search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: ஏக்நாத் ஷிண்டே
    X

    சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: ஏக்நாத் ஷிண்டே

    • இந்த ஆண்டுக்கான நவராத்திரி வழிபாடு நேற்று தொடங்கியது.
    • நவராத்திரி ஊர்வலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார்.

    மும்பை :

    தானே தெம்பி நாக்கா பகுதியில் நவராத்திரி வழிபாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இங்கு நவராத்திரி மண்டல் ஆரம்பத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் அரசியல் குருவான ஆனந்த் திகேவால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி வழிபாடு நேற்று தொடங்கியது. முன்னதாக நடந்த நவராத்திரி ஊர்வலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். மேலும் அவர் தேவி சிலையை வரவேற்றார்.

    பின்னர் ஏக்நாத் ஷிண்டேயிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது சிவசேனாவில் இருந்து மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உங்கள் அணியில் சேர இருப்பதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் யார்-யார்? எங்கள் அணியில் சேருகிறார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது" என்றார்.

    Next Story
    ×