search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சிகளுக்கு 6-வது நிதிக்குழு மானியத்தை நிறைவேற்ற வேண்டும்-பஞ்சாயத்து கூட்டமைப்பில் தீர்மானம்
    X

    கடையம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் 25-வது கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    ஊராட்சிகளுக்கு 6-வது நிதிக்குழு மானியத்தை நிறைவேற்ற வேண்டும்-பஞ்சாயத்து கூட்டமைப்பில் தீர்மானம்

    • 15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து வரும் தொகையை ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.
    • அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தாமல் உள்ளது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் 25-வது கூட்டம் அதன் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை யில் நடைபெற்றது. ரவண சமுத்திரம் ஊராட்சி தலைவர் முகம்மது உசேன், கீழக்கடையம் ஊராட்சி தலைவர் பூமிநாத், ஏ.பி.நாடானூர் ஊராட்சி தலைவர் அழகுதுரை, முதலியார்பட்டி ஊராட்சி தலைவர் மைதீன் பீவி அசன் , தெற்கு கடையம் ஊராட்சி தலைவர் முத்துலெட்சுமி ராமதுரை, வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் ஸாருகலா ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் , ஊராட்சி தலைவர்களின் 3-வது ஆண்டு பதவி ஏற்பு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி நிதியில் இருந்து பணிகளை தேர்வு செய்ய ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

    இதனை கடையம் ஊராட்சி ஒன்றியத்திலும் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், டி.என். பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்துவிட்டு மீண்டும் பி.எப்.எம்.எஸ்.முறையை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிக்கான பணி நியமன உரிமம் ஊராட்சி தலைவர்களுக்கே வழங்க வேண்டும்.15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து வரும் தொகையை, குடிநீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணத்திற்கு பிடிப்பதை ரத்து செய்து விட்டு, ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

    மேலும் ஜல் ஜீவன் திட்டத்தை ஊராட்சி தலைவர்களே நிறைவேற்ற வேண்டும் என்று கருத்து கூறிய உயர்நீதி மன்ற நீதிபதி யின் கருத்திற்கு கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவிப்பது, கலைஞர் உரிமை திட்டத் திற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதோடு, விடுபட்ட தகுதி உள்ள மகளிர்களுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் 6-வது நிதிக்குழு மானியத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு கொண்டு வந்த அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடை முறைப்படுத்தாமல் உள்ளது. அதனை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் ,கீழாம்பூர் மாரிசுப்பு, அடைச்சாணி மதியழகன், திருமலை யப்புரம் மாரியப்பன், மடத்தூர் முத்தமிழ் செல்லி ரஞ்சித், மந்தியூர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில் தெற்கு மடத்தூர் ஊராட்சி தலைவர் பிரேம ராதா ஜெயம் நன்றி கூறினார்.

    Next Story
    ×