search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uriati festival"

    • குழந்தையில்லாதவர்கள் வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
    • கிருஷ்ணஜெயந்தி அன்று நடக்கும் உறியடி திருவிழா மிகவும் பிரபலம்.

    திண்டுக்கல் நகரில் யாதவ மேட்டுராஜக்காபட்டி என்ற இடத்தில் கடந்த 1984-ம் ஆண்டு கிருஷ்ணன் கோவில் பஜனைமடம் அமைக்கப்பட்டது. நாளடைவில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இந்த இடத்தில் கிருஷ்ணனுக்கு கோவில் எழுப்பவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஏனெனில் இங்கு வந்து பஜனை நடத்தும் பக்தர்களுக்கு பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்து வந்தன.

    குழந்தைகளுக்கு நல்ல அறிவாற்றலும், வணிகர்களுக்கு தொழில் விருத்தியும், குடும்பத்தில் அமைதியும் நிலவி வந்தது. குறிப்பாக குழந்தையில்லா பெண்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்ததால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. அவ்வாறு பல ஆண்டுகள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் குழந்தை பெற்ற பெண்கள் தங்கள் குழந்தையை இந்த கோவிலில் கிருஷ்ணன் முன்பு படுக்கவைத்து முதன்முதலாக உணவு கொடுப்பார்கள்.

    அவ்வாறு கொடுக்கும்போது அந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி நீண்டநாள் வாழும் என நம்பப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய இந்த கிருஷ்ணன் கோவிலில் முதன்முதலாக 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன்பின் 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    உறியடி திருவிழா

    ஒவ்வொரு வருடமும் கிருஷ்ணஜெயந்தி அன்று இங்கு நடத்தப்படும் உறியடி திருவிழா மிகவும் பிரபலமாகும். திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    கிருஷ்ணஜெயந்தி நாளில் இப்பகுதிகளை சேர்ந்த பல்வேறு குழந்தைகள் கண்ணன் வேடமிட்டு, கோவிலுக்கு வந்து ஆடிப்பாடி மகிழ்வதும், மறுநாள் உறியடி திருவிழா நடத்தி அதில் இப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவார்கள்.

    இதுமட்டுமின்றி கிருஷ்ணபரமாத்மாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    • கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    போளூர் பேரூராட்சியின் துணைத் தலைவர் சாந்தி நடராஜன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் என் நரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போளூர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    யாதவர் பண்பாட்டு கழகம் சார்பில் உறியடி திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை யாதவர் பண்பாட்டு கழக தலைவர் ஏழுமலை, செயலாளர் ஜி வெங்கடேசன், பொருளாளர் ஜி கிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    ×