search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Renewal"

    • தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள அனைத்து தொழிற்–சாலைகளும் தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
    • http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரி வழியாக வருகிற 31-ந் தேதிக்குள்

    சேலம்:

    தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள அனைத்து தொழிற்–சாலைகளும் 2023-ம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள தொழிற்சாலைகள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரி வழியாக வருகிற 31-ந் தேதிக்குள் உரிய உரிமத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ள–லாம் என ஓசூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார்.

    வள்ளுவர் கோட்டத்தை சிறப்பாக புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #TNAssembly #TNMinister #KadamburRaju
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் நீண்ட நாட்களாக புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது.

    சமூக விரோத செயல்கள் நடைபெறும் வாய்ப்புக்கள் உள்ளது. வர்தா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வள்ளுவர் கோட்டத்தை சிறப்பாக புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பதில் வருமாறு:-

    ‘‘வள்ளுவர் கோட்டத்தை அரசு முறையாக பராமரித்து வருகிறது. அங்கு எந்தவித சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்பு இல்லை. அங்கு தற்போது தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வர்தா புயலின் போது பாதிக்கப்பட்ட சுற்றுச்சுவர் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


    சிற்பங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள திருக்குறள் எழுத்துக்களை புதுப்பிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுபோன்று சிற்பங்களுக்கு வர்ணம் பூசுவது போன்ற தனியாரின் நடவடிக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    தற்போது இங்கு கண்காட்சிகள் நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்கி வருகிறது. சமீபத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வள்ளுவர் கோட்டத்தை சிறப்பாக புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துறையின் மானிய கோரிக்கை வரும்போது வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பது தொடர்பான முழு விவரங்கள் அறிவிக்கப்படும்’’ என்றார். #TNAssembly #TNMinister #KadamburRaju
    ×