search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏக்நாத் ஷிண்டே"

    • சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது.
    • ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.

    தானே :

    தானேயில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மண்ணின் மைந்தர்களின் உரிமைக்காக போராட்டங்களை நடத்தி வந்த சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது மண்ணின் மைந்தர்களின் குறிப்பாக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு கண்காட்சிகளை நடத்துகிறோம். இளைஞர்கள் இதன் ஒரு பகுதியாக மாறி உள்ளனர். இதனால் புதிய மற்றும் வலுவான சிவசேனா தற்போது உருவாகி வருகிறது.

    பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலாசாகேப் பஞ்சி சிவசேனாவின் கூட்டணி அரசு மக்களை பிளவுபடுத்துவதை தவிர மராட்டியத்திற்கு வேறு எதுவும் செய்யவில்லை.

    இந்த துரோகிகளின் அரசாங்கம் அடுத்த 2 மாதங்களில் கவிழ்ந்துவிடும். நம்மை விட்டு பிரிந்தவர்கள் துரோகிகள், எங்களுடன் கைகோர்த்து நிற்பவர்கள் உண்மையான சிவசேனா தொண்டர்கள்.

    வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் திட்டங்களை பற்றி சிந்திக்காமல், எப்படி அரசியல் செய்யலாம் என்று யோசிப்பதிலேயே ஆளும்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இதுவரை ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியை சேர்ந்த ராஜன் விச்சாரே, 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    • சந்திரசேகர் பவன்குலே நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
    • அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    மும்பை :

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்த போது நாக்பூரில் குடிசைப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த பிரச்சினையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா தான் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், " முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா கட்சி தான். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் பவன்குலே, பிரவீன் தட்கே, நாகோ கானர் நாக்பூர் நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஆதரவாளர்களான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயை அம்பலப்படுத்த விரும்பியது தெளிவாக தெரிகிறது.

    நான் பா.ஜனதா மாநில தலைவராக இருக்கும் போது தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக பார்க்க விரும்புகிறேன் என சந்திரசேகர் பவன்குலே கூறிய மறுநாளே நாக்பூர் நில மோசடி அம்பலமாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நிலமோசடியை திசைத்திருப்ப திஷா சலியன் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    விரைவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யிடம் புகார் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
    • மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர்.

    நாந்தெட் :

    மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உருவான மகா விகாஸ் அகாடி ஆட்சி, சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணியின் அதிருப்தியால் கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 40 பேரின் உதவியுடன், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார். இந்த ஆட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    இந்தநிலையில் நாந்தெட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே கூறியதாவது:-

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஏன் இன்னும் மந்திரி சபையை விரிவாக்கம் செய்யவில்லை? ஏன் என்றால் அவ்வாறு செய்தால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். ஊழல் மற்றும் அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். என்ன நடக்கிறது எந்த மராட்டியத்தில்?.

    முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சியை முதல்-மந்திரி ஏக்நாத் ஷண்டே தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் அவர் உள்பட தற்போது பதவியில் உள்ள பல மந்திரிகளும் மகா விகாஸ் அகாடி அரசின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதாவில் தலா 9 மந்திரிகள் உள்ளனர்.

    மாநிலத்தில் அதிகபட்சமாக 43 மந்திரிகள் வரை இருக்கலாம்.

    • சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

    மும்பை :

    உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை வலுப்படுத்தும் நோக்கில் அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

    நேற்று அவர் அகோலாவில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    துரோகிகளை கொண்ட மராட்டிய அரசு வரும் மாதங்களில் கவிழும். இதனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

    ஷிண்டே தலைமையிலான அரசு 4 மிகப்பெரிய தொழில் திட்டங்களை இழந்து உள்ளது. அந்த திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதன் மூலம் மராட்டியம் 2 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழந்து உள்ளது.

    ஷிண்டேக்கு நெருக்கமாக இருக்கும் தொழில் துறை மந்திரி உதய் சாமந்தின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளது. அவரால் மராட்டியம் தொழில் முதலீடு வாய்ப்புகளை தொடர்ந்து இழந்து வருகிறது.

    மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேயா அல்லது தேவேந்திர பட்னாவிசா என்ற குழப்பம் அனைவரிடமும் உள்ளது. சட்டவிரோதமாக அமைந்த இந்த அரசு விவசாயிகளின் நலனை காக்க தவறிவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்தல் ஆணையம் சிவ சேனாவின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில், அம்பு சின்னத்தை முடக்கியது.
    • ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது

    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை முடக்கியது.

    மேலும் 2 தரப்பினரும் வேறு பெயர், சின்னத்துடன் செயல்பட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதில் அவர்கள் கடாயுதம், முரசு, வாள் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்ப்பித்தது. இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயரை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், ஷிண்டே அணியினர் கோரிய 3 சின்னங்களையும் நிராகரித்தது. புதிய சின்னங்களின் பட்டியலை அளிக்கும்படி கோரியது.

    அதன்படி சின்னம் தொடர்பாக விருப்ப சின்னங்களின் புதிய பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அரசமரம், வாள், சூரியன் ஆகிய 3 சின்னங்களை விருப்பமாக கோரி தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி முறையிட்டிருந்தது. இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இரட்டை வாள் மற்றும் கேடயத்தை சின்னமாக ஒதுக்கி உத்தரவிட்டது.

    • அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • ஷிண்டே அணியினர் கோரிய சின்னங்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை முடக்கியது. மேலும் 2 தரப்பினரும் வேறு பெயர், சின்னத்துடன் செயல்பட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவிடுத்து உள்ளனர். இதில் அவர்கள் கடாயுதம், முரசு, வாள் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்ப்பித்துள்ளது.

    இந்நிலையில், ஷிண்டே அணிக்கு பாலா சாகேப் சிவசேனா என்ற பெயரை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், ஷிண்டே அணியினர் கோரிய 3 சின்னங்களையும் இன்று நிராகரித்தது. மேலும் நாளை புதிய சின்னங்களின் பட்டியலை அளிக்கும்படி கோரியுள்ளது.

    • அதிகார ஆசைக்கும் ஒரு எல்லை உள்ளது.
    • உங்களின் ஆதரவுடன் சிவசேனா மீண்டும் எழுச்சி பெறும்.

    மும்பை :

    மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியின் விலகலால் கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை இழந்தார்.

    இதைதொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் கைகோர்த்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இதன்பிறகு சிவசேனா 2-ஆக பிளவுபட்டுள்ளது.

    இந்த பெரும் அரசியல் மாற்றத்திற்கு பிறகு இந்த ஆண்டு தசரா பொதுக்கூட்டம் நேற்று மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஏக்நாத் ஷண்டேவை கடுமையாக சாடினார். துரோகிகள் என்று அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் ஒருபோதும் மாறாது. காலத்தால் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    காலம் மாறும்போது ராவணனின் முகமும் மாறுகிறது. இன்று ராவணனின் உருவம் துரோகிகள் தான். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சமயத்தில் கட்சியின் பொறுப்பை ஏக்நாத் ஷிண்டேவிடம் ஒப்படைத்தேன். ஆனால் அவர் எனக்கு எதிராக சதி செய்தார். இனி ஒருபோதும் அவரை எங்களின் காலின் நிழலில் சேர்த்துக்கொள்ள மாட்டேன்.

    அதிகார ஆசைக்கும் ஒரு எல்லை உள்ளது. துரோக செயலுக்கு பின்னர் அவர் இப்போது கட்சி பெயரையும், அதன் சின்னத்தையும் விரும்புகிறார். மேலும் கட்சி தலைவர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

    ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது குறித்த பா.ஜனதாவின் வாக்குறுதி மீறப்பட்ட காரணத்தால் தான் பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிக்க நான் பாரம்பரிய எதிரிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கினேன்.

    பா.ஜனதா கட்சி எங்களுக்கு இந்துத்வா குறித்து பாடம் நடத்த தேவையில்லை.

    பா.ஜனதா தலைவர்கள் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அவரது பிறந்தநாளில் அழைப்பிதழ் இன்றி சென்று சந்தித்தது மட்டும் இன்றி பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னாவின் கல்லறைக்கு முன்னால் வணங்கி நின்றனர்.

    வறுமை வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்துத்வா பிரச்சினையை பா.ஜனதா எழுப்புகிறது.

    இன்று என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் உங்களின் ஆதரவுடன் சிவசேனா மீண்டும் எழுச்சி பெறும். நான் மீண்டும் சிவசேனாவை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்குவேன். அதற்கு ஒவ்வொரு தேர்தலிலும் துரோகிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவசேனா கட்சி என்பது ஒரு தனியாருக்கு சொந்தமான நிறுவனம் இல்லை.
    • நான் செய்தது துரோகம் இல்லை. அது ஒரு போராட்டமாகும்.

    மும்பை :

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியின் பிரிவு காரணமாக மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது. ஆட்சியை கைப்பற்றிய ஷிண்டே அணி நாங்கள் உண்மையான சிவசேனா என்று கூறி வருகிறது.

    மேலும் கட்சியின பெயர் மற்றும் சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரி உள்ளது.

    இந்தநிலையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தசரா பொதுக்கூட்டத்தை ஷிண்டே தலைமையிலான அணி பாந்திரா குர்லா காம்பிளக்ஸ் வளாகத்தில் நடத்தியது.

    இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:-

    2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாநில வாக்காளர்கள் சிவசேனா மற்றும் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க தேர்வு செய்தனர். ஆனால் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கி மக்களுக்கு துரோகம் செய்தார்.

    பால்தாக்கரே பாரம்பரியத்தின் உண்மையான வாரிசுகள் யார் என்பதை காட்டுவதற்கு எனது தசரா பேரணியில் திரளான மக்கள் திரண்டிருப்பதே போதுமான சாட்சியாகும்.

    சிவசேனா கட்சி என்பது ஒரு தனியாருக்கு சொந்தமான நிறுவனம் இல்லை. 56 ஆண்டுகாலமாக இந்த கட்சியை கட்டி எழுப்பியவர்கள் சாதாரண சிவசேனா தொண்டர்கள் தான்.

    மகா விகாஸ் அகாடி ஆட்சியை நாங்கள் சதி செய்து வீழ்த்தியதாக சிலர் கூறுகின்றனர். நான் செய்தது துரோகம் இல்லை. அது ஒரு போராட்டமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நடத்திய பேரணியில் உத்தவ் தாக்கரேவின் சகோதரர் ஜெய்தேவ் தாக்கரே மற்றும் மனைவி ஸ்மிதா தாக்கரே, மறைந்த பால் தாக்கரேவின் பேரன் நிகார் தாக்கரே, பால்தாக்கரேவின் தனிப்பட்ட உதவியாளராக நீண்டகாலம் பணியாற்றிய சம்பா சிங் தாபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

    • இந்த ஆண்டுக்கான நவராத்திரி வழிபாடு நேற்று தொடங்கியது.
    • நவராத்திரி ஊர்வலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார்.

    மும்பை :

    தானே தெம்பி நாக்கா பகுதியில் நவராத்திரி வழிபாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இங்கு நவராத்திரி மண்டல் ஆரம்பத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் அரசியல் குருவான ஆனந்த் திகேவால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி வழிபாடு நேற்று தொடங்கியது. முன்னதாக நடந்த நவராத்திரி ஊர்வலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். மேலும் அவர் தேவி சிலையை வரவேற்றார்.

    பின்னர் ஏக்நாத் ஷிண்டேயிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது சிவசேனாவில் இருந்து மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உங்கள் அணியில் சேர இருப்பதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் யார்-யார்? எங்கள் அணியில் சேருகிறார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது" என்றார்.

    • ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர்.
    • சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    மும்பை :

    ராஜ் தாக்கரேயை அவரது வீட்டுக்கு சென்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார். இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    சிவசேனா கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்தது. இதில் ஷிண்டே அணி, பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவையும் கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டவர்கள் ராஜ் தாக்கரேயை சந்தித்து இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முதல்-மந்திாி ஏக்நாத் ஷிண்டே தாதரில் உள்ள ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு சென்றார். விநாயகர் சதுர்த்தியையொட்டி முதல்-மந்திரி, ராஜ்தாக்கரே வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    எனினும் மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ராஜ்தாக்கரேயும் சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர் ஆவார். சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே தாதரில் உள்ள சிவசேனா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மனோகர் ஜோஷி வீட்டுக்கும் ஏக்நாத் ஷிண்டே சென்று அவரை சந்தித்தார்.

    • எதிர்க்கட்சிகள் ஏக்நாத் ஷிண்டேவை ‘ஒப்பந்த முதல்-மந்திரி’ என கிண்டல் செய்து வருகின்றனர்.
    • எனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள், சித்தாந்தம் மங்கிப்போன தன்மைக்கு அடையாளம்.

    மும்பை

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டவிரோதமானது என சிவசேனா குற்றம் சாட்டி வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் முதல்-மந்திரியை 'ஒப்பந்த முதல்-மந்திரி' என கிண்டல் செய்து வருவதாக தெரிகிறது.

    இந்தநிலையில் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எனது எதிரிகளால் நான் அடிக்கடி 'ஒப்பந்த முதல்-மந்திரி' என்று வர்ணிக்கப்படுகிறேன். மத்திய மந்திரி நாராயண் ரானே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார். ஆனால் நான் மக்கள் நலனை மட்டுமே எனது செயல்திட்டமாக வைத்து இருக்கிறேன்.

    எனவே மாநிலத்தை வளர்ச்சி, செழிப்பு மற்றும் மக்களின் நலனுக்காக நான் ஒப்பந்தம் எடுத்துள்ளேன் என்று கூறிக்கொள்கிறேன். காட்டிக்கொடுப்பவன் என எனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள், சித்தாந்தம் மங்கிப்போன தன்மைக்கு அடையாளம் ஆகும்.

    சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்திற்கும், மக்கள் ஆணைக்கும் எதிராக, அதிகாரத்திற்காக கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இயற்கைக்கு மாறான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டது யார்?

    சிவசேனா அதிருப்தி அணியை திரட்டியதன் மூலம் அரசியலமைப்புக்கு எதிராகவோ அல்லது சட்ட விரோதமாகவோ எதையும் நான் செய்யவில்லை. தவறை நான் திருத்தினேன்.

    சித்தாந்தம் மங்கிய தன்மைக்கு எனது பணிகளின் மூலம் நான் பதில் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொலைபேசியில் ஹலோ என்ற வார்த்தைக்கு பதில் வந்தே மாதரம் என்று கூறுமாறு கூறியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு பதில் அளித்த அவர், "வந்தே மாதரம் கூறியபடி நமது சுதந்திர போராட்ட வீரர்கள் தூக்கு மேடைக்கு சென்றனர்.

    நான் தொலைபேசியில் பதிலளிக்கும்போது ஹலோ சொல்ல வேண்டாம் என்று கேட்டதற்கு ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்" என்றார்.

    • உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா அதிருப்தி அணி தனித்து செயல்பட வாய்ப்பு உள்ளது.
    • தானே மாநகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா ஆட்சி செய்து வருகிறது.

    தானே :

    சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.

    இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் இணைந்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார். இந்தநிலையில் சிவசேனா அதிருப்தி அணியினர் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் விரைவில் மும்பை, தானே உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் சிவசேனா அதிருப்தி அணி தனித்து செயல்பட வாய்ப்பு உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தானேயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

    சிவசேனா அதிருப்தி அணி தான் உண்மையான சிவசேனாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தானே உள்ளிட்ட பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜனதாவுடன், உண்மையான சிவசேனா(அதிருப்தி அணி) கூட்டணி அமைத்து போட்டியிடும்.

    தானே மாநகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா ஆட்சி செய்து வருகிறது. வாக்காளர்கள் சரியானதை நிச்சயம் தேர்வு செய்வார்கள்.

    பாலாசாகேப் பால் தாக்கரே எப்போதுமே பா.ஜனதாவுடன், சிவசேனா கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினார். சிவசேனா காங்கிரசுடன் அல்லது தேசியவாத காங்கிரசுடன் இணைவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. நாங்கள் பாலாசாகேப்பை பின்பற்ற போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×