search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேஸ்புக் மூலம் காதல்-தீயணைப்பு வீரரை மணந்த  கர்ப்பிணி திடீர் மாயம்
    X

    பேஸ்புக் மூலம் காதல்-தீயணைப்பு வீரரை மணந்த கர்ப்பிணி திடீர் மாயம்

    • கணபதி காந்தி மாநகர் பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார்.
    • 2 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது

    கோவை :

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கிருபாகரன்(வயது26). இவர் கணபதி காந்தி மாநகர் பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    அப்போது இளம்பெண் தனது காதலனிடம் தன்னுடைய பெற்றோர் இறந்து விட்டதாகவும், உறவினர் யாரும் இல்லை என்று கூறினார். இதனை தொடர்ந்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவை காந்திமா நகரில் உள்ள குடியிருப்பில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர்.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சிறு சிறு தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. அப்போதெல்லாம் இளம்பெண் தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றார். இதுபோல் ஏற்கனவே 2 முறை அவர் வீட்டை விட்டு சென்றுள்ளார். கிருபாகரன் தஞ்சாவூர் சென்று அனிதாவிடம் பேசி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று கிருபாகரன் பணிக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி மீண்டும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய கிருபாகரன் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் தேடினார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் உனது மனைவியை பிரசவத்திற்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம். அவருக்கு குழந்தை பிறந்துள்ளது என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    உடனடியாக தஞ்சாவூருக்கு சென்ற கிருபாகரன் அந்த நபர் கூறிய ஆஸ்பத்திரிக்கு சென்று தனது மனைவியை தேடினார். ஆனால் அவர் அங்கு இல்லை.

    இதுகுறித்து அவர் காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கர்ப்பிணி பெண்ணை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×