search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம் பெண்"

    • லைலா தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்க கம்மல், கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் ஆகியவற்றை கழற்றி இளம்பெண்ணிடம் கொடுத்தார்.
    • சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லைலா (65). விதவையான இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர் தற்போது அதே பகுதியில் உள்ள நூலகத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் லைலா நூலகம் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டி லைலாவிடம் பேச்சுகொடுத்தார். நூலகம் இருக்கும் இடம் வழியாக செல்வதாகவும், வண்டியில் ஏறும்படியும் கூறினார். இதனால் லைலா இளம் பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றதும் டிப்-டாப் இளம் பெண், மூதாட்டி லைலாவிடம் மீண்டும் பேச்சு கொடுத்தார். நீங்கள் அணிந்திருக்கும் கம்மல் நன்றாக உள்ளது. எனக்கு கொடுத்தால் அணிந்து கொண்டு போட்டோ எடுத்து திருப்பிக் கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார்.

    இதை நம்பிய லைலா தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்க கம்மல், கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் ஆகியவற்றை கழற்றி இளம்பெண்ணிடம் கொடுத்தார்.

    அதனை அணிந்த இளம்பெண் திடீரென மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுவிட்டார். இதனால் மூதாட்டி லைலா அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற டிப்-டாப் இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
    • பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு சி. என். பாளையம் சேர்ந்த 20 வயது இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை என புகார்.
    • பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அனிதா கிடைக்க வில்லை.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள ஆவாஜிப்பேட்டை கிராமத்தில், லட்சுமி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அனிதா(வயது22. இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டிலிருந்த குப்பைகளை வெளியே கொட்டி வைத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து காணாமல் போன அனிதாவை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கிடைக்க வில்லை. இதனால் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு இளம்பெண் அனிதாவின் தந்தை மாணிக்கம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    உமா மகேஸ்வரி, வீட்டு பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி நாகத்தோப்பு தெருவைச்சேர்ந்தவர் கந்தவேல். கொத்தனார் வேலை செய்துவரும் இவரது 2-வது மகள் உமாமகேஸ்வரி(வயது21). இவர் காரைக்கால் அவ்வை யார் அரசு மகளிர் கல்லூரியில், பி.ஏ படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். உமா மகேஸ்வ ரிக்கும், திருவாரூ ரில் உள்ள உறவினர் கலிய பெருமாள் மகன் சதீஷ் என்ப வருகும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

    கந்தவேல், உறவினரிடம் திருமணம் குறித்து பேசியபோது, சதீஷ்க்கு மூத்தவர்கள் 2 பேர் இருப்பதால் சதீஷ்க்கு திருமணம் செய்துவைக்க யோசித்தனர். பிறகு, கந்தவேல், தனது மூத்த மகன் இதேபோல் காதல் விசயத்தில் இருந்தபோது, பெண் வீட்டார் சம்மதிக்காத காரணத்தால், தற்கொலை செய்துகொண்டார்.

    இருப்பது ஒரே மகள் என கூறியதை அடுத்து, சதீஷ் வீட்டார் கடந்த நவம்பர் 30ந் தேதி கந்தவேல் வீட்டுக்கு சென்று, திருமணம் குறித்து பேசி முடிவெடுத்து, விரைவில் நிச்சயார்த்த தேதி சொல்வதாக கூறி சென்றதாக கூறப்படுகிறது.

    மறுநாள் சதீஷ் உமா மகேஸ்வரி ஆகியோர் செல்போனில் பேசியதா கவும், அதன் பிறகு இருவரும் பேசவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ந் தேதி கந்தவேலின் மனைவி உஷா, விரைவில் நிச்சயதார்த்த தேதி சொல்வதாக கூறினா ர்கள் யாரும் போன் செய்யவில்லை. நீயாவது போன் செய் என மகளிடம் செல்போனை கொடுத்த போது, உமாமகேஸ்வரி போனில் ேபசாமல், போனை உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 1.30 மணி அளவில், சதீஷ் சகோதரர் கந்தவேலுக்கு போன் செய்து, டிசம்பர் 7ந் தேதி நிச்சயதார்த்தம் செய்துகொள்ளலாம் என்ற தகவலை கூறியுள்ளார். அன்று பிற்பகல் 3 மணி அளவில், உமா மகேஸ்வரி, வீட்டு பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, கந்தவேல், நிரவி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி ன்றனர்.

    • இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.
    • கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் பர்சானா ருகி (வயது 23). இவருக்கும் திருச்சி வரகநேரி பஜார் மன்சூர் அலி (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது மன்சூர் அலி குடும்பத்தினருக்கு 60 பவுன் தங்க நகையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர் பொருட்களும் மற்றும் 3லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு மனைவியை பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வர சொல்லி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் கருவுற்ற பர்சானாருகியை கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பர்சானா ருகி புகார் செய்தார். இதன் பேரில் கணவர் மன்சூர் அலி, மாமியார் புர்கான் பீவி, மாமனார் ஜாபர் அலி கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • உஷாரான அந்த பெண் குனிந்து கொள்ளவே அதிர்ஷ்டவசமாக அரிவாள் வெட்டு விழாமல் தப்பினார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை வீட்டில் இருந்து அவர் வழக்கம் போல் வேலைக்கு வந்திருந்தார். நேற்று இரவு இளம் பெண் பணியில் இருந்தார்.அப்போது கடைக்குள் வந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்த இளம் பெண்ணை சரமாரியாக வெட்ட முயன்றார்.

    உஷாரான அந்த பெண் குனிந்து கொள்ளவே அதிர்ஷ்டவசமாக அரிவாள் வெட்டு விழாமல் தப்பினார்.கடையில் இருந்த ஊழியர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசா ரணையில் இளம்பெண்ணை அரிவாளாள் வெட்ட முயன்ற வாலிபர் அவரது கணவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக வெட்ட முயன்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கடையில் பதிவான சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடைக்குள் புகுந்து இளம் பெண் ஒருவரை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை
    • கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    கீரிப்பாறை அருகே உள்ள தடிக்காரன் கோணம் குட்டி பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் ரதீஸ். இவரது மனைவி அபிஷா (வயது 26).

    இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கணவன் மனைவி இருவரும் இரவு நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் தனித்தனி அறையில் தூங்க சென்றனர்.அபிஷா குழந்தையுடன் தனி அறையில் தூங்கினார்.

    நேற்று காலையில் வெகுநேரமாகியும் அறை யில் கதவு திறக்கப்ப டவில்லை .இதையடுத்து ரதீஷ் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அபிஷா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கீரிப்பாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய அபிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு உள்ளார் .அபிஷாவின் கணவர் மற்றும் உறவினர்களிடமும் அபிஷாவின் பெற்றோரி டமும் ஆர்டிஓ விசாரணை நடத்தினார்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடப்பது வழக்கம்
    • குலசேகரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு விசாரனை செய்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது (42). இவரது மனைவி ஜெனிகா (31) இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜெயராஜ் அந்த பகுதியில் பால்வெட்டும் தொழில் செய்து வருகிறார்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடப்பது வழக்கம் கடந்த 3 மாதங்களுக்கு முன் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு நடந்தது. உடனே மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு தாய்வீட்டில் இருந்தார்.

    மகன் தந்தை ஜெயராஜ் பாதுகாப்பில் வளர்ந்து வந்தான். தினமும் காலையில் பள்ளிக்கு வேனில் சென்று விட்டு மாலையில் வருவது வழக்கம். நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற மகன் மாலையில் வீடு திரும்பவில்லை. உடனே ஜெயராஜ் பள்ளியில் சென்று கேட்டபோது தாய் ஜெனிகா அழைத்து சென்றது தெரிய வந்தது. உடனே ஜெனிகாவின் தாய் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு அவர்களை காணவில்லை

    உடனே உறவினர்கள், நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் மகளை காணவில்லை. செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. உடனே குலசேகரம் போலீசில் ஜெயராஜ் தன் மனைவியையும் 2 குழந்தைகளையும் காணவில்லை என்று புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட குலசேகரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு விசாரனை செய்து வருகிறார்.

    • ரூ.100க்கு ஆசைப்பட்டு ரூ.8 லட்சத்தை இளம் பெண் இழந்தார்
    • எச்சரிக்கையுடன் இருக்க புதுக்கோட்டை போலீசார் அறிவுறுத்தல்

    புதுக்கோட்டை.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டை பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் மனைவி சிந்து(வயது25). இவரது செல்போனுக்கு ஆன்லைனில் வேலை பர்த்தால் கூடுதல் பணம் சம்பாதிக்காலாம் என்று ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதனை நம்பிய சிந்து, அவர்கள் கூறியபடி முதல் தவணையாக ரூ.200 செலுத்தியுள்ளார். அதற்கு ரூ.300 அனுப்பியுள்ளனர். 200 ரூபாய்க்கு 100 கூடுதலாக கொடுத்திருப்பதால் பணத்திற்கு ஆசைபட்டு 43 தவணைகளில் ரூ.8லட்சத்து 5ஆயிரத்து ஐம்பத்துஒன்று முதலீடு செய்துள்ளார்.

    ஆனால் எந்த பணமும் திரும்பி வராத காரணத்தினால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிந்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றர். போலீசார் பலமுறை எச்சரித்தும் ஆன்லைனில் இதுபோன்று வரும் தவறான தகவல்களை கொண்டு பணம் பறிமாட்டம் நடத்தவேண்டாம் என கேட்டுக் கொண்டாலும், பணத்திற்கு ஆசைப்பட்டு தொடர்ந்து ஏமாறி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே இதுபோன்ற செல்போன்களில் வரும் தகவல்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே இளம் பெண் மாயமானார்.
    • புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து சத்யாவை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே அருள் குறுக்கே பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் சத்தியா (வயது 19) இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சடைந்த வீட்டில் உள்ளவர்கள் சத்யாவை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வேலு திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து சத்யாவை தேடி வருகின்றனர்.

    • மாரிமுத்து. கடந்த 2019 ம் ஆண்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றார்.
    • அங்கு பணியாற்றிய 29வயது பெண்ணை சந்தித்தார்.

    திருச்சி :

    திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் தீயணைப்பு துறை குடியிருப்பில் வசித்து வருபவர் தீயணைப்பு வீரர் மாரிமுத்து. இவர் கடந்த 2019 ம் ஆண்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றார்.

    அப்போது அங்கு பணியாற்றிய 29வயது பெண்ணை சந்தித்தார். பின்னர் அவரை காதலிப்பதாக கூறி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் தங்கியிருக்கும் தீயணைப்பு துறை குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதில் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். பின்னர் கருக்கலைப்பிற்கான மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்டது. அதன்பின் தீயணைப்பு படை வீரர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

    இது குறித்து அந்தப் பெண் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீயணைப்பு படை வீரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விக்கிரவாண்டியில் திருமணமான இளம் பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • மர்மமான முறையில் கலைச்செல்வி இறந்து கிடந்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் கோபிநாத் வயது 25 அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகள் கலைச்செல்வி (வயது 23) இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது காதல் இருவரின் வீட்டிற்கு தெரிய வரவே இருவரது பெற்றோர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சமயத்தில் கோபிநாத் மற்றும் கலைச்செல்வி இருவரும் வீட்டை மீறி ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு கலைச்செல்வி அம்மா வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு கிணற்றில் மர்மமான முறையில் கலைச்செல்வி இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு படை போலீசாரின் உதவியுடன் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான இரண்டு மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது. 

    ×