search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையம்"

    • ஐ.ஆர்.-50 நெல் பயிரில் புகையான் மற்றும் குலைநோய் தாக்குதல் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
    • நெல் பயிரை காற்றோட்டமாக வைப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பாது காக்கலாம்.

    ஆழ்வார்குறிச்சி:

    கடையம் வட்டாரம் ஆழ்வார்குறிச்சி வருவாய் கிராமங்களில் சாகுபடி செய்துள்ள கார் நெல் பயிரை கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமையில் துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், வேளா ண்மை உதவி அலுவலர்கள் அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆழ்வார்குறிச்சி-2 (செங்கானூர் முதல் கருத்தப்பிள்ளையூர் வரை) சாகுபடி செய்திருந்த ஐ.ஆர்.-50 நெல் பயிரில் புகையான் மற்றும் குலைநோய் தாக்குதல் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. நோய் தாக்குதலால் நெல் பயிர் அங்காங்கே காய்ந்து வைக்கோலாக மாறி வருகிறது. இதிலிருந்து நெல்பயிரை பாதுகாக்க புப்ரோபுசின் -300 மில்லி (அல்லது) தையோ மெத்தாக்ஸைம்-100 கிராமுக்கு டிரைசைக்குளோஜோல்-120 கிராம் ஒரு ஏக்கர் என்ற விகிதா சாரத்தில் கலந்து மருந்தை தெளித்து கட்டுப்ப டுத்தலாம். மேலும் நெல் வயலில் தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதி செய்தல் மற்றும் நெல் பயிரை அங்காங்கே விலக்கி விட்டு காற்றோட்டமாக வைப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பாது காக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தெரிவித்தார். ஆய்வின் போது விவசாயிகள் சண்முகநாதன், மாரிமுத்து தலைமையில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பொத்தை பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • இரவு நேரத்தில் தோப்பில் கரடி புகுந்து கரையான்களை திண்பது போன்ற வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட் பட்டது அடைச்சாணி ஊராட்சி. இக்கிராமத்தின் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு மலையான் குளம் கிராமத்தில் இருந்து விவசாயிகள் தினந்தோறும் சென்று வருவது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள பொத்தை பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் பகல் நேரங்களில் பொத்தை பகுதியில் கரடிகள் அதிக மாக சுற்றி திரிவதால், இப்பகுதியின் வழியே விவசாயம் செய்ய, அடைச் சாணி வயல்வெளிகளுக்கு செல்ல மிகவும் அச்சமாக உள்ளதாக அப்பகுதி விவ சாயிகள் கருத்து தெரி வித்துள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் உள்ள பென்சிகர் என்பவரின் தோப்பில், இரவு நேரத்தில் கரடி புகுந்து அங்குள்ள பிளாஸ்டிக் பொருள்களை சேதப் படுத்தியும், கரையான்களை திண்பது போன்ற வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

    • நிகழ்ச்சியில் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
    • விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் ஊக்கப்பரிசு வழங்கிய சிவபத்மநாதனுக்கு ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    தென்காசி:

    கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டியில் பி.கே. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 4-வது ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது.

    கபடி போட்டி தொடக்கம்

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி தலைவருமான ரவிச்சந்திரன், வெங்கடாம் பட்டி ஊராட்சி தலைவர் ஷாருகலா ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ஆவுடை கோமதி, மகேஸ்வரி சத்தியராஜ், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் அய்யன்சாமி, முகமது யாகூப், அன்பழகன், கடையம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட், கடையம் வடக்கு ஒன்றிய முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் செல்வன், தொண்டரணி தலைவர் வெங்கடேசன், சிறுபான்மை அணி ஆதம் சுபேர், உதயநிதி நற்பணி மன்றம் அசிம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியாசிங், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் தங்கச்செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால், வெய்க்காலிபட்டி கிளை செயலாளர் பால்ராஜ், நிர்வாகிகள் நவீன்கிருஷ்ணா, பால்ராஜ், ராஜாமணி, கோவில்பிள்ளை, ஜெயராஜ், ராபர்ட், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் கார்த்திக், சங்கர் ராம், பன்னீர், முத்து பாண்டி, பூதத்தான், வடமலைபட்டி ஆதிலிங்கம், சங்கர்ராம், மகாராஜா, சுமன், சிவசந்திரன், அருணாசலம், சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விளையாட்டு போட்டி நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற்றுத்தந்ததுடன், விளையாட்டு வீரர்களை ஊக்கப் படுத்தும் வகை யில் ஊக்கப்பரிசு வழங்கிய முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனுக்கு ஊர் பொதுமக்கள், விளையாட்டு குழுவினர் திரண்டு வரவேற்பு அளித்து, நன்றி தெரிவித்தனர்.

    • 15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து வரும் தொகையை ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.
    • அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தாமல் உள்ளது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் 25-வது கூட்டம் அதன் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை யில் நடைபெற்றது. ரவண சமுத்திரம் ஊராட்சி தலைவர் முகம்மது உசேன், கீழக்கடையம் ஊராட்சி தலைவர் பூமிநாத், ஏ.பி.நாடானூர் ஊராட்சி தலைவர் அழகுதுரை, முதலியார்பட்டி ஊராட்சி தலைவர் மைதீன் பீவி அசன் , தெற்கு கடையம் ஊராட்சி தலைவர் முத்துலெட்சுமி ராமதுரை, வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் ஸாருகலா ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் , ஊராட்சி தலைவர்களின் 3-வது ஆண்டு பதவி ஏற்பு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி நிதியில் இருந்து பணிகளை தேர்வு செய்ய ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

    இதனை கடையம் ஊராட்சி ஒன்றியத்திலும் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், டி.என். பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்துவிட்டு மீண்டும் பி.எப்.எம்.எஸ்.முறையை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிக்கான பணி நியமன உரிமம் ஊராட்சி தலைவர்களுக்கே வழங்க வேண்டும்.15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து வரும் தொகையை, குடிநீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணத்திற்கு பிடிப்பதை ரத்து செய்து விட்டு, ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

    மேலும் ஜல் ஜீவன் திட்டத்தை ஊராட்சி தலைவர்களே நிறைவேற்ற வேண்டும் என்று கருத்து கூறிய உயர்நீதி மன்ற நீதிபதி யின் கருத்திற்கு கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவிப்பது, கலைஞர் உரிமை திட்டத் திற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதோடு, விடுபட்ட தகுதி உள்ள மகளிர்களுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் 6-வது நிதிக்குழு மானியத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு கொண்டு வந்த அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடை முறைப்படுத்தாமல் உள்ளது. அதனை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் ,கீழாம்பூர் மாரிசுப்பு, அடைச்சாணி மதியழகன், திருமலை யப்புரம் மாரியப்பன், மடத்தூர் முத்தமிழ் செல்லி ரஞ்சித், மந்தியூர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில் தெற்கு மடத்தூர் ஊராட்சி தலைவர் பிரேம ராதா ஜெயம் நன்றி கூறினார்.

    • வெங்கடாம்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது.
    • தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படும் இந்த திட்டத்தினை பற்றி ஊராட்சி மன்ற தலைவர் கேட்டறிந்தார்.

    கடையம்:

    கடையம் வட்டாரத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி கிராமத்தில் தென்காசி மாவட்டம் தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அறிவுரைப்படி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றும் சிறப்பு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021 -22-ம் நிதியாண்டில் புதியதாக உருவாக்கப்பட்டு 15 ஏக்கர் பரப்பு தரிசு நிலத் தொகுப்பில் அமைக்கப்பட்டு உள்ள சொட்டுநீர் பாசன அமைப்பு வயல்களை, வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஸாருகலா ரவி மற்றும் துணை தலைவர் சித்ரா பாபு ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.

    மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படும் இந்த திட்டத்தினை பற்றி ஊராட்சி மன்ற தலைவர் கேட்டறிந்தார். ஆய்வின்போது தரிசு நில தொகுப்பின் குழு தலைவர் அமிர்தராஜ் , வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து செயலாளர் பாரத், விவசாயி ரவி, பாபு பக்கியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் கடையம் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராஜன், திருமலை குமார்ஆகியோர் ஆய்விற்கான ஏற்பாடுகளை செய்து உடனிருந்து விளக்கம் அளித்தனர்.

    • பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது காட்டு மிளா மோதி விபத்தில் சிக்கினார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தென்காசி:

    கடையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாதாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது காட்டில் இருந்து குறுக்கே வந்த காட்டு மிளா மோதி விபத்தில் சிக்கினார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் பாலமுருகனின் தந்தையை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தி.மு.க. சார்பில் ரூ. 5 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஆலங்குளம் முன்னாள் துணை சேர்மன் தங்க செல்வம், ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் சுந்தரம், ராஜதுரை, கடையம் பெரும்பத்து ஊராட்சி தலைவர் பொன்சீலா பரமசிவம், அவைத்தலைவர்கள் ரவி (கடையம்வடக்கு ) கே.பி.என்.சேட், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வின்சென்ட் (கடையம் தெற்கு), மாவட்ட பிரதிகள் அய்யன்சாமி, முகம்மது யாகூப், அன்பழகன், கடையம் வடக்கு ஒன்றிய பொருளாளர் அஜீஸ் அகமது, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரம்யா ராம்குமார், சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி, மாரி இசக்கிகுமார், முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜெயராணி அண்ணாதுரை, அகமது ஈசாக், மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் ஆதம் சுபேர், பேரூர் கவுன்சிலர் சந்திரன், முதலியார்பட்டி முகம்மது, குணா, லெட்சுமணன், ராஜபாண்டி, கடையம் அரசு ஒப்பந்த்தாரர் முருகன், வடமலைபட்டி மகாராஜன், சேர்மலிங்கம், கடையம் ஊராட்சி உறுப்பினர் கமல் முருகன், அருணாச்சலம்பட்டி ராஜேந்திரன், நவீன் , வெய்க்கால்பட்டி பால்ராஜ், பண்டாரகுளம் கருத்தபாண்டி, சம்பன்குளம் ஊராட்சி தலைவர் ஜன்னத் சதாம், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பிவீ கோதர் மைதீன், ரவணசமுத்திரம் தளபதி பீர், ஆம்பூர் மூர்த்தி, விவசாய தொழிலாளர் அணி கருணாநிதி, அமைப்பு சாரா ஓட்டுனர் துணை அமைப்பாளர் மேசியா ஜெயசிங், ஓட்டுனர் பூதத்தான், வெள்ளப்ப னேரிப்பட்டி செந்தூர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பல பகுதிகள் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாநில கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும்.

    கடையம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்காசி, அம்பை சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கனிம வளங்களை நமக்காக மட்டுமல்லாமல் நமது வருங்கால சந்ததி யினருக்காகவும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலும், அவசியத்திலும் இருக் கிறோம்.

    கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள பல பகுதிகளை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து அங்கிருந்து கனிம வளங்கள் எடுப்பதற்கு தடை செய்யும் விதத்தில் அங்குள்ள குவாரிகளை மூடிவிட்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகத்தில் இருந்து அதி கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்ள் கொண்டு செல்கின்றனர்.

    தமிழகத்திலும் அதே போல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தமிழகத்தின் வளத்தை பாதுக்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் இது குறித்த ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்து மாநில கனிம வளங்களை நமது தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வழி செய்வதுடன் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு நிரந்தரமாக தடை விதிப்பதற்கும் சட்டம் இயற்ற வேண்டும்.

    எனவே வருகிற 9-ந் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நிகழ்ச்சியை ஹாஜி முகமது அசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

    கடையம்:

    கடையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலு வலர் பழனிக்குமார் மேற்பார்வையில், ரவண சமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் தலைமையில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    சேவாலாயா சங்கிலி பூதத்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்ற துணை தலைவர் ராம லெ ட்சுமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியை ஜமாத் தலைவர் ஹாஜி முகமது அசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஊராட்சிமன்ற உறுப்பினர் மொன்னா மொகமது எர்சாத் மருத்துவ அட்டை வழங்கி னார். முகாமில் மீரான், சாகுல்அமீது, ஜெய்லானி, தளபதி பீர், சின்ன ஜெய்லானி, அகமது ஷா, முகமது ஷீபக், மசூது அலி ஆகியோர் கலந்து கொ ண்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோ தனை செய்ய ப்பட்டது.

    முகாமில் ஈ.சி.ஜி பரிசோதனை, சிறப்பு மருத்துவம், எலும்பு மருத்துவம் பொதுமருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம் பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காசநோய், தொழுநோய், குடும்பநலம் குறித்த கண்கா ட்சி அமைக்கப்பட்டது. நடமாடும் எக்ஸ்ரே மூலம் பயனாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் குறித்த உறுதி மொழி எடுக்கப்ப ட்டது.

    முகாமில் மருத்துவர்கள் முகமது உமர், பாண்டியராஜன், அமுதா, சூரிய பிரபா, தமிழ் முதல்வி, ஆஷா பர்வின் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் முகாமில் சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் தொழில்நுட்ப பயிற்சி ஏ.பி. நாடானூர் பஞ்சாயத்து தலைவர் அருணாசலம் என்ற அழகுதுரை தலைமையில் நடைபெற்றது.
    • பிசான பருவத்தில் சாகுபடி செய்யும் நெல் ரகங்கள் பற்றி ஏஞ்சலின் பொன்ராணி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    கடையம்:

    வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு - விவசாயிகள் தொழில்நுட்ப பயிற்சி கடையம் வட்டாரத்தில் ஏ.பி. நாடானூர் பஞ்சாயத்து தலைவர் அருணாசலம் என்ற அழகுதுரை தலைமையில் நடைபெற்றது. கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி முன்னிலை வகித்தார். பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார். வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி பிசான பருவத்தில் சாகுபடி செய்யும் நெல் ரகங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். பயிற்சியின் முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் தீபா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன் மற்றும் அட்மா தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர், உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கொரோனா காலத்தில் கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவில் சார்பில் தினமும் மதியம் உணவு வழங்கப்பட்டது.
    • அவ்வப்போது மாணவ-மாணவிகளை அழைத்து பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    தென்காசி:

    கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    அகத்தியர், தேரையர் தங்கி வழிபாடு நடத்திய தலம். அகத்தியர் இங்குதான் முதன்முதலி்ல் பல்கலைக்கழகம் போல் பாடசாலை அமைத்தார். முதன்முதலாக கபால அறுவை சிகிச்சை நடந்த இடமும் இதுதான்.

    இக்கோவிலில் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெறும். மேலும் வைகாசி விசாகம், தமிழ்புத்தாண்டு, தமிழ்மாத கடைசி வெள்ளி வழிபாடு, பவுர்ணமி கிரிவலம், கிருத்திகை பூஜை போன்ற வையும் சிறப்பாக நடை பெறும்.

    இங்கு தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக் கிழமை, தமிழ் மாத கடைசிவெள்ளி, பவுர்ணமி நாளில் காலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இக்கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் ஆன்மிகப்பணியோடு அறப்பணியையும் செய்து வருகிறார். கடைசி வெள்ளி அன்று விவசாயம் செழிக்க வருண கலச பூஜை நடத்தப்படுகிறது. தமிழ்புத்தாண்டு அன்று சிறந்த சமூக சேவகர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்படுகிறது.

    கொரோனா காலத்தில் கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவில் சார்பில் தினமும் மதியம் உணவு வழங்கப் பட்டது. மேலும் பொதுநல ஊழியர்களுக்கு முக்கசவசம், கிருமி நாசினியும் இலவசமாக வழங்கப்பட்டது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் இறைஅருளோடு பொது அறிவையும் பெற்றுச் செல்லும் வகையில் நூல்நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு ஆன்மிக புத்தகங்கள் மட்டுமின்றி, பொதுஅறிவு நூல்களும், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளன. மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு பயிற்சியும் அவ்வப்போது அளிக்கப்படுகிறது.

    மேலும் காவல்துறை, ராணுவம் போன்ற பணிகளுக்கு செல்ல விரும்புவோருக்காக உடற்பயிற்சி மைதானமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    அவ்வப்போது பக்கத்து ஊர்களில் இருக்கும் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.

    கடந்த கோடை விடுமுறையின்போது ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி, விளை யாட்டுப்போட்டி, கிராமிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    தோரணமலை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன் - ஆ சந்திரலீலா வாழ்ந்த வீட்டை முத்துமாலைபுரத்தில் இலவச மாலை நேர படிப்பகமாக மாற்றி மாணவ- மாணவிகள் பயன் பெரும் வகையில் உருவாக்கியுள்ளார்கள் .

    அதேபோல் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஊர் இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உலக சுற்றுலாத்தினத்தையொட்டி கடந்த 24-ந் தேதி சுற்றுலாத் துறையும், தோரணமலை நிர்வாகமும் இணைந்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் தோரணமலை கோவில் நடத்தப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்ப கராமன் செய்திருந்தார்.

    • மருத்துவர் சந்தியா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை செய்தார்.
    • முகாமில் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் நெல்லை கேன்சர் சென்டர் மருத்துவர் சந்தியா கலந்து கொண்டு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை செய்தார். முகாமில் புற்றுநோய் தடுக்கும் விதமாக விதமாக பிளாஸ்டிக் பை ஒழித்து மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சி தலைவர் முகம்மது உசேன், துணை தலைவர் ராமலெட்சுமி சங்கிலி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மக்கள் கல்வி நிறுவனம் செய்திருந்தது.

    • ஆதர்ஸ் வித்யாலயா பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் ரத்தசோகை கண்டறியும் முறை பற்றி விளக்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஆதர்ஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பரகத் சுல்தானா தலைமை தாங்கினார். திட்ட மேற்பார்வையாளர்கள் சுப்புலட்சுமி, இந்திரா, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் மாரிச்செல்வி வரவேற்று பேசினார். முகாமில் ரத்தசோகை கண்டறியும் முறை பற்றியும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொள்ளுதல், மாதத்திற்கு ஒருமுறை கிருமி நாசினியை உட்கொள்ளுதல் பற்றியும் மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. முடிவில் பள்ளி துணை முதல்வர் பொன் மேரி நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாட்டினை பள்ளி தாளாளர் ஐசக் பாக்கியசாமி செய்திருந்தார்.

    ×