search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே வடமலைப்பட்டியில் கபடி போட்டி - முன்னாள் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்
    X

    கடையம் அருகே வடமலைப்பட்டியில் கபடி போட்டி - முன்னாள் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்

    • நிகழ்ச்சியில் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
    • விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் ஊக்கப்பரிசு வழங்கிய சிவபத்மநாதனுக்கு ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    தென்காசி:

    கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டியில் பி.கே. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 4-வது ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது.

    கபடி போட்டி தொடக்கம்

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி தலைவருமான ரவிச்சந்திரன், வெங்கடாம் பட்டி ஊராட்சி தலைவர் ஷாருகலா ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ஆவுடை கோமதி, மகேஸ்வரி சத்தியராஜ், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் அய்யன்சாமி, முகமது யாகூப், அன்பழகன், கடையம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட், கடையம் வடக்கு ஒன்றிய முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் செல்வன், தொண்டரணி தலைவர் வெங்கடேசன், சிறுபான்மை அணி ஆதம் சுபேர், உதயநிதி நற்பணி மன்றம் அசிம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியாசிங், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் தங்கச்செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால், வெய்க்காலிபட்டி கிளை செயலாளர் பால்ராஜ், நிர்வாகிகள் நவீன்கிருஷ்ணா, பால்ராஜ், ராஜாமணி, கோவில்பிள்ளை, ஜெயராஜ், ராபர்ட், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் கார்த்திக், சங்கர் ராம், பன்னீர், முத்து பாண்டி, பூதத்தான், வடமலைபட்டி ஆதிலிங்கம், சங்கர்ராம், மகாராஜா, சுமன், சிவசந்திரன், அருணாசலம், சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விளையாட்டு போட்டி நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற்றுத்தந்ததுடன், விளையாட்டு வீரர்களை ஊக்கப் படுத்தும் வகை யில் ஊக்கப்பரிசு வழங்கிய முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனுக்கு ஊர் பொதுமக்கள், விளையாட்டு குழுவினர் திரண்டு வரவேற்பு அளித்து, நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×