search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்சன்"

    • தர்மத்தை நிலைநிறுத்த நானே யது வம்சத்தில் வாசுதேவரின் மகனாய் பிறப்பேன்.
    • 8-வது ஆண் குழந்தைதான் உனக்கு காலனாக வரப்போகிறான்.

    திரேதாயுகத்தில் விஷ்ணு பகவான் ராமாவதாரத்தை முடித்து வைகுண்டம் சென்ற பிறகு பூலோகத்தில் தன்னைத்தானே அரசன் என்று பிரகடனம் செய்துகொண்ட பெரும் அரக்கர்களின் பெருஞ்சுமையை தாங்கிக்கொள்ள முடியாத பூமாதேவி விஷ்ணு பகவானிடம் முறையிட்டபோது அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த நானே யது வம்சத்தில் வாசுதேவரின் மகனாய் பிறந்து பல லீலைகள் புரிந்து வாசுதேவ கிருஷ்ணராய் பூமியில் அவதரிப்பேன் என்று பூமாதேவிக்கு வாக்களிக்கிறார்.

    அதன்படி போஜவம்சத்தை சேர்ந்த உக்கிரசேனனின் மகனான கம்சனின் சகோதரி தேவகிக்கும், யது வம்ச மன்னரான வாசுதேவருக்கும் திருமணம் நடக்கிறது. கம்சனின் சகோதரி தேவகியை சந்தோசப்படுத்த 400 யானைகள், 15 ஆயிரம் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், 18 ஆயிரம் ரதங்கள் என்று தேவகிக்கு சேசகம் செய்ய 200 பணிப்பெண்கள் என்று பிரம்மாண்டமாக திருமணம் முடிந்து ஊர்வலமாக அழைத்துக்கொண்டு வரும்போது கம்சனுக்கு ஒரு அசரிரீ ஒலிக்கிறது.

    அதில் கம்சா நீ உன் சகோதரிக்கு தேரோட்டி செல்கிறாய். ஆனால் இவளுடைய 8-வது ஆண் குழந்தைதான் உனக்கு காலனாக வரப்போகிறான் என்ற சத்தத்தை கேட்ட கம்சன் தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்ல முயற்சி செய்கிறான். உடனே தேவகியின் கணவரான வாசுதேவர் தன் மனைவியை காக்கும் பொருட்டு கம்சனே உனக்கு கேட்ட அந்த அசரிரீ உண்மை என்றால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும் என்றால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையை உன்னிடமே ஒப்படைத்துவிடுகிறோம். நீ என்னவேண்டுமோ செய்துகொள் என்று சொல்லி கம்சனிடம் இருந்து தேவகியின் உயிரை காப்பாற்றினார்.

    அதன்பிறகு தேவகிக்கு முதல் குழந்தை பிறந்தது. வாக்கு தவறாத வாசுதேவர் சொன்ன சொல்லை தவறாமல் குழந்தையை கம்சனிடம் கொடுத்தார். அதற்கு கம்சன் உன்னுடைய 8-வது குழந்தையால் தான் எனக்கு மரணம். இந்த குழந்தை தேவை இல்லை என்று கூறி அனுப்பிவிட்டார். கிருஷ்ணரின் வருகைக்காக காத்திருக்க முடியாத நாரதர் வசுதேவர் உன்னை ஏமாற்றலாம் 7 வது குழந்தையை காட்டி இதுதான் 8-வது குழந்தை என்று கூறலாம். எனவே இருவரையும் சிறையில் அடைத்து அவர்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளையும் கொன்றுவிடு. எந்த குழந்தையால் கூட உனக்கு ஆபத்து வரலாம் என்று கூறினார் நாரதர்.

    நாரதர் பேச்சை கேட்டு பயந்த நாரதர் எந்த குழந்தையையும் நம்ப முடியாது வரிசையாய் எல்லா குழந்தையையும் கொன்றுவிட எண்ணினார். அதற்கு முதலில் தன்னுடைய தந்தையான உக்கிரசேனனை சிறையில் அடைத்து அரசனாக முடிசூடிக்கொண்டார். அதன்பிறகு வசுதேவரையும், தேவகியையும் சிறையில் அடைத்து அவர்களுக்கு பிறந்த 6 ஆண்குழந்தைகளையும் வரிசையாக வதம் செய்தார்.

    தேவகி 7-வது முறையாக கர்பம் அடைந்தார். கிருஷ்ணருக்கு உதவியாக அனந்தனாகிய ஆதிசேஷன் தோன்றினார். இந்த குழந்தையையும் கம்சன் கொன்றுவிடுவான் என்று எண்ணிய விஷ்ணுபகவான் தன்னுடைய யோக சக்தியால் தேவகியோட 7-வது கர்ப்பம் கோகுலத்தில் வாழும் வாசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகினியின் வயிற்றுக்கு மாற்றப்படுகிறது.

    8-வது முறையாக ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திர வம்சத்தில் விஷ்ணு பகவானே பூமாதேவிக்கு வாக்களித்தபடி பூலோகத்தில் பிறக்கிறார். அவர் பிறந்ததும் நான்கு கைகளிலும் சங்கு சக்கரத்துடன் வசுதேவருக்கும், தேவகிக்கும் காட்சி கொடுத்தார்.

    வசுதேவரும், தேவகியும், கம்சனை பற்றிய பயம் துளியுமின்றி முழுமுதற்கடவுளான விஷ்ணுவை வணங்கினர். விஷ்ணு பகவான் கோகுலத்தில் உன் நண்பனான நந்தனுக்கும், அவனது மனைவி யசோதைக்கும் பிறந்த பெண்குழந்தையை எடுத்துவா நான் யசோதையின் மகனாய் கோகுலத்தில் வளர்கிறேன். உரிய காலம் வரும்போது கம்சனை வதம் செய்து உங்களையும் மீட்கிறேன் என்று கூறினார் விஷ்ணு.

    விஷ்ணுவும் சிறைகாவலர்களை மயக்கமடைய செய்து வசுதேவரின் மூலம் கோகுலத்தில் யசோதையின் மகனாக கிருஷ்ணர் வளர்கிறார். வசுதேவர் நந்தனின் மகளை மதுராவிற்கும் எடுத்து வந்துவிடுகிறார். சிறையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்து கம்சன் பெண் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்து போகிறார்.

    என்ன குழந்தையாக இருந்தால் என்ன என்று அந்த பெண்குழந்தையை எடுத்து சுவற்றில் அடிக்கும் போது விஷ்ணுவின் இளைய சகோதரி துர்க்கையின் வடிவத்தில் காட்சி தந்து உன்னை கொல்லப்போகும் குழந்தை கோகுலத்தில் வளர்கிறது என்று கூறிவிட்டு அந்த பெண்குழந்தை மாயமாக மறைந்தது.

    கிருஷ்ணர் கோகுலத்தில் மாயோண் கண்ணனாய் கோபியர்களின் உள்ளத்தை கொள்ளையடித்த வெண்ணெய் திருடனாய், கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கர்களை அழித்து, ஆடிப்பாடி குழலூதி, நண்பர்களுடன் விளையாடி குறும்புத்தனம் செய்து காலத்தை கழித்து கோகுலத்திலேயே செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்தார்.

    ராதையுடன் காதல்கொண்டு சிறுவயதிலேயே பிரம்மதேவர் முன்னிலையில் இரண்டுபேருக்கும் திருமணம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. 13 வயதில் தன்னுடைய தாய்மாமனான கம்சனை கிருஷ்ணர் வதம் செய்தார். ராதைக்கும் அயன்கூட திருமணம் நடக்கிறது. கிருஷ்ணர் மதுராவிற்கு சென்றபின்னர் கோகுலத்திற்கு திரும்பிவரவில்லை, ராதையையும் சந்திக்கவில்லை.

    கம்சனை வதம் செய்தபிறகு மதுராவில் அரசனாக முடிசூடிக்கொண்டு ஆட்சி செய்து வந்தார் கிருஷ்ணர். மாபெரும் பலசாலியான கம்சன் தன்னோட மருமகனால் கொல்லப்பட்டான் என்ற செய்து அறிந்த கம்சனின் மாமன் ஜராசந்தன் தன்னுடைய இரண்டு பெண்களும் விதவையானதற்கு காரணம் கிருஷ்ணர் தான் காரணம் அவரை கொன்றே ஆகவேண்டும் என்று முடிவு செய்தார்.

    குதிரைப்படை, யானைப்படை என்று பல படைகளை உடைய மாவீரன் ஜராசந்தன். 17 முறை மதுரா மீது போர்தொடுத்து வருகிறார். ஆனால் கிருஷ்ணர் பிறந்ததற்கான காரணமே பூமாதேவியின் பாரத்தை குறைப்பது. ஒவ்வொரு முறையும் ஜராசந்தரின் படைகளை கிருஷ்ணரும், பலராமரும் சேர்ந்து தோற்கடித்தனர்.

    அப்படியும் ஜராசந்தன் மற்ற நாட்டு படைகளை கூட்டிக்கொண்டு மதுரா மீது தொடர்ந்து போர்தொடுத்து சென்றார். ஜராசந்தனின் வெறி அடங்கவில்லை. கிருஷ்ணரின் வம்சத்தையே அழிக்க வேண்டும் என்று முடிசெய்கிறார். ஆனால் கிருஷ்ணர் நினைத்திருந்தால் ஜராசந்தனின் வம்சத்தையே அழித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நாட்டை பாதுகாக்க மனிதர்களும், அரக்கர்களும் போக முடியாதபடி. ஒரு கோட்டையை உருவாக்க முடிவு செய்கிறார்.

    பாகவத நூலில் கிருஷ்ணர் கடலுக்கு மத்தியில் எவ்வாறு கம்பீரமான துவாரகையை உருவாக்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகமே வியந்துபோகிற அளவுக்கு யாருமே படை எடுத்து கிட்ட கூட நெருங்காதபடி ஒரு நகரத்தை உருவாக்க முடிவெடுக்கிறார்.

    சாதாரன கட்டிடக்கலை நிபுணர்கள் வேண்டாம் என்று தேவசிற்பியான விஷ்வகர்மாவை அழைத்து ஆலோசனை கேட்டார். அதற்கு விஷ்வகர்மா நிலத்தில் வேண்டாம். கடலுக்கு நடுவில் அப்படி ஒரு நகரத்தை உருக்கலாம் என்று கிருஷ்ணரிம் சொல்கிறார். அதற்கு கிருஷ்ணர் கடல் அரசனிடம் கேட்டு குஜராத் கடலுக்கு நடுவில் ஒரு தீவை ஆக்கிரமித்து மிகப்பெரிய மாளிகையை விஷ்வகர்மாவால் கட்ட வைக்கிறார்.

    நாம் பாகுபலி படத்தில் எவ்வாறு மிகப்பிரமாண்ட மாளிகைகளை பார்த்திருக்கிறோமே, அதேபோல் பிரமாண்டமான மாளிகையை கட்டினார்கள். கிட்டத்தட்ட 9 லட்சம் மாளிகைகள் கொண்ட அப்படி ஒரு கோட்டையை விஷவகர்மா இதுவரை கட்டியதில்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த மாளிகை மிகப்பிரமாண்டமாக காட்சி அளித்தது.

    எலாமே தங்கத்தாலும், வைரத்தாலும் செதுக்கி அரண்மணைகளை உருவாகினார்கள். எல்லா வகை வசதிகளுடனும் துவாரகை நகரம் உருவாக்கப்படுகிறது. அங்கு வாழும் மக்கள் எந்த தேவைக்காகவும் வெளியே செல்லாத அளவுக்கு அங்கு விவசாயம்,, வணிகம் ஆகிய துறைகள் சிறந்து விளங்கியது. ஒரு வளர்ச்சி அடைந்த செல்வசெழிப்பான கோட்டையை விஷ்வகர்மா, கிருஷ்ண்ருக்காக உருவாக்கி கொடுத்தார்.

    கிருஷ்ணர் அந்த கிராமத்திற்கு துவாரகை என பெயரிட்டு யாதவ குல மக்களை மதுராவில் இருந்து துவாரகைக்கு குடியேற்றுகிறார். யாதவ குலமக்கள் அனைவரும் செல்வச்செழிப்புடனும், சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

    • மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.
    • ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.

    கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

    தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம்.

    ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார்.

    பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.

    எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.

    மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.

    இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.

    சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும்.

    இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.

    ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.

    கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன் மூலம் நிரூபிக்கிறான்.

    ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.

    அடேபக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.

    என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.

    குடும்பம் என்ற சம்சாரக்கடலில் விழுந்து, தத்தளித்து அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான்.

    இது தான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

    • இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.
    • ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?

    கிருஷ்ண ஜெயந்தி-உறியடி விளக்கும் வாழ்க்கை தத்துவம்

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழாதான் மிக பிரச்சித்தமாக நடைபெறும்.

    ஒவ்வொரு ஊரின் மரபுக்கு ஏற்ப உறியடி திருவிழா பல வகைகளாக நடத்தப்படுகிறது.

    இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.

    பானை என்பது பரம்பொருள்.

    அது நமக்கு எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது.

    பரம்பொருளின் காலடியில் ஐக்கியமாகி முக்தி அடைய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணமாக இருக்கும்.

    ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?

    எத்தனை, எத்தனை அலைக்கழிப்புகளில் சிக்கி அல்லாட வேண்டியதிருக்கிறது.

    லௌகீக வாழ்க்கையில், ஆசா பாசங்களுக்கு இடம் கொடுத்து அல்லல்பட வேண்டியுள்ளது.

    இந்த தடைகளையெல்லாம் மீறி, கடந்து, தட்டுத் தடுமாறி பரம்பொருளை நெருங்க வேண்டியதுள்ளது.

    அப்போது நமது சிந்தனை, செயல் எல்லாம் பரம்பொருளிடம் சென்று சேர வேண்டும் என்ற ஒரே சிந்தனையாக, உறுதியான சிந்தனையாக இருக்க வேண்டும்.

    இந்த ஒரு முக சிந்தனையே அகங்காரம் எனும் உறியடி பானையை உடைக்க வைக்கும்.

    அகங்காரம்போய்விட்டால் இறையருளும், முக்தி எனும் பாக்கியமும் தேடி வரும்.

    உறியடி திருவிழாவில் இப்படி மாபெரும் தத்துவம் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    கிருஷ்ணர் வழிபாட்டின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு தத்துவத்தை கொண்டுள்ளது.

    அவற்றை உணர்ந்து, புரிந்து கிருஷ்ணரை வழிபட்டால் பரம்பொருளின் அருள் பார்வை பெற்று ஆனந்தமாக வாழலாம்.

    • இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
    • குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.

    கிருஷ்ண வழிபாட்டு பலன்கள்

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை மறக்காமல் கிருஷ்ணரை வழிபட செய்ய வேண்டும்.

    அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    கிருஷ்ணரை வழிபட, வழிபட மாணவர்களுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனமும், ஆற்றலும் அதிகரிக்கும்.

    பெரும்பாலான ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை கண்ணன், ராதை போன்று வேடமிட்டு ஆராதனை செய்வார்கள்.

    இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணரை வழிபட்டால் அகந்தை அகலும்.

    குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.

    கிருஷ்ணரை வழிபடும் இளைஞர்கள் தர்மசீலர்களாக வாழ்வார்கள்.

    பெண்கள் கிருஷ்ணரை மனம் உருக வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கை கூடும்.

    விவசாயிகள் கண்ணனை கும்பிட்டால் வயல்களில் விளைச்சல் பெருகும்.

    மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன்கள் தீரும்.

    தொழில் அதிபர்கள் கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் புகழ் உண்டாகும்.

    தன்னை நாடி வரும் அரசியல்வாதிகளின் நிர்வாக திறமையை கிருஷ்ணர் அதிகரிக்க செய்வார்.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த சீடை, அகல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, வெண்ணை, பால் கோவா போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    கிருஷ்ண நாமத்தை உச்சரித்தப்படி கோகுலாஷ்டமியை கொண்டாட வேண்டும்.

    யார் ஒருவர் கிருஷ்ணரை ஸ்தோத்திரங்களால் துதித்து வணங்குகிறார்களோ, அவர் நாமத்தையே உச்சரித்தப்படி இருக்கிறார்களோ, அவர்களுக்கு புண்ணிய உலகை சென்று அடையும் பாக்கியம் கிடைக்கும்.

    • இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.
    • கோவிந்தா என்ற சொல்லுக்கு “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்” என்று பொருளாகும்.

    சைவ வைணவத்தை இணைக்கும் கிருஷ்ணர் பாதம்

    கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார்.

    அப்போது வெண்ணை சிதறி அவர் கால்களில் விழுந்தது.

    அதோடு கிருஷ்ணர் நடந்ததால், கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது.

    அதை நினைவு படுத்தவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கிருஷ்ணரின் கால் சுவடு பதிக்கப்படுகிறது.

    மேலும் இது நம் வீட்டுக்கு கிருஷ்ணர் வருவதை குறிக்கிறது.

    இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு 8 போன்று இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    இதில் 8 என்பது "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தையும், 5 என்பது "நமசிவாய" என்ற மந்திரத்தையும் பிரதிபலிக்கிறது.

    இப்படி எல்லாருக்கும் அருளும் கிருஷ்ணரை வழிபடும்போது, "கோவிந்தா"என்று சொல்லி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.

    கோவிந்தா என்ற சொல்லுக்கு "கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்" என்று பொருளாகும்.

    யார் ஒருவர் கிருஷ்ணரை கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லி வணங்குகிறார்களோ., அவர்களுக்கு பசுதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    • நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.
    • ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.

    கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள்

    கிருஷ்ண பரமாத்மா மொத்தம் 8 வகையாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் சந்தான கோபால கிருஷ்ணர் கோலமாகும்.

    தவழும் கோலத்தில் இருப்பவர் பாலகிருஷ்ணன்.

    நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.

    ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.

    ருக்மணி, சத்யபாமாவுடன் இருப்பவர் முரளீதரன்.

    அஷ்டபுஜங்களை உடையவர் மதனகோபால்.

    கோவர்த்தனகிரியை தூக்கிப் பிடிக்கும் கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவர்த்தனதாரி ஆவார்.

    அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கும் கோலத்தில் இருப்பவர் பார்த்தசாரதி.

    கிருஷ்ணரை இப்படி எந்த கோலத்திலும் வழிபடலாம்.

    ஆனால் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரின் காலடி சுவட்டை கோலமாக வரைந்து வழிபட்டால், வீடே கோகுலமாக மாறி விட்டதுபோன்ற பக்தி உணர்வு நம் மனதில் ஆழமாக பதிந்து விடும்.

    • இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
    • அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

    கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரை வழிபடும் முறை

    சரி கிருஷ்ண பரமாத்மாவை மிக எளிமையாக வழிபடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் விரதம் இருக்க வேண்டும்.

    பகலில் விரதம் இருக்க வேண்டும்.

    இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

    மறுநாள் மீண்டும் கிருஷ்ணரை பூஜித்து வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    கிருஷ்ணருக்கு பூக்களை அர்ப்பணிக்கும்போது மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ணரை மூன்று முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மிகவும் மகிமை வாய்ந்தது.

    அதன் ஆற்றல் அளவிட முடியாதது.

    எனவே சுதர்சன சக்கரத்தையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

    • ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.
    • இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    துர்க்கையாக மாறிய பெண் குழந்தை

    எட்டாவது குழந்தையை அழிக்க வேண்டும் என சிறைச்சாலைக்கு சென்ற கம்சனிடம், தேவகி, "கம்சனே, இந்த குழந்தை பெண் குழந்தை , தெய்வீக எச்சரிக்கை சொன்ன ஆண் குழந்தை அல்ல. இந்தக் குழந்தை உங்களுக்கு எப்படித் தீங்கு செய்யும்?" இதனை விட்டுவிடுங்கள் என கலங்கி முறையிட்டாள்.

    ஆனால் கம்சன் அவளை அலட்சியப்படுத்தி, குழந்தையை அவள் மடியில் இருந்து பிடுங்கி, குழந்தையை சிறைச் சுவரில் வீசினான்.

    குழந்தை கீழே விழவில்லை; அதற்கு பதிலாக அவள் பறந்து சென்று எட்டு கரங்களுடன், ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.

    அவள், "பொல்லாத கம்சனே! என்னைக் கொல்வதால் உனக்கு எந்தப் பலனும் கிடைக்காது. உன்னை அழிப்பவன் வேறொரு இடத்தில் வளர்கிறான்" என்று கூறி தேவி மறைந்தாள்.

    இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    மன்னன் நந்தனின் மகன் பிறந்ததை அனைவரும் கொண்டாடினர்.

    நந்தன் அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார்.

    அன்று முழுக்க கோகுலம் ஒரு பண்டிகை தோற்றத்தில் இருந்தது.

    தெருக்கள் துடைக்கப்பட்டு, அனைத்து வீடுகளும் கொடிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டன.

    பசுக்களுக்கு மஞ்சள் பூசி, மயில் தோகை மற்றும் மாலைகள் அணிவித்தனர்.

    கோகுல மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் நடனமாடி, குழந்தை கிருஷ்ணனைப் பார்க்கவும், பரிசுகளை வழங்கவும் நந்தாவின் வீட்டிற்கு திரண்டனர்.

    பகவான் கிருஷ்ணர் பிறந்த கதை, கடவுள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் மற்றும் அன்பானவர் என்பதைக் காட்டுகிறது.

    கம்சனின் துன்மார்க்க ஆட்சியின் போது நடந்ததைப் போல, இந்த உலகில் தீமை தாங்க முடியாததாக மாறும் போதெல்லாம், கடவுள் கிருஷ்ணரைப் போல ஒரு அவதார வடிவில் நம்மைக் காப்பாற்ற வருகிறார்.

    • பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது.
    • நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.

    கிருஷ்ணருக்கு வழிவிட்ட யமுனை

    குழந்தை பிறந்தவுடன், மகாவிஷ்ணு தனது தெய்வீக வடிவில் தோன்றினார், சிறைச்சாலை ஒரு திகைப்பூட்டும் ஒளியால் நிரப்பப்பட்டது.

    தேவகி மற்றும் வசுதேவ் இருவரும் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர்.

    கிருஷ்ணர் சிறையில் பிறந்த அதே நேரத்தில், ராணி யசோதா கோகுலத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

    பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது,

    "கோகுலத்திற்கு சென்று யசோதாவின் குழந்தைக்கு பதில் இந்த குழந்தையை வைத்துவிட்டு யசோதா நந்தகோபரின் குழந்தையை எடுத்து கொண்டு, இந்தக் குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியும் முன் நீ திரும்பி வந்துவிடு" என்றார்.

    வாசுதேவர் உடனடியாக அறிவுரையைப் பின்பற்றினார்.

    கைக்குழந்தையுடன் அவர்களை நோக்கிச் செல்லும்போது சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன.

    தெய்வீக தலையீட்டால் காவலர்கள் ஏற்கனவே தூங்கிவிட்டனர்.

    கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மிகவும் கொந்தளிப்பான யமுனை நதியை வாசுதேவர் நெருங்கினார்.

    வாசுதேவர் ஆற்றங்கரையை அடைந்தவுடன், நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.

    வாசுதேவர் பத்திரமாக ஆற்றின் எதிர் கரையை அடைந்தார், கோகுல மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டார்.

    மன்னன் நந்தா மற்றும் ராணி யசோதாவின் அரண்மனைக்குள் நுழைந்து யசோதாவின் பெண் குழந்தை இடத்தில் ஆண் குழந்தையை வைத்தார்.

    பின்னர் அங்குள்ள பெண் குழந்தையுடன் சிறைக்கு திரும்பினார்.

    வாசுதேவர் பெண் குழந்தையை தேவகியின் அருகில் வைத்தவுடன், சிறைக் கதவுகள் தானாக மூடப்பட்டன.

    காவலாளிகள் இப்போது விழித்திருந்து, பெண் குழந்தையின் அழுகையால் திடுக்கிட்டனர்.

    காவலர்கள் கம்சனிடம் ஓடி சென்று எட்டாவது குழந்தை பிறந்ததை அறிவித்தனர்.

    உடனே, கம்சன் குழந்தையை தூக்கிலிட சிறைச்சாலைக்கு விரைந்தான்.

    • கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.
    • அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    கிருஷ்ணர் பிறந்த கதை

    நீண்ட காலத்திற்கு முன்பு, பண்டைய இந்தியாவில், உக்ரசேனன் என்ற அரசன் இருந்தான்.

    அவருக்கு இளவரசர் கம்சன் மற்றும் இளவரசி தேவகி என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

    இளவரசர் கம்சன் இயல்பிலேயே கெட்டவர்.

    கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.

    விரைவில், அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    திருமணத்திற்குப் பிறகு, கம்சன் வானத்திலிருந்து ஒரு தெய்வீக அசரீரியைக் கேட்டான்,

    "அரசே! உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்லும் அளவுக்கு வளர்வான்" என்று, இதைக் கேட்டு பயந்த கம்சன் தனது சொந்த சகோதரி தேவகி மற்றும் அவரது கணவர், மன்னர் வாசுதேவ் ஆகியோரை உடனடியாக சிறையில் அடைத்து, தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தான்.

    வருடங்கள் கடந்தன. ஒவ்வொரு முறையும் தேவகி சிறையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, கம்சன் வந்து குழந்தையைத் தன் கைகளால் கொன்றான்.

    எட்டாவது முறையாக தேவகி கருவுற்றபோது, வசுதேவரின் நண்பன் மன்னன் நந்தனின் மனைவி யசோதாவும் கர்ப்பமாக இருந்தாள்.

    எட்டாவது குழந்தை, பகவான் கிருஷ்ணர், சிறையில் நள்ளிரவில் ராணி தேவகிக்கு பிறந்தார்.

    • மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
    • ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணா... கிருஷ்ணா என்றால் இன்பம் வரும்

    மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.

    ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத் தினத்தை ஆண்டு தோறும் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.

    இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினம் செப்டம்பர் 6 மற்றும் 7ந் தேதிகளில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று நள்ளிரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று, அவரது சக்தி ஆயிரம் மடங்கு அதிகரிப்பதாக ஐதீகம்.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இரவு, "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்று 108 தடவை அல்லது 1008 தடவை சொல்லி வழிபட்டால் கிருஷ்ண பகவானின் அருள் பரிபூரணமாய் நமக்கு கிடைக்கும்.

    மேலும் கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் "பஜகோவிந்தம்" பாட வேண்டும்.

    ஆதிசங்கரர் தான் சென்ற இடங்களில் எல்லாம் பஜகோவிந்தம் பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார்.

    ×