search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்பத்தி"

    • குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.
    • நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், திருக்கண்ணபுரம், கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஏ.டி.டி., கோ - 45, கோ - 51, பி.பி.டி., (ஆந்திரா பொன்னி) நெல் சாகுபடி செய்தனர்.

    அதில் பெரும்பாலான நிலங்களில் நெற்பயிர்களில் ஆணை கொம்பன் நோய், இலை சுருட்டு புழு, குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:-

    கடந்த சில ஆண்டுக்கு முன்னர் நெற்பயிர்களில் கதிர் வரும் சமயத்தில் ஆணை கொம்பன் நோய் பரவியது.

    இதனால், பயிர்களில் கதிர் வராமல், நெல் உற்பத்தி குறைந்து விட்டது. நடப்பாண்டு சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களில், இந்நோய் அறிகுறி காணப்படுகிறது.

    அதை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.

    நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகமாக உள்ளதால் இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லை.
    • பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணிசூழல் தொடர்பான மாநில மனித உரிமை கழக ஆய்வு கூட்டம் கோடி யக்காட்டில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி மற்றும் உப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களின் பணிச்சூழல், பணியில் இருக்கும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் ஆகிய குறைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

    இதுகுறித்து மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-

    உப்பள தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • வெளிநாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
    • இந்தியாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் சர்வதேச பின்னலாடை கண்காட்சிதொடங்கியது. இந்த கண்காட்சி குறித்து திருப்பூர் அனைத்து ஏற்றுமதி வர்த்தக அமைப்பின் தலைவர் இளங்கோவன் கூறும்போது, திருப்பூர் ஏற்றுமதியாளர்களில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பேர் வெளிநாட்டு வர்த்தக முகமைகளின் (பையிங் ஏஜென்சி) மூலமாக வர்த்தகம் செய்கிறார்கள். பெரும்பாலான ஏற்றுமதியாளருக்கு நேரடி வர்த்தகம் செய்யும் அளவுக்கு சர்வதேச சந்தை விவரம் முழுமையாக தெரியவில்லை. உற்பத்தியை தரமாக மேற்கொண்டாலும், மார்க்கெட்டிங் தொழில் திறன் குறைவு. வர்த்தக முகமைகளை அவர்கள் சார்ந்துள்ளனர். புதிய வாய்ப்புகளை உருவாக்க வர்த்தக முகமைகளுடன் கைகோர்த்து செயல்பட வேண்டியது அவசியமாகும். அனைவரும் இணைந்து 'பிராண்ட் திருப்பூர்' என்பதை புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரக்கொள்கையை பின்பற்றி 'பிராண்ட் திருப்பூர்' என்ற பெயரில் புதிய பிராண்ட் உருவாக்கப்படும்' என்றார்.

    டெல்லியை சேர்ந்த வர்த்தக முகமை அமைப்பின் ரோகிணி சூரி கூறும்போது, 'வர்த்தக முகமையுடன் இணைந்து கண்காட்சி நடக்கிறது. புதிய வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் மார்க்கெட்டிங் முக்கியம். சரியான சந்தைப்படுத்துதல் அமைந்துவிட்டால் வெற்றி எளிதில் கிடைக்கும். அதற்கு வர்த்தக முகமைகள் உதவ முன்வந்துள்ளன என்றார்.

    டெல்லி வர்த்தக முகவர் சஞ்சய் சுக்லா கூறும்போது, சாதகமான சூழல் நிலவுவதால் தற்போதைய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் உயர வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்கள், சார்பு நிறுவனங்கள், செலவினங்களை குறைத்து உற்பத்தியை பெருக்க வேண்டும். உற்பத்திக்கு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.) திட்டத்தில் அரசு சலுகைகளை பெற்று மதிப்புக்கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

    நிப்ட் முன்னாள் மாணவர் அமைப்பு தலைவர் ரோகித் கூறும்போது, திருப்பூர் நகரம் 35 கிலோ மீட்டர் சுற்றளவில் பனியன் தொழில்களை நடத்தி வருகிறது. சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து ஆர்டர்கள் திருப்பூருக்கு வரப்போகிறது. வெளிநாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    கைத்தறி ஆடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி அமைப்பின் தலைவர் அஜய் அகர்வால் கூறும்போது, 'பின்னலாடைத்துறையில் இந்தியாவின் போட்டி நாடுகளில் தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா நிறுவனங்கள், சீனாவில் இருந்து வெளியேற தொடங்கியுள்ளன. போட்டி நாடுகளுக்கான ஆர்டர் இந்தியாவுக்கு கிடைக்கும். இந்தியாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார்.

    • வேளாண் அதிகாரி விளக்கம்
    • விதை ஆய்வு முடிவின் அடிப்படையில் விதைக ளுக்கு சான்றட்டை பொருத்தப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் விதைப் பண்ணைக்கு பயன் படுத்தும் விதைக்குரிய ஆதாரம் மற்றும் விதை வாங்கியதற்கான ரசீதுடன் உரிய படிவத்தில் விதைப்பு அறிக்கைகள் தயார் செய்து, உரிய கட்டணம் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

    விதை உற்பத்தி செய்து சான்று பெற விரும்பும் விவ சாயிகள் நாகர்கோவிலில் உள்ள விதைச்சான்று மற் றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விதைப்பண்ணை வயல்களில் அனைத்து தொழில் நுட்பங்களும் தவறாது கடைபிடிக்கப்பட வேண் டும். பதிவு செய்யப்பட்ட விதைப் பண்ணைகள் விதைச்சான்று அலுவலர்களால் வயல் ஆய்வு மேற் கொள்ளப்படும்.

    அறுவடை நிலையிலும் விதைச்சான்று அலுவலரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வயல்மட்ட விதைகள் சுத்திக ரிப்பு நிலையம் கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்திட அனுமதி வழங்கப்படும். பின் சுத்திகரிப்பு நிலையத்தில் விதை சுத்திகரிக்கப்பட்டு விதைத்தரம் அறிவதற்கு விதை மாதிரிகள் எடுத்து விதை பரிசோதனை நிலை யத்திற்கு அனுப்பப்படும்.

    விதை ஆய்வு முடிவின் அடிப்படையில் விதைக ளுக்கு சான்றட்டை பொருத் தப்படும். இந்த சான்றட்டை பொருத்திய விதைகளை விவசாயிகள் தாங்களே பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுவதோடு, இதர விவசாயிகளுக்கும் இந்த தரமான விதைகளை விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க தங்கு கடல் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
    • பேராவூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அவசர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும்.

    பேராவூரணி:

    பேராவூரணி வேதாந்தம் திடலில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் "இடப்பங்கீடு எமது உரிமை விழிப்புணர்வு மாநாடு" நடைபெற்றது.

    மாநாட்டிற்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் தஞ்சை சாமி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் தஞ்சை முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சாரதி சதீஷ் வரவேற்றார்.

    வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்துசிறப்புரை ஆற்றினார்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முத்த ரையர்களுக்கு இடப்பங்கீடு வேண்டும்.

    அதில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் தனிப்பங்கீடு வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து பேசினார்.

    இந்த கூட்டத்தில், பேராவூ ரணி பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகம் இருப்பதால் அரசு கயிறு தொழிற்சாலை மற்றும் கொப்பரை கொள்முதல் நிலையம் செயல்படுத்த வேண்டும்.

    மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க தங்கு கடல் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    மீனவர்களுக்கு உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும். பேராவூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அவசர சிகிச்சை பிரிவு தொடங்கிட வேண்டும்.

    இரவு நேரங்களில் கூடுதல் மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்குவதற்கு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது.
    • பாய் நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் பணி நெடும்பலம் அரசு விதை பண்ணையில் தொடங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு விதை பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி 10 ஏக்கர் மற்றும் மாப்பிள்ளை சம்பா 5 ஏக்கர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள நெடும்பலம், கீராந்தி, தீவாம்பாள்பட்டிணம் ஆகிய அரசு விதை பண்ணைகளில் தலா 15 ஏக்கர் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை வழியில் சாகுபடி செய்து விதை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சத மானிய விலையில் வழங்குவதற்கு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது.

    இதன் முதல் கட்டமாக 5 ஏக்கர் நில பரப்பில் மாப்பிள்ளை சம்பா எந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்யப்ப ட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக தூயமல்லி பாரம்பரிய நெல் ரகத்தினை 10 ஏக்கர் பரப்பளவில் எந்திர நடவு முறையில் செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தில் நடவு செய்வதற்கு தேவையான நாற்றுகளை பாய் நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் பணி நெடும்பலம் அரசு விதை பண்ணையில் துவங்கப்பட்டது.

    இப் பணியை மாவட்ட வேளாண்மை இயக்குனர் (பொ) ரவீந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாய் நாற்றங்காலில் பயன்படுத்த ப்படும் விதை நெல்லில் சூடோமோனஸ் மற்றும் உயிர் உரங்கள் கலந்து விதை நேர்த்தி செய்யும் செயல் விளக்கத்தினை பண்ணை வேளாண்மை அலுவலர் செந்தில் மற்றும் திருத்துறைப்பூண்டி துணை வேளாண்மை அலுவலர் ரவி செய்து காட்டினர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை ஏழுமலை, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன் கலந்து கொண்டனர்.

    • அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகள் இன்று இயங்கவில்லை.
    • மற்ற 3 அலகுகள் இயங்கி வருவதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகள் இன்று இயங்கவில்லை. இதனால் அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 420 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    எனினும் மற்ற 3 அலகுகள் இயங்கி வருவதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அனல்மின் நிலைய அதிகாரி களிடம் கேட்டபோது காற்றாலை மூலம் தற்போது அதிகளவு மின்சாரம் கிடைத்து வருவதால் அனல்மின் நிலையத்தின் 2 அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரி யாக 8000 மெகாவாட் முதல் 12000 மெகாவட் வரை, மின் தேவை இருந்து வருகிறது.
    • மாலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக்தில் மழை, தொடர் விடுமுறையால் மின் தேவை குறைந்த நிலையில், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தால், கடந்த ஞாயிறு அன்று அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி 90சதவீதத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டது.

    தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரி யாக 8000 மெகாவாட் முதல் 12000 மெகாவட் வரை, மின் தேவை இருந்து வருகிறது. மின் தேவையை பூர்த்தி செய்ய அனல் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், காற்றாலை மின்சாரம், சூரிய மின் சக்தி, அணு மின் நிலையங்கள், மத்திய தொகுப்பு ஆகியவற்றில் இருந்து, தேவைக்கேற்ப மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, மழைக்காலம் என்பதால் விவசா யத்திற்கான மின் தேவை

    வெகுவாக குறைந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த 19ந் தேதி கோகுலஷ்டமி விடுமுறை தொடங்கி, நேற்று முன்தினம் (21ந் ேததி) வரை தொடர் விடுமுறையாக அமைந்தது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை பெரும்பா லும் கடந்த 3நாட்களாக மூடப்பட்டிருந்தன. இதுபோன்ற காரணங்களால், தமிழக அனல் மின் நிலையங்களில் 21ந் தேதி மின் உற்பத்தி 90 சதவீதத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில், வட சென்னையின் முதல் பிரிவு அனல் மின் நிலை யத்தில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 3 அலகுகள், 2வது பிரிவில் தலா 600 மெகா வாட் திறன் கொண்ட 2 அலகுகள், தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5அலகுகள், மேட்டூரில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள், 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு என மொத்தம் 4320 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் உள்ளது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி காற்றாலைகளில் 5000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்தது.

    இந்நிலையில், தொடர் விடுமுறையால் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மின் தேவை கணிசமாக குறைந்துவிட்டது. மழை காரணமாக, விவ சாயத்திற்கான மின் தேவையும் குறைந்தி ருக்கிறது. இதுபோன்ற காரணங்களால், வட சென்னை முதல் பிரிவில் 210மெகா வாட் அலகில் மட்டுமே மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. வட சென்னை 2-வது பிரிவு, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் அனைத்து அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    அனல் மின் நிலையங்களில் மொத்தம் 4320 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் இருந்தும், மின் தேவை குறைந்ததால், சராசரியாக 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

    பணி நாளான நேற்று மதியம் வரையிலும் கூட மின்தேவை அதிகரிக்கா மல் இருந்தது. பின்னர் வட சென்னையில் 600 மெகா வாட் அலகில் ஒன்று, தூத்துக்குடியில் 2அலகுகள், மேட்டூரில் 210 மெகாவாட் அலகுகள் 2என படிப்படியாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, மாலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது. தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றனர்.

    • தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்ப–தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம்வி ளங்குகிறது.

    அரசு இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

    இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

    தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து சுற்றுச்சூழலுக்கு எவ்வகையிலும் மாசு ஏற்படுத்தாத நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.

    மேலும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

    இது முதல்-அமைச்சரின் கனவுத் திட்டம் ஆகும்.

    எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும். தொழில்முனைவோரும்

    வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், அனைத்து தொழில் முனைவோரும் முன்வரவேண்டும்.

    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி- துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம், No:30/3 நவலடியான் காம்ப்ளக்ஸ், முதல் தளம், தாந்தோணிமலை கரூர் - 639005. கைபேசி எண்: 9444656445, 9092590486.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
    • தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர்வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும்.

    1949-ம் ஆண்டு தொடக்க பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

    இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்து வதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    அதன்படி தஞ்சாவூர் கிளை அலுவலகத்தில் (No.2854, NGK அபார்ட்மெண்ட், நாஞ்சிக்கோட்டை ரோடு பழைய அருள் தியேட்டர் எதிரில், தஞ்சாவூர்- 613001) குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

    அடுத்த மாதம் 2-ந் தேதி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

    இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.

    இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    மேலும் தகவலுக்கு 04362- 274230, 230465 / 9789610260, 9442540854 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கன மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • 18 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் பூலாம்பட்டி கதவணையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் மேலாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் பூலாம்பட்டி கதவணையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மின் நிலையத்தில் வழக்கமாக 30 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். அதன்படி இன்று மதியம் நிலவரப்படி 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

    • சேலத்தில் தான் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது.
    • 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக ஆலைகள் உள்ளன.

    சேலம்:

    சேலத்தில் கரும்புச் சாறினால் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு பொது மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் சேலத்தில் தான் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் காமலாபுரம், ஓமலூர், நாலுகால்பாலம், வெள்ளாளப்பட்டி, கருப்பூர், தும்பல், டேனிஸ்பேட்டை, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக ஆலைகள் உள்ளன.

    இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தின் பல இடங்களுக்கும் தவிர இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆடி மாதத்தையொட்டி வெல்லம்அதிகளவில் தேவைப்பட்டதால் கடந்த 6 மாதங்களில் ஜூன், ஜூலை வழக்கத்தைவிட வெல்லம் உற்பத்தியை அதிகப்படுத்தினர்.

    உற்பத்தி செய்யப்பட்ட வெல்லம் அவ்வப் போது விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆடிப்பண்டிகையை தொடர்ந்து, வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியும், செப்டம்பர் 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கி, அக்டோபர் 4-ந் தேதி ஆயுதபூஜை விழாவும் நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வெல்லம் ஆலைகளில் வெல்லம் உற்பத்தியை வேகப்படுத்தி யுள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

    சேலம் மாவட்டத்தில் கருப்பூர்,ஓமலூர், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் தினசரி 50 முதல் 60 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வெல்ல மண்டிக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்கு ஏலம் எடுக்க சேலம் மற்றும் தமிழகத்தில் பிற பகுதிகளில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருகை தருகின்றனர்.தொடர்ந்து அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை உற்பத்தியை வேகப்படுத்தி யுள்ளோம்.

    தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. மண்டியில் 30 டன் வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் வெல்லம் 60 சதவீதம் பெங்களூருக்கும், மீதமுள்ள 40 சதவீதம் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் (1250 முதல்1350 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு உற்பத்தியாளர்கள் கூறினர்.

    ×