search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாபாரதம்"

    • விநாயகரை வழிபாடு செய்தார். விநாயகர் வியாசரின் முன் தோன்றினார்.
    • வியாசர் அவரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார்.

    வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார்.

    அவருடைய சிந்தனையில் மகாபாரத வரலாறு தோன்றியது.

    பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தவிட்டார்.

    பாடுகின்றவர் எழுதினால் பாடுகின்ற வேகம் தடைபடும்.

    ஆதலால், தாம் பாடும் மகாபாரதத்தை எழுதி முடிக்க வல்லவர் யார் என்று வியாசர் சிந்தித்தார்.

    விநாயகர்தான் அதற்கு ஏற்றவர் என்று முடிவு செய்தார்.

    விநாயகரை வழிபாடு செய்தார். விநாயகர் வியாசரின் முன் தோன்றினார்.

    வியாசர் அவரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார்.

    அதற்கு சம்மதித்த விநாயகர் நான் வேகமாக எழுதுவேன்.

    நான் எழுதுகின்ற வேகத்துக்கு உம்மால் பாட முடியுமா என்றார்.

    வியாசர் அதுகேட்டு திகைத்தார். ஆகட்டும். நீர் எழுதுகின்ற வேகத்திற்கு ஏற்ப நான் பாடுவேன்.

    ஆனால் பொருள் தெரிந்து எழுத வேண்டும் என்றார்.

    பொருள் தெரிந்து எழுதுவதென்றால் வேகமாக எழுத முடியாது.

    விநாயகர் சரி என்றார். வியாசர் பாட தொடங்கினார்.

    விநாயகர் தமது கொம்பினால் மேரு மலையில் எழுதலானார்.

    60 லட்சம் கிரந்தங்கள் பாடினார்.

    இதில் விநாயகருடைய எழுதும் வேகத்தை மட்டுப்படுத்தும் பொருட்டுக் கடினமான பதங்களை அமைத்து இடையே 8800 சுலோகங்கள் பாடினார்.

    இதற்கு என்ன பொருள் என்று விநாயகர் சிறித சிந்திக்கும் பொழுது பலப் பல சுலோகங்களை வியாசர் மனதில் ஆயத்தம் செய்து கொண்டார்.

    இவ்வாறு வியாசர் பாடிய அறுபது லட்சம் கிரந்தங்களில் 30 லட்சம் தேவருலகில் நின்றது.

    15 லட்சம் அசுரவுலகில் நின்றது. 14 லட்சம் யட்சவுலகில் நின்றது. ஒரு லட்சம் மட்டுமே பூவுலகில் நின்றது.

    • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சவால்கள் நிரம்பியுள்ளன.
    • மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானது.

    மகாபாரத யுத்ததின் போது, கர்ணன் தன் நண்பன் துரியோதனனின், பக்கம் நின்று போரிட்டான். ஆனால் கர்ணனை, பாண்டவர்களின் பக்கம் வந்து விடும்படி கண்ணன் உள்பட பலரும் அழைத்தனர். ஆனாலும் அவன் செல்லவில்லை.

    ஒரு கட்டத்தில், தான் துரியோதனனின் பக்கம் நிற்பதில் என்ன தவறு இருக்கிறது என்ற எண்ணம் அவன் ஆழ்மனதை துளைத்தது. தன்னுடைய இறுதி கட்டத்தில், நெஞ்சில் அம்பு பாய்ந்து, தன் முன் கிருஷ்ணன் விஸ்வரூபமாக காட்சி தருகையில், தன்னுடைய ஆழ்மனதை துளைத்த கேள்விகளை, கண்ணனிடமே கேட்டான், கர்ணன்.

    `கண்ணா.. என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார். முறைதவறிப் பிறந்த குழந்தை என்ற அவப்பெயருக்கு ஆளானேன். இது என் தவறா?. நான் சத்ரியன் அல்ல என்று கூறி, துரோணாச்சாரியார் எனக்கு கல்வி கற்றுத்தரவில்லை. இது என் தவறா? பரசுராமர் எனக்கு அனைத்தும் கற்றுக் கொடுத்தார். ஆனால் நான் பிராமணன் இல்லை. சத்ரியன் என்று தெரியவந்ததும், நான் படித்த அனைத்தும் மறந்து போகும் என்று சாபமிட்டுவிட்டார். இது என் தவறா?

    ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது. ஆனால் அந்தப் பசுவின் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரவுபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டேன். என் தாயாரான குந்தி கூட, இறுதியில் தன்னுடைய மற்ற மகன்களை காப்பாற்றும் நோக்கத்தில்தான் என்னைத்தேடி வந்தார்.

    இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் நான் வஞ்சிக்கப்பட்டபோது, துரியோதனன் ஒருவன்தான் என்னிடம் அன்பு காட்டினான். அவனால் தான் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது. அதனால் அவன் பக்கம் நான் நின்றதில் என்ன தவறு இருக்கிறது?" என்றான், கர்ணன்.

    அதற்கு பதில் அளித்த கிருஷ்ணர், `கர்ணா நீயாவது பரவாயில்லை. ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதில் இருந்து வாள், ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலைக் கேட்டு வளர்ந்தாய். நானோ மாடு, கொட்டில், சாணம், வைக்கோல்களுக்கிடையே வளர்ந்தேன்.

    நடக்க ஆரம்பிக்கும் முன்பே, என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை, பயிற்சி இல்லை, ஆனால் எல்லோரும் இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் நான்தான் காரணம் என்கிறார்கள்.

    நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது, நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில்தான், ரிஷி சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்தேன்.

    நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ, விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை, கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

    ஜராசந்த்திடம் இருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையில் இருந்து தூரமாக என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டி இருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை.

    துரியோதனனுடன் போரிட்ட நீ வெற்றிபெற்றிருந்தால், உனக்கு நிறைய பொருள், நாடு, சேனை, கவுரவம் கிடைத்திருக்கும். ஆனால் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து யுத்தம் செய்ததால், எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்.

    கர்ணா ஒன்றை நினைவில் கொள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சவால்கள் நிரம்பியுள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும், எளிதாகவும் இருப்பதில்லை. ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானது. எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம். எத்தனை முறை நாம் அவமானப்படுத்தப்பட்டோம். எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியம்.

    நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள், நம்மை தவறான பாதையில் செலுத்துவதற்கான உரிமையை பெற்றுத் தருவதில்லை. நம் வாழ்க்கையில் கரடுமுரடான பாதை இருக்கலாம். அவற்றை காயப்படமல் கடப்பது பாதுகைகளால் அல்ல. நாம் கவனமாக எடுத்து வைக்கும் அடிகளால் மட்டுமே.' என்றார். கண்ணன்.

    • சகுனி-துவாபர யுகமே சகுனியாக பிறந்தது.
    • துரியோதனன்-கலியுகமே துரியோதனனாய் பிறந்தது.

     1. கர்ணன்-சூரியன் அம்சம் அல்லது சூரிய அவதாரம்.

    2. அர்ஜுனன் - இந்திரன் அம்சம் அல்லது நரன்.

    3. பீஷ்மர்- பிரபாசன் (அஷ்டவசுகளில் இறுதியானவர்).

    4. கிருபர்-சிவனின் ருத்திரர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    5. சகுனி-துவாபர யுகமே சகுனியாக பிறந்தது.

     6. சாத்தியகி-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    7. துருபதன்-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    8. கிருதவர்மன்- தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    9. விராடன்-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    10. திருதிராஷ்டிரன்-ஹம்சன் என்னும் கந்தர்வராஜன்.

    11. பாண்டு-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    12. விதுரர்-தர்மதேவதையின் அம்சம்.

    13. துரியோதனன்-கலியுகமே துரியோதனனாய் பிறந்தது.

    14. துச்சாதனன் முதலிய தம்பிகள்-புலஸ்தியர் புத்திரர்களாகிய அரக்கர்கள்.

    15. துரோணர்-பிரகஸ்பதி அவதாரம் (குரு பகவான்).

     16. தர்மன்-யமதர்மன் அம்சம்.

    17. பீமன்-வாயு பகவான் அம்சம்.

    18. அஸ்வத்தாமன் -சிவன் மற்றும் யமன் காமம் மற்றும் கோபத்தில் உருவானவன்.

    19. நகுலன் சகாதேவன் - அஸ்வினி தேவர்கள் அம்சம்.

    20. அபிமன்யு-வர்சஸ் (சந்திரன் மகன்).

    21. பிரதிவிந்தியன், சுகஸோமன், ஸ்ருதகீர்த்தி,சதானிக்கன் கருதசேனன். (பாஞ்சாலி புதல்வர்கள்)- விஸ்வதேவர்கள் கூட்டத்தை

    சேர்ந்தவர்கள்.

     22. பலராமன்-ஆதிசேஷன் அவதாரம்.

    23. கிருஷ்ணன் - விஷ்ணு அவதாரம்.

    24. பரசுராமன்- விஷ்ணு அவதாரம்.

    25. ருக்மணி- லட்சுமி அவதாரம்.

    26. பிரத்தியும்னன் (கிருஷ்ணன் மகன்)- சனத்குமாரர்.

    27. பாஞ்சாலி - நளாயினி.

    28. குந்தி- சித்தி என்னும் தேவஸ்ரீ.

    29. மாதிரி- த்ரிதி என்னும் தேவஸ்ரீ.

    30. காந்தாரி- மதி என்னும் தேவதை.

     31. திருசியுத்தமன்- அக்னியின் ஒரு அம்சம்.

    32. ஜராசந்தன்- விபிரஜித் என்னும் அரக்கர்கள் தலைவன்.

    33. சிசுபாலன்- ஹிரண்யகசிபு.

    34. சல்லியன்- பிரகலாதன் தம்பி ஹம்சலாதன்.

    35. திருஸ்தகேது (சிசுபாலன் மகன்)- பிரகலாதன் தம்பி அனுகலாதன்.

    36. பகதத்தன் (நரகாசுரன் மகன்)- பாஷ்கலங் என்னும் அரக்கர் தலைவன்.

    37. உக்கிரசேனன்- சொர்ணபானு என்ற அரக்கன்.

    38. பக்லிகன் (பீஷ்மர் பெரியப்பா) - அகர்னன் என்னும் அரக்கமன்னன்.

    39. ருக்மி, ஏகலைவன், ஜனமேஜயன்- கீர்த்தவரசர்கள் என்னும் அரக்கர் கூட்டம்.

    40. கம்சன்-காலநேமி என்னும் மாபெரும் அரக்கன் (ராமாயணத்தில் வருவான்).

    41. சுபத்திரை- விஷ்ணு மனதில் தோன்றிய யோக மாயை.

    42. சிகண்டி- (அம்பை) அதற்கு முன் அரக்கன்.

    43. சாந்தனு-100 ராஜசூய யாகம் செய்த மஹாபிஷக்

    • வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதிநாட்டைக் கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர்.
    • தன்னை அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர்.

    பாண்டவர்களின் சார்பாக கவுரவர்களிடம் தூது புறப்பட்டார் கிருஷ்ணர்.

    கவுரவர்களின் அரண்மனைக்குச் செல்லாமல், அவர்களது சித்தப்பாவான விதுரரின் மாளிகைக்குச் சென்று விருந்துண்டார்.

    முதலில் தங்களைத் தேடி வராத கிருஷ்ணரை அவமதிக்க முடிவெடுத்தான் துரியோதனன்.

    அவையில் இருந்தவர்களிடம், "யாரும் கிருஷ்ணர் வரும் போது எழுந்திருக்காமல்,

    அவரை அவமதிக்க வேண்டும்," என்று உத்தரவிட்டான்.

    ஆனால், கிருஷ்ணரைக் கண்டதும் அவருடைய தேஜஸில் மயங்கி,

    தன்னை அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர்.

    துரியோதனன் மட்டும் ஏளனத்துடன், "கிருஷ்ணா! நீர் தூது வந்ததன் நோக்கம் என்ன?" என்று கேட்டான்.

    வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதிநாட்டைக் கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர்.

    ஆனால், துரியோதனனோ ஒரு பிடி மண் கூட கிடையாது என்று மறுத்துவிட்டான்.

    நல்லவரான விதுரர் மட்டும் துரியோதனிடம் தர்மத்தை எடுத்துச் சொன்னார்.

    ஆனால், விதுரரின் பிறப்பைப் பற்றி பேசி, துரியோதனன் அவரை அவமதித்தான்.

    "தர்மத்தின் பக்கம் தான் நிற்பேன்! என்னுடைய வில்லைக் கொண்டு அதர்மத்திற்கு உதவி செய்ய எனக்கு மனமில்லை!"

    என்று சொல்லி, அவர் தன் வில்லை முறித்துவிட்டார்.

    நல்லவரான விதுரர், செஞ்சோற்றுக்கடனுக்காக துரியோதனுக்கு உதவினால்,

    பாண்டவர்களால் போரில் வெல்ல முடியாது என்பதால்,

    துரியோதனுக்கும், விதுரருக்கும் வாதத்தை உருவாக்கி,

    அவரது கையாலேயே முக்கியமான ஒரு வில்லையும் ஒடிக்கச் செய்தது கிரிஷ்ணரின் தந்திரம் ஆகும்.

    • கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.
    • பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.

    பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன்.

    பத்துவித பெயர்களை உடையவன் அவன்.

    கூர்மையான பார்வையை உடையவன்.

    நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும்.

    அதனால் அவன் குடாகேசன் என்று அழைக்கப்பட்டான்.

    கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தார்.

    கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.

    எனவே அர்ஜுனன் பிறந்த தினமான பங்குனி உத்திர திருநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சிறப்பு பலன்கள்

    1. பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.

    2. பங்குனி உத்திரத்தன்று வேண்டுதல்களின் பேரில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோரை பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

    3. பங்குனி உத்திரத்தன்று சுவாமி கடல், ஏரி, கடாகம் போன்ற இடங்களில் தீர்த்தம் கொடுப்பார்.

    அப்போது அதில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

    • மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.
    • ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.

    கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

    தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம்.

    ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார்.

    பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.

    எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.

    மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.

    இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.

    சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும்.

    இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.

    ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.

    கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன் மூலம் நிரூபிக்கிறான்.

    ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.

    அடேபக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.

    என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.

    குடும்பம் என்ற சம்சாரக்கடலில் விழுந்து, தத்தளித்து அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான்.

    இது தான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

    • இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.
    • ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?

    கிருஷ்ண ஜெயந்தி-உறியடி விளக்கும் வாழ்க்கை தத்துவம்

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழாதான் மிக பிரச்சித்தமாக நடைபெறும்.

    ஒவ்வொரு ஊரின் மரபுக்கு ஏற்ப உறியடி திருவிழா பல வகைகளாக நடத்தப்படுகிறது.

    இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.

    பானை என்பது பரம்பொருள்.

    அது நமக்கு எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது.

    பரம்பொருளின் காலடியில் ஐக்கியமாகி முக்தி அடைய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணமாக இருக்கும்.

    ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?

    எத்தனை, எத்தனை அலைக்கழிப்புகளில் சிக்கி அல்லாட வேண்டியதிருக்கிறது.

    லௌகீக வாழ்க்கையில், ஆசா பாசங்களுக்கு இடம் கொடுத்து அல்லல்பட வேண்டியுள்ளது.

    இந்த தடைகளையெல்லாம் மீறி, கடந்து, தட்டுத் தடுமாறி பரம்பொருளை நெருங்க வேண்டியதுள்ளது.

    அப்போது நமது சிந்தனை, செயல் எல்லாம் பரம்பொருளிடம் சென்று சேர வேண்டும் என்ற ஒரே சிந்தனையாக, உறுதியான சிந்தனையாக இருக்க வேண்டும்.

    இந்த ஒரு முக சிந்தனையே அகங்காரம் எனும் உறியடி பானையை உடைக்க வைக்கும்.

    அகங்காரம்போய்விட்டால் இறையருளும், முக்தி எனும் பாக்கியமும் தேடி வரும்.

    உறியடி திருவிழாவில் இப்படி மாபெரும் தத்துவம் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    கிருஷ்ணர் வழிபாட்டின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு தத்துவத்தை கொண்டுள்ளது.

    அவற்றை உணர்ந்து, புரிந்து கிருஷ்ணரை வழிபட்டால் பரம்பொருளின் அருள் பார்வை பெற்று ஆனந்தமாக வாழலாம்.

    • இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
    • குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.

    கிருஷ்ண வழிபாட்டு பலன்கள்

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை மறக்காமல் கிருஷ்ணரை வழிபட செய்ய வேண்டும்.

    அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    கிருஷ்ணரை வழிபட, வழிபட மாணவர்களுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனமும், ஆற்றலும் அதிகரிக்கும்.

    பெரும்பாலான ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை கண்ணன், ராதை போன்று வேடமிட்டு ஆராதனை செய்வார்கள்.

    இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணரை வழிபட்டால் அகந்தை அகலும்.

    குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.

    கிருஷ்ணரை வழிபடும் இளைஞர்கள் தர்மசீலர்களாக வாழ்வார்கள்.

    பெண்கள் கிருஷ்ணரை மனம் உருக வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கை கூடும்.

    விவசாயிகள் கண்ணனை கும்பிட்டால் வயல்களில் விளைச்சல் பெருகும்.

    மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன்கள் தீரும்.

    தொழில் அதிபர்கள் கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் புகழ் உண்டாகும்.

    தன்னை நாடி வரும் அரசியல்வாதிகளின் நிர்வாக திறமையை கிருஷ்ணர் அதிகரிக்க செய்வார்.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த சீடை, அகல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, வெண்ணை, பால் கோவா போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    கிருஷ்ண நாமத்தை உச்சரித்தப்படி கோகுலாஷ்டமியை கொண்டாட வேண்டும்.

    யார் ஒருவர் கிருஷ்ணரை ஸ்தோத்திரங்களால் துதித்து வணங்குகிறார்களோ, அவர் நாமத்தையே உச்சரித்தப்படி இருக்கிறார்களோ, அவர்களுக்கு புண்ணிய உலகை சென்று அடையும் பாக்கியம் கிடைக்கும்.

    • இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.
    • கோவிந்தா என்ற சொல்லுக்கு “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்” என்று பொருளாகும்.

    சைவ வைணவத்தை இணைக்கும் கிருஷ்ணர் பாதம்

    கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார்.

    அப்போது வெண்ணை சிதறி அவர் கால்களில் விழுந்தது.

    அதோடு கிருஷ்ணர் நடந்ததால், கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது.

    அதை நினைவு படுத்தவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கிருஷ்ணரின் கால் சுவடு பதிக்கப்படுகிறது.

    மேலும் இது நம் வீட்டுக்கு கிருஷ்ணர் வருவதை குறிக்கிறது.

    இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு 8 போன்று இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    இதில் 8 என்பது "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தையும், 5 என்பது "நமசிவாய" என்ற மந்திரத்தையும் பிரதிபலிக்கிறது.

    இப்படி எல்லாருக்கும் அருளும் கிருஷ்ணரை வழிபடும்போது, "கோவிந்தா"என்று சொல்லி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.

    கோவிந்தா என்ற சொல்லுக்கு "கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்" என்று பொருளாகும்.

    யார் ஒருவர் கிருஷ்ணரை கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லி வணங்குகிறார்களோ., அவர்களுக்கு பசுதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    • நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.
    • ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.

    கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள்

    கிருஷ்ண பரமாத்மா மொத்தம் 8 வகையாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் சந்தான கோபால கிருஷ்ணர் கோலமாகும்.

    தவழும் கோலத்தில் இருப்பவர் பாலகிருஷ்ணன்.

    நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.

    ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.

    ருக்மணி, சத்யபாமாவுடன் இருப்பவர் முரளீதரன்.

    அஷ்டபுஜங்களை உடையவர் மதனகோபால்.

    கோவர்த்தனகிரியை தூக்கிப் பிடிக்கும் கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவர்த்தனதாரி ஆவார்.

    அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கும் கோலத்தில் இருப்பவர் பார்த்தசாரதி.

    கிருஷ்ணரை இப்படி எந்த கோலத்திலும் வழிபடலாம்.

    ஆனால் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரின் காலடி சுவட்டை கோலமாக வரைந்து வழிபட்டால், வீடே கோகுலமாக மாறி விட்டதுபோன்ற பக்தி உணர்வு நம் மனதில் ஆழமாக பதிந்து விடும்.

    • இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
    • அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

    கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரை வழிபடும் முறை

    சரி கிருஷ்ண பரமாத்மாவை மிக எளிமையாக வழிபடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் விரதம் இருக்க வேண்டும்.

    பகலில் விரதம் இருக்க வேண்டும்.

    இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

    மறுநாள் மீண்டும் கிருஷ்ணரை பூஜித்து வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    கிருஷ்ணருக்கு பூக்களை அர்ப்பணிக்கும்போது மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ணரை மூன்று முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மிகவும் மகிமை வாய்ந்தது.

    அதன் ஆற்றல் அளவிட முடியாதது.

    எனவே சுதர்சன சக்கரத்தையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

    • ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.
    • இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    துர்க்கையாக மாறிய பெண் குழந்தை

    எட்டாவது குழந்தையை அழிக்க வேண்டும் என சிறைச்சாலைக்கு சென்ற கம்சனிடம், தேவகி, "கம்சனே, இந்த குழந்தை பெண் குழந்தை , தெய்வீக எச்சரிக்கை சொன்ன ஆண் குழந்தை அல்ல. இந்தக் குழந்தை உங்களுக்கு எப்படித் தீங்கு செய்யும்?" இதனை விட்டுவிடுங்கள் என கலங்கி முறையிட்டாள்.

    ஆனால் கம்சன் அவளை அலட்சியப்படுத்தி, குழந்தையை அவள் மடியில் இருந்து பிடுங்கி, குழந்தையை சிறைச் சுவரில் வீசினான்.

    குழந்தை கீழே விழவில்லை; அதற்கு பதிலாக அவள் பறந்து சென்று எட்டு கரங்களுடன், ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.

    அவள், "பொல்லாத கம்சனே! என்னைக் கொல்வதால் உனக்கு எந்தப் பலனும் கிடைக்காது. உன்னை அழிப்பவன் வேறொரு இடத்தில் வளர்கிறான்" என்று கூறி தேவி மறைந்தாள்.

    இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    மன்னன் நந்தனின் மகன் பிறந்ததை அனைவரும் கொண்டாடினர்.

    நந்தன் அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார்.

    அன்று முழுக்க கோகுலம் ஒரு பண்டிகை தோற்றத்தில் இருந்தது.

    தெருக்கள் துடைக்கப்பட்டு, அனைத்து வீடுகளும் கொடிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டன.

    பசுக்களுக்கு மஞ்சள் பூசி, மயில் தோகை மற்றும் மாலைகள் அணிவித்தனர்.

    கோகுல மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் நடனமாடி, குழந்தை கிருஷ்ணனைப் பார்க்கவும், பரிசுகளை வழங்கவும் நந்தாவின் வீட்டிற்கு திரண்டனர்.

    பகவான் கிருஷ்ணர் பிறந்த கதை, கடவுள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் மற்றும் அன்பானவர் என்பதைக் காட்டுகிறது.

    கம்சனின் துன்மார்க்க ஆட்சியின் போது நடந்ததைப் போல, இந்த உலகில் தீமை தாங்க முடியாததாக மாறும் போதெல்லாம், கடவுள் கிருஷ்ணரைப் போல ஒரு அவதார வடிவில் நம்மைக் காப்பாற்ற வருகிறார்.

    ×