search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவி அருணன்"

    • கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பல பகுதிகள் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாநில கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும்.

    கடையம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்காசி, அம்பை சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கனிம வளங்களை நமக்காக மட்டுமல்லாமல் நமது வருங்கால சந்ததி யினருக்காகவும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலும், அவசியத்திலும் இருக் கிறோம்.

    கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள பல பகுதிகளை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து அங்கிருந்து கனிம வளங்கள் எடுப்பதற்கு தடை செய்யும் விதத்தில் அங்குள்ள குவாரிகளை மூடிவிட்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகத்தில் இருந்து அதி கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்ள் கொண்டு செல்கின்றனர்.

    தமிழகத்திலும் அதே போல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தமிழகத்தின் வளத்தை பாதுக்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் இது குறித்த ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்து மாநில கனிம வளங்களை நமது தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வழி செய்வதுடன் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு நிரந்தரமாக தடை விதிப்பதற்கும் சட்டம் இயற்ற வேண்டும்.

    எனவே வருகிற 9-ந் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கல் குவாரிகள் நடத்துவதற்கு அரசு ஏராளமான விதி முறைகளை வகுத்துள்ளது என்று முன்னாள் எம்.எல்.ஏ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    • அபராதம் விதிக்கப்பட்டவர்கள் யாரும் அபராதத்தை செலுத்தவில்லை என ரவி அருணன் கூறியுள்ளார்.

    கடையம்:

    தென்காசி, அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கல்குவாரிகள்

    கல் குவாரிகள் நடத்துவதற்கு அரசு ஏராளமான விதி முறைகளை வகுத்துள்ளது.

    இந்த விதிமுறைகள் கனிம வளங்களை பாதுகாக்க மட்டுமல்ல அந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, அந்தப் பகுதியில் வாழும் மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டவை.

    அனுமதி கேட்டு

    நெல்லை மாவட்டத்தில் விதிகளை மீறிய குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அது தொடர்ந்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதிய குவாரிகள் தொடங்க ஏராளமான விண்ணப்பங்கள் அனுமதி கேட்டு காத்து கொண்டிருக்கின்றன.

    கடுமையாக நிபந்தனை

    எனவே அவற்றை பரிசீலனை செய்து கடுமை யான நிபந்தனை விதித்து அவை இயங்குவதற்கு அனுமதி அளித்தால் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் தற்போது நிலவும் கனிமவள தட்டுப்பாடும் நீங்கும்.

    கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங் களுக்கு கனிம வளம் கடத்தப் படுவதை தடுத்தாலே கனிம பொருட்களின் விலை வெகுவாக குறையும்.

    எச்சரிக்கை

    ஏற்கனவே தவறு செய்தவர்களின் குவாரிகள் மூடப்படுமாயின் அது மற்ற குவாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும். விதிகளை மீறி குவரிகளை இயக்கியதால் அபராதம் விதிக்கப்பட்டவர்கள் யாரும் அபராதத்தை செலுத்தவில்லை.

    மேலும் தங்களது உறவினர்கள் பெயர்களில் வேறு புதிய குவாரிகளை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே புதிய குவாரி உரிமம் வழங்கும் போது அவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டும.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  

    ×