search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபை கூட்டம்
    X

    ஊராட்சி மன்றத் தலைவர் யாழினி புஷ்பவள்ளி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கிராம சபை கூட்டம்

    • சக்கரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மன்ற தலைவர் யாழினி புஷ்ப வள்ளி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் வரும் நிதியாண்டில் நிறை வேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப் பட்டது. 100 நாள் வேலை திட்டம் சம்பந்தமான குறைகள் கிராம மக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    பொது மக்கள் குடிநீர், மின் வசதி, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.

    Next Story
    ×