search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தி விநாயகர்"

    • புனித நீர் கொண்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகரில் பழமைவாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது. தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றின் நடு மையத்தில் அமைந்துள்ள இந்த சித்தி விநாயகர் என்று அழைக்கப்படும். இந்தகோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைக்கப்பட்டு அதில் புனித நீர் கொண்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    தொடர்ந்து நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார் கடங்க ங்களை சுமந்து வந்து மல்லாரி இசைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீசித்தி விநாயகருக்கு கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் கருவரையில் உள்ள வினாயகர் சிலைக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் பலிபீடம் ஆகிய இடங்களில் கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரி யார் சுவாமிகள். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஆரோக்கியமதன், விழா ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், நகர மன்ற தலைவர் குண்டாமணி ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.
    • திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகிறது.

    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன.

    ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாக சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.

    அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகின்றது.

    பாலபிஷேகம்:

    வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றி பாலபிஷேகம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.

    சந்தன அபிஷேகம்:

    செஞ்சேரிமலை என வழங்கப்பெறும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்கியம் ஏற்படும்.

    பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பைத் தரும்.

    தேனபிஷேகம்:

    திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர்.

    இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக் காணலாம்.

    திருநீற்று அபிஷேகம்:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.

    அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்குகின்றனர்.

    மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.

    கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்:

    மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

    அன்ன அபிஷேகம்:

    பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    சொர்ணாபிஷேகம்:

    திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.

    • நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.
    • காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான்.

    அவர் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு பெரும் சக்தியை உணர்த்துகிறது.

    நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியன ஐம்பெரும் சக்திகள்.

    இந்த பஞ்சபூதங்களை நம் முன்னோர்கள் வணங்குவதற்குக் காரணம் அவை மனிதர்களால் அடக்கமுடியாத மாபெரும் சக்திகள் ஆகும்.

    அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:

    நிலம் (பூமி) - விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்

    நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.

    நெருப்பு - அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கும்

    காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    ஆகாயம் - இருபுருவங்களின் அரைவட்டம் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தைக் குறிக்கும்.

    • அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.
    • அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    விநாயகர் என்றால் "மேலான தலைவர்" என அர்த்தப்படும்.

    "விக்னேஸ்வரர்" என்றால் "இடையூறுகளை நீக்குபவர்" என்றும், "ஐங்கரன்" என்றால் ஐந்து கரங்களை உடையவரெனவும் அர்த்தப்படும்.

    "கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும்.

    இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

    உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

    ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார்.

    அப்போது தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.

    அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.

    எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார்.

    அச்சமயத்தில் வந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

    அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.

    நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார்.

    தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் ஆவேசம் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

    காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர்.

    காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார்.

    அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்ககளுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.

    அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார்.

    இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

    சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேசன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணபதியாகவும், நியமித்தார் என "நாரதபுராணத்தில்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். இந்த நிகழ்ச்சி நடந்தது. சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும்.

    அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    • வருகிற 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா.
    • மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது.

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந்தேதி கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்களை பற்றி பார்க்கலாம்.

    மும்பை சித்தி விநாயகர்

    இந்தியாவின் மிகவும் பிரபலமான கணபதி கோவில்களில், மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது. இந்த ஆலயத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை காண்பதற்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிவார்கள். குழந்தை வரம் அருளும் விநாயகராக இவர் வணங்கப்படுகிறார். இந்த பழமையான கோவிலுக்கு ஏராளமான பிரபலங்கள் வந்து வழிபட்டுச் செல்வதைக் காண முடியும். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள `சித்தி விநாயக் கணபதி மந்திர்' இரவு நேரத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். அப்போது கோவில் வளாகம் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.

    புனே விநாயகர்

    மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்குப் பிறகு, மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக புனேவில் உள்ள `ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி' கோவில் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவில், ஆலயத்தின் உள்ளார்ந்த வடிவமைப்புகள் மற்றும் தங்க சிலைக்கு பிரசித்திப் பெற்றது. பிளேக் நோயால் தன் மகனை இழந்த ஒரு தொழிலதிபர் இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறார். கணேஷ் உற்சவத்தின் போது இந்த ஆலயம் வண்ண விளக்குகளாலும், மலர் அலங்காரங்களாலும் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கும்.

    மகாராஷ்டிரா கணபதி

    ரத்னகிரியில் உள்ள கணபதிபுலே கோவிலில், மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார் விநாயகப்பெருமான். இந்தக் கோவிலின் விநாயகர் சிலை யாராலும் வைக்கப்படவில்லை என்றும், சுயமாக உருவானது என்றும் தல வரலாறு சொல்கிறது. ஒருமுறை உள்ளூர் மாடு பிடிப்பவரின் பசு, பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பாறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னுடைய பால் முழுவதையும் சுரந்தது. இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நடந்ததால், அந்த நபர் அங்கு சென்று பார்த்தபோது, அங்கே விநாயகரின் சுயம்பு வடிவம் இருப்பதைக் கண்டார். அன்று முதல் இங்கு வழிபாடு நடைபெறுவதாக தல வரலாறு கூறுகிறது. பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்களில் இத்தல விநாயகர் மீது, சூரிய ஒளி நேரடியாக விழுவதை கண்டு ரசிக்கலாம்.

    • விநாயகர் ஆலயத்தில் முற்றிலும் வித்தியாசமானது `சத்திய பிரமாணம்' என்ற வழிபாடாகும்.
    • காணிப்பாக்கம் விநாயகர் ஆலயத்தில் மட்டுமே இப்படி சத்தியம் செய்யும் வழிபாடு நடத்தப்படுகிறது.

    காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் எத்தனையோ விதமான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் முற்றிலும் வித்தியாசமானது `சத்திய பிரமாணம்' என்ற வழிபாடாகும்.

    அதாவது ஒருவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வரசித்தி விநாயகர் முன்பு சூடத்தை அணைத்து செய்து கொடுக்கும் சத்தியம் ஆகும். இதைத்தான் சத்திய வழிபாடு என்கிறார்கள்.

    இந்தியாவில் எந்த ஒரு ஆலயத்திலும் கருவறை கடவுளை நீதிபதியாக கருதி இத்தகைய சத்திய பிரமாணம் செய்யப்படுவதாக தெரியவில்லை. காணிப்பாக்கம் விநாயகர் ஆலயத்தில் மட்டுமே இப்படி சத்தியம் செய்யும் வழிபாடு நடத்தப்படுகிறது.

    விநாயகர் முன்பு சத்தியம் செய்யும் பழக்கம் இத்தலத்தில் இன்று, நேற்று தோன்றியது அல்ல. ஆதி காலத்தில் இருந்தே நடந்து வருகிறது.

    தற்போது நாட்டில் எவ்வளவோ அறிவியல், நவீன மாறுதல்கள் வந்துவிட்டன. அத்தனை மாற்றங்களையும் மீறி இந்த சத்தியம் வழிபாடு இங்கு தினமும் நடந்து கொண்டிருக்கிறது.

    பொதுவாகவே நமது உடமைகளில் ஏதாவது ஒன்று திருடு போகும் போது, நம்மையும் அறியாமல் சிலர் மீது சந்தேகம் வரும். அவர்களிடம் கேட்டால், `அய்யய்யோ... உங்க பொருளை நான் எடுக்கவில்லை இது அந்த கடவுள் மேல சத்தியம்' என்பார்கள்.

    சிலர் எடுத்த எடுப்பிலேயே `சாமி சத்தியமா நான் திருட வில்லை' என்பார்கள். சாமி மேலே சத்தியம் செய்து விட்டானே என்று நாம் விட்டு விடுவோம்.

    ஆனால் ஆந்திர மாநில மக்கள் குறிப்பாக சித்தூர் பகுதி மக்கள் அப்படி விட்டு விட மாட்டார்கள். `வா.. காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் முன்பு சத்தியம் செய்து சொல்' என்று அழைத்து சென்று விடுவார்கள். விநாயகர் முன்பு சூடத்தை அணைத்து சத்தியம் செய் என்பார்கள்.

    இப்படி சத்தியம் செய்வதற்காகவே காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு நிறைய பேர் வருகிறார்கள். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் மாலை 5 மணி முதல் 5.30 மணிவரை நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படுகிறது.

    குற்றம் சொல்பவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் இருவரும் இந்த சத்தியம் செய்ய நேரில் வரவேண்டும். கோவிலுக்குள் நுழையும் முன்பு இருவரும் கோவில் எதிரில் உள்ள குளத்தில் நீராட வேண்டும்.

    பிறகு ஈர உடையுடன் கோவிலுக்குள் செல்ல வேண்டும். அவர்கள் சென்றதும், விநாயகருக்கு பூஜை செய்பவர் வெளியில் வந்து விடுவார்.

    குற்றச்சாட்டு சொன்ன வரும், குற்றச்சாட்டுக்கு உள்படுத்தப்பட்டவரும் இருவர் மட்டுமே உள்ளே நிற்பார்கள். `என் பொருளை எடுக்க வில்லை என்று சத்தியம் செய்' என்பார். மற்றவர் சத்தியம் செய்வார்.

    விநாயகர் முன்பு நடைபெறும் இந்த சத்திய வழிபாடு ஒவ்வொருவருக்கும் ஓரிரு நிமிடங்களில் முடிந்து விடும். வெறும் சத்தியம்தானே என்று இந்த வழிபாட்டை யாரும் கருதுவதில்லை.

    ஏனெனில் வரசித்தி விநாயகர் முன்பு பொய் சத்தியம் செய்தால் 40 நாட்களுக்குள் அவர் கடுமையாக தண்டித்து விடுவார் என்று மக்களிடம் நம்பிக்கை உள்ளது.

    காணிப்பாக்கம் விநாயகர் முன்பு பொய் சத்தியம் செய்த பலரும் குறிப்பிட்ட நாட்களுக்குள் பாதிக்கப்பட்டு விடுகிறார்களாம். பொய் சத்தியம் செய்தவர்களுக்கு மன நலம் பாதிக்கும் அல்லது கை, கால்கள் பாதிக்கப்படும். சிலர் விநாயகர் கோபத்துக்கு உள்ளாகி மரணம் கூட அடைந்துள்ளார்களாம். இது இன்றும் நடப்பதாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    காணிப்பாக்கம் ஊரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் வரசித்தி விநாயகர் முன்பு பொய் சத்தியம் செய்து விட்டு மன நலம் பாதிக்கப்பட்டு அலைவதாக கோவில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். காலம், காலமாக நடந்து வரும் இந்த சத்தியம் வழிபாட்டுக்கு தற்போது வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

    ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலும் இந்த விநாயகர் முன்பு சத்தியம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆங்கிலேயே அதிகாரிகள் இதில் மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தனர்.

    கோர்ட்டுகளில் கூட `நான் எந்த தவறும் செய்யவில்லை. காணிப்பாக்கம் விநாயகர் மீது சத்தியம் செய்துள்ளேன்' என்று சொன்னால், அதை சித்தூர் மாவட்ட கோர்ட்டுகள் ஏற்றுக் கொண்டனவாம். இதற்கு ஆதாரமான ஆவணங்கள் இப்போதும் இருப்பதாக சொல்கிறார்கள்.

    5.30 மணிக்கு இந்த பூஜை முடிந்ததும் விநாயகருக்கு பரிகார பூஜைகள் செய்யப்படும். பொய் சத்தியம் செய்பவர்களால் விநாயகர் கடும் ஆவேசம் அடைந்து விடுவார் என்றும் அவரை சாந்தப்படுத்த பால் அபிஷேகம் நடத்தப்படுவதாகவும் கூறினார்கள்.

    பிறகு பரிகார பூஜைகள் செய்து விநாயகரை அலங்காரம் செய்து நைவேத்தியம் படைத்து மாலை 5.45 மணிக்கு வழிபாடு நடத்துவார்கள். தினமும் மாலை இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.

    தினமும் சராசரியாக 20 பேர் விநாயகர் முன்பு சத்தியம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    அவ்வையாரின் விநாயகர் அகவல்

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்

    பாதச் சிலம்பு பலவிசை பாடப்

    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

    பேழமை வயிறும் பெரும்பாரக் கோடும்

    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

    அஞ்சு கரமும் அங்குச பாசமும்

    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

    நான்ற வாயும் நாலிரு புயமும்

    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

    முப்பழ நுகரும் மூஷிக வாகன!

    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

    தாயா யெனக்குத் தானெழுந் தருளி

    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

    குருவடி வாகிக் குவலயந் தன்னில்

    திருவடி வைத்துத் திறமிது பொருளென

    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

    கருவிக ளடுங்கும் கருத்தினை யறிவித்(து)

    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

    ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

    மூன்றுமண்டலத்தின் முட்டிய தூணின்

    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

    குண்டலி யதனிற் கூடிய அச¬ப

    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

    அழுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

    குமுத சகாயன் குணத்தையும் கூறி

    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

    உடல்சக் கரத்தின் உறுப்¬பயும் காட்டிச்

    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

    எண் முகமாக இனிதெனக் கருளிப்

    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

    கருத்தினில் கபால வாயில் காட்டி

    இருத்தி முத்தி யினிதெனக் கருளி

    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

    முன்னை வினையின் முதலைக் களைந்து

    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித் (து) இருள்வெளி

    யிரண்டுக் (கு) ஒன்றிடம் என்ன

    அருள் தரும் ஆனந்தத் (து) அழுத்தியென் செவியில்

    எல்லை யில்லா ஆனந் தம் அளித் (து)

    அல்லல் களைந்தே அருள் வழி காட்டிச்

    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

    சித்தத்தின் உள்ளே சிவலங்கம் காட்டி

    அணுவிற் (கு) அணுவாய் அப்பாலுக் (கு) அப்பாலாய்க்

    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

    அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை

    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

    தத்துவ நிலையைத் தந்தென யாண்ட

    வித்தக விநாயக விரைகழல் சரணே!

    அவ்வையார் என்றால் கூடவே விநாயகரும் நம் நினைவுக்கு வந்து விடும் அளவுக்கு அவ்வையாரில் விநாயக பக்தி மணம் படர்ந்து வீசுவதைக் காணலாம்.

    இந்த பாடல்கள் உட்பொருள் புரிபவர் ஞானம் சகலமும் அடைந்திட்டார் என்றே சொல்லலாம். காஞ்சி பரமாச்சாரியார் தம்மிடம் வருபவர்களுக்கு இப்பாடலைப் பாடி விநாயகரின் அருள் பெறும்படி அடிக்கடி கூறுவார்.

    • கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது.
    • யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது. கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி, தீர்த்த கலசம், கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகாசனம், நான்காம் கால யாகபூஜை, பூர்ணாகுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.இதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், யாக பூஜை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. காலை 6:45 மணி முதல் விநாயகர், மாகாளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் மாகாளியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல பல்லடம் அருகே உள்ள குண்ணங்கல் பாளையம் பிரிவில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சித்தி விநாயகர் சிலை ராஜபாளையம் வந்து சேர்ந்தது.
    • சுபகிருதி விநாயகர், சகாரம்ப விநாயகர், சித்தி விநாயகர் விக்ரகங்களின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தர்மாபுரம்தெரு மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர் நற்பணிமன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் பொதுமக்கள் பங்களிப்போடு 35-வது ஆண்டு விநாயகர் சதூர்த்தி வீதி உலாவை நடத்துகிறார்.

    இதையொட்டி பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மும்பையில் வடிவமைக்கப்பட்ட மும்பை சித்தி விநாயகர், வல்லப விநாயகர் சிலை இன்று அதிகாலை ராஜபாளையம் வந்து சேர்ந்தது. மேலும் நடப்பு தமிழ் வருடத்தை போற்றும் வகையிலான சுபகிருதி விநாயகர், சகாரம்ப விநாயகர், சித்தி விநாயகர் விக்ரகங்களின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    • சித்தி விநாயகர் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில், 250 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • மாணவ -மாணவியர்கள், சுற்றுச்சூ–ழலை பேணி பாதுகாக்க மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டியில் பேள்நாடு ஸ்ரீ சித்தி விநாயகர் அறக்கட்டளை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.

    சோமம்பட்டி ஊராட்சி கிராம சேவை மைய வளாகத்தில் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, ஐ பாயிண்ட் ஆப்டிக் நிறுவனத்துடன் சித்தி விநாயகர் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில், 250 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. கண் புரை அறுவை சிகிச்சைக்கு 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து சோமம்பட்டிஏரியில்– நடைபெற்ற மரக்கன்றுகள் நடும்விழாவில், அறக்கட்டளை தன்னார்வ–லர்கள், பொதுமக்கள், மாணவர்கள்இணைந்து, பலன் தரும் 50 மரக்கன்று–களை நட்டனர்.சித்தி விநாயகர் அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

    சோமம்பட்டி கிராம சேவை மையத்தில் நடைபெற்ற, அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவ- மாணவிக்கு பரிசு வழங்கும் விழாவிற்கு, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், சோமம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி செயலர் மகேஸ்வரன், சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஜவஹர், சேலம் வக்கீல் வேல்மணி ஆகியோர் மாணவ - மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு வழங்கி பாராட்டினர்.

    விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பேசுகையில், கிராமப்புற மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏழ்மையான நிலையில் படித்து பட்டம் பெறும் பலர் உயர்ந்த நிலையை அடைந்து விடுகின்றனர். இதற்கு நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சிறந்த உதாரணமாக கொள்ளலாம். மாணவ -மாணவியர்கள், சுற்றுச்சூ–ழலை பேணி பாதுகாக்க மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.நிறைவாக சித்தி விநாயகர் அறக்கட்டளை செயலர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

    ×