search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சபை கூட்டம்"

    • ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • கிராம சபை கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    காந்தி ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கலாமணி முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கிராம சபை கூட்டத்தில் வாலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்கடை பகுதியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு ஆடை (டயாபர்) தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கிராம சபைக்கு திரண்டு வந்த பொதுமக்கள் தொழிற்சாலை இங்கு தொடங்குவதற்கு வரைபட அனுமதி மற்றும் தொழில் அனுமதி வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர். வாவி பாளையம் ஊராட்சி பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதாலும், இதற்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளதால் இங்கு தொழிற்சாலை தொடங்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஏக மனதாக பொதுமக்கள் ஆதரவுடன் தொழிற்சாலை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    தாராபுரம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மணக்கடவு ஊராட்சி கிராம சபைக் கூட்டம் மணக்கடவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் எஸ். சுப்பிரமணி, ஊராட்சி துணைத்தலைவர் மங்கலம் கு.செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் எஸ்.வி. செந்தில்குமார் கலந்து கொண்டார். தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட 15 தீர்மானங்கள் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அதற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் பதிலளித்து பேசினார். சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.சகுந்தலா, முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ராஜதுரை, ஒன்றிய தி.மு.க. பொருளாளர் மாரிமுத்து, சட்ட ஆலோசகர் சகுந்தலா, ஊராட்சி மன்றவார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், கிராம நிர்வாக அதிகாரி, பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலர் ரேவதி நன்றி கூறினார்.

    • உதயமார்தாண்புரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • நாச்சிகுளம் பகுதிக்கு புதிய நீர்நிலை தேக்க தொட்டி கட்டிதர கோரிக்கை வைத்திருந்தோம்.

    திருத்துறைப்பூண்டி:

    உதயமார்தாண்புரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது நாச்சிக்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கிளை துணை செயலாளர் கல்பான் தலைமையிலான பொறுப்பாளர்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கடந்த மே மாதத்தில் குடிநீர் பிரச்சனை காரணமாக காலி குடங்களுடன் ஊராட்சியை நோக்கி கவன ஈர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தை அடிப்படையில் பல கோரிக்கைகளை முன் வைத்து சுமூகமாக முடிந்தது.

    அதில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் முக்கிய கோரிக்கையான நாச்சிகுளம் பகுதிக்கு புதிய நீர்நிலை தேக்க தொட்டி கட்டிதர கோரிக்கை வைத்திருந்தோம்.அப்பேச்சுவார்த்தையில் நாச்சிகுளத்திற்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 30,000 லிட்டர் அளவுள்ள புதிய நீர் தேக்க தொட்டி கட்ட அனுமதி கிடைத்திருப்பதாக சொல்லப்பட்டது.

    இத்தொட்டியை விரைவாக கட்டினால் தான் நாச்சிகுளம் முக்கிய பகுதிகளுக்கு தண்ணீர் பிரச்சனை குறையும்.ஆகையால் ஜல்ஜீவன் திட்டத்தில் அனுமதி கிடைத்துள்ள குடிநீர் தேக்க தொட்டியை விரைவாக கட்டிதர வேண்டும்.

    மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு, புதியசாலை வசதி போன்ற பணிகளை விரைவாக அமைத்து தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து பொதுமக்க ளும் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

    • ஆலங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள், இனி நடைபெற உள்ள பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கபிஸ்தலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, ஆலங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஏ. எம். மோகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் ஊராட்சி செயலாளர் சேரன் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி சின்னப்பா, ஊராட்சி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், கருணாநிதி, மஞ்சுளா கோபால், ராணி கலியபெருமாள், ரோசாப்பூ சுந்தரமூர்த்தி, மதுபாலா மூர்த்தி, ரவி, சித்ரா அன்பரசன், மாலதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தி.மு.க ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள், இனி நடைபெற உள்ள பணிகள் குறித்தும்,வரவு செலவு கணக்கு குறித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள், நடைபெற உள்ள பணிகள், குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் கோபால், தி.மு.க நிர்வாகிகள் சண்முகம், நேரு, சுரேஷ், அன்பழகன், கலியபெருமாள், மூர்த்தி, முத்துராமன், ராஜ் ,வசந்த், பிரகாஷ் ,அமீர், ராஜ்குமார், சாமிநாதன், உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் வேஷ்டி, புடவைகள் மற்றும் மதிய விருந்து ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் சார்பில் வழங்கப்பட்டது.

    • காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
    • ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட திருவெண்காடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், உமாமகேஸ்வரி சங்கர் முன்னிலை வகிக்க, திருவெண்காடு ஊராட்சிமன்ற தலைவர்.சுகந்தி நடராஜன் தலைமை வகித்தார்.

    இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

    முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தினை செயல்படுத்தி எல்லா சாலைகளையும் மேம்படுத்தி வருகிறார்.

    அந்த அடிப்படையில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வனபாதி தாமரைகுளம் ரோடு ரூ.49 லட்சம் மதிப்பிலும், தென்பாதி சாலை ரூ.32 லட்சம் மதிப்பிலும், திருவெண்காடு பாத்தம்பள்ளி சாலை ரூ.40 இலட்சம் மதிப்பிலும், பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட கலெக்டர் மூலமாக தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றி தரப்படும்.

    இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    நூறு நாள் வேலை நாட்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

    அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு என்ற பெரிய கொடிய நோய் இன்று எங்கும் பரவக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    இது பரவாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். வருவதற்கு முன் இதை நாம் தடுக்க வேண்டும். ஆகவே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இந்த கிராம சபை கூட்டத்திலே பிளாஸ்டிக் பயன்படு த்துவ தை தவிர்க்க வேண்டும்.

    அண்ணா பிறந்த நாள் அன்று யாரும் செயல்படுத்த முடியாத 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தி காட்டியவர் நம் முதல்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மயிலாடு துறை மாவட்ட கூட்டுறவு தலைவர் ஞானவேலன், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர்.கமலஜோதி தேவேந்திரன், ஒன்றியக்குழு துணைத்த லைவர் உஷா நந்தினி பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பி னர்கள் ஆனந்தன், தியாக விஜேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பஞ்சுகுமார், ஜான்சி ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், இளங்கோவன், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • மாங்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர் பான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    மானாமதுரை

    மானாமதுரை ஒன்றியம் செய்களத்தூர் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். இக்கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மகேந்திரன் வரவேற்றார்.

    கூட்டத்தில் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுகா தாரத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறை களைச் சேர்ந்த அலுவலர்கள் அரசு திட்டங்களை விளக்கி பொதுமக்கள், விவசாயிகள் கூறினர்.

    மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி அரசு மக்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கிப் பேசினார். இக் கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பாக்கி யலட்சுமி அர்ச்சுணன். ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணா துரை, துணைத் தலைவர் முத்து சாமி, வட்டாட்சியர் ராஜா, ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர் பான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாங்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாங்குளம் ஊராட்சி பகுதியில் உள்ள தாயமங்களம் ரோடு, மற்றும் ஊராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளை மானா மதுரை நகராட்சியுடன் இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கல்குறிச்சி ஊராட்சி யில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அடிப்படை தேவையான குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டவுடன் பாதுகாப்பு பணியில் உள்ள சிப்காட் போலீசார் கிராம சபை கூட்டத்தை பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கமுதி அருகே முதல்-அமைச்சரின் எல்லாருக்கும் எல்லாம் திட்டம் குறித்து கீழராமநதி கிராமசபை கூட்டத்தில் விளக்கம் அளித்தனர்.
    • துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராம லிங்கம் முன்னிலை வகித்தார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிஅழகர்சாமி முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் மைதீன், கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன், ஊராட்சி செயலர் முத்துராமு உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் முதல்-அமைச்சரின் எல்லாருக்கும் எல்லாம் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்கள் குறித்து, ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    இதே போல் தலைவநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராம லிங்கம் முன்னிலை வகித்தார். இதில் துணைத் தலைவர் ஜெயராமன் கிராம நிர்வாக அலுவலர் புனிதா, ஊராட்சி செயலர் முகம்மதுஹக்கீம் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பாக்குவெட்டி, ஆனையூர், பேரையூர், புதுக்கோட்டை, இடையங்குளம் உள்பட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    • சக்கரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மன்ற தலைவர் யாழினி புஷ்ப வள்ளி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் வரும் நிதியாண்டில் நிறை வேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப் பட்டது. 100 நாள் வேலை திட்டம் சம்பந்தமான குறைகள் கிராம மக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    பொது மக்கள் குடிநீர், மின் வசதி, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.

    • காத்தனேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • 10 ஊராட்சிகளில் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள், பொதுமக்களின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பறை யங்குளம் மலட்டாறு அணைக்கட்டில் இருந்து பிரிந்து செல்லும் சங்கரத் தேவன் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வ ரப்படாமல், கருவேல மரங்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுவதால், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகளுக்காக கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து ஆப்பநாடு இளைஞர் சங்கம் மற்றும் விவசாயிகள் சபை சார்பில் மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை அதிகாரி களுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்புதான் அந்த கால்வாய் தூர்வாரப்பட் டது. அதனால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பின்பு மட்டுமே தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மேலும் ஆப்பநாடு இளைஞர்கள் சங்கம், விவசாயிகள் சபை சார்பில் தன்னார்வலர்கள் துணையோடு இளை ஞர்களே கால்வாயை தூர் வார அதிகாரிகள் அனுமதி அளித்தால் போதும் என பலமுறை மாவட்ட நிர்வா கத்திடமும் நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் மனு அளித்து வருகின்றனர்.

    அதிகாரிகள் அனுமதி தர மறுத்து வருவதால் காந்திெஜயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கமுதி, கடலாடியை சுற்றி உள்ள எஸ்.கீரந்தை, நாராயணபுரம், புதுக் கோட்டை, காத்தனேந்தல், ஏனாதி, எ.தரைக்குடி, எஸ்.எம்.இலந்தைகுளம், ஆப்பநாடு, மறவர் கரிசல் குளம், ஏ.உசிலங்குளம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள், பொதுமக்களின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    • கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சாபம் விட்டனர்.
    • இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் அருகே பயிர்காப்பீடு, வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து, கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு சாபம் விடுத்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொன்னக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட மட்டியாரேந்தல் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்திய பிரியா தலைமை தாங்கினார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் அர்சுணன், வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கிய நாதன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத் தில் இப்பகுதி விவசாயி களுக்கு கடந்த 2 ஆண்டு களாக வறட்சி நிவாரணம், பயிர் காப்பீட்டுத்தொகை அதிகாரிகளின் அலட்சியம், ஒருதலைப் பட்சமான நடவடிக்கையால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.

    மேலும் மானாவாரி நெல் சாகுபடி செய்த வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு சாபம் விடுத்து தங்களது கண்ட னத்தை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் ஊராட்சி செயலர் மூலம் வாசிக்கப்பட்டது.
    • அதிகாரிகளிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறி கடும் வாக்குவாதம் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பொன்னையா பங்கேற்றார். ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் ஊராட்சி செயலர் மூலம் வாசிக்கப்பட்டது. பின்னர் வந்திருந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அப்போது மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப் பட்ட ஏராளமான பெண்கள் திடீரென கிராம சபை கூட் டம் நடைபெறும் இடத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த அதிகாரி களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறி கடும் வாக்குவாதம் செய்தனர்.

    அவர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு வந்ததால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பச்சமலையான்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் புதுச்சத்திரத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதத்தால் போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பச்சமலையான்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் புதுச்சத்திரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் தீர்மான நகலை வாசித்தார்.

    அப்போது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள், கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் நடைபெற்ற பணிகள் விவரங்களை கேட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரிடம், வார்டு உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஒருதரப்பினரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து செம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை சமாதானம் செய்தனர். வார்டு உறுப்பினர்கள் தரப்பில் கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் தாங்கள் புறக்கணித்து செல்வதாக கூட்டத்தில் இருந்து திடீர் வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு இடையில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இதுவரை நடைபெற்ற திட்டப்பணிகளை தலைவர் காளிதாஸ் தெரிவித்தார். அப்போது புதுகாமன்பட்டியை சேர்ந்தவர் ஒருவர் தனிநபர் ஒருவரிடம் வார்டு உறுப்பினர்கள் ரூ. 10 ஆயிரம் பெற்றுக்கொண்டு தனக்கு சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு கொடுக்க ஆதரவாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

    இதனால் வார்டு உறுப்பினர்களுக்கும் அந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

    ×