search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதல்"

    • சம்பவம் நடந்த 7 நாட்களுக்கு பின்னர்தான் வழக்கில் துப்பு துலங்கியது.
    • அனுப்பிரியாவும், வேல்முருகனும் சேர்ந்து சுரேசை அரிவாளால் வெட்டி துடிதுடிக்க கொலை செய்தனர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான கள்ளங்காடு என்ற முந்திரிக்காடு உள்ளது. இந்த முந்திரிக்காட்டில் கடந்த 30-ந்தேதி அதிகாலை மனித உடல் ஒன்று எரிந்து கொண்டிருந்ததை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக இதுபற்றி உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உடையார்பாளையம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது எரிந்து கொண்டிருந்த உடலின் மீது அவர்கள், பொதுமக்கள் உதவியுடன் சாக்கு, தார்ப்பாய் போன்றவற்றை போட்டு தீயை அணைத்தனர்.

    இருப்பினும் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையான நிலையில் காட்சியளித்தது. இதனால் எரிக்கப்பட்டது ஆணா?, பெண்ணா? என்பது உடனடியாக தெரியாத நிலை இருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் அங்கு போலீஸ் மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது.

    முந்திரி தோப்பில் இருந்து மோப்பம் பிடித்த படி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிய நாய், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தூரத்தில் படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் எரிக்கப்பட்டவர் உடலை போலீசார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எரிக்கப்பட்டவர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீண்டும் முந்திரி காட்டிற்கே கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

    அப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள தத்தனூர் குடிகாட்டில் இருந்து வடகடல் செல்லும் பாதையில் மெயின்ரோட்டில் ரத்தம் சிதறி கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த 7 நாட்களுக்கு பின்னர் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. கொலை செய்யப்பட்டவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்று தெரியவந்தது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து சுரேசை அவரது மனைவியே கொன்று எரித்த அதிர்ச்சி தகவலும் போலீஸ் விசாரணையில் வெளியானது.

    ஜெயங்கொண்டம் அருகே வடகடல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அனுப்பிரியா.

    இவரது சித்தப்பா மகன் ஆலவாயை சேர்ந்த வேல்முருகன். அனுப்பிரியாவுக்கு வேல்முருகன் அண்ணன் முறை ஆகும்.

    இந்த நிலையில் சகோதர, சகோதரி உறவு முறையை கடந்து அவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சுரேஷ் வியாபாரத்துக்காக சென்னை சென்ற வேளையில் வேல்முருகனும், அனுப்பிரியாவும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த விவரம் சுரேஷுக்கு தெரியவந்தது. அவர் மனைவியை கண்டித்தார். இதனால் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சுரேசை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.

    இதை தொடர்ந்து சம்பவத்தன்று அனுப்பிரியா சென்னையில் இருந்து சுரேஷை வரவழைத்தார். அதிகாலையில் மோட்டார்சைக்கிளில் அனுப்பிரியாவும், சுரேசும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்றனர்.

    வடகடல் பிரிவு சாலையில் வந்தபோது அங்கு வேல்முருகன் வழிமறித்தார். அப்போது அனுப்பிரியாவும், வேல்முருகனும் சேர்ந்து சுரேசை அரிவாளால் வெட்டி துடிதுடிக்க கொலை செய்தனர். பின்னர் வெண்மான்கொண்டான் முந்திரி காட்டில் சாக்கில் மூட்டை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து வேல்முருகன், அனுப்பிரியாவை உடையார்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • காஞ்சனாதேவி தன்னை தேட வேண்டாம், தான் செந்திலுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
    • சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் காஞ்சனா தேவி (வயது 26). இவருக்கும் சென்னையை சேர்ந்த சோலைராஜ் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு சிவரஞ்சனி (6), கெவின்ராஜ் (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். காஞ்சனா தேவி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே காஞ்சனா தேவிக்கு திடீர் உடல்நலக்கு றைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற வசதியாக சோலைராஜ் தனது மனைவியை, குழந்தைகளை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். காஞ்சனாதேவியின் தந்தை தள்ளு வண்டியில் அப்பளம் வியாபாரம் செய்து வந்தார்.

    அவர் தனக்கு உதவியாக பெரம்பலூர் மாவட்டம் கீரனூரை சேர்ந்த செந்தில் என்பவரை வேலைக்கு வைத்திருந்தார். அவர் அடிக்கடி மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்துசென்றபோது காஞ்சனாதேவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மாரிமுத்து செந்திலையும், மகள் காஞ்சனா தேவியையும் கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சனாதேவி, தந்தை வீட்டில் இருந்து வெளியேறி அதே பகுதியில் குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார். மகளை மறக்க மனமில்லாத மாரிமுத்து அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்று பேரக்குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

    அதேபோல் நேற்றும் அவர் சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. அக்கக் பக்கத்தில் விசாரித்தபோது காஞ்சனாதேவி வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. அப்போது மாரி முத்துவை செல்போனில் தொடர்பு கொண்ட காஞ்சனாதேவி தன்னை தேட வேண்டாம், தான் செந்திலுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையுடன் மாயமான காஞ்சனாதேவி மற்றும் செந்திலை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பிய மகள் தனக்கு தெரியாமல் மீண்டும் திரும்பி வந்ததை அறிந்த சீனிவாச ராவ் கடும் ஆத்திரம் அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த சீனிவாசராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் வாரி தோட்டாவை சேர்ந்தவர் சீதாராமாஞ்சேயலு. இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் அதே ஆஸ்பத்திரியில் வேலை செய்த பெண் டாக்டருடன் சீதாராமாஞ்சேயலுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    இதுகுறித்து டாக்டரின் தந்தை சீனிவாசராவுக்கு தெரியவந்தது. சீனிவாசராவ் தனது மகளை மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் பெண் டாக்டர் தனது தந்தைக்கு தெரியாமல் மீண்டும் குண்டூர் வந்து பிசியோதெரபி டாக்டருடன் தங்கினார்.

    வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பிய மகள் தனக்கு தெரியாமல் மீண்டும் திரும்பி வந்ததை அறிந்த சீனிவாச ராவ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

    சீதாராமாஞ்சநேயலு வீட்டிற்கு சென்ற சீனிவாச ராவ் உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

    இதனால் என்னுடைய மகளுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

    இதற்கு சீதா ராமாஞ்சேயலு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாச ராவ் தான் தயாராக எடுத்து வந்த மிளகாய் பொடியை டாக்டரின் முகத்தில் வீசினார். டாக்டர் சுதாரிப்பதற்குள் அருகிலிருந்த சுத்தி எடுத்து டாக்டரின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் டாக்டரின் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சிறிது நேரத்தில் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து சீனிவாச ராவ் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீதா ராமாஞ்சேயலு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • சாந்தி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார்.
    • வெளியூர் செல்லும் கணேசன் போன் பண்ணும் போது சாந்தி எடுக்காமல் இருந்ததுடன், வேறு யாருடனோ பேசி கொண்டு இருந்துள்ளார்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பவளக்கொடி என்கிற சாந்தி (வயது 37). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சாந்திக்கும் அந்த பகுதியை சேர்ந்த கணேசன் (43) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த 2 பேரின் வீட்டினர் கண்டித்தனர்.

    இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்தனர். திருப்பூர் கோவில் வழியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். கணேசன் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.

    இந்தநிலையில் சாந்தி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார். வெளியூர் செல்லும் கணேசன் போன் பண்ணும் போது சாந்தி எடுக்காமல் இருந்ததுடன், வேறு யாருடனோ பேசி கொண்டு இருந்துள்ளார். இதனால் சாந்தி மீது கணேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் கணேசன் வேலைக்கு சென்றதும் சாந்தி வீட்டில் இருந்து வெளியே சென்று வந்துள்ளார்.

    இந்தநிலையில் சாந்தி வெளியில் எங்கு செல்கிறார் என்பதை கண்டறிய கணேசன் திட்டமிட்டார். அதன்படி நேற்றிரவு வேலைக்கு செல்வதாக கூறிய கணேசன், சாந்தியை நோட்டமிட அங்கு ஒரு இடத்தில் மறைந்து கொண்டார்.

    கணேசன் வேலைக்கு சென்றதாக நினைத்து கொண்ட சாந்தி, வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவரை பின்தொடர்ந்து கணேசன் சென்றார். அப்போது சாந்தி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு சென்றதுடன், அங்கு வேறு ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன், சாந்தியிடம் நான் இருக்கும் போது, எப்படி வேறு ஒருவருடன் பழகலாம் என்று தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தியை சரமாரி குத்தினார். இதில் சாந்தியின் தலை, கை, உடல்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடினார். உடனே அங்கு நின்ற பயணிகள் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிய சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்காதல் பிரச்சனையில் பெண்ணை பனியன் நிறுவன டிரைவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெங்கண்ணா தனது மனைவியையும் நஸ்ரியா தனது கணவரையும் கொலை செய்து விட்டால் கள்ளக்காதலை தொடரலாம் என முடிவு செய்தனர்.
    • போலீசார் ரமாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சூர்யா பேட்டையை சேர்ந்தவர் ஷேக் ரபி (வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி நஸ்ரி.

    அதே பகுதியில் உள்ள குடுகுடாவை சேர்ந்தவர் வெங்கண்ணா (35) விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ரமாதேவி.

    நஸ்ரி, வெங்கண்ணா இருவருக்கும் செல்போனில் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி பேசிய இவர்கள் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இருவரும் தனிமையில் சந்திக்க தொடங்கினர். இது வெங்கண்ணாவின் மனைவிக்கும் நஸ்ரியின் கணவருக்கும் தெரியவந்தது. அதனால் கள்ளக்காதலர்கள் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    வெங்கண்ணா தனது மனைவியையும் நஸ்ரியா தனது கணவரையும் கொலை செய்து விட்டால் கள்ளக்காதலை தொடரலாம் என முடிவு செய்தனர்.

    கடந்த மாதம் வெங்கண்ணா அவருடைய மனைவி ரமா தேவியை சூர்யா பேட்டையில் உள்ள சந்து பட்டலா பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு சாலையோரம் இருந்த ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. அங்கு வைத்து ரமாதேவியை அடித்து கொலை செய்தார்.

    பின்னர் அவரது உடலை அங்குள்ள சாலையில் வீசினார். இரவு நேரம் என்பதால் ரமாதேவி உடல் மீது வாகனங்கள் ஏறி சென்றன. மறுநாள் தன்னுடைய மனைவி விபத்தில் இறந்து விட்டதாக வெங்கண்ணா நாடகம் ஆடினார்.

    போலீசார் ரமாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் இந்த சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவர் ரபியை கொலை செய்ய நஸ்ரி திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு ரபி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நஸ்ரி போன் செய்து வெங்கண்ணாவை அழைத்தார்.

    வெங்கண்ணா அவருடைய நண்பர் மது, ஸ்ரீசைலம் ஆகியோருடன் கள்ளக்காதலியின் வீட்டுக்கு வந்தார். அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரபியை கழுத்தை நெரித்தனர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் ரபியை அவரது அறையில் தூக்கில் தொங்க விட்டனர். தொடர்ந்து நஸ்ரி அங்குள்ள அறையில் படுத்துக்கொண்டார். அந்த அறையை வெளிப்புறமாக வெங்கண்ணா பூட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். மறுநாள் காலையில் நஸ்ரி அவரது அறையில் இருந்து வெளியே வர முடியவில்லை வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ளது எனக்கூறி அக்கம்பக்கத்தினருக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் வந்து அவரது அறையை திறந்து விட்டனர். அப்போது மற்றொரு அறையில் ரபி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதனைக் கண்டு நஸ்ரி கணவர் தன்னை அறையில் பூட்டி விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கதறி அழுதார்.

    சூர்யா பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரபியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் சில இடங்களில் சந்தேகப்படும்படியான காயங்கள் இருந்தன.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நஸ்ரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது அவர் வெங்கண்ணாவை வரவழைத்து கணவரை தீர்த்து கட்டியது தெரியவந்தது.

    இதேபோல கள்ளக்காதலிக்காக வெங்கண்ணா மனைவியை கொன்று சாலையில் வீசி விபத்து என நாடகம் ஆடியதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வெங்கண்ணா, நஸ்ரி இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த மது, ஸ்ரீசைலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராஜ்குமார் தனது மனைவி பிரவீணாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
    • ராஜ்குமார் திட்டமிட்டது போல் தீபக் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்தில் பிரவீணாவை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33), தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர். இவருடைய மனைவி பிரவீணா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இரவு எளம்பலூர் சாலையில் ராஜ்குமார், பிரவீணா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் பிரவீணாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பிரவீணா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்ததை பிரவீணா கண்டித்ததால் கணவர் ராஜ்குமாரே கூலிப்படை மூலம் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    ராஜ்குமாருக்கும், பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இது தொடர்பாக புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கண்டுபிடித்து அழைத்து வந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆனாலும் ராஜ்குமார் தனது கள்ளக்காதலியை மறக்க முடியாமல் தவித்து வந்தார்.

    இந்த சூழ்நிலையில் அவர்கள் 2 பேரையும் கண்டித்த பிரவீணா தனது கணவர் ராஜ்குமாரை ஒரு நாள் செருப்பால் அடித்துள்ளார். இதனால் ராஜ்குமாரிடம் பழகுவதை அந்த பெண் நிறுத்தி விட்டு வேறோருவருடன் பழகி வந்துள்ளார்.

    மேலும் ராஜ்குமார் தனது அண்ணனின் மனைவி ஆனந்தியுடன் (33) தகாத உறவு வைத்து இருப்பதாக பிரவீணா சந்தேகமடைந்தார். இதனால் ஆனந்தியையும் ஒரு நாள் பிரவீணா துடைப்பத்தால் அடித்துள்ளார்.

    இதனால் ராஜ்குமார் தனது மனைவி பிரவீணாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். உதவிக்கு தனது அண்ணி ஆனந்தியையும் சேர்த்துக் கொண்டாராம்.

    பின்னர் ஆனந்தி தனது அக்காள் மகனான திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வாசுகி தெருவை சேர்ந்த சுரேசின் மகன் தீபக்கை (19) நாடியுள்ளார்.

    இவனுக்கு ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்பு உள்ளது. அவனிடம் பிரவீணாவை கொலை செய்யும் திட்டத்தை கூறியுள்ளார். அதற்கு அவன் ரூ.2 லட்சம் கேட்டுள்ளான்.

    இதையடுத்து, கடந்த 19-ந்தேதி ராஜ்குமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்தை முன்பணமாக ஆனந்தியின் கணக்கிற்கு ஜி-பே மூலம் அனுப்பி, பின்னர் அந்த பணத்தை ஆனந்தி கணக்கிற்கு அனுப்பினார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட தீபக் தனது நண்பர்களான சந்தோஷ் பாபு என்ற சஞ்சய் (19), சரண்குமார் (19), பப்லு (22) லக்கி என்ற லட்சன் (19) ஆகியோரை பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று ராஜ்குமாருக்கு இரவு பணி என்பதால் மனைவி பிரவீணாவை எளம்பலூரில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பிரிவு சாலையில் உள்ள சித்தப்பா வீட்டில் வசிக்கும் அக்காள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு விட அழைத்து சென்றார்.

    அப்போது ஏற்கனவே ராஜ்குமார் திட்டமிட்டது போல் தீபக் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்தில் பிரவீணாவை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்தனர். போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க பிரவீணாவின் ஒரு பவுன் தங்க தாலியையும், 1½ பவுன் தங்க சங்கிலியையும், கொலுசுகளையும் கூலிப்படையினர் திருடியதோடு, ராஜ்குமாரையும் கத்தியால் லேசாக கீறி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து ஆனந்தி, தீபக், சந்தோஷ்பாபு, சரண்குமார், லட்சண், பப்லு ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மகனை சித்ரவதை செய்யும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.
    • கள்ளக்காதலனுக்கும் கடற்படை வீரரின் மனைவிக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மாச்சரலாவை சேர்ந்த கடற்படை வீரர். இவர் தற்போது ஒடிசாவில் வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி தனது 5 வயது மகனுடன் மாச்சரலாவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடற்படை வீரர் விடுமுறை தினங்களில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் கடற்படை வீரரின் மனைவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தை தடையாக இருந்துள்ளது.

    இதனால் குழந்தைக்கு அவரது தாய் கை, கால்களில் சூடு வைத்து கைகளை பின்னோக்கி வளைத்து உடைத்தார்.

    மேலும் வாளியில் தண்ணீரை நிரப்பி சிறுவனின் தலையை மூழ்கடித்து கடும் சித்ரவதை செய்து வந்தார். மகனை சித்ரவதை செய்யும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் கள்ளக்காதலனுக்கும் கடற்படை வீரரின் மனைவிக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர் குழந்தையை சித்ரவதை செய்யும் வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்பி வைத்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்படை வீரர் ஊருக்கு வந்து மகனை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

    மேலும் மனைவியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகன் என்றும் பாராமல் சூடு வைத்து கை, கால்களை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாரிமுத்து, கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் போலீசார் மாரிமுத்துவின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 44). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்து கோத்தகிரி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் மாலை மாரிமுத்து வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார். கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூஜை நடத்துவதற்காக செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு மோட்டார்சைக்கிளில் சென்றார். அதன்பிறகு நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மாரிமுத்துவின் மனைவியும், குடும்பத்தினரும் அவரை தேடத் தொடங்கினர்.

    இந்தநிலையில் மாரிமுத்து, கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் போலீசார் மாரிமுத்துவின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மாரிமுத்துவுக்கும், கோவில்மேடு பகுதியில் வசித்த தனலட்சுமி (25) என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. தனலட்சுமியை தேடியபோது அவர் தலைமறைவாகி இருந்தார். தனிப்படை போலீசார் விசாரித்தபோது தனலட்சுமி, உதயகுமார் (37) என்பவருடன் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரித்தபோது அவர்கள் 2 பேரும் சேர்ந்து தான் மாரிமுத்துவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

    கைதான தனலட்சுமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும் வேலைக்கு சென்று வந்தேன். நான் கடந்த 2013-ம் ஆண்டு சோலூர்மட்டத்தைச் சேர்ந்த முரளிதரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவர் மூலம் எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி எம்.கைகாட்டி, பாண்டியன் நகரைச் சேர்ந்த உதயகுமார் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நெருங்கி பழகியதில் நான் கர்ப்பம் ஆனேன். இதனால் அதிர்ச்சி அடைந்த எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். பின்னர் உதயகுமார் என்னை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் எனக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்களை பிரியாமல் அவர் என்னுடன் தொடர்பில் இருந்தார். உதயகுமார் வீட்டுக்கு வரும் சமயத்தில் எனது குழந்தைகளை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விடுவேன். பின்னர் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.

    இந்தநிலையில் கோத்தகிரி கோவிலில் பூசாரியாக பணியாற்றும் மாரிமுத்துவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. உதயகுமாருக்கு தெரியாமல் அவருடன் ஜாலியாக இருந்தேன்.

    கடந்த 23-ந்தேதி உதயகுமார் என் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார். இதனால் குழந்தைகளை பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு உதயகுமாருக்காக தயாராக இருந்தேன். இரவு 8.30 மணி அளவில் நான் எதிர்பாராத வகையில் மாரிமுத்து எனக்கு போன் செய்து உன்னை சந்திக்க வருவதாக தெரிவித்தார். உதயகுமார் வருவதாக கூறி இருப்பதால் நீ வராதே என அவரிடம் கூறினேன். ஆனால் எனது பேச்சை பொருட்படுத்தாமல் மாரிமுத்து என் வீட்டுக்கு வந்து விட்டார்.

    உதயகுமார் வந்தால் பிரச்சனை ஆகி விடும் என்பதால் உடனே இங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு கூறினேன். குடிபோதையில் இருந்த மாரிமுத்து நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் என்னுடன் உல்லாசமாக இருக்க என்னை கட்டாயப்படுத்தினார். எப்படியும் அவரை வெளியே அனுப்பி விட வேண்டும் என்பதால் மாரிமுத்துவின் ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருந்தேன். அதன்பிறகும் மாரிமுத்து அங்கிருந்து போக மறுத்து என்னுடன் தகராறு செய்தார். அவர் என் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார். சோபாவின் மீது விழுந்ததில் எனக்கு தலையிலும், முகத்திலும் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அதற்குள் இரவு 9.30 மணி ஆகி விட்டது. உதயகுமார் சொன்னபடி வீட்டுக்கு வந்து விட்டார்.

    எனக்கு தலையில் ரத்தம் வருவதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், மாரிமுத்துவை தாக்கினார். நானும் அவருடன் சேர்ந்து தாக்கினேன். இதில் மாரிமுத்துவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவர் அணிந்திருந்த வெள்ளி செயின், காப்பு மற்றும் செல்போனை திருடினோம். பின்னர் வீட்டு அருகே மாரிமுத்துவின் பிணத்தை வீசினோம்.

    இரவு நேரம் ஆகி விட்டதால் நானும், உதயகுமாரும் வீட்டிலேயே தங்கியிருந்தோம். காலையில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றோம். போலீசில் பிடிபட மாட்டோம் என கருதி இருந்தோம். ஆனால் போலீசார் விசாரித்து எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    மாரிமுத்துவை கொலை செய்தபோது தனலட்சுமி நைட்டி அணிந்திருந்துள்ளார். மாரிமுத்துவை கொலை செய்ததால் நைட்டியில் ரத்தக்கறை பட்டுள்ளது. அந்த நைட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனலட்சுமியையும், உதயகுமாரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.

    • காரை விட்டு வெளியே வந்த கோபிநாத் புதுவை -திண்டிவனம் நெடுஞ்சாலையில் வந்த ஏதோ ஒரு வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • திண்டிவனம் ரோட்டில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    சென்னை கிழக்கு தாம்பரம் சிவஞானம் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபிநாத் (வயது 31). இவரது மனைவி சாந்தா பிரீத்தி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். புதுவை ரெட்டியார்பாளையத்தில் சாந்தா பிரீத்தி மருந்து கடை நடத்தி வருகிறார்.

    குடும்பத்துடன் இதே பகுதியில் அவர்கள் வசித்து வந்தனர். கோபிநாத் மரக்காணம் தனியார் வங்கியில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் வங்கி கிளையில் வேலை பார்த்தார். அப்போது அங்கு பணிபுரிந்த வங்கி அலுவலரான மதுரா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மதுராவுக்கு ஏற்கனவே சுரேஷ் என்ற முந்திரி வியாபாரியுடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    கோபிநாத்-மதுரா இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    கள்ளக்காதல் விவகாரத்தை தெரிந்து கொண்ட சாந்தா பிரீத்தி, கணவர் கோபிநாத்தை கண்டித்துள்ளார். அதையும் மீறி மதுராவுடன் கோபிநாத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் மதுரா மேலாளராக பதவி உயர்வு பெற்று புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கிளைக்கு மாறுதலானார்.

    புதுவை லாஸ்பேட்டை அவ்வை நகரில் தங்கியிருந்தார். 2 பேருமே புதுச்சேரியில் தங்கியிருந்ததால் முன்பை விட அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இருவரும் மரக்காணம் வழியாக திண்டிவனம் ரோடு பகுதிக்கு சென்று அங்கிருந்து புதுவைக்கு காரில் திரும்பி வந்துள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் உருவாகி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் காரில் இருந்த ஸ்கூருட்ரைவரால் மதுராவின் கழுத்தில் குத்தியுள்ளார். மேலும் முகத்திலும் கீறியுள்ளார்.

    இதில் அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    அதன்பின் காரை விட்டு வெளியே வந்த கோபிநாத் புதுவை -திண்டிவனம் நெடுஞ்சாலையில் வந்த ஏதோ ஒரு வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    சம்பவ இடத்தில் விழுப்புரம் போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் வந்து விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் கோபிநாத், மதுரா இருவரையும் வேறு கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருவரது செல்போன்களுக்கு தொடர்பு கொண்ட எண்களை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் மதுராவின் செல்போனுக்கு ஏராளமான போன் கால்கள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கோபி நாத்தை காணவில்லை என்று 2 நாட்களுக்கு முன் புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபிநாத், மதுரா இருவரும் காரில் வருவதை அறிந்த கும்பல் ஒன்று மதுராவை கொலை செய்து விட்டு கோபிநாத்தை அந்த வழியாக செல்லும் வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்ய தூண்டியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    திண்டிவனம் ரோட்டில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கோபிநாத் தற்கொலை செய்வதற்காக பாய்ந்த வாகனம் அடையாளம் தெரிந்து அந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினால் முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

    • கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் உள்ளார்.
    • சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரத்தில் சாலையோரம் தள்ளுவண்டி கடை வைத்து பலகாரம் தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள் கணேச மூர்த்தி-மாரீஸ்வரி தம்பதியினர். நேற்று மாலை வழக்கம்போல் தள்ளுவண்டியில் பலகாரம் செய்து வியாபாரம் நடத்தி வந்தனர். அப்போது அங்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்து அவர்கள் இருவரையும் சராமாரியாக வெட்டியுள்ளார்.

    இதனை கண்ட அக்கம் பக்கம் இருந்த மக்கள் அங்கிருந்து சிதறி அடித்து ஓடினர். அப்போது தள்ளுவண்டி கடை அருகே இருந்த கணேசமூர்த்தியின் சகோதரர் ரமேஷ், அங்கு ஓடிவந்து அரிவாளால் வெட்டியவரை தடுத்து, அவரிடம் இருந்து அரிவாளை பிடுங்கினார். பின்னர் கணேசமூர்த்தி அந்த அரிவாளை பிடுங்கி அந்த மர்மநபரை வெட்டினார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கும் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மாரீஸ்வரி உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் உள்ளார். இந்நிலையில் கணேசமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் பல்லடத்தில் அவர்கள் வசித்து வந்தது மாரீஸ்வரியின் மகன் புஷ்பராஜுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ், கோவில்பட்டியில் இருந்து பல்லடத்திற்கு சென்று தனது தாய் மாரீஸ்வரி மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரை அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் பல்லடத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்பு மீண்டும் அரிவாள் கலாசாரம் தலை தூக்கியது பல்லடம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மாரியப்பன் அதிகாலை 5 மணிக்கு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் தினமும் வருவார்.
    • கனகாவும் தனது கள்ளக்காதலனை பார்க்க முடியவில்லை என்று வருத்தம் அடைந்துள்ளார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 41). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு கனகா என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகனும் உள்ளனர்.

    இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மாரியப்பன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவர் புளியங்குடி அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையோரம் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுதொடர்பாக மாரியப்பன் தாயார் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.

    போலீசார் பல்வேறு கோணங்களில் நடத்திய விசாரணையில், வாசுதேவநல்லூர் அக்ரஹாரம் சந்து தெருவை சேர்ந்த சண்முகையா மகன் விக்னேஷ்(24) என்பவர் மாரியப்பனை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    விக்னேசுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் பால் வியாபாரம் செய்து வந்தார். வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் விற்பனை செய்து வந்தார். அந்த வகையில், கொலை செய்யப்பட்ட மாரியப்பன் வீட்டுக்கும் அவர் பால் கொடுத்து வந்துள்ளார். அப்போது அவருக்கும், மாரியப்பனின் மனைவி கனகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

    மாரியப்பன் அதிகாலை 5 மணிக்கு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் தினமும் வருவார். இதனை பயன்படுத்தி கனகா, அந்த வாலிபருடன் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே பால் வியாபாரத்திற்காக விக்னேஷ், மாரியப்பனிடம் கடனாக ஒரு குறிப்பிட்ட தொகையையும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கனகாவும், விக்னேசும் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை திடீரென வீட்டுக்கு வந்த மாரியப்பன் பார்த்து விட்டார். உடனே அவர் 2 பேரையும் கண்டித்துள்ளார். மேலும், இனி தனது வீட்டுக்கு பால் ஊற்ற வரவேண்டாம் என்றும், கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுமாறும் மாரியப்பன் கண்டிப்பாக பேசியுள்ளார்.

    இதனால் விக்னேசுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

    கனகாவும் தனது கள்ளக்காதலனை பார்க்க முடியவில்லை என்று வருத்தம் அடைந்துள்ளார். இதையடுத்து விக்னேசை செல்போனில் தொடர்பு கொண்ட கனகா, மாரியப்பன் இருக்கும் வரை நாம் உல்லாசமாக இருக்க முடியாது. எனவே அவரை கொலை செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து 2 பேரும் சேர்ந்து மாரியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி நேற்று அதிகாலையில் மாரியப்பனுக்கு போன் செய்த விக்னேஷ், புளியங்குடி பகுதியில் நிற்பதாகவும், கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய மாரியப்பன் வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது நவாசாலை பகுதியில் நின்று கொண்டிருந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். பின்னர் அவரும் ஏதும் தெரியாதது போல் வீடுகளுக்கு பால் ஊற்ற சென்றுவிட்டார். அவரது மனைவி கனகாவும் வழக்கம்போல் வீட்டில் உள்ள வேலைகளை பார்த்து வந்துள்ளார். ஆனால் மாரியப்பன் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்த போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விக்னேசை பிடித்து விசாரித்த போது அவர் கனகாவுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கொலையில் தொடர்புடைய கனகாவையும் போலீசார் கைது செய்தனர். இன்று காலை விக்னேஷ், கனகா ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • இளம்பெண் செல்வகுமாருடன் ஜாலியாக இருப்பதை அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும், செல்வகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள புளியன்கண்டியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது28). லாரி டிரைவர்.

    இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணமான ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் பிரிந்தனர்.

    இதையடுத்து செல்வகுமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கு தெக்கோட்டு வாய்க்காலை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இளம்பெண் செல்வகுமாருடன் ஜாலியாக இருப்பதை அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும், செல்வகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து லாரி டிரைவர் கள்ளக்காதலியிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் ஜாலியாக இருக்கும் போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக செல்வகுமாரை மிரட்டி பணம் கேட்டார்.

    இதனால் பயந்த அவர் ரூ.1.50 லட்சம் வரை பணத்தை இளம்பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் இளம்பெண் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தார்.

    இதன் காரணமாக செல்வகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செல்வகுமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு செல்வகுமார் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

    அதில் இளம்பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் நாங்கள் ஜாலியாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்து என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்.

    பணம் கொடுக்கவில்லை என்றால், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி என்னிடம் இருந்து ரூ.1.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இதுபோன்று பணம் கேட்டு மிரட்டி வந்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவர் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×