என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் சித்ரவதை"

    • மகனை சித்ரவதை செய்யும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.
    • கள்ளக்காதலனுக்கும் கடற்படை வீரரின் மனைவிக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மாச்சரலாவை சேர்ந்த கடற்படை வீரர். இவர் தற்போது ஒடிசாவில் வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி தனது 5 வயது மகனுடன் மாச்சரலாவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடற்படை வீரர் விடுமுறை தினங்களில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் கடற்படை வீரரின் மனைவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தை தடையாக இருந்துள்ளது.

    இதனால் குழந்தைக்கு அவரது தாய் கை, கால்களில் சூடு வைத்து கைகளை பின்னோக்கி வளைத்து உடைத்தார்.

    மேலும் வாளியில் தண்ணீரை நிரப்பி சிறுவனின் தலையை மூழ்கடித்து கடும் சித்ரவதை செய்து வந்தார். மகனை சித்ரவதை செய்யும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் கள்ளக்காதலனுக்கும் கடற்படை வீரரின் மனைவிக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர் குழந்தையை சித்ரவதை செய்யும் வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்பி வைத்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்படை வீரர் ஊருக்கு வந்து மகனை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

    மேலும் மனைவியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகன் என்றும் பாராமல் சூடு வைத்து கை, கால்களை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த சிறுவன் சொந்த ஊரான சங்கம்பட்டிக்கு வந்துள்ளார்.
    • 17 வயது நிரம்பிய சிறுவனை ஆறு வயது சிறுவனின் காலில் விழ வைத்து உள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகேயுள்ள சங்கம்பட்டி கிராமத்தில் 17 வயது பட்டியலின சிறுவன் புரட்டாசி மாதம் நடைபெற்ற திருவிழாவின்போது, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.

    அப்போது இரு பிரிவினரும் மோதிக்கொண்டனர். இதையடுத்து அந்த சிறுவன் கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு வராமல் மதுரை விக்கிரமங்கலத்தில் வசித்து வந்தார். அப்போது எதிர்பிரிவை சேர்ந்த சிலர் பயங்கர அயுதங்களுடன் விக்கிரமங்கலம் கிராமத்திற்கு சென்று தேடியுள்ளனர்.

    இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த சிறுவன் சொந்த ஊரான சங்கம்பட்டிக்கு வந்துள்ளார். இதனை அறிந்த மாற்று சமூகத்தை சார்ந்த 6 பேர் அவரை கடத்திச் சென்று ஊர் கண்மாய் அருகே வைத்து செல்போனை பறித்து, அடித்து சித்ரவதை செய்ததோடு அனைவரின் காலிலும் விழச்செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    மேலும் 17 வயது நிரம்பிய சிறுவனை ஆறு வயது சிறுவனின் காலில் விழ வைத்து உள்ளனர். தொடர்ந்து அச்சிறுவனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சார்ந்த கிஷோர், உக்கிரபாண்டியன், மணிமுத்து, பிரேமா, சந்தோஷ், நித்தீஸ் ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    ×