search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரவணசமுத்திரம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
    X

    ரவணசமுத்திரம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

    • நிகழ்ச்சியை ஹாஜி முகமது அசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

    கடையம்:

    கடையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலு வலர் பழனிக்குமார் மேற்பார்வையில், ரவண சமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் தலைமையில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    சேவாலாயா சங்கிலி பூதத்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்ற துணை தலைவர் ராம லெ ட்சுமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியை ஜமாத் தலைவர் ஹாஜி முகமது அசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஊராட்சிமன்ற உறுப்பினர் மொன்னா மொகமது எர்சாத் மருத்துவ அட்டை வழங்கி னார். முகாமில் மீரான், சாகுல்அமீது, ஜெய்லானி, தளபதி பீர், சின்ன ஜெய்லானி, அகமது ஷா, முகமது ஷீபக், மசூது அலி ஆகியோர் கலந்து கொ ண்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோ தனை செய்ய ப்பட்டது.

    முகாமில் ஈ.சி.ஜி பரிசோதனை, சிறப்பு மருத்துவம், எலும்பு மருத்துவம் பொதுமருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம் பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காசநோய், தொழுநோய், குடும்பநலம் குறித்த கண்கா ட்சி அமைக்கப்பட்டது. நடமாடும் எக்ஸ்ரே மூலம் பயனாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் குறித்த உறுதி மொழி எடுக்கப்ப ட்டது.

    முகாமில் மருத்துவர்கள் முகமது உமர், பாண்டியராஜன், அமுதா, சூரிய பிரபா, தமிழ் முதல்வி, ஆஷா பர்வின் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் முகாமில் சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வா ளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×