search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடியுடன் கருப்பு கொடியும் பறக்கும் - பச்சாபாளையம் பொதுமக்கள் அறிவிப்பு
    X

    கருப்பு கொடியுடன் பச்சாபாளையம் பொதுமக்கள். 

    சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடியுடன் கருப்பு கொடியும் பறக்கும் - பச்சாபாளையம் பொதுமக்கள் அறிவிப்பு

    • ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
    • 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    மேலும் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில்,பல்லடத்தில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.பச்சாபாளையம் பகுதியில்,நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் பச்சாபாளையத்தில் உள்ள வீடுகளில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியுடன்,கருப்பு கொடியும் பறக்கும் என அறிவித்துள்ளனர்.இதுகுறித்து பச்சாபாளையம் பொது மக்கள் கூறியதாவது:-

    சுற்றுப்புறம் குடியிருப்புப் பகுதிகள் உள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது. ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள இந்தப் பகுதியில் மின்மயானம் அமைந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் உடன், சுற்றுப்புறச் சூழலும் கெடும்.எனவே, பச்சாபாளையத்தில் மின்மயானம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10நாட்களாக வீடுகளின் முன்பு கருப்புக்கொடிகளை பறக்க விட்டுள்ளோம்.இந்த நிலையில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், வீடு தோறும் தேசிய கொடியையும் மற்றும் கருப்பு கொடியையும் பறக்கவிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×