search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் நிதிஉதவி-முன்னாள் மாவட்ட செயலாளர் வழங்கினார்
    X

    பாலமுருகனின் தந்தையை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி.

    கடையம் அருகே விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் நிதிஉதவி-முன்னாள் மாவட்ட செயலாளர் வழங்கினார்

    • பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது காட்டு மிளா மோதி விபத்தில் சிக்கினார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தென்காசி:

    கடையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாதாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது காட்டில் இருந்து குறுக்கே வந்த காட்டு மிளா மோதி விபத்தில் சிக்கினார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் பாலமுருகனின் தந்தையை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தி.மு.க. சார்பில் ரூ. 5 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஆலங்குளம் முன்னாள் துணை சேர்மன் தங்க செல்வம், ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் சுந்தரம், ராஜதுரை, கடையம் பெரும்பத்து ஊராட்சி தலைவர் பொன்சீலா பரமசிவம், அவைத்தலைவர்கள் ரவி (கடையம்வடக்கு ) கே.பி.என்.சேட், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வின்சென்ட் (கடையம் தெற்கு), மாவட்ட பிரதிகள் அய்யன்சாமி, முகம்மது யாகூப், அன்பழகன், கடையம் வடக்கு ஒன்றிய பொருளாளர் அஜீஸ் அகமது, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரம்யா ராம்குமார், சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி, மாரி இசக்கிகுமார், முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜெயராணி அண்ணாதுரை, அகமது ஈசாக், மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் ஆதம் சுபேர், பேரூர் கவுன்சிலர் சந்திரன், முதலியார்பட்டி முகம்மது, குணா, லெட்சுமணன், ராஜபாண்டி, கடையம் அரசு ஒப்பந்த்தாரர் முருகன், வடமலைபட்டி மகாராஜன், சேர்மலிங்கம், கடையம் ஊராட்சி உறுப்பினர் கமல் முருகன், அருணாச்சலம்பட்டி ராஜேந்திரன், நவீன் , வெய்க்கால்பட்டி பால்ராஜ், பண்டாரகுளம் கருத்தபாண்டி, சம்பன்குளம் ஊராட்சி தலைவர் ஜன்னத் சதாம், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பிவீ கோதர் மைதீன், ரவணசமுத்திரம் தளபதி பீர், ஆம்பூர் மூர்த்தி, விவசாய தொழிலாளர் அணி கருணாநிதி, அமைப்பு சாரா ஓட்டுனர் துணை அமைப்பாளர் மேசியா ஜெயசிங், ஓட்டுனர் பூதத்தான், வெள்ளப்ப னேரிப்பட்டி செந்தூர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×