search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணபதி"

    • வலது புறம் அன்னை பார்வதி தேவியையும் இடதுபுறம் கங்கா தேவியையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.
    • பவிஷ்ய புராணத்தில் தூர்வான்டமி விரத பூஜையின் மகிமை குறிப்பிடப்பட்டுள்ளது.

    நெல்லையிலிருந்து ஐம்பது கி.மீ தொலைவில் உள்ளது காரையார் பாணதீர்த்தம் என்ற அருவி.

    அதன்கிழக்குக் கரையில் உள்ள சித்திவிநாயகர் வலது புறம் அன்னை பார்வதி தேவியையும்

    இடதுபுறம் கங்கா தேவியையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.

    பிரம்மஹத்தி தோஷம், இவரை வணங்குவதால் போய்விடும் என்று நம்புகிறார்கள்.

    தூர்வாஷ்டமியில் அருளும் கணபதி

    தூர்வா என்பதற்கு அருகம்புல் என்று பெயர்.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமிக்கு தூர்வாஷ்டமி என பெயர் நிலைத்தது விநாயகப்பெருமானது அருள் அன்று கிடைப்பதால் தான்.

    இந்த சுபநாளில் விரதம் இருந்து விநாயகரை அருகம் புல்லால் அர்ச்சித்து வணங்குபவர்களுக்கு நல்ல அறிவுள்ள குழந்தைகள் பிறப்பார்கள்.

    பவிஷ்ய புராணத்தில் தூர்வான்டமி விரத பூஜையின் மகிமை குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.
    • திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகிறது.

    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன.

    ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாக சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.

    அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகின்றது.

    பாலபிஷேகம்:

    வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றி பாலபிஷேகம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.

    சந்தன அபிஷேகம்:

    செஞ்சேரிமலை என வழங்கப்பெறும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்கியம் ஏற்படும்.

    பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பைத் தரும்.

    தேனபிஷேகம்:

    திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர்.

    இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக் காணலாம்.

    திருநீற்று அபிஷேகம்:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.

    அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்குகின்றனர்.

    மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.

    கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்:

    மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

    அன்ன அபிஷேகம்:

    பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    சொர்ணாபிஷேகம்:

    திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.

    • நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.
    • காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான்.

    அவர் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு பெரும் சக்தியை உணர்த்துகிறது.

    நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியன ஐம்பெரும் சக்திகள்.

    இந்த பஞ்சபூதங்களை நம் முன்னோர்கள் வணங்குவதற்குக் காரணம் அவை மனிதர்களால் அடக்கமுடியாத மாபெரும் சக்திகள் ஆகும்.

    அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:

    நிலம் (பூமி) - விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்

    நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.

    நெருப்பு - அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கும்

    காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    ஆகாயம் - இருபுருவங்களின் அரைவட்டம் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தைக் குறிக்கும்.

    • அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.
    • அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    விநாயகர் என்றால் "மேலான தலைவர்" என அர்த்தப்படும்.

    "விக்னேஸ்வரர்" என்றால் "இடையூறுகளை நீக்குபவர்" என்றும், "ஐங்கரன்" என்றால் ஐந்து கரங்களை உடையவரெனவும் அர்த்தப்படும்.

    "கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும்.

    இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

    உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

    ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார்.

    அப்போது தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.

    அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.

    எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார்.

    அச்சமயத்தில் வந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

    அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.

    நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார்.

    தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் ஆவேசம் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

    காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர்.

    காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார்.

    அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்ககளுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.

    அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார்.

    இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

    சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேசன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணபதியாகவும், நியமித்தார் என "நாரதபுராணத்தில்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். இந்த நிகழ்ச்சி நடந்தது. சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும்.

    அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    • விநாயகர் சதுர்த்தி பூஜைக்குரிய 21 இலைகள்
    • இந்த இலைகள் கணபதி வழிபாட்டிற்கு மிகவும் உகந்தவை.

    விநாயகர் சதுர்த்தி பூஜைக்குரிய 21 இலைகள்

    1.மாசிப்பச்சை இலை

    2.கண்டங்கத்திரி இலை

    3.வில்வ இலை

    4.அருகம்புல்

    5.ஊமத்தை இலை

    6.இலந்தை இலை

    7.நாயுருவி இலை

    8.துளசி

    9.மாவிலை

    10.அரளி இலை

    11.விஷ்ணுகிராந்தி இலை

    12.நெல்லி இலை

    13.மருக்கொழுந்து இலை

    14.நொச்சி இலை

    15.ஜாதிக்காய் இலை

    16.வெள்ளெருக்கு இலை

    17.வன்னி இலை

    18.கரிசராங்கண்ணி இலை

    19.வெண்மருதை இலை

    20.எருக்கு இலை

    21.தேவதாரு இலை

    • இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    • விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவை செய்யப்படுகின்றன.

    விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை

    முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான்.

    அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.

    எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

    விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.

    அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.

    பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.

    எனவே அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பபாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்

    விநாயகர் சதுர்த்தி விரதம்

    விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.

    அன்று விடியற்காலையில் எழுந்து வீட்டை நன்றாக பெருக்கி, மெழுகி சுத்தம் செய்துவிட்டு வீட்டு வாசலில் மாவிலை, தோரணங்களை கட்ட வேண்டும்.

    வீட்டின் வாசலுக்கு இருபுறமும் வாழைமரக் கன்றையும் கட்டி வைக்கலாம்.

    பூசை அறையைக் கழுவி, மொழுகி, கோலம்போட்டு, அதன் மையப்பகுதியில் ஒரு பலகை வைத்து மேலும் ஒரு கோலம் போட்டு தலைவாழை இலை விரித்து பச்சரிசையைப் பரப்பி வைக்க வேண்டும்.

    அதில் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு "ஓம்" என்று எழுதி மண்பிள்ளையாரை வைக்க வேண்டும்.

    அதற்கு அறுகம்புல், எருக்கம்பூ, விபூதி, சந்தனம் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, விளாம்பழம், அப்பம், சுண்டல், அவல், பொரி, கடலை, எள்ளுருண்டை போன்ற நிவேதனப் பொருள்களை வைத்து தூபமிட்டு சாம்பிராணி புகை காட்டி சூடம் ஏற்றி வழிபட வேண்டும்.

    அப்பொழுது விநாயகருக்குரிய அகவல், கவசம், சகஸ்ரநாமம், காரிய சித்திமாலை, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஆகியவற்றை பாடுவது நற்பலன்களை தரும்.

    ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.

    விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவைகள் செய்யப்படுகின்றன. இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு. அவை மோதகம், அவல், நெய், பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அறுகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் இவைகளையும் ஹோம நிவேதனமாக செய்ய வேண்டும்.

    முதலில் தைலக்காப்பு, பிறகு மாகாப்பு (அரிசி மாவு) பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பழ வகைகள், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகங்கள் செய்யப்படும். மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, பூவலங்காரம் நடைபெறும். துளசி இலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜைக்கு உகந்தது.

    • வன்னி இலைக்கு ஸ்ரீசுமிபத்ரம் என்றும் பெபயர்.
    • உறவினர்களுடன் நிவேதனம் செய்த பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.

    நாமம் சொல்லி வழிபடுங்கள்!

    ஆவணி மாதம் சுக்ல பட்சம் சதுர்த்தி திதி தினமே விநாயக சதுர்த்தி தினமாகும்.

    அன்று உங்கள் வீட்டின் வடக்குப் பகுதியில் ஒரு மண்டபம் செய்து நெல் அல்லது பச்சரிசி பரப்பி அதில் அஷ்ட (எட்டு) தளத்துடன் கூடிய தாமரையை வரைந்து, அதன் மேல் பிள்ளையாரை வைத்து அருகம்புல், சந்தனம் ஆகியவற்றால் பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும்.

    குறிப்பாக இருபத்தோரு அருகம்புல்லை நல்ல வாசனையுள்ள சந்தனத்தில் நனைத்துக் கொண்டு கீழ்க்கண்ட பத்து நாமங்களை சொல்ல வேண்டும்.

    1. கணாதிபாய நம, 2. உமாபுத்ரா நம, 3. அக நாசநாய நம, 4.விநாயகாய நம, 5. ஈசபுத்ராய நம, 6. ஸர்வஸித்திதாய நம, 7. இபவக்த்ராய நம, 8. ஏகதந்தாய நம, 9. மூஷிக வாஹனாய நம, 10. குமார குரவே நம

    என்று பத்து நாமங்கள் சொல்லி இரண்டு அருகம்புல்லாலும் கடைசியில் மேற்கூறிய பத்து நாமங்களையும் ஒரு முறை சொல்லி ஒரு அரும்கம்புல்லாலும் கணபதிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

    தூப தீபம் காண்பித்து நெய்யில் செய்த கொழக்கட்டை (21), மாவுப் பலகாரங்கள், தேங்காய் (21), வாழைப்பழம் (21), நாவல் பழம் (21), விளாம்பழம் (21), கொய்யா பழம் (21), கரும்புத்துண்டு (21), வெள்ளரிக்காய் (21), அப்பம் (21) இட்லி (21) முதலானவற்றை நிவேதனம் செய்தல் வேண்டும்.

    பூஜையை முடித்த பிறகு திருமணம் ஆகாத 21 வயது பையனுக்கு தட்சணையுடன் மோதகம் தந்து பெரியோர்களிடம் ஆசி பெற செய்ய வேண்டும். உறவினர்களுடன் நிவேதனம் செய்த பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.

    மறுநாள் காலை புனர்பூஜை செய்து விநாயகரை தண்ணீரில் கரைக்க வேண்டும். இவ்வாறு சித்தி விநாயக விரதத்தை செய்பவர்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் இடையூறு ஏற்படாது.

    வளம் தரும் வன்னி இலை

    வன்னியின் இலையைக் கொண்டு பக்தியுடன் ஈஸ்வரார்ப்பணம் செய்யும்போது எப்படி தீயில் சம்பந்தப்பட்ட பொருள் சுத்தம் அடைகிறதோ, அதுபோல மனிதனும் மனமும் புத்தியும் சுத்தம் அடைந்து தெய்வீக ஞானம் அடைந்தவனாகிறான்.

    இதன் காரணமாகவேதான் வன்னி பத்ரத்தை தனக்கு உகந்த பத்ரமாக வைத்துக் கொண்டு வன்னி மரத்தடியிலும் கணேசர் எழுந்தருள்கிறார்.

    வன்னி இலைக்கு ஸ்ரீசுமிபத்ரம் என்றும் பெபயர். விநாயகர் பூசையில் இருப்தொரு (நாமாவளியால்) அருகம்புல்லால் அர்ச்சிக்கப்படுவதுபோல் இருப்பதொரு பத்ர(இலை)ங்களால் அர்ச்சிக்கப்பட வேண்டும். அதற்கு "ஏக விம்சதி பாத்திர பூசை" என பெயர்.

    அதில் மாசிப்பச்சை, கண்டங்கத்திரி, வில்வதளம், அருகம்புல், ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, அரளி, விஷ்ணு கிராந்தி, நெல்லி, மரிக்கொழுந்து, நொச்சி, ஜாதி எவன்னெருக்கு, கரிசிலாங்கண்ணி, வெண்மருதை, கிளுவை, நாகை என்ற பத்ரங்கள் கூறப்படுகிறது.

    வன்னி இலையைக் கொண்டு வழிபட்டு சாம்பன் என்ற மன்னனும் அவன் மந்திரியும் "பேறு" பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.

    நாமும் வன்னி இலைகளால் விநாயகப் பெருமானை பூஜித்து வணங்கி வளம் பெறுவோம்.

    • மாதுளை இலை - நல்ல புகழை அடையலாம்
    • மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

    கணபதி அர்ச்சனை

    விநாயக புராணத்தில் கணபதிக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.

    மருவு இலை- துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்

    எருக்க இலை- குழந்தைப் பேறு

    அரச இலை- எதிரிகள் அழிவார்கள்

    அகத்தி இலை- துயரங்கள் நீங்கும்

    அரளி இலை- அனைவரும் அன்போடு இருப்பார்கள்.

    வில்வ இலை- இன்பங்கள் பெருகும்

    வெள்ளெருக்கு- சகலமும் கிடைக்கும்

    மாதுளை இலை- நல்ல புகழை அடையலாம்

    கண்டங்கத்திரி இலை- லட்சுமி கடாட்சம்

    கொழுக்கட்டை நைவேத்தியம்

    தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் மோதகம் என்றழைக்கப்படும் கொழுக்கட்டை கணபதிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும்.

    கொழுக்கட்டையின் தத்துவம் என்ன வென்று அறிவீர்களா?

    மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.

    மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

    முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டையைப் படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா?

    வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

    பிள்ளையார் செய்வோம்

    சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

    விநாயகருக்கு உகந்தவை

    தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மாவிலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

    விநாயகரின் அஷ்ட அவதாரங்கள்

    1.வக்ரதுண்டர்

    2. மஹோத்ரதர்

    3. கஜானனர்

    4.லம்போதரர்

    5. விகடர்

    6. விக்னராஜர்

    7. தூம்ரவர்ணர்

    8. சூர்ப்பகர்ணர்

    என்று எட்டு விதமான அவதாரங்களை விநாயகப் பெருமான் எடுத்ததாக விநாயக புராணம் கூறுகின்றது. அவர் எதற்காக எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார் என்றால், மனிதர்களிடையே காணப்படும் தீய குணங்கள் எட்டு (காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம், மமதை, மோகம், அகந்தை)

    அந்த எட்டு குணங்களையும் நீக்கி நமக்கு ஞானமளிப்பதற்காகவே அவர் எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார்.

    அந்த எட்டுவிதமான அவதாரங்களையும் நினைவிற்குக் கொண்டு வந்து வணங்க விநாயக மந்திரம் துணைபுரிகிறது.

    இந்த மந்திரத்தை தினசரி பாராயணம் செய்பவர்கள் அனைத்து விதமான சந்தோஷங்களையும் அடைவார்கள்.

    • கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
    • பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி,

    விநாயகரின் வாகனங்கள்

    விநாயகர் மூஷிக வாகனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அவர் மூஞ்சுறுவைத் தவிர மயில், சிங்கம், ரிஷபம், யானை என்ற வாகனங்களிலும் பவனி வருவார் என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்றாகும்.

    கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இன்றும் ஹேரம்ப கணபதி சிம்ம வாகனத்தில்தான் வீற்றிருப்பார்.

    திரேதா யுகத்தில் முருகனுக்கு உதவுவதற்காக மயில் வாகனத்தில் வந்தார்.

    ஆண் குழந்தை தரும் விநாயகர்

    திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர்.

    அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

    கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

    கணபதி என்ற சொல்லில் உள்ள "க" என்னும் எழுத்து ஞானத்தையும், "ண" என்னும் எழுத்து ஜீவன்களின் மோட்சத்தையும், "பதி" என்னும் சொல் தலைவன் என்பதையும் குறிக்கிறது.

    பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி, ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் அவரே தலைவன் என்பதால்தான் அவர் கணபதி என்றழைக்கப்படுகிறார்.

    மேலும் கணபதி என்னும் சொல் சிவபெருமானின் கணங்களுக்கு அதிபதி என்பதையும் குறிக்கும்.

    விநாயகரின் அன்பு வேண்டுமா?

    1. விநாயகர் அகவல்

    2. விநாயகர் கவசம்

    3. விநாயகர் சகஸ்ரநாமம்

    4. காரிய சித்தி மாலை

    5. விநாயகர் புராணம்

    ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகனை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும்.

    • வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
    • விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

    பிள்ளையார் உருவ பலன்கள்

    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட, சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

    மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட, நல்ல பதவி, அரசு வேலை கிடைக்கும்.

    குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

    புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்

    வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்

    உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்.

    வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.

    விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

    சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

    சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

    வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

    வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

    சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

    பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்.

    கல் விநாயகர்- வெற்றி தருவார்.

    யானைத்தலை விளக்கம்

    தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.

    அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.

    யானைத்தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வுகிட்டும்.

    • விநாயகரை வழிபட்டு இம்மை, மறுமை துன்பங்கள் நீங்கி பக்தர்கள் இன்புறுவர்.
    • ஸ்ரீபால விநாயகர் இக்கோவிலில் கண் சுரம் தீர்த்த விநாயகராக விளங்கி அருள்பாலித்து வருகிறார்.

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் (ஸ்ரீ ராகு தலம்) நாகநாத சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தவக் கோலத்தில் தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ கிரி குஜாம்பிகைக்கு இருபுறமும் திருமகளும் கலைமகளும் பணி செய்ய நவசக்திகள் புடைசூழ பிந்து மத்தியில் நின்று தலம் இயற்றும் அம்பிகையின் தவச்சாலை காவலர்களாக ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீபால சுப்பிரமணியர், ஸ்ரீபால பைரவர், ஸ்ரீபால சாஸ்தா ஆகிய 4 பேரும் உள்ளனர்.

    இவர்களில் ஸ்ரீபால விநாயகர் இக்கோவிலில் கண் சுரம் தீர்த்த விநாயகராக விளங்கி அருள்பாலித்து வருகிறார்.

    இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் உடல் நோயாகிய சுரத்தை தீர்த்து அருள்புரியும் மூர்த்தியாவார். இவ்விநாயகரை செவ்வாய், வெள்ளி, சதுர்த்தி ஆகிய நாட்களில் வணங்கி அபிஷேக ஆராதனை செய்து மிளகு நீர், மிளகு அன்னம், நீவேதித்து பிரசாதம் பெற்று உண்டு வந்தால் தீராத சுரம் தீர்ந்து நலம் பெறுவர் இடர்கடி கணபதியாக விளங்கும் இவ்விநாயகரை வழிபட்டு இம்மை, மறுமை துன்பங்கள் நீங்கி பக்தர்கள் இன்புறுவர்.

    • கணபதி காந்தி மாநகர் பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார்.
    • 2 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது

    கோவை :

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கிருபாகரன்(வயது26). இவர் கணபதி காந்தி மாநகர் பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    அப்போது இளம்பெண் தனது காதலனிடம் தன்னுடைய பெற்றோர் இறந்து விட்டதாகவும், உறவினர் யாரும் இல்லை என்று கூறினார். இதனை தொடர்ந்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவை காந்திமா நகரில் உள்ள குடியிருப்பில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர்.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சிறு சிறு தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. அப்போதெல்லாம் இளம்பெண் தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றார். இதுபோல் ஏற்கனவே 2 முறை அவர் வீட்டை விட்டு சென்றுள்ளார். கிருபாகரன் தஞ்சாவூர் சென்று அனிதாவிடம் பேசி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று கிருபாகரன் பணிக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி மீண்டும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய கிருபாகரன் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் தேடினார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் உனது மனைவியை பிரசவத்திற்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம். அவருக்கு குழந்தை பிறந்துள்ளது என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    உடனடியாக தஞ்சாவூருக்கு சென்ற கிருபாகரன் அந்த நபர் கூறிய ஆஸ்பத்திரிக்கு சென்று தனது மனைவியை தேடினார். ஆனால் அவர் அங்கு இல்லை.

    இதுகுறித்து அவர் காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கர்ப்பிணி பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×