search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்"

    • அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங் பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ். தொழிலதிபரான இவர் ரூ.4 கோடி மதிப்பிலான ஸ்போர்ட்ஸ் கார் வைத்துள்ளார்.

    இவர் அகமது என்பவரிடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நீரஜ் தனது ஸ்போர்ட்ஸ் காரை விற்பனை செய்ய முடிவு செய்தார். இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து நீரஜின் நண்பரான அமன் என்பவர் கார் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார்.

    இதனை கண்ட அகமது அது நீரஜ்ஜின் கார் என்பதை தெரிந்து கொண்டார். உடனடியாக அமனை தொடர்பு கொண்டு நான் காரை வாங்க விரும்புகிறேன்.

    மாமிட் பள்ளி கிராமத்தில் உள்ள என்னுடைய பண்ணை வீட்டிற்கு காரை கொண்டு வருமாறு கூறினார். அதன்படி அமன் காரை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றார்.

    அப்போது அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். காரை அங்குள்ள சாலைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அகமது தனக்கு நீரஜ் 1 கோடி ரூபாய் கடன் தர வேண்டும். அவர் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்படி கேட்டார். இதனால் அமனுக்கும் அகமதுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அகமது காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் கார் முழுவதும் பற்றி எரிந்து நாசமானது. ஒரு கோடி ரூபாய் கடனுக்காக 4 கோடி ரூபாய் மதிப்பிலான கார் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பஹடி ஷரீப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
    • வாகனங்களை உருவாக்க இருப்பதாக தெரிவித்தது.

    கியா நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், அந்நிறுவன எதிர்கால திட்டங்களை அறிவித்தது. அப்போது இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாகவும், இந்தியாவுக்கு ஏற்ற வாகனங்களை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்தது.

    அந்த வகையில், கியா நிறுவனம் 2024-25 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் எம்.பி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வரிசையில் கியா EV9 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ள கியா EV9 இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

     


    கியா EV9 மாடல் தவிர புதிய தலைமுறை கியா கார்னிவல் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்த கார் ஏழு மற்றும் ஒன்பது பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும்.

    இரு மாடல்களுடன் கியா எலெக்ட்ரிக் RV மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த கார் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்த கார் கரென்ஸ் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும்.

    • முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    • புது வேரியண்ட் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் இன்னோவா ஹைகிராஸ் மாடலின் புது வேரியண்டை அறிமுகம் செய்தது. இன்னோவா ஹைகிராஸ் GX(O) என்று அழைக்கப்படும் புது வேரியண்ட் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்ட்-க்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புது வேரியண்டில் எல்.இ.டி. ஃபாக் லைட்கள், முன்புறம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் டிஃபாகர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, 360 டிகிரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் செஸ்ட்நட் இன்டீரியர், மென்மையான பொருட்களால் ஆன டேஷ்போர்டு, டோர் பேனல்கள் மற்றும் பின்புற சன்ஷேடுகள் வழங்கப்பட்டுள்ளன.

     


    புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் GX(O) மாடல்: பிளாகிஷ் அகெ கிளாஸ் ஃபிளேக், பிளாட்டினம் வைட் பியல், ஆட்டிட்யூட் பிளாக் மைக்கா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், சில்வர் மெட்டாலிக், சூப்பர் வைட் மற்றும் அவான்ட் கார்ட் பிரான்ஸ் மெட்டாலிக் என ஏழுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    2024 இன்னோவா ஹைகிராஸ் மாடலின் GX(O) வேரியண்டில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்.பி. பவர், 188 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலிலும் வழங்கப்படும்.
    • ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்விப்ட் மாடல் YED எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய மாடலில் அதன் முந்தைய வெர்ஷனில் வழங்கப்பட்டதை விட அதிக அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடல் கார் ஏற்கனவே ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த கார் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

     


    அதன்படி இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பலேனோ, பிரான்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸா மாடல்களை போன்ற இன்டீரியர் புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    சர்வதேச சந்தையில் புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், 16 இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கும் வசதி கொண்ட விங் மிரர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், டயர் பிரெஷர் மாணிட்டர், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி, ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ADAS போன்ற அம்சங்கள், லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் டிபாச்சர் வார்னிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

    • வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டைகுன் மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.

    புதிய விலை குறைப்பை தொடர்ந்து இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறி இருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     


    வோக்ஸ்வேகன் டைகுன் புதிய விலை விவரங்கள்:

    1.0 TSI கம்ஃபர்ட்லைன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 70 ஆயிரம் குறைந்து ரூ. 11 லட்சம் என மாறியுள்ளது

    1.5 TSI GT பிளஸ் DSG க்ரோம் ரூ. 75 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 69 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 TSI GT பிளஸ் DSG க்ரோம் (கூடுதல் அம்சங்களுடன்) ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 69 ஆயிரம் என மாறியது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG டீப் பிளாக் பியல் ரூ. 74 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG கார்பன் ஸ்டீல் கிரே மேட் ரூ. 80 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG (புதிய அம்சங்கள்) டீப் பிளாக் பியல் ரூ. 1 லட்சத்து 04 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG (புதிய அம்சங்கள்) கார்பன் ஸ்டீல் கிரே மேட் ரூ. 1.1 லட்சம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    இந்தியாவில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. டைகுன் மாடல் டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
    • இது மஹிந்திரா XUV 300 காரின் பேஸ்லிப்ட் வெர்ஷன் ஆகும்.

    மஹிந்திரா நிறுவனம் இம்மாத இறுதியில் (ஏப்ரல் 29) தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV 3XO அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த காருக்கான டீசர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என்றும் இவை அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

     


    புதிய XUV 3XO மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் XUV 300 காரின் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் பெயர் மட்டுமின்றி டிசைன் அடிப்படையிலும் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் மெல்லிய கிரில், இன்வெர்ட் செய்யப்பட்ட சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டூயல் பாரெல் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர் வழங்கப்படுகிறது.

    இதன் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. டெயில் லைட், மஹிந்திராவின் டுவின் பீக் லோகோ மற்றும் XUV 3XO பிராண்டிங் வழங்கப்படுகிறது. இந்த காரில் முற்றிலும் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஏழு ஏர்பேக், லெவல் 2 ADAS சூட் வழங்கப்படுகிறது. இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங் வழங்கப்படுகிறது. 

    • அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.
    • கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

    மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இந்த காருக்கான தட்டுப்பாடு இன்றும் குறையாத நிலையே தொடர்கிறது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலின் 2023 வெர்ஷனுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.

    அதன்படி ஸ்கார்பியோ N மாடலின் டாப் எண்ட் Z8 மற்றும் Z8L டீசல் 4x4 வேரியண்ட்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட 7 சீட்டர் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. Z8 மற்றும் Z8L டீசல் 4x2 AT வேரியண்ட்களுக்கு (6 மற்றும் 7 சீட்டர்) ரூ. 60 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     


    ஸ்கார்பியோ N Z8 மற்றும் Z8L பெட்ரோல் AT வேரியண்ட்களுக்கும் (6 மற்றும் 7 சீட்டர்) ரூ. 60 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி தவிர எக்சேன்ஜ் போனஸ் அல்லது கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

    இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் 203 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 175 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஸ்கார்பியோ N மாடல் ரூ. 13 லட்சத்து 60 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 24 லட்சத்து 54 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.
    • புதிய ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை முதல் முறையாக வெளியிட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தையில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மேம்பட்ட புதிய சப்-4 மீட்டர் எஸ்.யு.வி. மாடலுக்கு மஹிந்திரா XUV 3XO என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் ஒட்டுமொத்த XUV மாடல்களும் இதே போன்ற பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.

    டீசரில் புதிய மஹிந்திரா XUV 3XO மாடலின் முன்புறம் புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், எல் வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், புதிய பேட்டன் கொண்ட கிரில், டூயல் டோன் அலாய் வீல்கள் உள்ளன.

    இத்துடன் புதிதாக சி வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், கனெக்டெட் எல்.இ.டி. லைட் பார், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், பின்புறத்தில் XUV 3XO லெட்டரிங் உள்ளது. இவைதவிர டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புதிய ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய மஹிந்திரா XUV 3XO மாடலிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் அறிமுகமானதும் மஹிந்திரா XUV 3XO கார், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்சான், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

    • துவக்க விலை ரூ. 7 லட்சத்து 73 ஆயிரம், என்று நிர்ணயம்.
    • இந்த கார் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா இந்தியா நிறுவனம் மாருதி ஃபிரான்க்ஸ் மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட "டெய்சர்" மாடலை இந்திய சந்தையில் நேற்று (ஏப்ரல் 3) அறிமுகம் செய்தது. E, S, S+, G, மற்றும் V என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும் டொயோட்டா டெய்சர் துவக்க விலை ரூ. 7 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய டொயோட்டா டெய்சர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். இந்த காரின் வினியோகம் மே மாதம் துவங்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    புதிய டெய்சர் மாடல்- லுசென்ட் ஆரஞ்சு, ஸ்போர்டின் ரெட், கஃபே வைட், என்டைசிங் சில்வர், கேமிங் கிரே, ஸ்போர்டின் ரெட்-மிட்நைட் பிளாக் ரூஃப், என்டைசிங் சில்வர்- மிட்நைட் பிளாக் ரூஃப் மற்றும் கஃபே வைட்-மிட்நைட் பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    இந்த காரில் ஒன்பது இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோ டிம்மிங் IRVM, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங்கில் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.

    பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் டிஃபாகர், ஐசோஃபிக்ஸ் மவுன்ட்கள், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பார்க்கிங் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

    பவர்டிரெயினை பொருத்தவரை டொயோட்டா டெய்சர் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட் உடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு AMT, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    • மும்பையின் பாந்த்ரா என்னும் இடத்தில்ரூ.250 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களா கட்டி வருகின்றனர்
    • புதிய காரை அவரே ஓட்டி வந்தார். பங்களா கட்டுமான பணிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

    இந்தி பட உலகின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் - முன்னணி நடிகை ஆலியாபட் ஜோடி கடந்த 2022 -ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகா என பெயரிடப்பட்டு உள்ளது.

    ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதி தங்களது மகள் ராகாவுக்காக மும்பையின் முக்கிய பகுதியான பாந்த்ரா என்னும் இடத்தில்ரூ.250 கோடி மதிப்பில் அரண்மனை போன்று பல்வேறு வசதிகள் கொண்ட பிரமாண்ட பங்களா ஒன்று கட்டி வருகின்றனர்.மேலும் ரன்பீர்சிங் ரூ.10 கோடி மதிப்பிலான புதிய 'ஸ்வான்கி' கார் ஒன்றை சமீபத்தில் வாங்கி உள்ளார்.

    இந்நிலையில் இன்று பங்களா கட்டுமான பணியை பார்வையிடுவதற்கு மனைவி ஆலியா பட் மற்றும் நீது கபூர் ஆகியோருடன் ரன்பீர் சிங் காரில் வந்தார். அந்த புதிய காரை அவரே ஓட்டி வந்தார். பங்களா கட்டுமான பணிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.



    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பத்திரிகையாளர்கள் அந்த காரை போட்டோக்கள் எடுத்தனர். மேலும் இணைய தளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த கார் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.மேலும் மும்பையில் மிகவும் விலை உயர்ந்த கார் வைத்து இருக்கும் நடிகர் என்ற பெயரை ரன்பீர் சிங் தற்போது பெற்று உள்ளார்.

    இந்நிலையில் ரன்பீர் புதிய படமான 'ராமாயணம்' என்ற படத்தில் விரைவில் நடிக்க உள்ளார்.ராமர் வேடத்தில் ரன்பீர் நடிக்கிறார். இதற்காக க்ளீன் ஷேவ் செய்து , மெலிந்த மாஸ்குலர் உடல் அமைப்புடன காணப்படுகிறார். படத்துக்காக 'வில்வித்தை' பயிற்சியும் பெற்றுள்ளார்.

    அயோத்தியில் 11 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட செட் கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் நடுப்பகுதியில் ரன்பீர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஐந்து வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று டாடா நெக்சான். நெக்சான் மாடல் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் தொடர்ந்து கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. சமீபத்தில் இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    அதிகளவு மாற்றங்களுடன் புதிய தோற்றம் மற்றும் அம்சங்களை நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடலின் வேரியண்ட்களை மாற்றியமைத்து புதிதாக ஐந்து வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

     


    டாடா நெக்சான் புதிய வேரியண்ட்களின் விலை ரூ. 10 லட்சம் என்று துவங்குகிறது. நெக்சான் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் AMT வெர்ஷன்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. முன்னதாக டாடா நிறுவனம் நெக்சான் டார்க் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 11 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    பெட்ரோல் வெர்ஷன்களில் நெக்சான் ஸ்மார்ட் பிளஸ், பியூர், பியூர் எஸ் வேரியண்ட்களில் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டீசல் வெர்ஷனில் பியூர் மற்றும் பியூர் எஸ் வேரியண்ட்களில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்குவது தவிர டாடா நெக்சான் மாடல்களில் வெறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் ணற்றும் 6 ஸ்பீடு AMT மற்றும் 7 ஸ்பீடு DCA டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.
    • காரில் வேறு எந்த மாற்றமும் இல்லை.

    ஸ்கோடா நிறுவனம் தனது கோடியக் எஸ்.யு.வி.-இன் வேரியன்ட்களை மாற்றியுள்ளது. முன்னதாக மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த கோடியக் தற்போது டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மேலும், இதன் அம்சங்களும் மாற்றப்பட்டுள்ளன.

    ஸ்கோடா கோடியக் L&K வேரியண்ட் ரூ. 41 லட்சத்து 99 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இதன் விலை தற்போது ரூ. 2 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம் என மாற்றப்பட்டு இருக்கிறது. விலை, வேரியண்ட் மாற்றப்பட்டது தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     


    கோடியக் மாடலில் 190 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-வீல் டிரைவ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலாக கோடியக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் டொயோட்டா பார்ச்சூனர், ஜீப் மெரிடியன், ஹூண்டாய் டக்சன் மற்றும் எம்.ஜி. குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ×