search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாராயண் ரானே"

    • உத்தவ் தாக்கரே என்னை கொல்ல பலரை ஏவி விட்டார்.
    • நாராயண் ரானே சிவசேனா ஆட்சியின்போது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்.

    மும்பை :

    மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய சதி செய்ததாக பா.ஜனதாவை சேர்ந்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மந்திரி நாராயண் ரானே நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து அவர் நேற்று மும்பையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொள்முதல் செய்த மருந்து பொருட்களில் ஊழல் நடந்துள்ளது.

    இந்த ஊழலுக்கு உத்தவ் தாக்கரே தான் முழு பொறுப்பு ஆவார்.

    அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். இதற்காக அவர் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவினார். இதுபோன்ற நபர்களிடம் இருந்து எனக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போன் அழைப்புகள் வந்தன. உத்தவ் தாக்கரே என்னை கொல்ல பலரை ஏவி விட்டார். ஆனால் அவர்கள் யாராலும் என்னை தொடக்கூட முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய மந்திரி நாராயண் ரானே, மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியின்போது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர். உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவர் அந்த கட்சியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    • மாநகராட்சி நாராயண் ரானே வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பியது.
    • மாநகராட்சி நாராயண் ரானே வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பியது.

    மும்பை :

    மும்பை ஜூகு கடற்கரை பகுதியில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மந்திரி நாராயண் ரானேக்கு சொந்தமான 8 மாடி 'ஆதிஷ்' பங்களா உள்ளது. இந்த வீடு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் விதியை (சி.ஆர்.இசட்) மீறியும், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டுமான பரப்பளவில் (எப்.எஸ்.ஐ). கட்டப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக உத்தவ் தாக்கரே ஆட்சியில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நாராயண் ரானே வீட்டில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு வீட்டில் சட்டவிரோதமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி நாராயண் ரானே வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பியது. அவர் மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டு அவரது மனுவை கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்தது. மேலும் நாராயண் ரானேயின் வீட்டில் சட்டவிரோத கட்டிட பகுதிகளை இடித்து அகற்ற உத்தரவிட்டது. இதேபோல நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.

    இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " 2 மாதங்களில் வீட்டில் உள்ள சட்டவிரோத கட்டுமான பகுதியை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு நாராயண் ரானேக்கு உத்தரவிட்டு இருந்தது. அவர் 2 மாதத்தில் அதை செய்ய தவறினால், சட்டவிரோத கட்டுமான பகுதிகளை மாநகராட்சி இடிக்கும்" என்றார்.

    இந்தநிலையில் நாராயண் ரானே நேற்று அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமான பணிகளை இடிக்கும் பணிகளை தொடங்கி உள்ளார்.

    இதற்கிடையே நாராயண் ரானே பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் இடிக்கும் பணி தொடங்கி இருப்பதை சமூக ஆர்வலர் சந்தோஷ் தாவுந்கர் வரவேற்று உள்ளார்.

    அதே நேரத்தில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதியை மீறியதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்காதது குறித்து அவர் கேள்வி எழுப்பி உள்ளார். கடலோர ஒழுங்குமுறை மண்டல விதி மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது இதைவிட மோசமாக இருக்கும் எனவும் கூறினார்.

    • இந்துத்வா பற்றி பேச உத்தவ் தாக்கரேவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
    • உத்தவ் தாக்கரேவின் இந்துத்துவம் போலியானது.

    மும்பை :

    மத்திய மந்திரி நாராயண் ரானே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டதால் 56 இடங்களை கைப்பற்ற முடிந்தது. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாரதீய ஜனதா கட்சியை கைவிட்டது.

    சிவசேனா கட்சி ஏன் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து? அவ்வாறு செய்ததன் மூலம் அவர்கள் முதல்-மந்திரி பதவிக்காக இந்துத்வா கொள்கையை கைவிட்டுள்ளனர்.

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்துத்வா பற்றி பேசக்கூடாது. இந்துத்வா பற்றி பேச அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவரது இந்துத்துவம் போலியானது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சிவாஜி பார்க்கில் நடத்திய தசரா பொதுக்கூட்டத்தில் அவர் தன்னை பற்றி தற்பெருமை கூறிகொள்வதாகவும், தனது எதிரிகளை கேவலப்படுத்துவதாகவும் தான் இருந்ததே தவிர வேறு எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மந்திரி நாராயண் ரானே.
    • நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை :

    மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மந்திரியும், மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவருமான நாராயண் ரானேக்கு சொந்தமாக மும்பை ஜூகு கடற்கரை பகுதியில் 8 மாடி பங்களா வீடு உள்ளது. இந்த பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது சிவசேனா தலைமையிலான ஆட்சியின்போது கடந்த பிப்ரவரி மாதம் தெரியவந்தது. இதையடுத்து நாராயண் ரானேயின் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானத்தை இடிக்க மும்பை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. ஆனால் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கட்டுமான பணிகளை சீரமைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்க மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிடகோரி மும்பை ஐகோர்ட்டில் நாராயண் ரானே தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    நாராயண் ரானே பங்களா தொடர்பான வழக்கு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதிகள் ஆர்.டி. தகானுகா, கமல் கட்டா ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

    இதுதொடர்பான உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது:-

    அனுமதிக்கப்பட்ட திட்டம் மற்றும் சட்ட விதிகளை மீறி மனுதாரர் பெரிய அளவில் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொண்டு இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சட்டவிரோத பணிகளை ஒழுங்குப்படுத்த அனுமதித்தால், அது சட்ட விதிமீறல்களை ஊக்குவிப்பதாகவும், மும்பையில் சட்டவிரோத கட்டுமான பணிகள் அச்சமின்றி எந்த எல்லைக்கும் மேற்கொள்ளப்படுவதற்கு அழைப்பு விடுப்பது போல ஆகிவிடும். மனுதாரர் பங்களாவில் எப்.எஸ்.ஐ. எனப்படும் கட்டுமான பரப்பளவு மற்றும் கடல்சார் ஒழுங்குமுறை விதிகள் மீறப்பட்டுள்ளது. எனவே பங்களாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை 2 வாரங்களில் மாநகராட்சி இடிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த தொகையை மகாராஷ்டிரா மாநில சட்டசேவை ஆணையத்தில் 2 வாரத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டனர்.

    இந்தநிலையில் நாராயண் ரானே தரப்பு வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வசதியாக ஐகோர்ட்டு தனது உத்தரவை 6 வாரங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். எனினும் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

    ×