search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பு கொடி"

    • இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
    • ஒட்டு மொத்த பட்டியலின மக்களும் மத மாற்றம் செய்து கொள்வோம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேல் பாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல க்கூடாது என மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 145-வது சட்டப்பிரிவை பயன் படுத்தி பிரச்சினைக்குள்ளாாள திரவுபதி அம்மன் கோவிலை கடந்த மாதம் 7-ந் தேதி வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கோவில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இரு சமூக மக்களும் பரஸ்பரம் போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக ஜூன் 9-ந் தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே வரு வாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

    இதனை ெதாடர்ந்து 2-ம் கட்ட விசாரணை கடந்த 7-ந் தேதி விழுப் புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த ஊர் முக்கி யஸ்தர்கள் 5 பேருக்கு மட்டும் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி விசாரணை நடத்தி னார். இேதபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 5 பேரிட மும் வருவாய் கோட்டாட்சி யர் விசாரணை நடத்தி னார். அப்போது வருகிற 31-ந் தேதிக்குள் திரவுபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபாடு நடத்த சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    அவ்வாறு நடவடிக்கை எடுக்கா விட்டால் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் மேல் பாதி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம். அதன் பிறகும் கோவி லுக்குள் செல்ல அனு மதி மறுக்கப்பட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி ஒட்டு மொத்த பட்டியலின மக்களும் மத மாற்றம் செய்து கொள்வோம் என கோட்டாட்சியர் பிரவீனா குமாரியிடம் தெரிவித்த னர். இதனால் மேல்பாதி கிராமத்தில் மீண்டும் பதட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • மின்மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த காமராஜர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மின்மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் இங்கு மின்மயானம் கட்டினால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் என்று கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த திட்டம் கைவிடவில்லையென்றால் பல்வேறு போரட்டங்கள் நடத்தபடும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
    • திருஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் 140 நாட்களை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியல்வாதி போல் செயல்படுகிறார்.

    மரபை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தஞ்சைக்கு வருகிற 24-ந் தேதி வரும் கவர்னரை கண்டித்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம்.

    திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் 140 நாட்களை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.

    வருகிற ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். எனவே உடனடியாக நீர் நிலைகளை தூர்வார வேண்டும். ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். தொழிலாளர் சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், கண்ணன், செந்தில், தமிழ்செல்வி, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • ராமநாதபுரம் வரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவோம் பா.ம.க. அறிவித்துள்ளது.
    • ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சந்தானதாஸ் முன்னிலை வகித்தார்.

    பின்னர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அக்கிம் நிருபரிடம் கூறியதாவது:-

    வருகிற 18,19 ஆகிய தேதிகளில் கவர்னர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடந்த 23 ஆண்டுகால போராட்டமான கடலாடி ஒன்றியத்தை பிரித்து சிக்கலை தலைமையிடமாகக் கொண்ட புதிய யூனியன் அமைத்தல், மக்களுக்கு இடையூறாக இருக்கும் கலெக்டர் அலு வலகம் முன்புள்ள மதுக்கடையை மாற்றுதல், ராமநாதபுரத்தில் புதிய மிகப்பெரிய மக்கள் தொகைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்க வேண்டும்.

    தற்போதிருக்கும் பஸ் நிலைய விரிவாக்கத்தை தடை செய்தல், திருவாடானை தாலுகா சிறுகம்பையூர் பகுதி யில் நடத்தப்படும் மணல் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகளை கண்டு கொள்ளாத நிலையிலும் ஜனநாயக முறையில் எத்த னையோ போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி னாலும் வேடிக்கைக்காக நடத்துவது போல பார்ப்பதும், எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற முயற்சி எடுக்கா மல் இருப்பதால் கவர்னர் ரவி வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எங்கள் கோரிக்கையை செவி சாய்க்காமல் இருக்கும் தமிழக அரசு மற்றும் தலைமையில் 1000 கருப்பு பலூன்க ளையும் பறக்கவிட்டு கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராகிம், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம்கான், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் பாலா, மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடி நாளை சென்னை வரும் போது தமிழக காங்கிரசாரும் கருப்பு கொடி போராட்டம் நடத்த ரகசியமாக ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.
    • நாளை பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்

    சென்னை:

    மோடி இனத்தை அவ மரியாதை செய்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு தண்டனை விதித்ததால் அவரது எம்.பி. பதவி பறிபோனது.

    இந்த பதவி பறிப்புக்கு பா.ஜ.க. தலைவர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி நாடுமுழுவதும் காங்கிரசார் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக பிரதமர் மோடி நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் அந்த மாநில காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நாளை சென்னை வரும்போது தமிழக காங்கிரசாரும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள் ளனர். போலீஸ் தடையை மீறி ரகசியமாக இதற்கு ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.

    சென்னையில் மீனம்பாக்கம், சென்ட்ரல், மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்ல அரங்கம் மற்றும் பல்லாவரம் ஆகிய இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த 4 இடங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்த முயற்சி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக காங்கிரசார் திடீரென கருப்புகொடியுடன் ஊடுருவி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இந்த எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

    இதையடுத்து சென்னையில் பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 22 ஆயிரம் போலீசாருக்கு பதில் 26 ஆயிரம் போலீ சாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளனர்.

    பிரதமர் மோடி சென்னையில் விமான நிலையம் தொடங்கி நீண்ட தொலைவுக்கு சாலை மார்க்கமாக நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். பல இடங்களில் மிகப்பெரிய அகலமான சாலைகள் வழியாக செல்ல ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது போலீசாருக்கு கடும் சவாலாக இருக்கும்.

    அகலமான சாலை பகுதிகளில் பாதுகாப்பு அரணை உடைத்துக்கொண்டு காங் கிரசார் கருப்பு கொடியுடன் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அத்தகைய சாலை பகுதிகளில் அதிக அளவில் போலீசாரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி நாளை 3-வது நிகழ்ச்சியாக விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்ட்ரலில் இருந்து காரில் மெரினா கடற்கரை வழியாக செல்ல உள்ளார். அந்த சமயத்தில் மெரினா கடற்கரையில் ஆங்காங்கே பதுங்கி இருந்துகொண்டு காங்கிரசார் கருப்பு கொடியுடன் ஓடிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதை கருத்தில் கொண்டு மெரினா கடற்கரையில் நாளை கூடுதல் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். மேலும் மெரினா கடற்கரையை நாளை காலை முதலே சீல் வைத்து தேவையில்லாதவர்கள் நடமாட் டத்தை தடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    மெரினா கடற்கரை திறந்தவெளி பகுதி என்பதால் நாளை மதியத்துக்கு பிறகு மக்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுத்து நிறுத்த தீர்மானித்துள்ளனர்.

    நாளை பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

      கடலூர்:

      விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரிக்கரையில் 40 ஆண்டுகாலமாக குடியிருக்கும் வீடுகளை அகற்ற வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி காலக்கெடு வைத்தனர். அதன்படி இதற்கான காலக்கெடு இன்று முடிந்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர். விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சுமார் 40 வீடுகள் கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலை மற்றும் ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறி வருவாய்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றி வருகின்றனர்

      தொரவளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரி கரையில் அமைந்துள்ள 40 வீடுகளை அகற்றக்கோரி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை இருப்பதால், தங்களுக்கு மாற்று இடம் அளிக்குமாறு பலமுறை விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாற்றிடம் ஏதும் அரசால் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆக்கிரமிப்பு களை இன்று அகற்ற வருவாய் துறை சார்பில் தொரவலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

      • 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
      • ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

      கடலூர்:

      கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை ராஜ விநாயகர் வீதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையிலும், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் வருகிற ஜனவரி 20ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

      இதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர்ஆல்பேட்டை பாபு தலைமையில் 44 வீட்டிலும் மற்றும் முத்தாலம்மன் கோவில் ஆலயத்திலும் தங்களுக்கு குண்டு சாலை சாலை ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

      இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கடலூர் புதுப்பாளையம் நேரு யுகேந்திரா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தனர்.

      கடலூர்:

      கடலூர் மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேரு யுவகேந்திரா சார்பில் கடலூர் தனியார் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் பேச்சுப்போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை கண்டித்தும், இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கடலூர் புதுப்பாளையம் நேரு யுகேந்திரா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தனர்

      அதன்படி ஒருங்கிணைப்பாளர் திருமார்பன் தலைமையிலும் தலைவர் குழந்தைவேலனார் முன்னிலையிலும் தி.க பொதுச்செயலாளர் துரை சந்திரசேகர், மாவட்ட செயலாளர் சிவகுமார், திமுக மாநகர துணை செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்பினர் திரண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

      அங்கு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, உடனடியாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காரணத்தினால் போராட்டம் நடத்தியவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று மனு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

      பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடலூரில் நடைபெற உள்ள பேச்சு போட்டியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

      • சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை முன்னிட்டு அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
      • மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருட காலமாக குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர்

      விழுப்புரம்: 

      விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை முன்னிட்டு அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அனிதா, ஊராட்சி செயலர் மூவேந்தன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலா மற்றும் அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் கிராமத்திற்குத் தேவையான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

      அப்போது கிராம பொதுமக்கள் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருட காலமாக குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். கட்சி பிரமுகர் ஒருவரின் தூண்டுதல் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் அதிகாரியிடம் பேசியதால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்படாமல் உள்ளது எனக்கூறி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்தனர். திருவெண்ணைநல்லூர் போலீசார் சமாதானம் செய்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், தேவராஜன், உதவி செயற்பொறியாளர் நித்யாமற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அதே இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். சுதந்திர தின விழா கிராமசபை கூட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

      • ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
      • 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது.

      பல்லடம் :

      பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

      மேலும் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில்,பல்லடத்தில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.பச்சாபாளையம் பகுதியில்,நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் பச்சாபாளையத்தில் உள்ள வீடுகளில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியுடன்,கருப்பு கொடியும் பறக்கும் என அறிவித்துள்ளனர்.இதுகுறித்து பச்சாபாளையம் பொது மக்கள் கூறியதாவது:-

      சுற்றுப்புறம் குடியிருப்புப் பகுதிகள் உள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது. ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள இந்தப் பகுதியில் மின்மயானம் அமைந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் உடன், சுற்றுப்புறச் சூழலும் கெடும்.எனவே, பச்சாபாளையத்தில் மின்மயானம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10நாட்களாக வீடுகளின் முன்பு கருப்புக்கொடிகளை பறக்க விட்டுள்ளோம்.இந்த நிலையில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், வீடு தோறும் தேசிய கொடியையும் மற்றும் கருப்பு கொடியையும் பறக்கவிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

      • திட்டக்குடி அருகே வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
      • அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொரக்கை காலனியில் உள்ள ஆலமரத்து அடியில் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எல்லா சாதியினரையும் பாகுபாடின்றி அனுமதிக்கவேண்டும்.

      கடலூர்:

      கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரக்கை கிராமத்தில் அமைந்துள்ள சாந்ப்ப அய்யனார் கோவிலில் அனைத்து சாதியினரையும் அனுமதிக்க வேண்டுமென திட்டக்குடி வட்டாட்சியரிடம் இது சம்பந்தமாக மனு கொடுத்துள்ளனர். இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொரக்கை காலனியில் உள்ள ஆலமரத்து அடியில் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எல்லா சாதியினரையும் பாகுபாடின்றி அனுமதிக்கவேண்டும் எனக்கோரிக்கை வைத்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் , கையில் கருப்பு கொடி ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

      ×