search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power table"

    • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கட்டண ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.
    • பனியன் தையலுக்கு ஒரு டஜனுக்கான கட்டணம் ரூ.76.05 ரூபாயாக இருந்தது நாளை முதல் 81.37 ரூபாயாக உயர்கிறது.

    திருப்பூர் :

    உள்நாட்டு விற்பனை பனியன் மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்து கொடுக்கும் பவர் டேபிள் நிறுவனங்கள் திருப்பூரில் இயங்கி வருகின்றன. பிராண்டட் மற்றும் உள்நாட்டு விற்பனை ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஜாப்ஒர்க் முறையில் உற்பத்தி செய்து கொடுக்கின்றனர்.ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கட்டண ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி புதிய ஒப்பந்தம் உருவாகியது.

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.பனியன் பேக் பட்டி டிராயர், பேக்பட்டி டபுள் பாக்கெட் ரகங்களுக்கு தனித்தனியே கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி முதல் ஆண்டுக்கு 17 சதவீதம் கட்டண உயர்வு வழங்கப்பட்டது.அடுத்து வரும் ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். முதல் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் நாளை 6-ந்தேதி முதல் நடைமுறை கட்டணத்தில் இருந்து 7 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமென பவர்டேபிள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    பனியன் தையலுக்கு ஒரு டஜனுக்கான கட்டணம் ரூ.76.05 ரூபாயாக இருந்தது நாளை முதல் 81.37 ரூபாயாக உயர்கிறது. பேக் பட்டி டிராயர் கட்டணம் ரூ.146.64 ஆக இருந்தது 157.02 ரூபாயாக உயர்கிறது. பேக் பட்டி டபுள் பாக்கெட் கட்டணம் 154.64 ரூபாயாக இருந்தது 165.46 ரூபாயாக உயர்வதாக பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது குறித்து பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் 4ந்தேதி 4 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. முதல் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் 7 சதவீத கட்டண உயர்வு நாளை 6-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சைமா உறுப்பினர் நிறுவனங்கள், புதிய கட்டணத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும். தொழிலாளர் சம்பளம், மின் கட்டணம் போன்ற செலவு அதிகரித்துள்ளதால் பவர் டேபிள் நிறுவனங்களுக்கான 7 சதவீத கட்டண உயர்வை 6-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றார். 

    • 14 சதவீத தையல் கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது
    • 200க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடை தைத்து கொடுக்கின்றன.

    திருப்பூர் :

    'சைமா' மற்றும் பவர்டேபிள் உரிமையாளர் சங்கங்கள் பேச்சு நடத்தி கடந்த 2022 ஜூனில் கட்டண உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தாகி 9 மாதமான நிலையில் அங்கேரிபாளையத்தை சேர்ந்த, ஆடை உற்பத்தி நிறுவனமோ இன்னும் முதல் ஆண்டுக்கான 14 சதவீத தையல் கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.இதனால் அந்நிறுவனத்துக்கு ஆடை தைத்துக்கொடு ப்பதை நிறுத்தி காலவரையற்ற உற்பத்தி நிறுத்தத்தை தொடங்கி உள்ளது பவர்டேபிள் உரிமையாளர் சங்கம். இது குறித்து பவர்டேபிள் உரிமையாளர் சங்க நிர்வாகி கூறியதாவது:-

    அங்கேரிபாளையத்தில் இயங்கும் ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு திருப்பூர், மணப்பாறை, குளித்தலை, புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடை தைத்து கொடுக்கி ன்றன.மூலப்பொருள் விலை உயர்வு, எரிபொருள், மின் கட்டணம் உயர்வால் பவர்டேபிள் நிறுவனங்கள் பரிதவிக்கின்றன. மற்ற நிறுவனங்களெல்லாம், ஒப்பந்தப்படி கட்டண உயர்வு வழங்குகின்றன. அங்கேரிபாளையத்தை சேர்ந்த ஆடை நிறுவனம் மட்டும் தையல் கட்டண உயர்வு அளிக்காமல் இழுத்த டிக்கிறது.இதுகுறித்து 'சைமா' சங்கத்துக்கு மனு அனுப்பினோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அந்த ஒரு நிறுவனத்துக்கான ஆடை தயாரிப்பை முழுமையாக நிறுத்தி காலவரையற்ற போராட்டத்தை துவக்கியுள்ளோம். 'சைமா' சங்கம் தலையிட்டு பேச்சு நடத்தி கட்டண உயர்வை பெற்றுத்தர வேண்டும். அதுவரை உற்பத்தி நிறுத்தம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏப்ரல் 21-ந்தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.
    • இன்று முதல் புதிய கூலி உயர்வு ஏற்படுத்தி வழங்குவது என முடிவானது.

    திருப்பூர்:

    பின்னலாடை ரகங்களுக்கு தையல் கட்டண உயர்வு நிர்ணயிப்பது குறித்து திருப்பூரில் பவர் டேபிள் உரிமையாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா) இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    வரும் 2025ம் ஆண்டு வரையிலான அடுத்த 4 ஆண்டுகளில் மொத்தம் 75 சதவீதம் கட்டண உயர்வு வழங்க வேண்டும் என பவர் டேபிள் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. சைமா இந்த உயர்வுக்கு உடன்படவில்லை. இருதரப்பிடையே கடந்த பல மாதமாக பேச்சு நடைபெற்றது.

    இதில் ஏப்ரல் 21-ந்தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.இதில் முதலாண்டு 20 சதவீதம் அடுத்த 3ஆண்டுகள் தலா 10 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வழங்க வேண்டும் என பவர் டேபிள் சங்கம் கேட்டுக் கொண்டது.சங்க உறுப்பினர்களிடம் ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக 'சைமா' நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதன் பின் ஒரு மாதமாகியும்சைமா சங்கம், பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதையடுத்துபவர் டேபிள் சங்கம், ஜூன் 10-ந் தேதிக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்தவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.இதையடுத்து, 'சைமா', தனது உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியது.

    அதன் பின் நேற்று முன்தினம் மீண்டும் 9வது சுற்று பேச்சு நடைபெற்றது.இதில் இன்று முதல் புதிய கூலி உயர்வு ஏற்படுத்தி வழங்குவது என முடிவானது.அதன்படி பனியன் ரகங்களுக்கு முதல் ஆண்டில் 17 சதவீதமும், அடுத்தடுத்த ஆண்டுகள் தலா 7 சதவீதம் என மொத்தம் 38 சதவீதம் உயர்த்தி வழங்குவது.

    அதே போல் பேக்பட்டி மற்றும் பாக்கெட் ரகங்களுக்கு முதலாண்டில் 14 சதவீதமும் அடுத்த 3 ஆண்டுக்கு தலா 7 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என ஒப்பந்தம் கையெழுத்தானது.உயர்த்தப்பட்ட புதிய கூலி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ×