search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் டாக்டருடன் கள்ளக்காதல்: மிளகாய் பொடி தூவி பிசியோதெரபி டாக்டர் சுத்தியால் அடித்து கொலை
    X

    பெண் டாக்டருடன் கள்ளக்காதல்: மிளகாய் பொடி தூவி பிசியோதெரபி டாக்டர் சுத்தியால் அடித்து கொலை

    • வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பிய மகள் தனக்கு தெரியாமல் மீண்டும் திரும்பி வந்ததை அறிந்த சீனிவாச ராவ் கடும் ஆத்திரம் அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த சீனிவாசராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் வாரி தோட்டாவை சேர்ந்தவர் சீதாராமாஞ்சேயலு. இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் அதே ஆஸ்பத்திரியில் வேலை செய்த பெண் டாக்டருடன் சீதாராமாஞ்சேயலுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    இதுகுறித்து டாக்டரின் தந்தை சீனிவாசராவுக்கு தெரியவந்தது. சீனிவாசராவ் தனது மகளை மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் பெண் டாக்டர் தனது தந்தைக்கு தெரியாமல் மீண்டும் குண்டூர் வந்து பிசியோதெரபி டாக்டருடன் தங்கினார்.

    வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பிய மகள் தனக்கு தெரியாமல் மீண்டும் திரும்பி வந்ததை அறிந்த சீனிவாச ராவ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

    சீதாராமாஞ்சநேயலு வீட்டிற்கு சென்ற சீனிவாச ராவ் உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

    இதனால் என்னுடைய மகளுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

    இதற்கு சீதா ராமாஞ்சேயலு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாச ராவ் தான் தயாராக எடுத்து வந்த மிளகாய் பொடியை டாக்டரின் முகத்தில் வீசினார். டாக்டர் சுதாரிப்பதற்குள் அருகிலிருந்த சுத்தி எடுத்து டாக்டரின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் டாக்டரின் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சிறிது நேரத்தில் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து சீனிவாச ராவ் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீதா ராமாஞ்சேயலு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×