search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் கடைக்குள் புகுந்து  இளம் பெண்ணை  வெட்ட முயன்ற வாலிபர்
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் கடைக்குள் புகுந்து இளம் பெண்ணை வெட்ட முயன்ற வாலிபர்

    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • உஷாரான அந்த பெண் குனிந்து கொள்ளவே அதிர்ஷ்டவசமாக அரிவாள் வெட்டு விழாமல் தப்பினார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை வீட்டில் இருந்து அவர் வழக்கம் போல் வேலைக்கு வந்திருந்தார். நேற்று இரவு இளம் பெண் பணியில் இருந்தார்.அப்போது கடைக்குள் வந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்த இளம் பெண்ணை சரமாரியாக வெட்ட முயன்றார்.

    உஷாரான அந்த பெண் குனிந்து கொள்ளவே அதிர்ஷ்டவசமாக அரிவாள் வெட்டு விழாமல் தப்பினார்.கடையில் இருந்த ஊழியர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசா ரணையில் இளம்பெண்ணை அரிவாளாள் வெட்ட முயன்ற வாலிபர் அவரது கணவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக வெட்ட முயன்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கடையில் பதிவான சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடைக்குள் புகுந்து இளம் பெண் ஒருவரை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×