search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnan"

    • தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
    • இந்த கூட்டணியின் படப்பிடிப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


    தனுஷ் - மாரி செல்வராஜ்

    தனுஷ் - மாரி செல்வராஜ்

    மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுசின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


    தனுஷ் - மாரி செல்வராஜ்

    தனுஷ் - மாரி செல்வராஜ்

    இந்நிலையில் தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணி படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும் இப்படம் தனுஷின் முந்தைய படங்களை விட அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் மாரி செல்வராஜ்-துருவ் விக்ரம் கூட்டணியின் படத்தை முடித்த பிறகு தனுஷ் படத்தை மாரி தொடங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் கர்ணன் படத்திற்காக உடை எடையை விக்ரம் ஏற்றி வருகிறார். #Chiyaan #Vikram #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்', 'சாமி 2' என 2 படங்கள் வெளியீட்டிற்கு தயாராகிவிட்டன. கமல் தயாரிப்பில் நடிப்பதை அடுத்து விக்ரம் இந்தியில் நடிக்க இருக்கிறார்.

    மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் கர்ணன் என்னும் சரித்திர படத்தில் கர்ணனாக நடிக்க இருக்கிறார். இதற்காக தனது உடலை ஆஜானுபாகுவான தோற்றத்துக்கு மாற்றி இருக்கிறார்.



    பீமா படத்தில் நடித்தபோது இருந்ததைவிட அதிகமாக உடல் எடையை ஏற்றி இருக்கிறார். இந்த தோற்றம் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து வருகிறார்.
    ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து பெண் வேட்பாளரை நிறுத்த அவர் முடிவு செய்துள்ளார். #JusticeKarnan
    கொல்கத்தா:

    கொல்கத்தா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன். சென்னை ஐகோர்ட்டின் நீதிபதியாக இருந்த கர்ணனை பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் தனது பணியிடம் மாற்றத்துக்கான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தார். இதையடுத்து அவருக்கு வழக்குகளை ஒதுக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குறி வைக்கப்படுகிறேன் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இதையடுத்து கர்ணன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 6 மாத சிறை தண்டனை காலம் முடிந்து வெளியே வந்துள்ள முன்னாள் நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது:-


    அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் எனது கட்சி சார்பில் பெண் வேட்பாளர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளேன். எனது கட்சியை முறைப்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வேன்.

    நாட்டிலிருந்து ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே என் கட்சியின் நோக்கம். மோடி எம்.பி.யாக உள்ள வாரணாசி தொகுதியில் நான் போட்டியிட போவதில்லை. அங்கு எனது கட்சி சார்பில் பெண் வேட்பாளரை நிறுத்துவேன்.

    நாடு முழுவதும் தலித்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தலித்துக்களை சிறுபான்மையினரை அனைத்து மாநில அரசும் மத்திய அரசும் பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #JusticeKarnan #Karnan #CSKarnan #NewParty
    ×