search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தவ் தாக்கரே"

    • பிரதமர் மோடியே அவரது தோல்விக்கு காரணமாக இருப்பார்
    • மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும்

    பா.ஜனதா கட்சி இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இரண்டு முறையும் மோடியே பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த முறையும் பா.ஜனதா பிரதமர் மோடி தலைமையில் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

    பா.ஜனதாவின் வெற்றியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. டெல்லி மாநில அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கெஜ்ரிவால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பா.ஜனதாவுக்கு எதிராக ஆதரவு திரட்டினார். மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜனதாவுக்கு உத்தர பிரதேசம் (62), மத்திய பிரதேசம் (28), பீகார் (17), ராஜஸ்தான் (24), குஜராத் (26), மகாராஷ்டிரா (23) மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளன. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சிதான் காரணம் என உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி வருகிறார். அவர் பா.ஜனதாவை மிகப்பெரிய எதிரியாக கருதுகிறார்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னா, பிரதமராகும் ஆசை எதிர்க்கட்சி தலைவரகளுக்கு இல்லையென்றால், பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என தலையங்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டிய நிலையில் அவரது பொறுமையை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடியுடன் காந்தி குடும்பத்தை சேர்ந்தவருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்ற பிம்பத்தில் இருந்து ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும்.

    கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்தது 2024-ம் ஆண்டுக்கான பா.ஜனதாவின் கெட்ட சகுனம். வரவிருக்கும் மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும். சத்தீஸ்காரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், பா.ஜனதா கட்சியுடன் போட்டியை கடுமையாக்குவார் எனத் தெரிவித்துள்ளது.

    வட இந்தியாவில் ராகுல்காந்தி தன்னந்தனியாக பிரசாரத்தை மேற்கொண்டால், தற்போதைய நிலை காங்கிரஸ் கட்சி மாறலாம். 2024-ம் ஆண்டு பா.ஜனதா தோல்விக்கு மோடியே காரணமாக இருப்பார். அதற்கு அமித் ஷா பங்களிப்பார். மோடி- அமித் ஷா மீது கோபம் உள்ளது. பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள் என எழுதியுள்ளது.

    இருந்தாலும், மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. அது அரசியலமைப்பு மற்றும் இந்திய தாயாக இருக்கும். தலைவர் மக்களிடையே இருந்து உருவாகுவார்.

    இலங்கை மன்னர் ராவணனை வீழ்த்த வானர் கூட்டம் உதவியது போல், தற்போது வானர் சேவை அவசியமானது எனத் குறிப்பிட்டுள்ளது.

    • டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது.
    • கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடனான சந்திப்பு நடந்தது.

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    மத்திய அரசின் இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடனான சந்திப்பு நடந்தது. நேற்று அவர் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுடன் கொல்கத்தா சென்று மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்தார். கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

    இந்த நிலையில் கெஜ்ரிவாலும், பகவந்த்சிங் மானும் இன்று மகாராஷ்டிரா முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ்தாக்கேரயை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்கள்.

    • ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர்.
    • அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்க முடியாது.

    மும்பை :

    மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் ஷிண்டே. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி அரசை கவிழ்த்தார். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரி ஆனார்.

    உத்தவ் தாக்கரே அரசு கவிழும் முன் ஏக்நாத் ஷிண்டே உள்பட சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு அப்போதைய துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த மராட்டிய அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கும் அடங்கும். நேற்று முன்தினம் வழக்கில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானம் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் 16 எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட உயிர்பிச்சை தற்காலிகமானது தான். சுப்ரீம் கோர்ட்டு குறிப்பட்ட காலத்தில் தகுதி நீக்க விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. எனவே எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானத்தின் மீது சபாநாயகர் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

    முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் என்னை மீண்டும் முதல்-மந்திரி பதவியில் அமர்த்தி இருக்க முடியும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது எனக்கு திருப்தி அளிக்கிறது. தார்மீக அடிப்படையில் நான் அதை செய்தேன். மக்கள் மன்றத்தை சந்திக்க நான் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு சவால் விடுக்கிறேன்.

    என்னை சட்டசபையில் பலத்தை நிரூபிக்குமாறு கவர்னர் கூறியதே சட்டவிரோதம் என்று கோர்ட்டு கூறியுள்ளது. அப்படியெனில் தற்போது உள்ள அரசு சட்டவிரோதமானது தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உடனிருந்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் அனில் பரப் கூறுகையில், "இந்த அரசு சட்டவிரோதமானது என கூறி வருகிறோம். கொறடாவின் பங்கு முக்கியமானது. அந்த நேரத்தில் கொறடாவாக எங்கள் அணியை சேர்ந்த சுனில் பிரபு இருந்தார். எனவே ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர்.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் அதிக காலம் எடுத்து கொள்ளக்கூடாது. அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு குறைந்த நேரம் தான் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ராகுல் நர்வேக்கருக்கு கடிதம் எழுதுவோம்" என்றார்.

    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு திருப்தி அளிக்கிறது.
    • இன்று மகாவிகாஸ் அகாடியின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

    மும்பை

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    மகாவிகாஸ் அகாடி தலைமையிலான ஆட்சியை மீண்டும் பதவியில் அமர்த்த சுப்ரீம் கோர்ட்டு மறுத்து உள்ளது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. இன்று மகாவிகாஸ் அகாடியின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசு சட்டப்படி தான் அமைக்கப்பட்டது என்பதில் இனிமேல் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.

    தார்மீக உரிமை பற்றி பேச உத்தவ் தாக்கரேக்கு எந்த தகுதியும் இல்லை. 2019-ம் ஆண்டு மக்கள் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் அவர் மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். எனவே தார்மீகம் பற்றி பேசுவது உத்தவ் தாக்கரேக்கு பொருந்தாது. உத்தவ் தாக்கரே தார்மீக அடிப்படையில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை. வேறு வழியில்லாமல் பயத்தின் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை வரவேற்றார்.

    அவர் " சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வாய்மையின் வெற்றி. சபாநாயகர் தகுதியின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் முடிவு எடுப்பார். உத்தவ் தாக்கரே தரப்பினர் அவர்களின் திருப்திக்காக எங்களது அரசு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது என கூறி வந்தனர். அது பொய் என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் தான் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார் " என்றார்.

    • ஷிண்டே தரப்பினர் எனது கட்சிக்கும், எனது தந்தைக்கும் துரோகம் செய்தனர்.
    • சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டி உள்ளது.

    மும்பை :

    மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தீர்ப்பில் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனாவின் கொறடாவாக அங்கீகரித்தது சட்டவிரோதம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். தீர்ப்பு தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    ஷிண்டே தரப்பினர் எனது கட்சிக்கும், எனது தந்தைக்கும் துரோகம் செய்தனர். நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது சட்டப்படி தவறாக இருக்கலாம். ஆனால் தார்மீக அடிப்படையில் நான் பதவியை ராஜினாமா செய்தேன். துரோகிகளை வைத்து நான் எப்படி ஆட்சி நடத்த முடியும்?. தற்போது உள்ள முதல்-மந்திரி (ஏக்நாத் ஷிண்டே), துணை முதல்-மந்திரி (தேவேந்திர பட்னாவிஸ்) ஆகியோர் அறநெறி இருந்தால், அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை அடுத்து ராஜினாமா செய்ய வேண்டும்.

    சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் ஷிண்டே அணியை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனா கொறடாவாக நியமித்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்பளித்து உள்ளது, எனவே 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க முடிவில் சுனில் பிரபுவை சிவசேனா கொறடாவாக ராகுல் நர்வேக்கர் கருத வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த நிதிஷ்குமார் முயற்சித்து வருகிறார்.
    • இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்.

    மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார். அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார். அப்போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட உறுதி பூண்டனர்.

    சமீபத்தில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை நிதிஷ்குமார் சந்தித்தார். மேலும், ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு சென்ற நிதிஷ்குமாரும், பீகார் மாநில துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவும் முதல் மந்திரி ஹேமந்த் சோரனைச் சந்தித்துப் பேசினர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சென்ற நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் உத்தவ் தாகரே மற்றும் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அப்போது பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிய்னர் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர்.

    • இந்துத்வா தேசியநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
    • பா.ஜனதா ஜனநாயகத்தின் நெறிமுறைகளை கொன்று வருகிறது.

    மும்பை :

    மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் பொது கூட்டம் நேற்று முன்தினம் இரவு நாக்பூரில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், அம்பாதாஸ் தான்வே, தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத், காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் நானா படோலே, பாலாசாகிப் தோரட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர் சுனில் கேதார் செய்து இருந்தார்.

    கூட்டத்தில் 3 கட்சிகளையும் சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    ஒரு பக்கம் அவர்கள் அனுமன் பஜனை பாடுகிறார்கள். மறுபுறம் மசூதியில் போதனை கேட்கின்றனர். அது தான் அவர்களின் இந்துத்வாவா?. உத்தரபிரதேசத்தில் உருது மொழியில் 'மன் கி பாத்' நடத்துகின்றனர். நாட்டுக்காக வாழ்க்கையை அர்பணிப்பது தான் எங்களின் இந்துத்வா. நான் காங்கிரசுடன் சென்று இந்துத்வாவை கைவிட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.

    காங்கிரசில் ஒரு இந்து கூட இல்லையா?. அவர்களின் (பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.) இந்துத்வா பசு கோமிய இந்துத்வா.

    இந்துத்வா தேசியநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். சமீபத்தில் நாங்கள் அவுரங்காபாத்தில் பொதுக்கூட்டம் நடத்திய இடத்தில் பா.ஜனதாவினர் கோமியத்தை தெளித்தனர். அவர்கள் அந்த கோமியத்தை குடித்து இருக்க வேண்டும். அப்போது தான் இந்துத்வா தேசியம் சார்ந்தது என்பது அவர்களுக்கு உணர்ந்து இருக்கும். பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்-மந்திரி அயோத்தி செல்கிறார். பா.ஜனதா ஜனநாயகத்தின் நெறிமுறைகளை கொன்று வருகிறது. அந்த கட்சிக்கு நெருங்கிய நண்பர்களுக்கு (அதானி) உதவி செய்வது தான் ஜனநாயகம். மோடி அரசின் செயல்பாடு குறித்து கேள்வி கேட்டபோது ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. பல பிரச்சினைகளில் மோடியை கேள்வி கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால் எந்த நேரமும் ஜெயிலில் அடைக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்ட பல்வேறு ஆலோசனைகளை சரத்பவார் வழங்கியதாக கூறப்படுகிறது.
    • மகாராஷ்டிராவில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்தும் சரத்பவார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக நாடு முழுவதும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

    எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 12-ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ராகுல் காந்தியை நீண்ட நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஒடிசா நவீன் பட்நாயக், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி, பஞ்சாப், அரியானாவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என நிதிஷ்குமார் கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அன்று மாலையே நிதிஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலையும் சந்தித்தார்.

    தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்ட பல்வேறு ஆலோசனைகளை சரத்பவார் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் மகாராஷ்டிராவில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்தும் சரத்பவார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. எனவே தேசிய அளவில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை உயர்த்த மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது.

    இது தொடர்பாக சரத்பவாருடன், ராகுல்காந்தி விவாதித்துள்ளார். சமீபத்தில் சாவர்கர் குறித்து ராகுல்காந்தி பேசிய பேச்சு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் கருத்து வேறுபாடுகளை களைவதற்கு ராகுல்காந்தி ஒப்புக்கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக விரைவில் ராகுல் காந்தி மும்பை சென்று உத்தவ் தாக்கரையை சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அப்போது கூட்டணியில் உள்ள கருத்து வேறுபாடுகளை களையவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை உருவாக்கவும் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் 15 இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள 3 இடங்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு வழங்கப்படும். ஆனால் சிவசேனா அதிக இடங்களை கேட்டு வருகிறது.

    அதே நேரம் சிவசேனாவில் 13 சிட்டிங் எம்.பி.க்கள், தற்போதைய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளனர். எனவே வலுவான வேட்பாளர்களை பெறுவதில் உத்தவ் தாக்கரே சிரமங்களை சந்திக்க நேரிடும். நாங்கள் வேட்பாளர்களை மாற்றி கொள்ளலாம் என்றார்.

    • உத்தவ் தாக்கரே என்னை கொல்ல பலரை ஏவி விட்டார்.
    • நாராயண் ரானே சிவசேனா ஆட்சியின்போது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்.

    மும்பை :

    மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய சதி செய்ததாக பா.ஜனதாவை சேர்ந்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மந்திரி நாராயண் ரானே நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து அவர் நேற்று மும்பையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொள்முதல் செய்த மருந்து பொருட்களில் ஊழல் நடந்துள்ளது.

    இந்த ஊழலுக்கு உத்தவ் தாக்கரே தான் முழு பொறுப்பு ஆவார்.

    அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். இதற்காக அவர் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவினார். இதுபோன்ற நபர்களிடம் இருந்து எனக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போன் அழைப்புகள் வந்தன. உத்தவ் தாக்கரே என்னை கொல்ல பலரை ஏவி விட்டார். ஆனால் அவர்கள் யாராலும் என்னை தொடக்கூட முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய மந்திரி நாராயண் ரானே, மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியின்போது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர். உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவர் அந்த கட்சியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன.
    • எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதுபற்றி பேசிய ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை என தெரிவித்தார். இது கடும் விவாதப்பொருளாகி உள்ளது. ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்து விட்டதாக பா.ஜ.க, சிவ சேனா ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டின.

    இந்நிலையில், சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியின் கருத்தால், மகாராஷ்டிராவில் காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) அதிருப்தி அடைந்துள்ளது. ராகுல் பேசியதற்கு உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) இடையே உரசல் ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்டு பேசியபின் கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளது.

    இதுதொடர்பாக உத்தவ் தாக்கரேவின் சிவ சேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    நாங்கள் ராகுல் காந்தியுடன் பேசினோம். நமது போராட்டம் சாவர்க்கருக்கு எதிரானது அல்ல, மோடிக்கு எதிரானது என்பதை தெளிவுபடுத்தப்பட்டது. நேற்று நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சிறப்பானவை. நம் ஒற்றுமை அப்படியே இருக்கட்டும். எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. நேற்று இரவு காங்கிரஸ் உட்பட 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேண்டும் என்றே சாவர்க்கர் மற்றும் மோடியை அவமதித்த ராகுல் காந்தியை கண்டிக்கிறேன்.
    • பொது மக்கள் ராகுல்காந்தியை தெருவில் நடமாட விடமாட்டார்கள்.

    மும்பை :

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் உத்தவ் தாக்கரே தரப்பினர் அவருக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். இந்தநிலையில் இதுதொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியிருப்பதாவது:-

    மோடி பெயர் தொடர்பான கருத்து மூலம் ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அவமதித்து உள்ளார். வேண்டும் என்றே சாவர்க்கர் மற்றும் மோடியை அவமதித்த ராகுல் காந்தியை கண்டிக்கிறேன். பொது மக்கள் ராகுல்காந்தியை தெருவில் நடமாட விடமாட்டார்கள்.

    சாவர்க்கரை அவமதித்த ராகுல் காந்தியை உத்தவ் தாக்கரே தரப்பினர் ஆதரிப்பது துரதிருஷ்டவசமானது. அவர்களுக்கு இந்துத்வா பற்றி பேச அருகதையில்லை.

    ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 'காவலாளியே திருடன் ' என கூறினார். அப்போது மக்கள் அவருக்கு தேர்தல் தோல்வி மூலம் பாடம் கற்றுகொடுத்தனர். அவர் வெளிநாட்டில், நாட்டின் பிரதமர் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக பேசினார். பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தி பாரதத்தை துண்டாடுதல் குறித்து பேசியிருந்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவா் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி ஒன்றும் நமது இந்தியா கிடையாது.
    • சாவர்க்கரை அவமானப்படுத்துவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

    மாலேகாவ் :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுதான் "மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை'', என கூறினார்.

    இதன்மூலம் ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்துவிட்டதாக பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டின. இது மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் நேற்று மராட்டிய மாநிலம் மாலேகாவில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    சாவர்க்கர் எங்களின் அடையாளம். ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரத்தில் அவரை அவமானப்படுத்துவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

    அந்தமான் செல்லுலார் சிறையில் 14 ஆண்டுகள் கற்பனை செய்ய முடியாத சித்ரவதைகளை சாவர்க்கர் அனுபவித்தார். அவரது துன்பங்களை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். இது ஒரு வகையான தியாகமாகும்.

    நமது நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றதான் நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை ராகுல் காந்தியிடம் கூற விரும்புகிறேன். இந்த நேரத்தை வீணடிக்க அனுமதித்தால் ஜனநாயகம் இல்லாமல் போய்விடும். 2024-ம் ஆண்டு தேர்தல்தான் ஜனநாயகத்தை காக்க நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது செய்தியாளர்கள் சந்திப்பில் நன்றாக பேசினார். ரூ.20 ஆயிரம் கோடி யாருக்கு சொந்தமானது என்று சரியான கேள்வியை எழுப்பினார். ஆனால் மத்திய அரசு அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை.

    நான் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற போராடுகிறேன். என் போராட்டம் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆகவேண்டும் என்பதற்கானது அல்ல. தேசியவாத காங்கிரஸ் தலைவர் அனில் தேஷ்முக்கின் 6 வயது பேத்தியை புலனாய்வு அமைப்புகள் விசாரித்தனர். லாலு பிரசாத் யாதவின் கர்ப்பிணி மருமகள் மயக்கம் அடையும் வரை விசாரிக்கப்பட்டார். ஆட்சியில் இருப்பவர்களை விமர்சித்தால் போலீசார் உங்களை தேடி வருவார்கள்.

    பிரதமர் மோடி ஒன்றும் நமது இந்தியா கிடையாது. நமது சுதந்திர போராட்ட வீரர்கள் இதற்காகவா உயிரை கொடுத்தார்கள்? பா.ஜனதாவில் இருப்பவர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள் என்றால் மற்ற கட்சியில் இருந்து வரும் ஊழல்வாதிகளை தங்கள் கட்சியில் சேர்ப்பதை அவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடிகிறது.

    எனது கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பறித்துவிட்டனர். ஆனால் அந்த துரோகிகளால் மக்களின் அன்பையும், பாசத்தையும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×