search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமம்"

    • கட–லூ–ரில், வாகன நிறுத்–தம், கழி–வ–றைக்கு கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால் உரி–மம் ரத்து செய்–யப்–படும் என்று மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா எச்–ச–ரிக்கை விடுத்–துள்–ளார்.
    • குத்–த–கை–தா–ரர் அதிக கட்–ட–ணம் செலுத்த கேட்–டால், மாந–க–ராட்–சிக்கு உட–ன–டி–யாக புகார் தெரி–விக்–க–லாம். இதை மீறி யாரே–னும் கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால், குத்–தகை உரி–மம் ரத்து செய்–யப்–படும்.

    கட–லூர்:

    கட–லூ–ரில், வாகன நிறுத்–தம், கழி–வ–றைக்கு கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால் உரி–மம் ரத்து செய்–யப்–படும் என்று மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா எச்–ச–ரிக்கை விடுத்–துள்–ளார்.

    கட–லூர் மாந–க–ராட்–சிக்–குட்–பட்ட பகு–தி–களில் செயல்–படும் கட்–டண கழி–வறை, வாகன நிறுத்–து–மி–டங்–கள், பூங்கா நுழைவு கட்–ட–ணம், வாக–னங்–களில் கொண்டு வந்து பொருட்–களை விற்–பனை செய்–தல், சாலையோரங்–களில் தரைக்–கடை வைத்து விற்–பனை செய்–வ–தற்கு குத்–தகை தொடர்–பான கட்–ட–ணங்–கள் ஏற்–க–னவே நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்ளது. இருப்–பி–னும் இதை மீறி சில இடங்–களில் குத்–த–கை–தாரர்–கள் பொது–மக்–க–ளி–டம் அதிக கட்–ட–ணம் வசூ–லிப்–பதாக பல்–வேறு புகார்–கள் வந்த வண்–ணம் உள்–ளது. இது பற்றி மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா, ஆணை–யா–ளர் கிருஷ்–ண–மூர்த்தி ஆகி–யோர் வெளி–யிட்–டுள்ள செய்–திக்கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-

    கட–லூர் மாந–க–ராட்சி பகு–தி–யில் கட்–டண கழி–வ–றை–யில் சிறு–நீர் கழிக்க ஒரு நப–ருக்கு 1 தடவை ரூ.2, மல அறையை பயன்–ப–டுத்த ரூ.3, குளி–யல் அறையை உபயோ–கிக்க ரூ.5, கட–லூர் சில்–வர் பீச்–சில் இரு சக்–கர வாக–னத்தை நிறுத்த ரூ.3, ஆட்டோ, கார், ஜீப் போன்ற இலகு ரக வாக–னங்–க–ளுக்கு ரூ.5, வேன், பஸ்–க–ளுக்கு ரூ.10, சுப்–பு–ரா–ய–லு–ந–கர் பூங்கா நுழைவு கட்–ட–ணம் ரூ.5, விளை–யாட்டு உப–க–ரணங்–களை பயன்–ப–டுத்த 7 வயது வரை உள்ள சிறு–வர், சிறு–மி–க–ளுக்கு 15 நிமி–டங்–க–ளுக்கு நபர் ஒரு–வ–ருக்கு ரூ.5 கட்–ட–ணம் நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்–ளது.

    கட–லூர் மாந–க–ராட்சி எல்லைபகு–திக்–குள் வாக–னங்–கள் மூலம் பொருட்–கள் கொண்டு வந்து விற்–பனை செய்–வ–தற்கு, லாரி மற்–றும் வேன்–களில் கொண்டு வந்து விற்–பனை செய்–வ–தற்கு நாள் 1-க்கு 30, மூன்று சக்–கர ரிக்ஷா, இரு சக்–கர வாக–னத்–தில் பொருட்–கள் விற்–பனை செய்ய ரூ.10, நான்கு சக்–கர வாக–னத்–தில் பொருட்–கள் விற்–பனை செய்ய ரூ.10, சைக்–கி–ளில் கொண்டு வந்து விற்–பனைசெய்ய ரூ.10 கட்–ட–ணம் நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்–ளது.

    உரி–மம் ரத்து

    சாலையோரங்–களில் கடை வைத்து தயிர், மோர், கீரை கூடை–களில் வைத்து வியா–பா–ரம் செய்ய கூடை ஒன்–றுக்கு ரூ.5, குறைந்–த–பட்ச இடத்–தில் வைத்து வியா–பா–ரம் செய்யரூ.10, ரூ.15 கட்–ட–ணம் வசூ–லிக்–கப்–ப–டு–கிறது.

    ஆகவே மாந–க–ராட்–சி–யால் நிர்–ண–யிக்–கப்–பட்ட கட்–ட–ணங்–களை செலுத்–து–மாறு பொது–மக்–கள் கேட்–டுக் கொள்–ளப்–படுகிறார்கள். குத்–த–கை–தா–ரர் அதிக கட்–ட–ணம் செலுத்த கேட்–டால், மாந–க–ராட்–சிக்கு உட–ன–டி–யாக புகார் தெரி–விக்–க–லாம். இதை மீறி யாரே–னும் கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால், குத்–தகை உரி–மம் ரத்து செய்–யப்–படும். இவ்–வாறு அவர்– தெரிவித்துள்ளார்.

    • விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம்.
    • உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    காங்கயம்:

    காங்கயம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள், சோளம் விதைகள், காய்கறி விதைகளை விற்றால் விற்பனை செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டம், வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரங்களில் விதை விற்பனை உரிமம் பெற்ற 34 அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், சூரிய காந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனைப் பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். அதில் விதை குவியல் எண், காலாவதி நாள், விற்பனை செய்த நாள், வாங்குபவா் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் உள்ளதா என சரி பாா்த்து வாங்க வேண்டும்.

    விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம். திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக்கூடாது. உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது விதைகள் சட்டம் 1966இன் படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா். 

    • மேலூர் நகராட்சி பகுதியில் உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்

    மேலூர்

    மேலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள மனித கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

    கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் அரசு விதிப்படி போதிய பாதுகாப்பு அமைப்புகள் செய்திருக்க வேண்டும்.தகுந்த ஆவணங்களுடன் வாகன உரிமையாளர்கள் ரூ.2 ஆயிரம் கட்டணத்துடன் நகராட்சியில் விண்ணப்பித்து 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    அவ்வாறு உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    • வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் உட்கோட்ட போலீசார் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாய அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிலர் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாகவும், அதிக உயரமாகவும் வைக்கோலை ஏற்றிச்செல்கின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்புறம்பியம் பகுதியில் அதிக உயரத்தில் வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்து சேதமானது. இதற்கு வாகனத்தில் அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றிச்சென்றதே காரணம் ஆகும்.

    எனவே, இது போன்று அதிக பாரம் மற்றும் உயரத்தில் வைக்கோல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பிடிபட்டால் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தட்டைபயறு, கொள்ளு, சூரியகாந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    தாராபுரம்:

    தாராபுரம், மூலனூர், குண்டடம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள் மற்றும் காய்கறி விதைகள் விற்றால் விதை விற்பனை செய்த உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், தாராபு–ரம், மூலனூர், குண்டடம் வட்டாரத்தில் விதை விற்பனை உரிமம் பெற்ற 198 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, உளுந்து, பாசிபயறு, தட்டைபயறு, கொள்ளு, சூரியகாந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனை பட்டியலை உரிய பட்டியலில் நாள், ரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டு தருமாறு கோரி விதை வாங்குபவரின் கையொப்பம் இட்ட விற்பனை பட்டியல் பெறப்படவேண்டும். மேலும் விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம்.மேலும் விதை உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுக்கள் விற்பனை செய்வது சட்டபடி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகளை விற்ற நிறுவனத்தின் மீது விதைகள் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    விதை உரிமம் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. விதை விற்பனை செய்ய விரும்பு–வர்கள் படிவம் அ, உரிய கட்டணமாக ரூ.1000-க்கான சலான், ஆதார் நகல். வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், இடத்தின் வரைபடம், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் சுயவிவரங்களுடன் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

    • தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள அனைத்து தொழிற்–சாலைகளும் தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
    • http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரி வழியாக வருகிற 31-ந் தேதிக்குள்

    சேலம்:

    தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள அனைத்து தொழிற்–சாலைகளும் 2023-ம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள தொழிற்சாலைகள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரி வழியாக வருகிற 31-ந் தேதிக்குள் உரிய உரிமத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ள–லாம் என ஓசூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார்.

    • 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும்.
    • புதுப்பித்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

    திருப்பூர் :

    திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வீ.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும். புதுப்பித்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும். எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று உரிய உரிமத்தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பித்து புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 3 தனியார் உரக்கடைகளின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டது.
    • அதிக விலைக்கு உரம் விற்றதால்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வேளாண்மை துறையின் மூலம் சிறப்பு பறக்கும் படை அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி தலைமையில் சிறப்பு பறக்கும் படை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் வேப்பந்தட்டை வட்டார வேளாண்மை அலுவலர்கள் வேப்பந்தட்டை வட்டாரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் 3 தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் அந்த கடைகளின் விற்பனை முடக்கம் மற்றும் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்."

    • விண்ணப்பிக்க வில்லையெனில் துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும்.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் அனு மதி பெற்று துப்பாக்கி வைத் திருப்போர், அதற்கான உரி மத்தினை வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும்.

    அதாவது உரிமம் பெற்ற ஒற்றைக்குழல் மற்றும் இரட் டைக்குழல் துப்பாக்கிகள் (எஸ்.பி.பி.எல்., டி.பி.பி.எல்., ரிவால்வர் மற்றும் பிஸ்டல்) ஆகியவற்றின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டியவர்கள் 1.1.2023 முதல் 31.12.2027 வரை யிலான 5 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் பொருட்டு, வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நடுவருக்கு கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங் கள் மற்றும் உரிய படிவத்து டன் விண்ணப்பிக்குமாறு உரிமத்தாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதாவது துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் படிவம் (A3) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், அசல் உரிம புத்தகம், இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவண நகல் (2), இதையடுத்து 5 ஆண்டிற்குரிய உரிமம் புதுப்பித்தல் கட்டணம் ரூ.2,500 செலுத்திய தற்கான இ-செல்லான் அசல் மற்றும் நகல் மற்றும்துப்பாக்கி உபயோகப்படுத்தி பணி புரியும் பட்சத்தில் தொடர்பு டைய அலுவலகத்தில் இருந்து பணி நிமித்தமாக பெறப்பட்ட கடிதம் ஆகிய வற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை சரியான முகவரிக்கும் அனுப்பும் பொருட்டு உரிம தாரர்கள் தங்களது விண்ணப் பங் களில் சரியான அஞ்சல் முகவ ரியை கொடுக்க வேண்டும். விண்ணப்பத் தோடு பணம் செலுத்திய செலானை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் உரிம தாரர் மட்டுமே கையொப்ப மிட்டு அனுப்ப வேண்டும்.துப்பாக்கி உரிமம் செயல் திறன் முடிவடைவதற்கு 60 நாட்களுக்கு முன்பு புதுப்பிப்பதற்கு விண்ணப் பம் அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு விண்ணப்பிக்க வில்லையெனில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தங்களிடம் உள்ள துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 9-ந்தேதி மிலாடி நபி.
    • விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    வருகிற அக்டோபர் 2-ந்தேதி காந்திஜெயந்தி தினம் மற்றும் அக்டோபர் 9-ந்தேதி மிலாடிநபி தினம் ஆகிய 2 நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகையின் போது சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களை தவிர்த்து தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை, பொது சேவை மையங்களில் இணையதளம்வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்து டன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். கட்டிட அமைவிட வரைபடம், கட்டிட உரிமை ஆவணங்கள், உரிமக் கட்டணமாக செலுத்தப்பட்ட செலுத்துச்சீட்டு (சலான் அசல்), விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (ஆதார் அட்டை , பான் அட்டை , ஸ்மார்ட் குடும்ப அட்டை), உள்ளாட்சி அமைப்பில் கட்டிடம், வீட்டு வரி ரசீது, விண்ணப்ப தாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இணைக்கவேண்டும் . விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    எனவே தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பொது மக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • விதி மீறி இயக்கிய 694 ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
    • முறையான அனுமதியுடன் 1,911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். பல நேரங்களில் விபத்து களும் ஏற்படுகின்றன. எனவே இவற்றை தவிர்க்க ஆட்டோவில் பயணிகளை ஏற்றி, இறக்க தனி இடம் ஒதுக்கி தருமாறு உத்தர விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி கள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருந்ததாவது:-

    விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகி றது. கடந்த 2013ம் ஆண்டு முதல் முதல் 2017ம் ஆண்டு வரை அதிக மக்களை ஏற்றியதாக 27 ஆயிரத்து 751 ஆட்டோக்களும், மீட்டர் இல்லாமல் இயக்கி யதாக 10 ஆயிரத்து 286 ஆட்டோக்களும், சீட்டை மாற்றி அமைத்து இயக்கி யதாக 2 ஆயிரத்து 354 ஆட்டோக்கள் உள்பட பல்வேறு விதிகளை மீறியது தொடர்பாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 468 ஆட்டோக்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.2 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை மாநகர் முழுவதும் 113 ஆட்டோ நிறுத்தும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. முறையான அனுமதியுடன் 1,911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. தொடர்ந்து விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டு வரையில் விதி மீறியது தொடர்பாக 1,412 ஆட்டோக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இதில் வழக்கு பதியப்பட்ட 694 ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 813 ஆட்டோக்கள் பறி முதல் செய்யப்பட்டன. அபராதமாக ரூ.9 லட்சத்து 26 ஆயிரத்து 850 வசூலிக்கப்பட்டது.

    பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யவும், விதிமீறலை கட்டுப்படுத்த வும் தொடர் நடவ டிக்கைகள் எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    ×