாண்டிய மன்னரிடம் கண்ணகி கோபம் கொண்டு, அங்கிருந்து வந்து கண்ணகி இளைப்பாரிய இடமும் இந்த ராமாயண சாவடி கோவில்தான்.
ராமன் சன்னதி, விநாயகர் சன்னதி, தண்டபாணி சன்னதி, நாச்சிமுத்து, கருப்பண சாமி சன்னதி ஆகிய துணை கோவில்களையும் கொண்டுள்ளது.
வடக்கு பார்த்து உள்ள ஸ்ரீராமஸ்வாமி நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவிலான கிருஷ்ணராக காட்சி அளிக்கிறார். கலை நயத்துடன் கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் 10 தூண்களிலும் கிருஷ்ணரின் தசாவாதார காட்சிகளும் பொறிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநவநீத கிருஷ்ணன் தொட்டில் கட்டும் பிரார்த்தனைக்கு இணங்கி பிள்ளை செல்வத்தை அருள்கிறார். எனவே குழந்தை வரம் வேண்டுவோர் தினசரி வந்து வழிபட்டால் பலன் உண்டு.
இதேபோல வெண்ணை, வெள்ளி கொலுசு வாங்கி கொடுத்து பிரார்த்தனை செய்வோருக்கு மன இன்னல்களை போக்கி எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருக்கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தின்போது 10 நாட்கள் பகல் பத்து, ராப்பத்து திருவிழா நடைபெறும். அப்போது 10 நாட்களும் ஸ்ரீகண்ணபிரான் ராமாயண சாவடிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
தினசரி தீர்த்தங்களும், பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான பசுமாட்டை கோவிலுக்கு கொண்டு வந்து தினமும் பூஜை நடத்தப்படுவது சிறப்பாகும்.
ராமாயண சாவடி ஸ்ரீராமர் சன்னதியில் ஸ்ரீராமநவமி உற்சவத்தன்று சீதா திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.
ஆயிரம் வீட்டு யாதவர்களுக்கு சொந்தமான ஸ்ரீராமஸ்வாமி, ஸ்ரீநவநீத கிருஷ்ணன் சுவாமி தேவஸ்தானம் யாதவ பெருமக்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.
- அந்த அவல் லட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்
அவல் - 1 கப்
பொட்டுக் கடலை (உடைத்தக் கடலை) - 1/2 கப்
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலப்பொடி
பால் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
நெய்
தேங்காய் துருவல் - 2 கப்
செய்முறை
அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.
- அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.
- வெல்லத்தை இளம் பாகாக்கி கீழே இறக்கி அரிசி மாவு, தேங்காய், எள்ளை சேர்த்து நன்றாக கிளறவும்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 ஆழாக்கு
உளுந்து மாவு - 2 ஸ்பூன்
தேங்காய் - 1 துண்டு
வெல்லம் - 1 கப்
எள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் (தேவையான அளவு)
செய்முறை:
* அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.
* பிறகு எள்ளையும் வறுக்கவும்.
* தேங்காயை சிறு சிறு பல்லாக வெட்டி நெய்யில் வறுக்கவும்.
* வெல்லத்தை இளம் பாகாக்கி கீழே இறக்கி அரிசி மாவு, தேங்காய், எள்ளை சேர்த்து நன்றாக கிளறவும்.
* எண்ணெய் காய வைத்து வெல்லமாவை சிறு உருண்டையாக (முழு நெல்லிக்காய் அளவு) உருட்டி பொரித்து எடுக்கவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்