search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலைகள்"

    • அவன் மலர்களின் மீது மிகுந்த ஆசை கொண்டவன்.
    • ருக்மாங்கதன் திருடர்களைக் கண்டு பிடிக்க தீவிரமான முயற்சிகளைச் செய்தார்.

    தேவேந்திரன் திருடிய பூக்கள்

    புராண காலத்தில் "ருக்மாங்கதன்" என்ற பெயருடைய மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி செய்து வந்தான்.

    அவன் மலர்களின் மீது மிகுந்த ஆசை கொண்டவன்.

    அவனுக்கு சொந்தமான ஒரு அழகிய நந்தவனத்தில் உலகில் உள்ள பேரழகு வாய்ந்த மலர்களை எல்லாம் வரவழைத்து அங்கே பயிர் செய்தான்.

    அதை தன் கண் போல் காத்து வளர்த்து வந்தான்.

    ஒரு சமயம், தேவேந்திரன் தனக்கு ஒரு யாகத்திற்கு பூசை செய்ய பூக்கள் வேண்டுமென்று கருதிய போது ருக்மாங்கதனின் பூந்தோட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு தேவ கண்ணரசனை அனுப்பி அங்கிருந்து வினோதமான பூக்களை திருடிக் கொண்டு வரச் செய்தான்.

    தினமும் பூக்கள் திருட்டுப் போவதைக் கண்ட ருக்மாங்கதன் திருடர்களைக் கண்டு பிடிக்க தீவிரமான முயற்சிகளைச் செய்தார்.

    ஆனால் அவரால் திருடர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

    கடைசியாக முனிவர் ஒருவரின் உதவியினால் கண்டு பிடித்தான். கேட்டால் தர மறுத்துவிடுவானோ என்ற காரணத்தினால் தான் மலர்களைக் கவர்ந்து வரச் சொன்னதாக இந்திரன் பதில் கூறினார்.

    அதன் பிறகே ருக்மாங்கதன் சமரசம் அடைந்தார்.

    • மாலையில் செந்தாமரை, அல்லி, துளசி, வில்வம் ஆகியவை உகந்தன.
    • முல்லை, கிளுவை, வில்வம், விளா ஆகியவை பஞ்ச வில்வமாகும்.

    மூன்று வேளைக்கு ஏற்ற மலர்கள்

    காலை நேரத்தில் தாமரை, பூவரசம்பூ, துளசி, நவமல்லிகை, நத்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னாகரம் (தாழை & இம்மலர் சிவ வழிபாட்டில் பயன்படுத்தலாகாதது) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.

    நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ் ஆகியன நன்மை தரும்.

    மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மரிக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியவ உகந்தன.

    அஷ்ட புஷ்பங்கள்:

    அறுகு, செண்பகம், புன்னாகரம், நத்தியாவட்டை, பத்திரி, பிருகதி, அரளி, தும்மை ஆகிய அஷ்ட புஷ்பங்கள் என்று அழைக்கப்படுகிறது.

    பூக்களை எத்தனை நாட்கள் வைத்து இருக்கலாம்?

    தாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறுமாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், செண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.

    பூஜைக்குரிய இலைகள்:

    துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மரிக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியவையாக கருதப்படுகிறது.

    பஞ்ச வில்வங்கள்:

    முல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியவை பஞ்ச வில்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    • விநாயகர் சதுர்த்தி பூஜைக்குரிய 21 இலைகள்
    • இந்த இலைகள் கணபதி வழிபாட்டிற்கு மிகவும் உகந்தவை.

    விநாயகர் சதுர்த்தி பூஜைக்குரிய 21 இலைகள்

    1.மாசிப்பச்சை இலை

    2.கண்டங்கத்திரி இலை

    3.வில்வ இலை

    4.அருகம்புல்

    5.ஊமத்தை இலை

    6.இலந்தை இலை

    7.நாயுருவி இலை

    8.துளசி

    9.மாவிலை

    10.அரளி இலை

    11.விஷ்ணுகிராந்தி இலை

    12.நெல்லி இலை

    13.மருக்கொழுந்து இலை

    14.நொச்சி இலை

    15.ஜாதிக்காய் இலை

    16.வெள்ளெருக்கு இலை

    17.வன்னி இலை

    18.கரிசராங்கண்ணி இலை

    19.வெண்மருதை இலை

    20.எருக்கு இலை

    21.தேவதாரு இலை

    • முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் இருபுறங்களிலும் காணப்படும் தில்லை மரத்தின் இலைகள் வெவ்வேறு வண்ணத்தில் காணப்படும்.
    • ஆரம்பத்தில் பச்சை நிறமாகவும் தொடர்ந்து மஞ்சள், சிகப்பு என பல்வேறு நிறங்களாக மாறி உதிர்ந்து மீண்டும் பசுமை இலைகளாக உருவாகும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காட்டில் வனவிலங்கு சரணலாயம் அமைந்துள்ளது.இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான் ,கலிமா, குதிரை, நரி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    ராமர் பாதம் அருகே 150 -க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் அடங்கிய மூலிகை வனமும் உள்ளது. மேலும் கோடியக்கரை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சன்னாசி முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் இருபுறங்களிலும் காணப்படும் தில்லை மரத்தின் இலைகள் வெவ்வேறு வண்ணத்தில் காணப்படும். இந்த மரத்தின் இலைகள் பல கலரில் மாறுவது குறிப்பிட்ட சில பருவத்திலும், சில நாட்களில் மட்டுமே பின்னர் மீண்டும் பசுமைக்கு மாறி விடுகிறது.

    சுற்றுலா பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும்இ ந்த இயற்கை அழகினை சாலை வழியே செல்லும்போது நின்று, பார்த்து ரசித்துச் செல்கின்றனர். இது குறித்து கோடி யக்கரை வனசரகர் அயூப்கான் கூறும்போது: கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் முனிய ப்பன் ஏரி, பழைய லைட் ஹவுஸ் பகுதியில் காணப்படுகிறது.

    இந்த மரத்தின் இலைகள் ஆரம்பத்தில் பச்சை நிறமாகவும் தொடர்ந்து மஞ்சள், சிகப்பு என பல்வேறு நிறங்களாக மாறி உதிர்ந்து மீண்டும் பசுமை இலைகளாக உருவாகும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு மாத காலத்திற்குள் நடந்து முடிந்துவிடும். இந்த மாதம் முழுவதும் மட்டுமே இந்த நிறம் மாறும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

    இந்த மரத்திலிருந்து வெளிப்படும் பால் விஷத்தன்மை உடையது. இந்த பாலானது உடலில் பட்டால் அரிப்புகள் ஏற்பட்டு புண்கள் ஏற்படும். எனவே சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தின் அழகை பார்த்து ரசித்தால் மட்டும் போதும். இலைகளை பறித்தோ அதிலுள்ள காய்களை பறித்தோ ஆபத்தை தேடிக் கொள்ளக் கூடாது. மேலும் இந்த தில்லை மரம் பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்க உதவும் மூலப் பொருளாகவும் உள்ளது என்றார்.

    ×