ஈரோட்டில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு

ஈரோட்டில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்ந்துள்ளது பயணிகள் அதிர்ச்சி
ஈரோட்டில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் அரசு போக்குவரத்து பஸ்க ளுக்கு நிகராக தனியார் பஸ்களும் பல்வேறு வழி த்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதிக்கு ள்ளேயும், சேலம், கோவை, திருப்பூர், கோபி, சத்தியம ங்கலம், பழனி, அரச்சலூர் போன்ற பகுதிகளில் தனி யார் பேருந்துகள் இயக்கப்ப ட்டு வருகின்றன.அரசு பஸ்சில் நிர்ணயி க்கப்பட்ட கட்டணம்தான் தனியார் பஸ்களில் இது வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீ ரென தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்ப ட்டுள்ளது.

ஈரோட்டில் இரு ந்து பெருந்துறைக்கு செல் லும் தனியார் பஸ்சில் இது வரை 13 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென தற் போது 15 ரூபாயாக உயர்த்த ப்பட்டுள்ளது. இது குறித்து விவரம் கேட்டால் முறை யான பதில் வரவில்லை. இதேபோல் பெருந்துறை யில் இருந்தும் ஈரோடுக்கு வரும் தனியார் பஸ்சில் ரூ.2 கட்ட ணம் உயர்த்தப்ப ட்டுள்ளது. இது குறித்து தனியார் பஸ் கண்டக்டரிடம் பயணி கள் கேட்டபோது எங்களு க்கு ஒன்றும் தெரியாது. கூட்டச் சொன்னதால் கூட்டி விட்டோம் என்று மட்டும் கூறுகின்றனர். இது மட்டுமின்றி வெளியூர் செல்லும் தனியார் பஸ்க ளிலும் கட்டணம் கூடியு ள்ள தாக தகவல் வெளி யாகி உள்ளது. இதனால் பயணி கள் கடும் அதிர்ச்சி அடை ந்துள்ள னர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com