என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புரட்டாசி சனிக்கிழமை"
- துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.
- மாலையிலும் மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும்.
புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் புனித நாளாகக் கருதப்படுகிறது.
அன்று வழிபாடு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும்.
சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம்.
பூஜை அறையில் வெங்கடாஜல பதியின் உருவப்படம் அல்லது உருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும்.
விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும்.
துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.
பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும்.
வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப் படித்து "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.
இதே போல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.
அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும்.
மாவினாலேயே விளக்கு போல செய்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றி வெங்கடேசப் பெருமானை வழிபடுவது காலம், காலமாக நடந்து வருகிறது.
வெங்கடேசப் பெருமானின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
மாவிளக்கு ஏற்றி வைத்த பிறகு அந்த விளக்கு தணியும் போது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும்.
- சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
- மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.
இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம்.
இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப்படத்தை வைத்தும் கும்பிடலாம்.
புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.
மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து,
மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.
பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
- புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார்.
- புதனுக்கு வெகு நட்பு கிரகமாக சனி பகவான் உள்ளார்.
பெருமாளுடைய அம்சம் என்று சொல்லக்கூடிய கிரகம் புதன்.
அந்த புதனுடைய வீடு கன்னி.
இந்தக் கன்னியில்தான் புதன் ஆட்சியும் அடைகிறார், உச்சமும் அடைகிறார்.
ஒரு கிரகம் ஒரே வீட்டில் ஆட்சியடைவதும், உச்சமடைவதும் மிகவும் அரிதான ஒரு விஷயம்.
அந்தப் பெருமை கன்னிக்கு உண்டு.
பெருமாளுடைய அம்சமாக கருதக்கூடிய புதனுடைய வீடு கன்னி.
புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார்.
ஆகவே தான் இந்த மாதத்தில் திருமாலுக்கு வேண்டிய பஜனைகள், பிரம்மோற்சவங்கள் என்று அனைத்தும் நடைபெறுகிறது.
எனவே, புதனின் அம்சமாக பெருமாள் இருப்பதால் புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கான மாதமாகக் குறிப்பிடுகிறார்கள்.
புதனுக்கு வெகு நட்பு கிரகமாக சனி பகவான் உள்ளார்.
அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
- புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.
- இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம்.
அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்!
மகாலட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்!''
என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும்.
இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.
கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
- இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
- புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவ பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன.
புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவ பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம்
ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.
புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும்.
இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளயபட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது.
மகாளயபட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற முடியும்.
- ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.
- புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக திருப்பதிக்கு சென்று
ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.
சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் தொடர்வது தான் வேங்கடவனின் மகிமைக்கு சான்று.
குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழு மலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும்.
அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.
புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது.
எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
- சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
- புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.
புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.
சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
இத்தகைய சிறப்புடைய புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் ஏழுமலையானிடம் இருந்து அதிக அருளையும்,
பலனையும் பெற முடியும் என்பது பக்தர்களிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
பக்தர்களின் படையெடுப்பு காரணமாக இந்த மாதம் முழுக்க திருப்பதிமலை எங்கும்
"ஏடுகுண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா!" என்ற பக்தி கோஷம் திருப்பதி மலை முழுக்க எதிரொலிக்கும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் இது இரட்டிப்பாக இருக்கும்.
புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் தனித்துவமும் மகத்துவமே இதற்கு காரணமாகும்.
- சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
- புரட்டாசி சனிக் கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.
அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.
எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி,
பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
புரட்டாசி சனிக் கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
- ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.
- பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.
இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள் தான்.
சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.
திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.
அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி
வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.
புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.
எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.
இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில் தான்.
ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
- சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
மயிலாடுதுறை
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருமாள், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற பரிமள ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
இதேபோல் திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில், திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவில், திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவில், திருநகரி யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர், மற்றும் திருவாலி லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களில் வழிபாடுகள் நடந்தன. சீர்காழி அருகே உள்ள வடரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தலைச்சங்காடு நான் மதிய பெருமாள் கோவில், அண்ணன் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அனைத்து கோவில்களில் நடந்த வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதல் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் தங்கி காலை சாமி தரிசனம் செய்து சென்றார்கள்.
- கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
இக்கோவிலில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் புரட்டாசி மாதம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று 3-வது சனிக்கிழமை என்பதால் நேற்று முன்தினம் முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவந்திபுரத்திற்கு வந்தனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்று, சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் தேவநாதசாமி கோவிலில் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷம் தொடர்ந்து எழுப்பியவண்ணம் இருந்ததை காண முடிந்தது. நேற்று முன்தினம் முதல் இன்று மதியம் வரை திருவந்திபுரம் சாலக்கரை இலுப்பைதோப்பில் அமைந்துள்ள மொட்டை அடிக்கும் கூடாரத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடைன செலுத்தும் வகையில் மொட்டை அடித்து சாமி கும்பிட்டு சென்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதல் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் தங்கி காலை சாமி தரிசனம் செய்து சென்றார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த காரணத்தினால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வாடிப்பட்டியில் புரட்டாசி சனிக்கிழமை வீதி பஜனை நடந்தது.
- பாதயாத்திரை குழுவினரும் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தானில் நவநீத பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி முதல் வார வீதி உலா பஜனை நடந்தது. கோவில் அர்ச்சகர் நவநீத கண்ணன் தலைமையில் கோவிலில் இருந்து புறப்பட்டு தாதம்பட்டி மந்தை, சடையாண்டி கோவில், விராலிப்பட்டி பிரிவு, மேட்டு பெருமாள் நகர், நாட்டாமைக்காரர் தெரு, நடுத்தெரு, இரட்டை விநாயகர் கோவில் தெரு, மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பஜனை பாடல்கள் பாடியபடி வீதி உலா சென்று கோவிலை அடைந்தனர். இந்த ஊர்வலத்தில் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் பாதயாத்திரை குழுவினரும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்