search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudden strike"

    • அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மோரணம் ஏ காலணியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் புறம்போக்கு இடம் உள்ளது. அதில் தனிநபர் ஒரு வீடு கட்டி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கோவிலை சுற்றி வேலி அமைத்தனர். இந்த வேலியை தனி நபர் அகற்றி உள்ளார். இதனால் ஆத்திரம் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இரவு செய்யாறு -ஆற்காடு சாலையில் வேலியை அகற்றியவரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அடிப்பை வசதியையும் செய்து தராமல் கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
    • சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. டெண்டரை எடுத்த தனியார் டிக்காசை ரூ 10ல் இருந்து ரூ20 உயர்த்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து முத்தியால்பேட்டை, கோரிமேடு, முத்திரையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு டெம்போக்கள் இயக்கப்படுகிறது.

    புதுவையை பொருத்த வரையில நகரப் பகுதிகளுக்குள் செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் புதுவை மக்கள் மட்டுமன்றி வெளியூரில் இருந்து வருபவர்களும் டெம்போக்களையே அதிகம் பயன்படுத்துவர்.

    பஸ் நிலையத்தில் டெம்போக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு நகராட்சி அடிக்காசு வசூல் செய்கிறது. இந்த அடிக்காசு வசூலுக்கு நகராட்சி சார்பில் டெண்டர் விடப்படும். சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. டெண்டரை எடுத்த தனியார் டிக்காசை ரூ 10ல் இருந்து ரூ20 உயர்த்தியுள்ளது.

    இதற்கு டெம்போ உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தள்ளனர். புதுவை பஸ் நிலையத்தில் தங்களுக்கு எந்தவித அடிப்பை வசதியையும் செய்து தராமல் கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

    டெம்போ நிறுத்து மிடத்தில் மேற்கூரை சேதம் அடைந்து விழும் நிலையில் உள்ளது குடிநீர், கழிவறை வசதி இல்லை. பஸ் நிலையத்தின உட்புறத்தில் 4 டெம்போக்களை மட்டுமே நிறுத்த முடியும். இவற்றை எல்லாம் சீரமைத்த பிறகுதான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரியுள்ளனர்.

    இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 1-ந் தேதி புதுவை நகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்தனர். நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையம் எடுக்கவிலலை 1-ந் தேதியில் இருந்து அடிகக்காசும் செலுத்தவில்லை.

    இந்த நிலையில், டெண்டர் எடுத்த தனியார் உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என டெம்போ டிரை வர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது இதனால் டெம்போ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.

    காலை 11 மணி முதல் டெம்போ இயக்குவதை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.நகரம் மற்றும் புறநகர் பகுதியில் ஒடும் 125 டெம்போக்கள் இயங்கா ததால் பொதுமக்கள் பாதிக்கபட்டனர். இன்று சனிக்கிழமை என்பதால் வெளியூரில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் டெம்போ இல்லாமல் அவதிக்கு ள்ளாகினர்.

    இந்நிலையில் ஒரு சில டெம்போக்கள் இயங்கியது.

    • தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • ஒரு மாதத்திற்கு மேலாகியும் காங்கிரீட் சாலையும் அமைக்காமல் இருக்கின்றது. அதனால் குடிநீர் குழாயும் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள தெருவில் கான்கிரீட் சாலை அமைக்க ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப் பட்டது. அதன் காரணமாக அந்த தெருவில் இருந்த குடிநீர் குழாயும் அகற்றப்பட்டது.

    ஆனால் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகியும் காங்கிரீட் சாலையும் அமைக்காமல் இருக்கின்றது. அதனால் குடிநீர் குழாயும் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் ஒன்றிணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆத்தூர்-ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு பொதுமக்கள் மறியல் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் மறியல் போராட்டத்தினால் ஆத்தூர் ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றதை அடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • கோமுட்டி குளத்தை சுத்தம் செய்யாததால் ஆத்திரம்
    • அண்டாவில் சாமி தீர்த்தவாரி நடந்தது

    வந்தவாசி:

    வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் கோமுட்டி குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடைபெற உள்ள நிலையில் கோமுட்டி குளத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் குளத்தை சுத்தம் செய்வதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ரங்கநாத பெருமாள் சுவாமி ஊர்வலமாக சென்று கோமுட்டி குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடைபெறுவதற்காக சென்றபோது குளம் முழுவதும் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசியது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வந்தவாசி திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.

    இந்த நிலையில் குளத்தை சுத்தம் செய்யாததால் கோவில் பட்டாச்சா ரியார்கள் சிறிய அண்டாவில் வைத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யும் அவலம் ஏற்பட்டது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷே கங்கள் செய்யப்பட்டு சிறிய அண்டாவை வைத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் கோமுட்டி குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
    • ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை ராஜ விநாயகர் வீதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையிலும், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் வருகிற ஜனவரி 20ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர்ஆல்பேட்டை பாபு தலைமையில் 44 வீட்டிலும் மற்றும் முத்தாலம்மன் கோவில் ஆலயத்திலும் தங்களுக்கு குண்டு சாலை சாலை ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தனியார் நிதி நிறுவனங்கள் அபராதம் என்ற பெயரில் ஆட்டோ டிரைவர்களிடம் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது அவர்கள், தனியார் நிதி நிறுவனங்கள் அபராதம் என்ற பெயரில் ஆட்டோ டிரைவர்களிடம் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஆட்டோ டிரைவர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி வரும் நிதி நிறுவன அடி ஆட்களை கைது செய்ய வேண்டும்.

    கொரோனா கால முழு ஊரடங்கில் ஆட்டோக்கள் ஓடாத 8 மாத காலத்திற்கு முழு அபராத தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும்.

    மத்திய அரசு அறிவித்துள்ளதை போல் முழு ஊரடங்கு காலத்தில் 4 மாத தவணையை தள்ளுபடி செய்ய வேண்டும். தனியார் நிதி நிறுவனங்கள் ரூ.6000 மாத தவணைக்கு ரூ.10,200 அபராதமாக சேர்த்து ரூ.16,200 -யை செலுத்த சொல்கிறார்கள்.

    அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • பழமையான நீர்தேக்க தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் சுமார் 30 ஆண்டு பழமையான நீர்தேக்க தொட்டியினை அகற்றுமாறு பாஜக கட்சி சார்பில் நேற்று 10- க்கும் மேற்பட்டோர் திடீரென சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அரசு அதிகாரிகளை கண்டித்தும், கண்டன முழக்கங்கள் எழுப்பியும், சாலையில் வாகனங்கள் செல்லாமல் இருக்க சாலையின் நடுவே தடுப்புகளை வைத்து அடைத்தும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இதனையடுத்து தகவல் அறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் அணைவரும் கலைந்து செல்லுமாறு அறியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து போக்குவரத்துக்கு வழிவிடாமல் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக அணைக்கட்டு தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் கவுதம் உட்பட சாலை மறியலில் ஈடுப்பட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பணி சரிவர வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு
    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    வந்தவாசி:

    வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த 100 நாள் திட்ட தொழிலாளர்கள் வந்தவாசி-ஆரணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி சரிவர வழங்கப்படுவதில்லை. எங்கள் ஊராட்சி செயலரும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.

    இதுகுறித்து புகார் தெரிவித்தால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே சரிவர பணி வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி வடக்கு போலீசார் சமரசம் செய்ததின்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தினால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்வார்கள்.

    மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள். கர்நாடக மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்படும்.

    அதன்படி கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வருகிறது.


    நீர்வரத்து குறைந்துள்ளதால் 4 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பரிசல்களை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தண்ணீரின் அளவை பொறுத்து மாமரத்துகடவு பரிசல் துறை, ஊட்டமலை பரிசல் துறை, கோத்திக்கல் பரிசல் துறை ஆகிய 3 வழிகளில் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும். பரிசல் பயணத்தின் போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட்டுகளை(பாதுகாப்புஉடை) அதிக அளவில் வழங்க வேண்டும் என்றனர். மொத்தம் 420 பரிசல் ஓட்டிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரிசல்கள் காவிரி கரையோரத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. 
    ×