search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "durgai amman"

    • பெண்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும்.
    • வாலிபர்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் அழகும், அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.

    ராகு கிரகத்தின் அதிபதியான துர்க்கை அம்மனை ராகு காலத்தில்தான் வழிபட வேண்டும்.

    குறிப்பாக திருமணம் நடைபெறாமல் கால தாமதமாகி வரும் கன்னிப்பெண்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் 13 வாரங்கள் பூஜை செய்து வந்தால் கண்டிப்பாக அந்த கன்னிக்கு மனம்போல் மணமகன் வாய்த்து திருமணம் சிறப்பாக நடக்கும்.

    பிள்ளை பேறு இல்லாமல் மன அமைதியற்ற ஆண்களும் அன்னை துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் பூஜித்து வந்தால் அன்னையின் அருட்காடசத்தினால் அவரது மனைவி கருத்தரிப்பாள்.

    இதனால் பிள்ளை பேறு உண்டாகி சந்தோஷமடைவாள்.

    பெண்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும்.

    குழந்தை செல்வம் கிடைக்கும்.

    வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும்.

    ஆண்கள் துர்க்கையை வழிப்பட்டு வந்தால் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.

    வியாபாரம் விருத்தியாகும்.

    செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். செல்வ வளம் பெருகும்.

    இளம் பெண்கள் துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய் கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும்.

    நல்ல கணவன் அமைவான்.

    வாலிபர்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் அழகும், அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.

    அதனால் குடும்பம் செல்வக் களஞ்சியமாகும்.

    பிறக்கும் குழந்தைகளும் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள்.

    இதனால் வாழ்க்கையில் மேலும் மேலும் சந்தோஷம் உண்டாகும்.

    • ஞாயிற்றுக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்வதால் வறுமை நீங்கும்.
    • வெள்ளிக் கிழமைகளில் தேங்காய் சாதம் நைவேத்யம் செய்தால் மாங்கல்ய பலன் பெருகும்.

    ராகு கேது பெயர்ச்சியான ஜாதக ரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது.

    ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விவரம் தரப்பட்டுள்ளது.

    ஞாயிறு

    ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6.00 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும்.

    சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கள்

    திங்கள்கிழமைகளில் காலை 7.30-9.00 க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.

    இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

    செவ்வாய்

    ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும்.

    இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    புதன்

    மதியம் 12.00 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும்.

    இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பதும், ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.

    வியாழன்

    வியாழக் கிழமைகளில் மதியம் 1.30-3.00 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும்.

    இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    வெள்ளி

    வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12.00 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம்.

    எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும்.

    இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

    சனி

    சனிக்கிழமைகளில் காலை 9.00-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.

    இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.

    • விநாயகரின் உள்ளங்கவர் மூலிகை அறுகம்புல் ஆகும்.
    • இந்த வெப்பத்தால் விநாயகர் வயிற்றில் சூடு அதிகமாகி விட்டது.

    அருகம்புல்லும் விநாயகரும்!

    விநாயகரின் உள்ளங்கவர் மூலிகை அறுகம்புல் ஆகும்.

    நோய் தீர்க்கும் மூலிகைகளின் முன்னோடியாக விளங்குவது அறுகம்புல் திகழ்கிறது.

    மன ஒருமைக்கும், மகிழ்ச்சிக்கும் உடலைப் பேணவும் நடமாடும் தெய்வமாகத் திகழ்வது தெய்வீக மூலிகைகளேயாகும்.

    அவ்வகையில் அறுகம்புல் மகிமை மிக உன்னதமானது.

    விநாயகருக்கு உண்டான அதீதப் பசிநோய்க்கும் அறுகம்புல்லே உணவாக தரப்பட்டு நிவர்த்திக்கப்பட்டதாக விநாயகப் புராணம் கூறுகிறது.

    விநாயகப் பெருமான் ஒரு தடவை தேவர்களை காக்கும் பொருட்டு கொடியவனாகிய அனலாசுரனை விழுங்கி விட்டார்.

    இதன் காரணமாக அனலாசுரனின் கடும் வெப்பம் விநாயகரை தாக்கியது.

    இந்த வெப்பத்தால் விநாயகர் வயிற்றில் சூடு அதிகமாகி விட்டது.

    அதனால் தேவர்கள் அனைவர் வயிற்றிலும் கடும் கொதிப்பு உண்டானது.

    அனலைத் தணிக்க தேவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தனர்.

    ஆனால் என்ன செய்தும் பலனில்லை.

    அப்போது அங்கு வந்த முனிவர்கள் ஒவ்வொருவரும் 21 அருகம்புற்களை விநாயகருக்கு சாத்தினர்.

    உடனடியாக விநாயகரின் திருமேனி குளிர்ந்து விட்டது.

    அனைவரின் வயிற்றிலும் கொதிப்பு நீங்கி குளிர்ச்சி ஏற்பட்டது.

    அன்று முதல் விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.

    சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருப்பவர்கள் விநாயகருக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகித்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது.

    ஆரோக்கியம் பெற, உடல் கொதிப்பு தணிய நாமும் அருகம்புல் ஜூஸ் பருகலாம்.

    • வாகை மரமும், வன்னிமரமும் துர்கையுடன் தொடர்புடைய மரங்கள்.
    • வன்னிமர இலை விநாயகருக்கும் சனி பகவானுக்கும் விருப்பத்துக்குரிய இலையாகும்.

    வெற்றி தரும் வன்னி மரம்

    வாகை மரமும், வன்னிமரமும் துர்கையுடன் தொடர்புடைய மரங்கள்.

    இவற்றுள் வன்னிமரம் மிகவும் விசேஷமான ஒரு மரம்.

    இந்த மரம் உள்ள இடத்தின் அருகில் இன்னொரு மரம் இயற்கையாய் தோன்றுவதும் இல்லை.

    பயிரிடுவதும் மிகவும் கடினம்.

    வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவம் என்பார்கள்.

    ஜெயதுர்கா கோயில் கொண்டிருக்கும் இடம் அது.

    மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின் போது தமது ஆயுதங்களை, வெற்றி தரும் வன்னி மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

    உமாதேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும், புராணங்கள் உண்டு.

    விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில், வன்னிமரம் அக்னி சொரூபம் ஆகும்.

    வன்னிமர இலை விநாயகருக்கும் சனி பகவானுக்கும் விருப்பத்துக்குரிய இலையாகும்.

    விஜயதசமியின்போது, துர்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னிமரத்தடியில் நடக்கும்.

    வன்னி, வெற்றியைத் தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விசேஷம்.

    வன்னிமரம் புகழ்பெற்ற சில சிவாலயங்களில் தலவிருட்சமாக இருக்கிறது.

    இந்த மரத்தை வணங்கி வழிபட்டால், பரீட்சையில், வழக்குகளில் வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளை குவிக்கலாம் என்பது நிச்சயம்.

    • அம்மனை அப்பகுதி மக்கள்,‘துர்க்கம்மா’ என்றும் அழைக்கிறார்கள்.
    • இவ்வாலயத்தில் உள்ள அம்மன் சிவலிங்க வடிவமாக இருக்கிறார்.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ளது கட்டீல் என்ற ஊர். இங்குள்ள துர்க்கா பரமேஸ்வரிஅம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு ஆலயமாகும். இந்த அம்மனை அப்பகுதி மக்கள்,'துர்க்கம்மா' என்றும் அழைக்கிறார்கள். பக்தர்கள் நினைத்த காரியம் நடைபெற இந்த ஆலயத்தில் 'யட்சகானம்'என்ற வழிபாட்டை நடத்துகிறார்கள்.

    பழங்காலத்தில் இந்தப் பகுதியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அந்த பஞ்சத்தை போக்குவதற்காக ஜாபாலி என்ற முனிவர்,தவத்தில் ஈடுபட்டார்.அந்த முனிவரின் தவம் சிறப்பானது என்பதால்,இப்பகுதியில் நிலவிய பஞ்சத்தைப் போக்க, தேவலோக தலைவனான இந்திரன் முடிவு செய்தான். அதற்காக தேவலோகத்தில் இருந்து காமதேனு பசுவின் மகளான நந்தினியை பூமிக்கு சென்று, வளம் சேர்க்கும்படி இந்திரன் அனுப்பி வைத்தான்.ஆனால் கர்மவினைகளால் பல பாவங்களைச் செய்த மனிதர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல நந்தினி பசு தயங்கியது.

    அந்த பசு,பார்வதியை சரணடைந்து தான் பூலோகம் செல்ல விரும்பவில்லை என்றுகூறியது. அப்போது பார்வதி தேவி, "நீ பசுவாகஅங்கே செல்ல வேண்டாம். அனைத்து பாவங்களையும் நீக்கும் வல்லமைபடைத்த நதியாக மாறி பூலோகம் செல். அத்துடன் உன்னுடைய நீர்த் தன்மையால் அந்தப் பகுதியை பசுமையாக்கு" என்று உத்தரவிட்டார்.அதன்படி 'நேத்திராவதி' என்ற பெயரில் இங்கு நந்தினி பசு, நதியாக ஓடத் தொடங்கியது.

    அந்த சமயத்தில் அருணாசுரன் என்றஅரக்கன், பூலோகத்தில் பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தான். அவனிடம் இருந்துஉயிர்களைக் காக்கும் படி பார்வதியிடம் முனிவர்கள் வேண்டுகோள் வைத்தனர். அதன்படி அரக்கனை வதம் செய்வதற்காக, பார்வதிதேவி மோகினியாக வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கன்,அவளைப் பின் தொடர்ந்தான்.நேத்திராவதி ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் பின்னால், ஒளிவது போல் மோகினி பாவனைசெய்தாள். அரக்கன் அவளைப் பிடிக்க முயன்றான். அப்போது மோகினியாக இருந்த பார்வதிதேவி, வண்டாக வடிவெடுத்து,அவன் உடலுக்குள் நுழைந்து அவனைக் கொன்றார்.

    உக்கிரத்துடன் இருந்த பார்வதியை அமைதிப்படுத்த முனிவர்கள் இளநீரால் அபிஷேகம் செய்தனர்.உக்கிரம் தணிந்த அன்னை,ஆற்றின் நடுவில் 'துர்க்கா பரமேஸ்வரி' என்ற பெயரில் கோவில் கொண்டாள். இவ்வாலயத்தில் உள்ள அம்மன் சிவலிங்க வடிவமாக இருக்கிறார்.அவருக்கு அம்மன் வடிவில் அலங்காரம் செய்கிறார்கள்.

    நதியின் மடியில் தோன்றிய இடம் என்பதால்'கடில்' எனப்பட்டது. அதுவே தற்போது'கட்டீல்' என்று அழைக்கப்படுகிறது.கோவிலின் பின்பகுதியில் நேத்திராவதி ஆறு இரண்டாக பிரிந்து கோவிலைச் சுற்றி ஓடுகிறது. நதியின் நடுவில் இருக்கும் காரணத்தால், இந்த ஆலயத்தின் கருவறை எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். இந்த ஆலயத்தில் தீர்த்தம்,வளையல், மல்லிகை,மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் போன்றவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    மனிதர்களுக்கு ஏற்படும் வெப்ப நோய், குடும்பத் தகராறு, சொத்துப் பிரச்சினை நீங்க, இத்தல தேவிக்கு இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.அம்மனுக்கு அணிவிக்கப்படும் மாலையில், உடுப்பிசங்கரபுரம் மல்லிகை முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.திருமண வரம், குழந்தைப்பேறு, இழந்த பொருள் மீண்டும் கிடைக்க, மல்லிகைப் பூவை வாழை நாரில் தொடுத்து அணிவிக்கின்றனர்.இவ்வாலயத்தில் மகாகணபதி, ரக்தேஸ்வரி, ஐயப்பன், நாகதேவதை, பிரம்மன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    இவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    மங்களூருவில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் கட்டீல் பகுதிஉள்ளது.

    • துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும்.
    • துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.

    1. அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.

    2. துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை.

    3. துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 சுலோகங்கள் கொண்ட தேவி மாகாத்ம்ய பாராயணத்தை படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

    4. பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் அதிகமாகும். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்காதேவி.

    5. கோர்ட்டு விவகாரங்கள் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் பந்த நிவாரணமும் சித்திக்கும்.

    6. மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் துர்க்கா மாதாவின் திருவடி நிழலைப் பிரார்த்திக்க வேண்டும்.

    7. பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்காதேவி.

    8. துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும்.

    9. துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத் தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.

    10. ஸ்ரீ துர்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி 'மயில்தோகை'.

    11. ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன் சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான்.

    12. ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி அவன் கைவசமாகும்.

    13. தாமரை இலையில் தண்ணீர் போல துர்க்கா அர்ச்சனை செய்பவனிடத்தில் பாதகங்கள் எல்லாம் தங்குவதில்லை.

    14. தூங்கும் போதும் நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.

    15. ஸ்ரீ துர்கா தேவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.

    16. துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.

    17. துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது. மந்திர சாஸ்திரம். 1. குமாரி, 2. த்ரிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ரோகிணி, 5. காளிகா, 6. சண்டிகை, 7. சாம்பவி, 8. துர்க்கா, 9. சுபத்ரா.

    18. சுவாசினி பூஜையிலும் 1. சைல புத்ரி, 2. ப்ரம்கசாரிணி, 3. சந்த்ர கண்டா, 4. கூஷ்மாண்டா, 5. மகா கவுரி, 6. காத்யாயனி, 7. காளராத்ரி, 8. மகா கவுரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.

    19. துர்க்கை என்ற பெயரையும் சதாக்சி என்ற பெயரையும் எவர் கூறுகின்றனரோ அவர் மாயையில் இருந்து விடுபடுவர்.

    20. துர்க்கை என்ற சொல்லில் 'த்', 'உ', 'ர்', 'க்', 'ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன.

    'த்' என்றால் அசுரர்களை அழிப்பவள்.

    'உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள்.

    'ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள்.

    'க்' என்றால் பாபத்தை நலியச் செய்பவள்.

    'ஆ' என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்.

    • ஆனி மாதம் ஆண்டாளுக்கும் உரிய அற்புத மாதம்.
    • நடராஜ பெருமானை வணங்குவதற்கு உரிய அருமையான மாதம்.

    ஆனி மாதம் பிறந்துவிட்டது. ஆனி மாதம் என்பது சைவ, வைணவ பாகுபாடுகள் இல்லாமல், எல்லாப் பெண் தெய்வங்களையும் கொண்டாடுகிற அற்புதமான மாதம். பெண் தெய்வங்கள் அனைத்துமே சக்தியின் அம்சம். சக்தி என்பவள் பராசக்தி. அவளே அத்தனை தெய்வங்களுக்கும் சக்தியையும் சாந்நித்தியத்தையும் வழங்கக் கூடியவள்.

    அவளை வணங்க வணங்க, நம்மைச் சுற்றியுள்ள துர்தேவதைகள் விலகிவிடுவார்கள். நல்ல சக்திகள் நம்மைச் சூழ்ந்து அரணெனக் காத்தருளும் என்பது ஐதீகம்.

    ஆனி மாதம் ஆண்டாளுக்கும் உரிய அற்புத மாதம். நடராஜ பெருமானை வணங்குவதற்கு உரிய அருமையான மாதம். இந்த மாதத்தில், விரதம் இருந்து நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லி, வீட்டில் விளக்கேற்றி பாராயணம் செய்வது சத்விஷயங்களை நமக்குத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    ஆனி மாத செவ்வாய், சாந்தமான தெய்வங்களையும் உக்கிரமான தெய்வங்களையும் விரதம் இருந்து வழிபடுவதற்கு உரிய நன்னாள். இன்றைய ஆனிச் செவ்வாயில், விரதம் இருந்து துர்கையை வழிபடுவது ரொம்பவே விசேஷம்.

    செவ்வாய்க்கிழமை கிழமையில் விரதம் இருந்து ராகுகால வேளையில், துர்கையை மனதார நினைத்து, எலுமிச்சை தீபம் ஏற்றுவோம். துஷ்ட சக்திகளில் இருந்து விடுபடுவோம். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து அருள்புரிவாள் துர்காதேவி.

    ஆனிச்செவ்வாயில், விரதம் இருந்து துர்காதேவி, பிரத்தியங்கிரா தேவி உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி வழிபடுவோம். வாராஹி, காளிகாம்பாள், முப்பிடாதி, செல்லியம்மன் உள்ளிட்ட கிராம தெய்வங்களை மனதார வேண்டுவோம். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும்.

    கிராம தெய்வங்களையும் எல்லை தெய்வங்களையும் வீட்டில் இருந்தபடியே வழிபடுவோம். எலுமிச்சை தீபமேற்றி வேண்டிக்கொள்வோம். இன்னல்கள் அனைத்தும் விலகும்.

    • இந்த அலங்காரத்தில் ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 ஆகிய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
    • வழிபாட்டில் சுமங்கலிப் பெண்கள் ஏராளமானோர் வரலட்சுமி விரதமிருந்து அம்மனை வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற துர்க்கை அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அம்பாளுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட இந்த அலங்காரத்தில் ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 ஆகிய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த பணத்தின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.1 லட்சம் ரூபாய் ஆகும்.

    வழிபாட்டில் சுமங்கலிப் பெண்கள் ஏராளமானோர் வரலட்சுமி விரதமிருந்து அம்மனை வழிபாடு செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

    • துர்க்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக வேதங்கள் சொல்கின்றன.
    • ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவின் முதல் நாளில் இந்த துர்க்கையை வழிபடுவார்கள்.

    பார்வதிதேவியின் அம்சமாக பார்க்கப்படுபவள், துர்க்கை தேவி. வட மாநிலத்தில் துர்க்கை வழிபாடு மிகவும் பிரசித்திப்பெற்றது. தென்னிந்தியாவிலும் பெரும்பாலான சிவாலயங்கள் மற்றும் அம்பாள் கோவில்களில் துர்க்கையை தரிசிக்க முடியும். இந்த துர்க்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக வேதங்கள் சொல்கின்றன. அவை:- சைலபுத்திரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்த மாதா, காத்யாயனி, காளராத்திரி, மகாகவுரி, சித்திதாத்ரி. இவர்கள் ஒன்பது பேரும் 'நவ துர்க்கை' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களைப் பற்றிய தகவல்களை சிறிய குறிப்புகளாக பார்ப்போம்.

    சைலபுத்திரி

    நவ துர்க்கைகளில் முதன்மையானவள், சைலபுத்திரி. 'மலைமகள்' என்பது இதன் பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவின் முதல் நாளில் இந்த துர்க்கையை வழிபடுவார்கள். யோகிகள் அனைவரும், தங்களுடைய யோக சாதனைகள் கைகூடி வர இந்த துர்க்கையைத்தான் வழிபடுவார்கள். இந்த அன்னையின் வாகனம் - நந்தி, ஆயுதம்- சூலம்.

    பிரம்மச்சாரிணி

    'பிரம்ம' என்பதற்கு 'தபசு' என்று பொருள். 'பிரம்மச்சாரிணி' என்பதற்கு 'தவம் இயற்றுபவள்' என பொருள் கொள்ளலாம்.

    இந்த துர்க்கையை நவராத்திரியின் இரண்டாவது நாளில் வழிபடுவார்கள். வலது கரத்தில் கமண்டலமும், தண்டமும் தாங்கி எளிமையாக காட்சி தரும் இந்த அன்னைக்கு, வாகனம் இல்லை. இவள், சிவபெருமானை மணம்புரியும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்ததாக வரலாறு சொல்கிறது. இந்த அன்னை, ஞான வடிவானவள். தன்னை வழிபடுபவர்களுக்கு பொறுமையைத் தருபவள்.

    சந்திரகாண்டா

    துர்க்கையின் மூன்றாவது வடிவம் இது. 'காண்டா' என்பதற்கு 'மணி' என்று பொருள்.

    தன்னுடைய முன் நெற்றியில், மணி போல சந்திரனை சூடியிருப்பதால் இந்த துர்க்கைக்கு 'சந்திரகாண்டா' என்று பெயர். இந்த அன்னைக்கு, சிவபெருமானைப் போல மூன்று கண்கள், 10 கரங்கள் உண்டு. வாகனம்- சிங்கம். போருக்கு தயாரான கோலத்தில் இந்த துர்க்கை காணப்படுகிறாள். நவராத்திரியின் மூன்றாம் நாளில் இந்த துர்க்கையை வணங்குவார்கள்.

    கூஷ்மாண்டா

    நவராத்திரியின் நான்காம் நாளில் வழி படப்படும் துர்க்கை, 'கூஷ்மாண்டா.' 'கூ' என்பது 'சிறிய' என்றும், 'உஷ்மா' என்பது 'வெப்பம்' என்றும், 'ஆண்டா' என்பது 'உருண்டை' என்றும் பொருள்படும்.

    வெப்பமயமான சிறிய உருண்டையான இந்த உலகை படைத்தவள் என்று பொருள்படும் வகையில் 'கூஷ்மாண்டா' என்று இந்த துர்க்கை அழைக்கப்படு கிறாள். எட்டுக் கரங்களைக் கொண்ட இந்த அன்னைதான், சூரிய மண்டலத்தை இயக்குவதாக சொல்லப்படுகிறது. எட்டுக் கரங்களிலும் ஆயுதங்கள் தாங்கி இருக்கிறாள். அன்னையின் வாகனம்- சிங்கம்.

    காளராத்திரி

    நவராத்திரியின் 7-ம் நாள் வழிபாட்டுக்குரியவள், 'காளராத்திரி' தேவி. இந்த துர்க்கையின் வடிவம்தான், நவ துர்க்கைகளிலேயே உக்கிரமானது என்கிறார்கள்.

    'காள' என்பதற்கு 'நேரம்' என்றும், 'மரணம்' என்றும் பொருள். 'ராத்திரி' என்பது இரவைக் குறிக்கும். 'காளராத்திரி' என்பதற்கு 'காலத்தின் முடிவு' என்று பொருள் கூறுகிறார்கள். இந்த துர்க்கையின் வடிவம், எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. கருமை நிற மேனியைக் கொண்ட இந்த துர்க்கை நான்கு கரங்களைக் கொண்டவள். இரண்டு கரங்களில் வஜ்ராயுதம், வாள் ஏந்தியும், மற்ற இருகரங்களில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியும் காட்சி தருகிறாள். கழுதையை வாகனமாகக் கொண்டவள்.

    ஸ்கந்த மாதா

    'ஸ்கந்த' என்பது முருகப்பெருமானைக் குறிக்கும். முருகனுக்கு தாய் என்பதால் இந்த அன்னைக்கு 'ஸ்கந்தமாதா' என்று பெயர்.

    நவராத்திரி விழாவில் 5-வது நாளில் வணங்கப்படும் தெய்வம் இவள். நான்கு கரங்களைக் கொண்ட இந்த துர்க்கை, இரண்டு கரங்களில் தாமரை மலரைத் தாங்கி தவம் செய்பவளாக காட்சி தருகிறாள். இதனால் இந்த தேவியை 'பத்மாசினி' என்றும் அழைக்கிறார்கள். மன அமைதியைத் தருபவளாக இந்த அன்னை சித்தரிக்கப்படுகிறாள்.

    காத்யாயனி

    முன்னொரு காலத்தில் 'காதா' என்ற முனிவர், தவம் இருந்து அன்னையை தன்னுடைய மகளாகப் பெற்றார். இதனால் இவளுக்கு 'காத்யாயனி' என்ற பெயர் வந்தது.

    இத்தேவியை 'மகிஷாசூரமர்த்தினி' என்றும் கூறுகிறார்கள். தீய சக்திகளை வேரோடு அழிக்கும் இந்த அன்னை, நவராத்திரியின் 6-ம் நாளில் வணங்கப்படுகிறாள். நான்கு கரங்களில் ஒரு கரத்தில் தாமரையும், மறு கரத்தில் வாளும் தாங்கியிருக்கிறாள். மற்ற இருகரங்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வகையில் உள்ளன.

    மகாகவுரி

    'மகா' என்பதற்கு 'பெரிய' என்றும், 'கவுரி' என்பதற்கு 'தூய்மையானவள்' என்றும் பொருள்.

    இந்த துர்க்கை, மிகுந்த வெண்மை நிறத்துடன் காணப்படுவதால் 'மகா கவுரி' என்று அழைக்கப்படுகிறாள். நான்கு கரங்களைக் கொண்ட இந்த தேவி, ஒரு கரத்தில் சூலமும், மறு கரத்தில் மணியும் தாங்கியிருக்கிறாள். மற்ற இரு கரங்களும் பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றன. இந்த துர்க்கையின் வாகனம்- வெள்ளை நிற காளை.

    சித்திதாத்ரி

    நவராத்திரியின் இறுதிநாளில் இந்த அன்னையை ஆராதனை செய்வார்கள். 'சித்தி' என்பது 'சக்தி'யைக் குறிக்கும். 'தாத்ரி' என்பதற்கு 'தருபவள்' என்று பொருள்.

    அஷ்டசித்திகளை அருள்பவள் என்பதால், அன்னைக்கு இந்தப் பெயர் வந்தது. தாமரை மலரில் அமர்ந்து இருக்கும் இந்த தேவி, நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். கதை, சக்கரம், தாமரை, சங்கு ஏந்தியிருக் கிறாள். சிங்கத்தை வாகனமாகக் கொண்டவள். இந்த அன்னையை வழிபடுபவர்கள், வாழ்வில் பேரானந்தத்தை அடைவர்.

    • குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட துர்காதேவி கவசத்தை சொல்லலாம்.
    • கணவன் மனைவி சேர்ந்து வாழவும், திருமண தடைகள் நீங்கவும் இந்த கவசத்தை சொல்லலாம்.

    ச்ருணு தேவி ப்ரவக்ஷயாமி கவசம் ஸர்வஸித்திதம்

    படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்

    அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்

    ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்

    உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ

    சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ

    ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ

    ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா

    அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ

    ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ

    கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ

    மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ

    ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா

    ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

    திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கையை விரதம் வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.
    திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கையை விரதம் வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.

    ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30 முதல்  - 6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கள்: திங்கள்கிழமைகளில் காலை 7.30 -  முதல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும்

    செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் - 4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்
    புதன்: மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோ தரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும்  

    வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 முதல்  - 3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்

    வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ராகுகால நேரமான காலை 10.30 முதல்  - 12 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் .

    சனி: காலை 9 -  முதல் 10.30 மணிக்குள் மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் .
    திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரசாமி கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி மகா சண்டிஹோமம் நடந்தது.
    திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரசாமி கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி மகா சண்டிஹோமம் நடந்தது. 29-வது ஆண்டாக கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த யாகத்தில் கன்யாபூஜை, சுகாசினி பூஜை, வடுக பூஜை, கோபூஜை ஆகியவை நடைபெற்றன.

    யாக குண்டத்தில் பக்தர்கள் கொடுத்த பழங்கள், தேங்காய்கள், வஸ்திரங்கள் போடப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து சென்று துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அனை வருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    ×