search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணக்கடவு ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
    X
    கோப்புபடம். 

    மணக்கடவு ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்

    • கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    தாராபுரம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மணக்கடவு ஊராட்சி கிராம சபைக் கூட்டம் மணக்கடவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் எஸ். சுப்பிரமணி, ஊராட்சி துணைத்தலைவர் மங்கலம் கு.செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் எஸ்.வி. செந்தில்குமார் கலந்து கொண்டார். தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட 15 தீர்மானங்கள் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அதற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் பதிலளித்து பேசினார். சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.சகுந்தலா, முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ராஜதுரை, ஒன்றிய தி.மு.க. பொருளாளர் மாரிமுத்து, சட்ட ஆலோசகர் சகுந்தலா, ஊராட்சி மன்றவார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், கிராம நிர்வாக அதிகாரி, பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலர் ரேவதி நன்றி கூறினார்.

    Next Story
    ×