search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான்"

    • அடுத்தடுத்து 4 தடவை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்துள்ளது.
    • பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஏராளமான அகதிகள் தங்கி உள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்து 4 தடவை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்துள்ளது. பயங்கரவாதிகள் அகதிகள் போர்வையில் பாகிஸ்தானில் தங்கி இருந்து இந்த தாக்குதலில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஏராளமான அகதிகள் தங்கி உள்ளனர். இதையடுத்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

    • நெதர்லாந்து அணியின் மேக்ஸ் ஓ டாவ்ட் 43 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 56 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி பரேசி- மேக்ஸ் ஓ டாவ்ட் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வெஸ்லி பரேசி அவுட் ஆனார். இதனையடுத்து கேம்ஸ் ஓ டாவ்ட் - அகேர்மான் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேக்ஸ் ஓ டாவ்ட் 43 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் அகேர்மான் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். 92 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர்.

    சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மட்டுமே நிலைத்து ஆடி 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நபி 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான குர்பாஸ் மற்றும் சத்ரான் முறையே 10 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரகமத் ஷா தன் பங்கிற்கு 52 ரன்களையும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 56 ரன்களையும் குவித்தனர்.

    போட்டி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் ஷஹிடி 56 ரன்களுடனும், உமர்சாய் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • வாழ்வாதாரத்திற்காக ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்
    • வெளியேற பாகிஸ்தான் விதித்த கெடு நவம்பர் 1-உடன் முடிவுக்கு வந்தது

    1979ல் ஆப்கானிஸ்தானை ரஷியா ஆக்கிரமித்தது. 1979லிருந்து 1989 வரை அமெரிக்க உதவியுடன் ஆப்கானிஸ்தான் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வந்தது. பல வருடங்கள் நடைபெற்ற இந்த போரின் விளைவாக பொருளாதாரம் சீர்குலைந்து அந்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்ததால், வாழ்வாதார காரணங்களுக்காக அங்கிருந்து பலர் வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.

    கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து மேலும் பலர் அந்நாட்டிலிருந்து அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.

    இந்நிலையில், சமீப காலமாக பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகப்பெரும் சரிவை கண்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு கடன் வழங்கும் உலக நிதி அமைப்புகள் அரசின் செலவினங்களை கட்டுப்படுத்தும்படி நிர்ப்பந்தப்படுத்தி வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்றுடன் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற ஆப்கானியர்களுக்கு பாகிஸ்தான் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்தது.

    எந்த ஆவணங்களும் இல்லாமல் பாகிஸ்தானில் தங்கியுள்ளவர்கள் முதற்கட்டமாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் அகதிகளுக்கான அட்டை வைத்துள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனால், அட்டை வைத்துள்ளவர்களும் குறி வைக்கப்படுவதாக பல அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கடந்த 2 மாத காலத்தில் சுமார் 2 லட்சம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டனர்.

    வெளியேற்றப்படும் ஆப்கானியர்களில் பெரும்பாலானோர் கூலிப்பணிகளில் ஈடுபட்டு வறுமையில் வாழ்ந்து வந்ததால், அவர்களிடம் சேமிப்புகளோ, வேறு பொருட்களோ இல்லாமல் கேள்விக்குறியாகும் எதிர்காலத்துடன் டிரக்குகளில் அடைக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் எல்லையில் கொண்டு விடப்படுகின்றனர். அவர்களின் கண்ணீர் கதைகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    பெண்களுக்கு கடுமையான கோட்பாடுகளை வலியுறுத்தும் தலிபான் ஆட்சி நடைபெறுவதால் அங்கு செல்ல அஞ்சும் மக்கள், பாகிஸ்தானில் வசிக்க இயலாமல் செய்வதறியாது தவிக்கின்றனர்.

    புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் என சுமார் 4 லட்சம் ஆப்கானியர் பாகிஸ்தானில் வசிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    பாகிஸ்தான் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தலிபான் அரசாங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால், 40 ஆண்டு காலம் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்கு இடம் கொடுத்து விட்டதாகவும், இனியும் அதை தொடர முடியாது எனவும் பாகிஸ்தான் திட்டவட்டமாக பதிலளித்தது.

    • இலங்கை அணியின் பதும் நிசங்கா 46 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹமத் ஷா 62 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிசங்கா மற்றும் கருணரத்னே முறையே 46 மற்றும் 15 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கேப்டன் குசல் மெண்டிஸ் 39 ரன்களையும், சதீர சமரவிக்ரம 36 ரன்களையும் எடுத்தனர். சரித் அசலங்கா 14 ரன்களையும், மேத்யூஸ் 23 ரன்களிலும், சமீரா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய தீக்ஷனா பொறுப்பாக ஆடி 29 ரன்களை எடுத்தார். போட்டி முடிவில் இலங்கை அணி 241 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரகுமான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரஷித் கான், அப்துல்லா உமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய ரஹ்மதுல்லா குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய இப்ராஹிம் சத்ரான் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹமத் ஷா 62 ரன்களையும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 58 ரன்களையும் எடுத்தார்.

    இவருடன் விளையாடிய அஸ்மதுல்லா உமர்சாய் அரைசதம் அடித்தார். போட்டி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 45.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 242 ரன்களை அடித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இலங்கை அணியின் பதும் நிசங்கா 46 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிசங்கா மற்றும் கருணரத்னே முறையே 46 மற்றும் 15 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கேப்டன் குசல் மெண்டிஸ் 39 ரன்களையும், சதீர சமரவிக்ரம 36 ரன்களையும் எடுத்தனர். சரித் அசலங்கா 14 ரன்களையும், மேத்யூஸ் 23 ரன்களிலும், சமீரா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய தீக்ஷனா பொறுப்பாக ஆடி 29 ரன்களை எடுத்தார். போட்டி முடிவில் இலங்கை அணி 241 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரகுமான்  2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரஷித் கான், அப்துல்லா ஒமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக ஆடிய இப்ராஹிம் 87 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 58 மற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் 40 ரன்களுடனும், ஷாகீன் ஷா அஃப்ரிடி 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவீன் உல் ஹக், முகமது நபி, ஒமர்சாய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முறையே 65 மற்றும் 87 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹமத் ஷா 77 ரன்களை அடித்தார்.

    இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் ஹஷ்மதுல்லா சிறப்பாக விளையாடி 48 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 286 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

    • கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 58 மற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்த வந்த சௌத் ஷகீல் 25 ரன்களை குவித்தார். அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அகமது 27 பந்துகளில் 40 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இவருடன் சிறப்பாக விளையாடிய ஷதாப் கான் 40 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவீன் உல் ஹக், முகமது நபி, ஒமர்சாய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளிடையேயான போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
    • பாகிஸ்தான் அணி கடந்த இரு போட்டிகளில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களம் காண்கிறது. ஆப்கானிஸ்தான் அணி இதுவரை விளையாடி இருக்கும் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

    அந்த வகையில், இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றன. உலகக் கோப்பை 2023 புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளன.

    • சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
    • நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.

    நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.

    போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் முறையே 11 மற்றும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ரகமத் ஷா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 62 பந்துகளில் 36 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஹஷ்மதுள்ளா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் முடிவில் 139 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சான்ட்னர் மற்றும் ஃபெர்குசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
    • சனிக்கிழமை நிலநடுக்கத்தில் 4 ஆயிரம் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

    இந்த நிலையில் இன்று மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

    • நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
    • ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவானது.

    இதன் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமானது. அதில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலேயே மண்ணோடு மண்ணாக இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான், உலகக் கோப்பை போட்டியில் வாங்கும் சம்பளத்தை தனது நாட்டு மக்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    உலகக் கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் வங்காளதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியை தழுவியது. இதை அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி அக்டோபர் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 17 லட்சம் அகதிகள் வசிப்பதாக கூறப்படுகிறது.
    • புலம் பெயர்ந்தோர் பிரச்சினை குறித்து ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக விவாதித்து வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறினர். அந்தவகையில் பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 17 லட்சம் அகதிகள் வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் புலம் பெயர்ந்தோர் பிரச்சினை குறித்து ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக விவாதித்து வருகிறது. எனினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இந்தநிலையில் சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறி உள்ள அனைவரும் வருகிற 31-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஜலீல் அப்பாஸ் ஜிலானி கூறினார். பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

    ×