search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்வு"

    • பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • இந்த நிலையில் நாமக்கல் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் நாமக்கல் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:- மல்லிகை பூ (1 கிலோ)- ரூ.600, பச்சை முல்லை - ரூ.400, வெள்ளை முல்லை - ரூ.350, சாமந்தி - ரூ.450, கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றார்.

    • காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
    • தக்காளி வரத்து அதிகரித்ததால் படிப்படியாக விலை சரிந்து நேற்று முன்தினம் , முதல் தர தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம்:

    சேலம் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிக பட்சமாக 160 ரூபாய் வரை விற்பனையானது. பின்னர் வரத்து அதிகரித்ததால் படிப்படியாக விலை சரிந்து நேற்று முன்தினம் , முதல் தர தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும்விலை உயர்ந்து ஒரு கிலோ முதல் தர தக்காளி 80 ரூபாய்க்கும், 2-ம் தரம் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    மற்ற காய்கிறிகளில் விலை விவரம் வருமாறு-

    சின்னவெங்காயம் 60 முதல் 80, கேரட் 100-120, கத்திரி 40-60, பச்சை மிளகாய் 100-120, வெண்டைக்காய் 40-50, உருளை கிழக்கு 40-60, பெரிய வெங்காயம் 25-30, பீன்ஸ் 100-110, முருங்கைக்காய் 40-60, இஞ்சி ஒரு கிலோ 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    • நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இங்கு உற்பதத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு மற்றும் உள்மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. வடமாநிலங்களில் உற்பத்தி குறைவால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை அதிகளவில் செல்கின்றன.

    இது மட்டுமின்றி துபாய், மஸ்கட், இலங்கை உள்பட பல்வேறு வெளிநா டுகளுக்கு முட்டைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.

    இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணை யாள ர்கள் சங்க தலைவர் சிங்க ராஜ் கூறியதாவது:-

    நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் வடமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. மழைகாரணமாக நுகர்வு அதிகம் உள்ளதால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

    • நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 6-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.35 ஆக இருந்த நிலையில் இன்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ.4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் மேலான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி பல்லடத்தில் இன்று நடந்த கூட்டத்தில் கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.103 ஆக இருந்த ஒரு கிலோ ரூ.105 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக உள்ளது.

    • அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • வெற்றிலைவரத்து குறைந்ததால் விலை உயர்ந்தும், மற்ற வெற்றிலை‌ கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:பரமத்தி வேலூரில்

    வெள்ளக்கொடி வெற்றிலை விலை உயர்வு

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்த னூர்,பரமத்தி வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    வெற்றிலை விவசாயம்

    வெற்றிலைகள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து நூறு வெற்றிலை கொண்ட ஒரு கவுலியாகவும் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூர்-கரூர் செல்லும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டற்க்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கி செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்க ளுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்கின்றனர். வாங்கிய வெற்றிலை சுமைகளை கர்நாடகா, கேரளா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    விலை உயர்வு

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்ப யிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ1,700-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.5ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.1,50 0-க்கும் ஏலம் போனது. வெள்ளைக் கொடி இளம்

    பயிர் வெற்றிலைவரத்து குறைந்ததால் விலை உயர்ந்தும், மற்ற வெற்றிலை கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நாளை ஆடிப்பெருக்கையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை உயர்ந்துள்ளது.
    • நேற்று பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை,

    ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்ைட, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவை மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் இங்கு சென்று தான் பூக்கள் வாங்கி வருகின்றனர்.

    விஷேச நாட்களில் இங்கு பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. நாளை ஆடிப்பெருக்கையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை உயர்ந்துள்ளது. நேற்று பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ரூ.200 உயர்ந்து கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து கோவை பூ மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை பூ மார்க்கெ ட்டிற்ககு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சத்தியமங்கலம், காரமடையில் இருந்து முல்லைப் பூவும், ஓசூரில் இருந்து ரோஜா பூவும் விற்பனைக்கு வருகிறது. நேற்று 2 டன் அளவுக்கு பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    நாளை ஆடிப்பெருக்கு விழா என்பதால் இன்று மேலும் பூக்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்,

    பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-மல்லிகை - ரூ.800, முல்லை ரூ.480, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ. 320, ரோஜா 240, கோழி கொண்டை ரூ. 140, அரளி ரூ. 240, தாமரை ரூ.10 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ இன்று ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டை கள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு களுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்க ளுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக்கொள் முதல் விலை ரூ. 5.50 ஆக இருந்தது. ஜூலை மாதம் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 28-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.20 ஆக இருந்தது. நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள் முதல் விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை- 480, பர்வாலா-363, பெங்களூர்-465, டெல்லி-379, ஹைதராபாத்-420, மும்பை-480, மைசூர்-465, விஜய வாடா-440, ஹொஸ்பேட்-425, கொல்கத்தா-480.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ இன்று ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது. கடந்த 26-ந் தேதி 93 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 105 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களில் மட்டும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.12 அதி கரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 78 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • நாட்டு தக்காளி தற்போது 150 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது.
    • தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    கோவை,

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தற்போது தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் மழை பெய்து வருவதால், விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபடவில்லை. இதனால் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து குறைந்து வருகிறது.

    ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே அங்கும் விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தற்போது தென் மாநிலங்களில் அதிகமாக தக்காளி பழங்களை இறக்குமதி செய்து வருகின்றனர். எனவே ஆந்திரா, கர்நாடகாவில் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் அவற்றின் விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    கோவை காந்திபுரம் தியாகி குமரன் மார்க்கெ ட்டில் இன்று ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.130க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.140 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட் சில்லரை விலை கடைகளில் நாட்டு தக்காளி தற்போது 150 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது.

    தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கிலோ கணக்கில் தக்காளி வாங்கியவர்கள் தற்போது, 100, 200 கிராம் கணக்கில் தக்காளியை வாங்கி செல்வதை காண முடிகிறது.

    இதுகுறித்து தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோவைக்கு சரக்கு லாரிகள் மூலம் தக்காளி பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

    ராஜஸ்தான், புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே அவர்கள் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அதிகளவில் தக்காளி பழங்களை கொள் முதல் செய்து வருகின்றனர். இதனால் தற்போது கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்ததுடன், விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

    தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்னும் ஒரு சில வாரங்களில் தக்காளி அறுவடை தொடங்க உள்ளது. எனவே கோவை சந்தைக்கு வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது தக்காளியின் விலை குறையும் என்றனர்.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட் சந்தையில் காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ): கத்தரிக்காய்-60, வெண்டைக்காய்-60, உருளை க்கிழங்கு-30, பீட்ரூட்-30, புடலங்காய்-40, சுரைக்காய்-40, பீர்க்கங்காய்-40, மிளகாய்-80, வாழைக்காய்-40, பூசணிக்காய்-30, எலுமிச்சை-60, முருங்கை-50, கேரட்-50, பீன்ஸ்-100, முட்டைக்கோஸ்-25.

    • தக்காளி விலை அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகிறது.
    • இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதை அடுத்து ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 60 ரூபாய்க்கு தக்காளி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த

    சில நாட்களாக தக்காளி

    விலை மேலும் அதிகரித்த தால் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விநியோ கிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதேபோல் சேலம் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள கூட்டுறவு பண்டக சாலையிலும் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டது. இன்று காலை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு தக்காளி வாங்க வந்தனர். ஆனால் அங்கு கடந்த 2 நாட்களாக விற்பனைக்கு தக்காளி வரவில்லை என்று கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் கூட்டுறவு பண்டக சாலையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே அங்கு வந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் விரைவில் தக்காளி வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

    இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

    • சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.
    • சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அசைவ பிரியர்கள் உள்ளதால் ஆடு, கோழி, காடை, வாத்து இறைச்சி விற்பனை ஜோராக நடக்கிறது.

    பருவநிலை மாற்றத்தால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமலால் அவதிப்படுகின்றனர். சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.

    சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

    இது குறித்து வாத்து முட்டை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் கூறியதாவது, தேவை அதிகரித்ததால், வாத்து முட்டை கடும்தட்டு பாடு ஏற்பட்டதால் வாத்து முட்டை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கறிக்கோழி முட்டையை விட வாத்து முட்டைகள் அதிக சத்துக்கள் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாத்து பண்ணைகள் மூலம் முட்டை கொள்முதல் செய்து பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்கிறோம். வாத்து முட்டை 12 ரூபாய்க்கும், வேக வைத்த வாத்து முட்டை 15 ரூபாயும், வாத்து முட்டை ஆம்லெட் ரூ.30 ஆகும் விலை உயர்ந்துள்ளது என கூறினார்.

    • 440 காசுகளாக இருந்த முட்டை விலை, 445 காசுகளாக உயர்ந்தது.
    • முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 78 ரூபாயாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 440 காசுகளாக இருந்த முட்டை விலை, 445 காசுகளாக உயர்ந்தது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 93 ரூபாயாக நீடிக்கும் என அறிவுறுத்தப்பட்டது. இதேபோல முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 78 ரூபாயாக நீடிக்கிறது.

    • ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது.
    • தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவு எதிரொலியாக தக்காளி விலை உயரத் தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ.120 முதல் 130 வரை உயர்ந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படும் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஈரோடு சம்பத் நகர் மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பத் நகரில் 250 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் வீற்று தீர்ந்தன. இதேபோல் சத்தியமங்கலத்தில் 150 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் வீற்று தீர்ந்தன.

    நேற்று ஓசூரில் இருந்து விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் இன்று மற்ற பகுதியில் செயல்படும் உழவர் சந்தைகளில் தக்காளி மலிவு விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்திருந்தார்.

    ஆனால் இன்று ஓசூரில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய முடியாததால் தாளவாடியில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதே நேரம் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.104-க்கு விற்கப்பட்டது.

    ஈரோடு சம்பத் நகரில் இன்று தோட்டக்கலைத்துறை சார்பாக 150 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இவை சில மணி நேரத்தில் வீற்றுத் தீர்த்து விட்டன. இதேப்போல் சத்தியமங்கலத்திலும் 100 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இன்று முதல் கோபி, பெருந்துறை உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்கப்பட்டது. நாளை ஓசூரில் இருந்து மீண்டும் விவசாயிகளிடமிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டால் விலை குறையும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.

    இதேப்போல் ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன.

    இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.110 -க்கு விற்பனை ஆனது. இதே போல் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 150 க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.10 அதிகரித்து ரூ.160-க்கு விற்பனை ஆனது.

    இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்கறிகள் விலை தொடர்ந்து வருவதால் மக்களின் கவனம் இப்போது கீரைகள் மீது திரும்பி உள்ளது. கீரை விலை மலிவாக இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். சிறுகீரை, மிளகு தக்காளி கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, செங்கீரை, முருங்கைக்கீரை ஆகிய கீரை ஒரு கிலோ ரூ.10 -க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் கரிசலாங்கண்ணி கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகிய கீரைகள் ஒரு கிலோ ரூ. 8-க்கு விற்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக கீரை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் எலுமிச்சம் பழம் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காய்கறியின் விலை உயர்வால் பொதுமக்கள் எலுமிச்சம் பழத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு எலுமிச்சம் பழம் ரூ.4 முதல் 7 வரை விற்கப்படுகிறது. தக்காளி, காய்கறி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தற்போது எலுமிச்சை சாதம், புளி சாதத்திற்கு மாறி உள்ளனர்.

    ×