search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flower prices"

    • பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • இந்த நிலையில் நாமக்கல் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் நாமக்கல் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:- மல்லிகை பூ (1 கிலோ)- ரூ.600, பச்சை முல்லை - ரூ.400, வெள்ளை முல்லை - ரூ.350, சாமந்தி - ரூ.450, கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றார்.

    • நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விற்பனையும், அதன் விலையும் அதிகரித்து காணப்படும்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    பண்டிகை நாட்கள்

    இங்கு முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்க ளில் பூக்களின் விற்பனையும், அதன் விலையும் அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) தமிழ் புத்தாண்டு கொண்டா டப்படுகிறது. இதையொட்டி பூக்கள் வாங்க இன்று வியாபாரி களும், பொதுமக்களும் சந்திப்பு பூ மார்க்கெட்டில் திரண்டனர். இதனால் விலையும் அதிகரித்திருந்தது. நேற்று ரூ. 700-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ. 300 உயர்ந்து ரூ. 1,000-க்கு விற்கப்பட்டது.

    ரோஜா

    இதேப்போல் நேற்று ரூ. 500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ ரூ. 200 உயர்ந்து ரூ. 700-க்கு விற்கப்பட்டது. அரளிப்பூ ரூ. 300-க்கும், சம்பங்கி ரூ. 200-க்கும், ரோஜா பூ 1 கட்டு ரூ. 150-க்கும், கேந்திப்பூ ரூ. 30-க்கும் விற்கப்பட்டது.

    தற்போது பூக்கள் விளைச்சல் அதிகளவில் உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்காக பூக்கள் வந்துள்ளது. எனவே இன்று பூக்களின் விலை சிறிது அளவே உயர்ந்துள்ளது. எனினும் தேவை அதிகரித்து இருந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.

    • ராமநாதபுரத்தில் பூக்களின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
    • அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை, என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி ஒரு சில பகுதிகளில் மட்டுமே நடக்கிறது. மதுரை, புதுக்கோட்டை சந்தைகளில் இருந்து மொத்த வியாபாரிகள் பூக்களை வாங்கி வந்து சந்தையில் விற்கின்றனர்.

    இதன் காரணமாக பூக்களின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா, தொடர்ந்து முகூர்த்த நாட்கள் எதிரொலியாக பூக்களின் விலை வழக்கமான விலையை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. பூக்கள் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விநாயகா் சதுா்த்திக்கான பூக்கள் வாங்கத் தயக்கம் காட்டினா்.

    மேலும் வழக்கமான அளவை விட குறைவாக பூக்களை மக்கள் வாங்கிச் சென்றனர். இதனால் பூ விற்பனை குறைந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு பூக்கட்டும் வியாபாரிகள் சங்கத்தலைவர் முருகன் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு மல்லிகை ரூ.400-க்கு விற்றது ரூ.1600-க்கும், 300-க்குவிற்ற ரோஜா ரூ.800, ரூ.400-க்கு விற்ற முல்லை ரூ.1700, செவ்வந்தி ரூ.150ல் இருந்து ரூ.750 என விலை அதிகரித்துஉள்ளது. ரூ.10-க்கு விற்ற கதம்பம் மூழம் ரூ.20-க்கு விற்கின்றனர். அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை, என்றார்.

    • மார்க்கெட்டில் இன்று காலை விவசாயிகள் அதிக அளவில் பூக்களை கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர்.
    • விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை தற்போது உயர்ந்துள்ளது.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    குவிந்த மக்கள்

    இதையொட்டி சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தற்காலிக வ.உ.சி. மார்க்கெட்டில் இன்று காலை விவசாயிகள் அதிக அளவில் பூக்களை கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர். இதனை வாங்க சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள்மற்றும் பொது மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.

    தொடர்ந்து போட்டி, போட்டு பூக்களைஅதிக அளவில் வாங்கி சென்றனர். இதனால் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று 800 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ஒரு கிலோ 1000 ரூபாயாக உயர்ந்தது. மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதன் விலை விவரம் வருமாறு:-

    முல்லை ஒரு கிலோ 600, ஜாதிமல்லி 280, காக்காட்டான் 400, கலர் காக்காட்டான் 360, சம்பங்கி 140, அரளி 260, மஞ்சள் அரளி, செவ்வரளி 300, நந்தியாவட்டம் 250 ரூபாய்க்கும் விற்பனையானது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை தற்போது உயர்ந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×