search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டணம்"

    • நீட் , கியூட் போன்ற நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
    • உயர்த்தப்பட்ட கல்வி கட்டணங்களை திரும்ப பெற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    நீட் , கியூட் போன்ற நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் ,

    தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும். நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட கல்வி கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பு திரண்டனர்.

    பின்னர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு இந்திய மாணவர் சங்கம் கிளை நிர்வாகி தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் முன்னிலை வைத்தார். கிளை நிர்வாகி ஜெகன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் சந்துரு , கிளை நிர்வாகிகள் எடிசன் ராஜதுரை, மூர்த்தி, நித்திஷ், சரண், ஹரிஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு நிதியாண்டிலும் மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம் போன்றவை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
    • கடந்த 2 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி அசோசியேஷன் சார்பில் தொழில் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி தெற்கு ரோட்டரி ஹாலில் நடந்தது.

    எம்ப்ராய்டரி அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணை செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், எம்ப்ராய்டரி நிறுவனங்களின் பிரச்னைகளை கவனத்தில் கொள்வோம். விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள்வோம் என்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தொழில்துறை ஆலோசகர் ராஜா ராமசுந்தரம் பேசினார். தொடர்ந்து, எம்ப்ராய்டரி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:-

    ஒவ்வொரு நிதியாண்டிலும் மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம் போன்றவை உயர்ந்து கொண்டே இருக்கின்ற போதும் கடந்த 15 ஆண்டுகளாக எம்ப்ராய்டரி கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.போதுமான ஆர்டர்கள் இல்லாதது, தொழிலாளர் பற்றாக்குறை, போதுமான எம்ப்ராய்டரி கட்டணங்கள் கிடைக்க பெறாதது போன்ற காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.இனிவரும் காலங்களில் எம்ப்ராய்டரி கட்டணத்தை பீஸ் ரேட் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    • குடியிருப்புகளுக்கு மாதாந்திர கட்டணமாக 600 சதுரஅடிவரை ரூ.110 கட்டணம் மற்றும் வைப்புத்தொகையாக ரூ.7500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    • நடப்பு மாதம் முதல் அமலுக்கு வந்தது.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்கான மாதாந்திர கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர வைப்புத்தொகை கட்டணமும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு மாதாந்திர கட்டணமாக 600 சதுரஅடிவரை ரூ.110 கட்டணம் மற்றும் வைப்புத்தொகையாக ரூ.7500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல 1200 சதுரஅடிவரை ரு.140 (ரூ.10 ஆயிரம்), 1800 சதுரஅடிவரை ரு.180 (ரூ.12,500), 2400 சதுரஅடிவரை ரூ.210 (ரூ.15,000), 2400 சதுரஅடிக்கு மேல் ரூ.250 (ரூ.17500) கட்டணம் மற்றும் வைப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோவை மாநகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு மாதாந்திர கட்டணமாக 600 சதுரஅடி வரை ரூ.330 கட்டணம் மற்றும் வைப்புத்தொகையாக ரூ.15000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதே போல 1200 சதுரஅடிவரை ரு.420 (ரூ.20 ஆயிரம்), 1800 சதுரஅடிவரை ரு.540 (ரூ.25000), 2400 சதுரஅடி வரை ரூ.630 (ரூ.30,000), 2400 சதுரஅடிக்கு மேல் ரூ.660 (ரூ.35000) கட்டணம் மற்றும் வைப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று கணக்கெடுப்பு மற்றும் அளவீட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அப்படி அவர்கள் வரும்போது சம்பந்தபட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் இணைப்பு ஆகியவற்றுக்கான ரசீதுகளை காட்ட வேண்டும். பாதாள சாக்கடைக்கு ஏற்கெனவே முன்வைப்பு தொகை செலுத்தி இருந்தால் அதற்கான ஆவண நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.மேற்கண்ட தகவலை கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.

    • ஈரோட்டில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்ந்துள்ளது
    • பயணிகள் அதிர்ச்சி

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் அரசு போக்குவரத்து பஸ்க ளுக்கு நிகராக தனியார் பஸ்களும் பல்வேறு வழி த்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதிக்கு ள்ளேயும், சேலம், கோவை, திருப்பூர், கோபி, சத்தியம ங்கலம், பழனி, அரச்சலூர் போன்ற பகுதிகளில் தனி யார் பேருந்துகள் இயக்கப்ப ட்டு வருகின்றன.அரசு பஸ்சில் நிர்ணயி க்கப்பட்ட கட்டணம்தான் தனியார் பஸ்களில் இது வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீ ரென தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்ப ட்டுள்ளது.

    ஈரோட்டில் இரு ந்து பெருந்துறைக்கு செல் லும் தனியார் பஸ்சில் இது வரை 13 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென தற் போது 15 ரூபாயாக உயர்த்த ப்பட்டுள்ளது. இது குறித்து விவரம் கேட்டால் முறை யான பதில் வரவில்லை. இதேபோல் பெருந்துறை யில் இருந்தும் ஈரோடுக்கு வரும் தனியார் பஸ்சில் ரூ.2 கட்ட ணம் உயர்த்தப்ப ட்டுள்ளது. இது குறித்து தனியார் பஸ் கண்டக்டரிடம் பயணி கள் கேட்டபோது எங்களு க்கு ஒன்றும் தெரியாது. கூட்டச் சொன்னதால் கூட்டி விட்டோம் என்று மட்டும் கூறுகின்றனர். இது மட்டுமின்றி வெளியூர் செல்லும் தனியார் பஸ்க ளிலும் கட்டணம் கூடியு ள்ள தாக தகவல் வெளி யாகி உள்ளது. இதனால் பயணி கள் கடும் அதிர்ச்சி அடை ந்துள்ள னர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெரு நாய், குதிரை, பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
    • ஸ்டெம் பூங்காவில் நுழைவு கட்டணம் குறைந்த அளவில் நிர்ணயிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் , துணை மேயர் , கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டதற்காக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு மாநகராட்சி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் நேற்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்ததற்காகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா, கலையரசன் ஆகியோர் கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியதற்காக முதல் -அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    கேசவன் :

    30-வது வார்டில் தார் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தெரு நாய், குதிரை , பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும். மழைக்காலம் வருவதால் வடிகால்ல் வாய்க்காலை உடனே தூர்வார வேண்டும்.

    காந்திமதி :

    கொண்டிராஜபாளையம் தற்காலிக மீன் மார்க்கெட்டை நிறம் மாற்றக்கோரி தொடர்ந்து பலமுறை வலியுறுத்தி வருகிறேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே உடனடியாக மீன் மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

    சரவணன்:

    சீனிவாசபுரம் பகுதியில் குப்பைகள் தேங்கியுள்ளது.

    போதிய குப்பை பெட்டிகள் இல்லாததால் கோழி, மீன், இறைச்சி கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன.

    இதனை தடுக்க வேண்டும்.

    ஸ்டெல்லா நேசமணி:

    எனது வார்டில் புதிதாக அங்கன்வாடி, கழிவறைகள் திறக்கப்பட்டதற்கு நன்றி.

    கோபால் :

    4 ராஜவீதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி:

    பெண் கவுன்சிலர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர்.

    அதனால் பெண் கவுன்சிலர் என்பதால் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற பெண் கவுன்சிலர் ஒருவரின் குற்றசாட்டை ஏற்க முடியாது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகளை திறந்து வைத்ததற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது வார்டில் ஒரு மாதத்திற்குள் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வேண்டும்.

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்:

    புதிதாக திறக்கப்பட்ட ஸ்டெம் பூங்காவில் நுழைவு கட்டணம் குறைந்த அளவில் நிர்ணயிக்க வேண்டும்.

    இதுவரை இணைப்பு வழங்கப்படாத வணிக வளாகத்திற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    இதனை தொடர்ந்து கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேயர் சண் .ராமநாதன் கூறும்போது:-

    கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சையில் நேற்று முதல் -அமைச்சரால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த பணிகள் திறந்து வைக்கப்பட்டது.

    இதில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள புதிதாக திறக்கப்பட்ட பல்நோக்கு மாநாட்டு அரங்கத்திற்கு முத்தமிழ் அறிஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதேபோல் பழைய திருவையாறு பஸ் நிலைய வணிக வளாகத்திற்கு கலைஞர் முத்துவேல் கருணாநிதி வணிக வளாகம் என்றும், சரபோஜி மார்க்கெட் முன்பாக புதிதாக கட்டப்பட்ட வரும் வணிக வளாகத்திற்கு பேரறிஞர் அண்ணா வணிக வளாகம் என்றும், வல்லம் குவாரி சாலைக்கு தமிழ் சாலை என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதற்கான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை ரெயில் நிலையத்தில் புதுமண தம்பதிகள் ‘போட்டோ சூட்’ நடத்த ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • ரெயில்வே துறையின் வருவாய் பிரிவு செயல்படுத்தி வருகிறது.

    மதுரை

    இருமனங்கள் இணையும் திருமணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய தருணமாகும். அப்படிப்பட்ட திருமண நிகழ்வு காலத்திற்கும் நம் மனதில் நினைவுகளாக இருப்பதற்கு முக்கிய சாட்சியாக இருப்பதில் புகைப்படங்க ளும் ஒன்று.

    தற்போது திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என மணமக்களை விதவிதமாக போட்டோசூட் எடுப்பது தற்போது டிரெண்டாகி வருகிறது. சிலர் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளிலும், சிலர் மலை உச்சிகளிலும் போட்டோ சூட் நடத்துவது வழக்கம்.

    அப்படி போட்டோ சூட்டிங்கிற்கு ஆர்வமுள்ள நபர்களுக்காகவே ஒரு புதுமையான ஸ்பாட் கிடைத்துள்ளது. தற்போது ரெயில் நிலையங்களில் புதுமண தம்பதிகள் போட்டோ சூட் நடத்திக் கொள்ள தெற்கு ரெயில்வே அனுமதி வழங்கி உள்ளது.

    ரெயில் நிலையங்களில் சினிமா திரைப்படங்க ளுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. பல்வேறு வழிகாட்டு நெறிமுறை களுடன் அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக, தற்போது இளை ஞர்கள் மத்தியில் பிரபல மாக அறியப்பட்டு வரும் திருமண ஜோடிகள் போட்டோ சூட், வெட்டிங் சூட் எடுப்பதற்கு அனுமதி வழங்கி, அதற்கான கட்டணமும் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.

    இந்திய ரெயில்வே துறை வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரெயில்வே நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு பிளாட்பார்ம் கட்டணம் வசூல் செய்வது, ரெயில் நிலையங்களுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது, ரெயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய அனுமதிப்பது என பல வழிகளில் வருமானத்தை பெருக்கும் நடவடிக்கை களை ரெயில்வே துறையின் வருவாய் பிரிவு செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் மதுரை ரெயில் நிலையத்தில் புதுமண தம்பதியர் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ரெயில் பெட்டியை சேர்த்து புகைப்படங்கள் எடுக்க வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூ.1500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற ரெயில் நிலையங்களுக்கான கட்டணம்

    ரூ.3ஆயிரமும், ரெயில் பெட்டிக்கு முன்பு எடுக்க கூடுதலாக ரூ.1000-மும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

    • அருவி கரை பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். அப்போது அங்கு குளிப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள்.

    அமைச்சர் ஆய்வு

    இந்நிலையில் குற்றால பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவல ர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வுகள் மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி மற்றும் சிற்றருவி ஆகிய அருவி கரை பகுதி களிலும் மேம்பாட்டு பணி களுக்காக ரூ. 11.34 கோடி தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே இந்த பணிகளை தொடங்க அனுமதி கொடுத்திருந்த போதிலும் இங்கு சில பகுதிகள் வனத் துறை மற்றும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இப்படி பல்வேறு துறை களிடமிருந்து தடையில்லா சான்று பெற்று தான் பணி களை மேற் கொள்ள வேண்டிய சூழல் உள்ளதால் அதற்கான ஒப்புதல் சான்றிதழ் கிடை த்ததும் பணிகள் அனைத்தும் மேற் கொள்ளப்படும். அதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிக்கப்படும். மேலும் குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கட்டணம் என்பது எத்தனை பேர் குற்றாலத்துக்கு வருகிறார்கள் என்பதை கணக்கில் எடுத்து கொள்வதற்காக தான். எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று கணக்கெடுத்தால் தான் அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்க முடியும்.

    சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் போது வியாபாரம் பெருகும். தங்கும் விடுதிகளுக்கும் வருமானம் கிடைக்கும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும் போது மாநிலமும் வளர்ச்சி யடையும். இருப்பினும் இருசக்கர வாகனத்திற்கு ரூ. 10 கட்டணம் என்பது வசூலிக்கப்பட மாட்டாது.

    சீரமைப்பு பணி

    குற்றாலத்தில் அரசு விடுதிகள் கட்டி முடிக்க ப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளதால் அதனை சீரமைக்க உள்ளோம். குற்றாலத்தில் தனியார் அருவிகள் செயல்பாடுகள் குறித்து தகவல் எதுவும் வர வில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். அதை மாவட்ட கலெக்டர் மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சுற்றுலா த்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலை குமார், பழனி நாடார் மற்றும் தனுஷ்குமார் எம்.பி., குற்றாலம் பேரூ ராட்சி செயல் அலுவலர் சுஷ்மா, சுகாதார அலுவலர் உட்பட பலர் உடன் இருந்த னர்.

    மேலும் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை பகுதியிலும் ரூ. 1.50 கோடியில் ஓட்டல், தங்கும் விடுதிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங் கப்பட உள்ளன. இந்த பணி களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் புதூர் பேரூராட்சி தலைவர் ரவிசங்கர், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரஹீம், தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கட்டண ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.
    • பனியன் தையலுக்கு ஒரு டஜனுக்கான கட்டணம் ரூ.76.05 ரூபாயாக இருந்தது நாளை முதல் 81.37 ரூபாயாக உயர்கிறது.

    திருப்பூர் :

    உள்நாட்டு விற்பனை பனியன் மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்து கொடுக்கும் பவர் டேபிள் நிறுவனங்கள் திருப்பூரில் இயங்கி வருகின்றன. பிராண்டட் மற்றும் உள்நாட்டு விற்பனை ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஜாப்ஒர்க் முறையில் உற்பத்தி செய்து கொடுக்கின்றனர்.ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கட்டண ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி புதிய ஒப்பந்தம் உருவாகியது.

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.பனியன் பேக் பட்டி டிராயர், பேக்பட்டி டபுள் பாக்கெட் ரகங்களுக்கு தனித்தனியே கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி முதல் ஆண்டுக்கு 17 சதவீதம் கட்டண உயர்வு வழங்கப்பட்டது.அடுத்து வரும் ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். முதல் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் நாளை 6-ந்தேதி முதல் நடைமுறை கட்டணத்தில் இருந்து 7 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமென பவர்டேபிள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    பனியன் தையலுக்கு ஒரு டஜனுக்கான கட்டணம் ரூ.76.05 ரூபாயாக இருந்தது நாளை முதல் 81.37 ரூபாயாக உயர்கிறது. பேக் பட்டி டிராயர் கட்டணம் ரூ.146.64 ஆக இருந்தது 157.02 ரூபாயாக உயர்கிறது. பேக் பட்டி டபுள் பாக்கெட் கட்டணம் 154.64 ரூபாயாக இருந்தது 165.46 ரூபாயாக உயர்வதாக பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது குறித்து பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் 4ந்தேதி 4 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. முதல் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் 7 சதவீத கட்டண உயர்வு நாளை 6-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சைமா உறுப்பினர் நிறுவனங்கள், புதிய கட்டணத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும். தொழிலாளர் சம்பளம், மின் கட்டணம் போன்ற செலவு அதிகரித்துள்ளதால் பவர் டேபிள் நிறுவனங்களுக்கான 7 சதவீத கட்டண உயர்வை 6-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றார். 

    • ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் 5 புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
    • கல்வி கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகே சேர்க்கை பூர்த்தியாகும்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-24 கல்வி ஆண்டிற்கு இணைய வழி மூலம் விண்ணப்பித்த மாணவர்க ளுக்கு மே 31 ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    முதல் நாளில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திற னாளிகள், தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. ஜூன் 2ம் தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 3ஆம் தேதி வணிகவியல், வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 5ஆம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவ லருடன் வர வேண்டும்.

    கலந்தாய்வுக்கு வரும்போது உரிய மதிப்பெண் சான்றி தழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ்கள், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் 5 புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

    கலந்தாய்வில் ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்ற பிறகு வேறு பாட பிரிவிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்ற பின்னர் வேறு பாடப் பிரிவிற்கு மாற்றம் செய்ய அனுமதிக்க இயலாது.

    கல்வி கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகே சேர்க்கை பூர்த்தியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் பள்ளிகளின் 12 ஆயிரத்து 179 வாகனங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட த்தில் உள்ள தனியார் பள்ளிகளின் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தமிழக போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் ஆய்வு மேற்கொண்டார்.

    நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 106 பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, மாணவர்கள் இருக்கை, சி.சி.டி.வி கேமரா, அவசரகால வழி, வாகனத்தின் தரம், தீயணை ப்பான் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிரு ப்பதாவது :-

    தமிழக முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் 32,167 வாகனங்களில் 12,179 வாகனங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள வாகனங்களை வரும் 29ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசிடம் வழிமுறை இல்லை .

    தனியார் பஸ்கள் சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதனை மீறியதாக ஒரு சில பஸ்கள் மீது புகார் வந்துள்ளது.

    கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்து ஆணையர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும்.

    போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப்பணி யிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்.

    பள்ளி வாகனம் அல்லாமல் தனியார் வாகனத்தை பயன்படுத்தி மாணவர்களை அழைத்துச் சென்றால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் விரைவில் மினி பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நள்ளிரவிலேயே காத்து கிடக்கிறார்கள்.
    • நிமிடத்துக்கு நிமிடம் மீட்டர் வட்டி போல் கட்டணம் எகிறி கொண்டிருக்கும்.

    சென்னை:

    தொலைதூர இடங்களுக்கு செல்பவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள். அதற்கு காரணம் பாதுகாப்பு, கட்டணம் குறைவு, சொகுசான பயணம் என்பதுதான்.

    3 மாதங்களுக்கு முன்பே ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் எல்லோராலும் 3 மாதங்களுக்கு முன்பே பயண திட்டம் போட முடியாது.

    இதனால் குறுகிய காலத்தில் திட்டமிட்டு செல்பவர்கள், அவசர பயணம் மேற் கொள்பவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.

    அவர்கள் கடைசி முயற்சியாக தட்கல் முறையில் முன்பதிவை தேடி செல்கிறார்கள். இந்த தட்கல் முன்பதிவு ஒருநாள் முன்பு நடைபெறுகிறது. அதுவும் காலை 10 மணிக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கும், 11 மணிக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கும் தொடங்குகிறது. முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.

    தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நள்ளிரவிலேயே காத்து கிடக்கிறார்கள்.

    இணைய தளங்களை கையாள்பவர்கள் வீடுகளில் இருந்தே டிக்கெட் எடுக்கிறார்கள். இந்த வசதி இல்லாதவர்கள் இணைய தள சேவை மையங்களை அணுகுகிறார்கள்.

    கடந்த சில நாட்களாக தட்கல் முன்பதிவுக்கு இணையதளத்தில் உள்ளே நுழைந்து ரெயிலை தேர்வு செய்து, பயணிகள் விவரங்களையும் பதிவு செய்துவிட்ட 'கேப்சா' என்ற குறியீட்டு எண்ணை பதிவு செய்ததும் உள்ளே செல்லாமல் முடங்கி விடுகிறது.

    அடுத்த சில நிமிடங்களில் பிரீமியம் தட்கலுக்கு முயன்றால் ஒழுங்காக செயல்படுகிறது. பிரீமியம் தட்கல் என்பது இரண்டு மடங்கு அதிகம். மேலும் நிமிடத்துக்கு நிமிடம் மீட்டர் வட்டி போல் கட்டணம் எகிறி கொண்டிருக்கும்.

    உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு தட்கல் கட்டணம் ரூ.600 மட்டுமே. ஆனால் பிரிமீயம் தட்கல் கட்டணம் ரூ.1000-க்கு மேல். ஒரு டிக்கெட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் 1000 வரை ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

    இதற்காகவே தட்கல் முன்பதிவில் தில்லாலங்கடி வேலைகளை ரெயில்வே நிர்வாகம் செய்வதாக பயணிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் ரெயிலவே அதிகாரிகளிடம் கேட்டால் ஒரே நேரத்தில் ஏராளமானோர் இந்த தளத்தை உபயோகப்படுத்துவதால் முடங்குகிறது. என்று சொல்லி எளிதில் தப்பி விடுகிறார்கள். அப்படியானால் பிரீமியம் தட்கலுக்கு மட்டும் எப்படி முடங்காமல் செயல்படுகிறது என்றால் பதில் சொல்ல யோசிக்கிறார்கள். தட்கல் முன்பதிவு தொடங்கும் போது தடங்கல் இல்லாமல் சேவையை வழங்குவதுதான் ரெயில்வேயின் கடமை.

    • ரூ.9 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • வங்கி கணக்கில் மட்டுமே கட்டணங்களை மாணவர்கள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் திடம், அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பினர் பொது ச்செயலாளர் சரவணன் கொடுத்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மிக அதிகமாக பல மடங்கு கட்ட ணம் வசூலித்து வருகின்றனர்.

    தற்போது நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டண வசூல் தொடங்கி விட்டது. ரூ.9 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக

    பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வங்கி கணக்கில் மட்டுமே கட்டணங்களை மாணவர்கள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×