என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுவன் சித்ரவதை"
- மகனை சித்ரவதை செய்யும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.
- கள்ளக்காதலனுக்கும் கடற்படை வீரரின் மனைவிக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் மாச்சரலாவை சேர்ந்த கடற்படை வீரர். இவர் தற்போது ஒடிசாவில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி தனது 5 வயது மகனுடன் மாச்சரலாவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடற்படை வீரர் விடுமுறை தினங்களில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் கடற்படை வீரரின் மனைவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தை தடையாக இருந்துள்ளது.
இதனால் குழந்தைக்கு அவரது தாய் கை, கால்களில் சூடு வைத்து கைகளை பின்னோக்கி வளைத்து உடைத்தார்.
மேலும் வாளியில் தண்ணீரை நிரப்பி சிறுவனின் தலையை மூழ்கடித்து கடும் சித்ரவதை செய்து வந்தார். மகனை சித்ரவதை செய்யும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.
இந்த நிலையில் கள்ளக்காதலனுக்கும் கடற்படை வீரரின் மனைவிக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர் குழந்தையை சித்ரவதை செய்யும் வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்பி வைத்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்படை வீரர் ஊருக்கு வந்து மகனை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
மேலும் மனைவியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகன் என்றும் பாராமல் சூடு வைத்து கை, கால்களை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்