search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uchishta ganapathy"

    • கணபதி காந்தி மாநகர் பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார்.
    • 2 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது

    கோவை :

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கிருபாகரன்(வயது26). இவர் கணபதி காந்தி மாநகர் பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    அப்போது இளம்பெண் தனது காதலனிடம் தன்னுடைய பெற்றோர் இறந்து விட்டதாகவும், உறவினர் யாரும் இல்லை என்று கூறினார். இதனை தொடர்ந்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவை காந்திமா நகரில் உள்ள குடியிருப்பில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர்.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சிறு சிறு தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. அப்போதெல்லாம் இளம்பெண் தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றார். இதுபோல் ஏற்கனவே 2 முறை அவர் வீட்டை விட்டு சென்றுள்ளார். கிருபாகரன் தஞ்சாவூர் சென்று அனிதாவிடம் பேசி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று கிருபாகரன் பணிக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி மீண்டும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய கிருபாகரன் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் தேடினார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் உனது மனைவியை பிரசவத்திற்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம். அவருக்கு குழந்தை பிறந்துள்ளது என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    உடனடியாக தஞ்சாவூருக்கு சென்ற கிருபாகரன் அந்த நபர் கூறிய ஆஸ்பத்திரிக்கு சென்று தனது மனைவியை தேடினார். ஆனால் அவர் அங்கு இல்லை.

    இதுகுறித்து அவர் காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கர்ப்பிணி பெண்ணை தேடி வருகிறார்கள்.

    உச்சிஷ்ட கணபதிக்கு தேங்காய் மாலை அணிவிப்பது வேண்டிக்கொண்டால் திருமணம் தடைப்படுபவர்கள் ஏற்படும் தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது.
    நெல்லை சந்திப்பு தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி. விநாயகருக்கு தனி கோயில் கொண்ட இங்கு மட்டுமே ராஜகோபுரம் உள்ளது. இதனால் ஆசியாவிலேயே ராஜகோபுரம் கொண்ட தனி விநாயகர் ஆலயம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.

    ராஜகோபுரத்தில் மட்டும் 108 விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ள இக்கோயிலில் நாயக்கர், பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன. மூர்த்தி விநாயகர் தனது இடப்பக்க மடியில் ஸ்ரீநீலவாணியை அமர்த்தியபடி அருளுகிறார். ஸ்ரீநீலவாணி என்பது லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய தேவியரை உள்ளடக்கிய தெய்வமாக கருதப்படுகிறது.

    ஆனந்த நிலையில் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் பல்வேறு பலன்களை பெறமுடிகிறது. குறிப்பாக இவருக்கு தேங்காய் மாலை அணிவிப்பது விஷேசமாக உள்ளது. திருமணம் வேண்டி வருபவர்களுக்கு தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது. இதற்காக தேன் கலந்த மாதுளை மாலை மற்றும் தேங்காய் மாலை அணிவித்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் உள்ள பைரவர் சன்னதியில் உள்ள தீர்த்த கட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் 3 நாட்கள் சூரிய ஒளி நேராக விநாயகர் சன்னதியில் படுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.

    எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் கணபதியை வேண்டி வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது வெற்றியை தரும். கணபதியின் அருளை பெறுவதற்காக விரதங்களை பார்க்கலாம்.
    1. வைகாசி வளர்பிறை:
     
    முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.
     
    2. செவ்வாய் விரதம்:
     
    ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.
     
    3. சதுர்த்தி விரதம்:

     
    பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.
     
    4. குமாரசஷ்டி விரதம்:
     
    கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இழைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.
     
    5. தூர்வா கணபதி விரதம்:
     
    கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.
     
    6. சித்தி விநாயக விரதம்:
     
    புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.
     
    7. தூர்வாஷ்டமி விரதம்:
     
    புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.
     
    8. விநாயக நவராத்திரி:
     
    ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.
     
    9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்:
     
    ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.
     
    10. செவ்வாய் பிள்ளையார் விரதம்:
     
    ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர்.
     
    11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை:
     
    பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.
    ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய கலைகளில் மேதாவிவிலாசம் பெறுவதற்கு வேண்டுபவர்கள் உச்சிஷ்ட கணபதியை விரதம் இருந்து உபாசனை செய்ய வேண்டும்.
    ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி துரிதமாக பலன்களை தருவார் என்று மாண்டுக்ய உபநிசத் கூறுகிறது. ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய கலைகளில் மேதாவிவிலாசம் பெறுவதற்கு வேண்டுபவர்கள் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்ய வேண்டும். இவருடைய பெருமையை அதர்வண வேதமும் உட்டாமரேச தந்திரமும், பேத்கார தந்திரமும் பல ரிக்குகளில் விவரிக்கின்றன.

    மனிதர்களோ, தெய்வங்களோ எந்த காரியத்தை தொடங்க ஆரம்பிப்பதற்கு முன், முதலில் விநாயகரை வணங்கித்தான் தங்கள் செயல்களை செய்யவேண்டும். அப்படி செய்யாவிட்டால்  காரியங்களில் தடை உண்டாகும் என்பது நம்பிக்கை.

    விநாயகர் பூஜை செய்வதினால் தூய்மையான உள்ளம், தர்மம் மற்றும் நேர்வழி சிந்தனை, லட்சுமி கடாட்சம், தெளிந்த நல் அறிவு, சமயோஜித புத்தி, வாக்குசாதுரியம், நுண்ணறிவு, பெருந்தன்மை, தைரியம், நற்புகழ் முகப்பொலிவு கிடைக்கும்.

    விநாயகரை விரதம் இருந்து உள்ளன்போடு பூஜிப்பவர்களுக்கு இவரே குருவாக விளங்குகிறார். அவர்கள் மந்திர உபதேசம் பெறுவதற்காக எவரையும் தேடி செல்ல வேண்டியதில்லை. விநாயகர் சந்நிதியில் அமர்ந்து கொண்டு எந்த மந்திரத்தை சொன்னாலும் பலிதமாகும். மாத்ருகா அட்சரங்கள் 51. ஒரு அட்சரத்துக்கு கனபதிகள் உண்டு. சுப காரியங்கள் ஆரம்பிக்கும் போது பதினாறு கணபதியின் பெயர்களை சொல்ல வேண்டும்.

    என்ன! அன்பர்களே பிள்ளையாரின் மகிமையைப் படித்தீர்கள் அல்லவா! இனி நீங்களும் உங்கள் மனைவி குழந்தைகளும் தினமும் வீட்டில் விநாயகரை விரதம் இருந்து பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

    அப்புறம் பாருங்க....

    கல்யாணத் தடையா, குழந்தை இல்லையா? வேலை கிடைக்க வில்லையா?, வீடுகட்ட முடியவில்லையா, கடனை தீர்க்க முடியவில்லையா, எல்லாபிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
    ×