search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறியடி திருவிழா"

    • தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைப்பார்கள்.
    • பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும்.

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும். குலதெய்வ பூஜைகளை செய்யவும் காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது. புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை துறந்து விரதம் இருப்பார்கள். சனிக் கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல், வடை பாயாசம், நைவேத்யமாக படைத்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி நாராயணா... கோபாலா... கோவிந்தா... என்று திருநாமங்களை உரக்க கூறியபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி, தானம் பெறுவர். பணத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர்.

    பல இடங்களில் உறியடி திருவிழாவும், பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். அனைத்து விஷ்ணு தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும்.குடும்பத்தினருடன் பெருமாள் தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு. புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக் கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும்.

    அதுவும் மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு அதி சிறப்பானது. இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது. சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோக சுபயோகம் கூடிவரும்.

    • ஸ்ரீநவநீதகிருஷ்ணரை வழிபட்டால் சந்தான அபிவிருத்தி கிடைக்கும்.
    • உறியடி திருவிழா 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது.

    சைவ தலங்களுக்கு புகழ் பெற்ற மதுரையில் வைணவத்தலங்களும் குறைவின்றி உள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாகதான் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    மதுரையில் உள்ள பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது கிருஷ்ணஜெயந்தி. இந்த விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடும் ஆலயங்களில் ஒன்று, ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், பெயரில் பெருமாள் என இருந்தாலும் மதுரை பகுதி மக்களின் உச்சரிப்பில் தெற்கு கிருஷ்ணன் கோவில் என்றே கூறப்படுகிறது.

    இதற்கு காரணம் இந்த கோவிலின் ஆதிமூர்த்தி ஸ்ரீநவநீதகிருஷ்ணன் என்பதால் தான். சவுராஷ்டிர சபைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் அமைந்துள்ள வீதியின் பெயரும் கிருஷ்ணன் தெற்கு தெருதான்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தூவாரகை கிருஷ்ணனை மனதில் கொண்டு இங்கு நவநீதகிருஷ்ணன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து சவுராஷ்டிரா சமூக மக்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். அப்போது முதலே இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நாளடைவில் கோவிலை வழிபட்டோர் கனவில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரர் பெருமாள் பிரசன்னமாகி தன்னையே பிரதிஷ்டை செய்ய சொன்னதால் ஆலயம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேஸ்வரப் பெருமாள் ஆலயமாக உருமாறியதாக வரலாறு கூறுகிறது.

    கோவிலின் திருநாமம் மாறினாலும், ஆதிமூர்த்தியாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானை வழிபடுவதை பக்தர்கள் கைவிடவில்லை. இதனால் இங்கு கொண்டாடப்படும் உறியடித் திருவிழா 100 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு வாய்ந்த விழாவாக அமைந்துள்ளது.

    உறியடி திருவிழாவுடன் நடைபெறும் கிருஷ்ணஜெயந்தி விழா இக்கோவிலின் ஆன்மீக பக்தர்களால் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது நவநீதகிருஷ்ணன் உற்சவம் தங்கத் தொட்டிலிலும், பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், தங்கப் பல்லக்கிலும் வீதி உலா செல்வது சிறப்பு வாய்ந்ததாகும்.

    பல்வேறு சிறப்பு வாய்ந்த ஸ்ரீநவநீதகிருஷ்ணரை வழிபட்டால் சந்தான அபிவிருத்தி, புத்ர பாக்கியம் கிடைப்பது உறுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் இன்றளவும் சுவாமிக்கு பூஜை, நெய்வேத்தியம்., வெண்ணெய் சாத்தி அர்ச்சனை வழிபாடு போன்றவற்றை பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    இக்கோவிலின் மற்றொரு சிறப்பு 13 அடியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர். மதுரையில் வேறு எங்கும் இதுபோன்று சுதையில் (கற்சிலை) ஆஞ்சநேயர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மதுரையில் புகழ்பெற்ற கூடழலகர் பெருமாள் கோவில், மதன கோபாலசுவாமி கோவில், வடக்குமாசி வீதி நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் போன்றவற்றிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    • கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரிவரதராஜப்பெருமாள் கோவில் முன் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா நடந்தது.
    • 30 அடி மூங்கில் நடப்பட்டு அதன் உச்சியில் ரூ. 2 ஆயிரம் பணமுடிப்பு கட்டப்பட்டிருந்தது.

    அவினாசி :

    கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு அவினாசியில் உள்ள கரிவரதராஜப்பெருமாள் கோவில் முன் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா நடந்தது. கோவில் முன் 30 அடி மூங்கில் நடப்பட்டு அதன் உச்சியில் ரூ. 2 ஆயிரம்பணமுடிப்பு கட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை 7 மணி முதல் ஏராளமான வாலிபர்கள் தொடர்ந்து வழுக்குமரம் ஏறி இரவு 9 மணியளவில் பணமுடிப்பை அவிழ்த்து எடுத்தனர்.

    இதையடுத்து நடந்த உறியடி திருவிழாவில் திரளானோர் கலந்துகொண்டு உறி அடித்தனர்.முன்னதாக நேற்று காலை கரிவரதராஜப்பெருமாளுக்கு விசேச பூஜை திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. இரவு 9.30 மணியளவில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    போளூர் பேரூராட்சியின் துணைத் தலைவர் சாந்தி நடராஜன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் என் நரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போளூர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    யாதவர் பண்பாட்டு கழகம் சார்பில் உறியடி திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை யாதவர் பண்பாட்டு கழக தலைவர் ஏழுமலை, செயலாளர் ஜி வெங்கடேசன், பொருளாளர் ஜி கிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    • சிறுவர்கள் அதில் இருந்த வெண்ணையை போட்டி போட்டு எடுத்து ரசித்து ருசித்தனர்.

    கவுண்டம்பாளையம்

    கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலை கணபதி ஹோமத்து டன் விழா தொட ங்கியது. அபிஷேக பூஜை, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை நடைபெற்ற உரியடி நிகழ்ச்சியில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் பங்கேற்றனர். உரியடிப்பவர்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி உரியை அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர்.

    வெண்ணை நிரப்பட்ட உரி பானையை அடித்து உடைத்த சிறுவர்கள் அதில் இருந்த வெண்ணையை போட்டி போட்டு எடுத்து ரசித்து ருசித்தனர். மேலும் உரிய அடித்த சிறுவர் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் விழா குழுவினர் சார்பாக வழங்கினர்.

    தொடர்ந்து 40 அடி உயரம் கொண்ட வழுக்கு மரம் தயார் செய்யப்பட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடைபெற்றது. எண்ணை, கடுகு, அரப்பு, கற்றாளை உள்ளிட்டவைகளைக் கொண்டு வழுக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மரத்தில் சிறுவர்கள், இளை ஞர்கள் போட்டி போட்டு ஏறினர். இறுதியில் ஒரு இளைஞர் 40 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறி உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை எடுத்தார். இதை சுற்று வட்டாரங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்தனர்.தொடர்ந்து அலங்கரிக்க ப்பட்ட வாகனத்தில் கிருஷ்ணர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணர் கோவில் இறைவழிபாடு விழாகுழுவினர் செய்திருந்தனர்.

    • பண்டரிநாதன் பஜனை மடத்தில் உறியடி திருவிழா நடந்தது
    • திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.

    கரூர்:

    கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கரூர் ஸ்ரீபண்டரிநாதன் பஜனை மடத்தில் இன்று 10-0ம் ஆண்டு உறியடி திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு மேல் உறியடித்து எம்பெருமான் வாணவேடிக்கையோடு திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வழுக்கு மரம் ஏறும் விழா நடைபெறுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வரும் 150 குழந்தைகளுக்கு இனிப்பு, சிறப்பு பிரசாத பாக்கெட் வழங்கப்படும் என திருக்குறள் பேரவைச் செயலாளரும், விழாக்குழு சிறப்புத் தலைவருமான மேலை பழநியப்பன், கோயில் அறங்காவலர் குணசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ×