search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.100க்கு ஆசைப்பட்டு ரூ.8 லட்சத்தை இழந்த இளம் பெண்
    X

    ரூ.100க்கு ஆசைப்பட்டு ரூ.8 லட்சத்தை இழந்த இளம் பெண்

    • ரூ.100க்கு ஆசைப்பட்டு ரூ.8 லட்சத்தை இளம் பெண் இழந்தார்
    • எச்சரிக்கையுடன் இருக்க புதுக்கோட்டை போலீசார் அறிவுறுத்தல்

    புதுக்கோட்டை.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டை பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் மனைவி சிந்து(வயது25). இவரது செல்போனுக்கு ஆன்லைனில் வேலை பர்த்தால் கூடுதல் பணம் சம்பாதிக்காலாம் என்று ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதனை நம்பிய சிந்து, அவர்கள் கூறியபடி முதல் தவணையாக ரூ.200 செலுத்தியுள்ளார். அதற்கு ரூ.300 அனுப்பியுள்ளனர். 200 ரூபாய்க்கு 100 கூடுதலாக கொடுத்திருப்பதால் பணத்திற்கு ஆசைபட்டு 43 தவணைகளில் ரூ.8லட்சத்து 5ஆயிரத்து ஐம்பத்துஒன்று முதலீடு செய்துள்ளார்.

    ஆனால் எந்த பணமும் திரும்பி வராத காரணத்தினால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிந்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றர். போலீசார் பலமுறை எச்சரித்தும் ஆன்லைனில் இதுபோன்று வரும் தவறான தகவல்களை கொண்டு பணம் பறிமாட்டம் நடத்தவேண்டாம் என கேட்டுக் கொண்டாலும், பணத்திற்கு ஆசைப்பட்டு தொடர்ந்து ஏமாறி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே இதுபோன்ற செல்போன்களில் வரும் தகவல்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×